Jump to content

'சி.பி.ஐ என்னிடம் விசாரித்தால் அப்போலோ மர்மம் சொல்வேன்!' ஓ. பன்னீர்செல்வம் தடாலடி


Recommended Posts

'சி.பி.ஐ என்னிடம் விசாரித்தால் அப்போலோ மர்மம் சொல்வேன்!' ஓ. பன்னீர்செல்வம் தடாலடி

                         பன்னீர்செல்வம்

றைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் சிபிஐ மூலம் விசாரிக்கப்பட்டு உண்மைகள் வெளிவரும்வரை தர்மயுத்தம் தொடரும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று (புதன்) நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் நிறைவு உரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசுகையில்,"ஒன்றரை கோடி அ.தி.மு.க.தொண்டர்களின் மனதில் உள்ள ஒரே சந்தேகம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம். அதற்கு நீதி விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை மக்களுக்குத் தெளிவாகும். அதனை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம்.

எம்ஜிஆர் மறைவுக்குப் பின் அதிமுக வை அழிக்க பல பேர் முயன்றனர். எதிர்க்கட்சிகள் எல்லாம் கங்கணம் கட்டிக்கொண்டு தொடர்ந்து முயன்றன. 28 ஆண்டுகாலம் நமது இயக்கத்துக்கு வந்த வேதனைகளை சோதனைகளை தாங்கி, கட்டிக் காத்தவர் ஜெயலலிதா. இன்று எந்தக் கொம்பாதி கொம்பன் வந்தாலும் அசைக்கமுடியாத எஃகு கோட்டையாக கட்சியை ஜெயலலிதா உருவாக்கித் தந்திருக்கிறார். மக்களின் நலனுக்காகவே ஆட்சி நடத்தியவர் ஜெயலலிதா. ஏழை எளிய மக்களுக்காகவே 50% நிதியை ஒதுக்கி திட்டங்கள் பல நிறைவேற்றி இந்தியாவிலேயே சிறந்த முதல்வராகத் திகழ்ந்தார். 'எனது உறவுகள் எல்லாம் மக்களாகிய நீங்கள்தான் ' என்று கூறி மக்களாட்சி நடத்தியவர்.

எம்ஜிஆர் காலத்திலும்,ஜெயலலிதா காலத்திலும் எவ்வாறு மக்கள் இயக்கமாக அதிமுக வீறுநடை போட்டதோ, அவர்கள் இருவரின் ஆட்சியும் மக்கள் ஆட்சியாக எப்படி வீறு நடை போட்டதோ இன்று நிலைமை மாறிவிட்டது. ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் கைக்குள் கட்சி சென்றுவிடக் கூடாது என்பதற்காகத்தான் அதிமுக உருவானது. அதையேதான் ஜெயலலிதாவும் செய்தார். ஒரு தனிப்பட்ட குடும்பத்தின் கைக்குள் செல்லவிடமாட்டேன், எம்ஜிஆர் எப்படி மக்கள் இயக்கமாக நடத்தினாரோ அதே போலத்தான் நடத்துவேன். என்னுடைய காலத்துக்குப் பிறகும் இது தொடரவேண்டும் என்றார்.

ஆனால் இன்று தனிப்பட்ட குடும்பம், கட்சியையும் ஆட்சியையும் கபளீகரம் செய்கின்ற அசாதாரணமான சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் நாம் இந்த தர்ம யுத்தத்தைத் தொடங்கினோம். அதன் தொடக்கம் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம். 75 நாட்கள் மருத்துவமனையில் அவர் சிகிச்சைப் பெற்றார். அவரை யாரும் உள்ளே சென்று பார்க்கவில்லை. நாங்கள் காலையில் அங்கே செல்வோம். மாலையில் வருவோம். ஒருவரையும் அவரைப் பார்க்க அனுமதிக்கவில்லை. தொடர்ந்து ஜெயலலிதா சிகிச்சையில் இருக்கிறார்களே அப்படி என்னதான்  அவருக்கு நேர்ந்தது, லண்டன் அமெரிக்கா சென்று வைத்தியம் செய்து அவரை உயிரோடு பார்க்கவேண்டுமே என்று பலமுறை அவர்களிடம் மன்றாடினேன். ஆனால் அவர்கள் (சசிகலா உறவினர்கள்) காதுகொடுத்துக் கூட கேட்கவில்லை.

ஜெயலலிதா மரணமடைந்த நாளில் மாலை 6.30 மணிக்கு எனக்குத் தகவல் வந்தது. உடனே நான் மருத்துவமனைக்குச் சென்றேன்.அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என்று கூறி, இரவு 11.30 மணிக்கு அவர் காலமாகிவிட்டார் என்ற செய்தியை சொன்னார்கள். இப்போது மக்கள் நலத்துறைச் செயலாளர் கூறுகிறார், எல்லா செய்தியும் நிலவரமும் என்னிடம் தெரிவித்தார்கள் என்று. ஆனால் எந்த செய்தியும் தகவலும் என்னிடம் தெரிவிக்கப்படவில்லை. இந்த அறிக்கையை வெளியிட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் வாபஸ் பெறாவிட்டால், அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவேன். 

               ஜெயலலிதா சசிகலா

அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்கிறார், பன்னீர்செல்வத்தைத்தான் முதலில் விசாரிக்க வேண்டும் என்று. நான்தானே முதலில் நீதி விசாரணை வேண்டும் என்று கூறியது. அதுவும் சிபிஐ வேண்டும் என்று. அப்போதுதானே நாட்டுமக்களுக்கு உண்மை தெரியும் என்று. வரட்டும் என்னிடம். விசாரிக்கட்டும். என்ன நடந்தது என்று நான் சொல்கிறேன். உண்மையில் நீதிவிசாரணை வந்தால், முதல் குற்றவாளி விஜயபாஸ்கர்தான்.

2011-ம் ஆண்டு ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பில், சசிகலா, எம்.நடராஜன், சுதாகரன், திவாகரன், தினகரன், பாஸ்கரன், வெங்கடேஷ், ராமச்சந்திரன், ராவணன், மோகன், தங்கமணி, சுந்தரவதனம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கினார். பின்னர் 4 மாதம் கழித்து சசிகலா கொடுத்த மன்னிப்புக் கடிதத்தை ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா சசிகலாவை மட்டும்தான் கட்சிக்குள் சேர்த்துக்கொண்டார். அந்தக் கடிதத்தில் கூறியபடி சசிகலா இப்போது நடந்துகொள்ளவில்லை. அப்போதும் ஜெயலலிதா கூறினார், நீக்கப்பட்டவர்களுடன் யாரும் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று. இது எல்லோருக்கும் தெரியும். கட்சியையும் ஆட்சியையும் தமது குடும்ப கட்டுப்பாட்டுக்குள் அவர்கள் கொண்டு வர சதித்திட்டம் தீட்டினார்கள் என்பது தெரிந்துதான் கட்சியில் இருந்து ஜெயலலிதா அவர்களை எல்லாம் நீக்கினார். ஆனால் அந்த சதித்திட்டம் இப்போது நடந்துள்ளது.

சசிகலாவின் பினாமியாக இன்று ஆட்சி நடத்துகிறார்கள். இந்த அசாதாரண சூழலில் கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும் என்ற நிலை வந்துள்ளது, நீதி விசாரணை வரும் வரை நமது தர்ம யுத்தம் ஓயாது." என்று கூறினார்.

http://www.vikatan.com/news/politics/83097-will-reveal-the-truth-to-cbi-says-o-panneerselvam.html

Link to comment
Share on other sites

gallerye_000447662_1726399.jpg

 

  • gallerye_224846667_1726399.jpg

 

'சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் ஒழியும் வரை, தர்மயுத்தம் ஓயாது,'' என, ஜெ., மர்ம மரணம் குறித்து, நீதி விசாரணை கோரி நடத்தப் பட்ட உண்ணா விரத பந்தலில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் சூளுரைத்தார்.

 

Tamil_News_large_1726399_318_219.jpg

ஜெ., மரணத்தில் உள்ள, மர்மங்களைக் கண்டறிய, சி.பி.ஐ., விசாரணை கோரி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியி னர், நேற்று மாநிலம் முழுவதும், 33 இடங் களில், உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அதற்கு, அ.தி.மு.க., தொண்டர்கள் மட்டு மின்றி, பொது மக்களும் ஒன்று திரண்டு ஆதரவு தெரிவித்தனர்.

சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்ட ரங்கம் அருகில் நடந்த உண்ணாவிரதத்தில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பங்கேற்றார். அவருடன், முன்னாள் சபாநாயகர், பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், மதுசூதனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாலையில், உண்ணாவிரதத்தை முடித்து வைத்து, பன்னீர்செல்வம் பேசியதாவது:


'எனக்கு உறவுகள் இல்லை; மக்களாகிய நீங்கள் தான், என் உறவு' என, மறைந்த ஜெயலலிதா, கட்சியை மக்கள் இயக்கமாகவும், ஆட்சியை மக்களாட்சியாகவும் நடத்தினார். ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டிற்குள், கட்சி சென்று விடக் கூடாது என்பதற்காக தான், அ.தி.மு.க., வை, எம்.ஜி.ஆர்., உருவாக்கினார். ஆனால், இன்று ஒரு தனிப்பட்ட குடும்பம், கட்சியையும், ஆட்சியையும் கபளீகரம் செய்கிற சூழல் ஏற்பட்டுள்ளது. நமது கட்சியையும், ஆட்சி யையும், அந்த குடும்பத்திடம் இருந்து மீட்டு, மக்கள் இயக்கமாக, மக்களாட்சியாக மாற்ற, தர்மயுத்தம் துவக்கி உள்ளோம்.

தர்மயுத்தத்தின் துவக்கம் தான், இந்த

உண்ணாவிரதம். ஜெ., மருத்துவமனையில் இருந்த, 75 நாட்கள், அவரை பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஜெ.,க்கு என்ன தான் நடந்தது; சிக்கலான வியாதி இருந்தால், வெளி நாடு சென்று சிகிச்சை அளிக்கலாம் என, பலமுறை மன்றாடினேன்.சமீபத்தில், சுகாதாரத் துறை செயலர் வெளியிட்ட, அரசு அறிக்கை யில், ஜெ., மரணமடையும் சூழல் இருப்பதாக, எனக்கு தெரிவித்ததாகக் கூறி உள்ளார். எனக்கு, எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

அந்த அறிக்கையை, அரசு செயலர் ராதாகிருஷ்ணன், உடனே வாபஸ் பெற வேண்டும். வாபஸ் பெறாவிட்டால், அவர் மீது வழக்கு தொடர்வேன். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஜெ., சிகிச்சை பெற்ற, அப்பல்லோ மருத்துவமனையின் இரண்டாவது மாடியில், ஏழு பேரை நிறுத்தி இருந்தார். அவர்கள், ஆளுக்கொரு பேனா வைத்திருப்பர். 'பன்னீர்செல்வம் வந்தார்; உட்கார்ந்தார்; எழுந்தார்' என எழுதி, அவரிடம் தெரிவிப்பர். அங்கு வருவோர் விபரங்களை குறிப்பெடுத்து, விஜயபாஸ்கரிடம் கொடுப்பர்.

முதலில் எனக்கு தெரியவில்லை. பத்து நாட்களாக, அவர்கள் ஒரே இடத்தில் நிற்பதை பார்த்து, கேட்டபோது தான், விஜயபாஸ்கர் நிறுத்தி வைத்திருப்பதாகக் கூறினர்.'நீதி விசாரணை அமைத்தால், பன்னீர்செல்வத்தை முதலில் விசாரிக்க வேண்டும்' என, விஜய பாஸ்கர் கூறி உள்ளார். நான் தானே, 'நீதி விசாரணை வேண்டும்' எனக் கேட்கிறேன். சி.பி.ஐ., விசாரணை வந்தால் தான், மரணத்தில் புதைந்துள்ள மர்மம் மற்றும் உண்மைகள் தெரிய வரும்.

என்னை விசாரிக்கட்டும்; என்ன நடந்தது என்பதை, நான் கூறுகிறேன். நீதி விசாரணை யில், உண்மை தெரிய வந்தால், முதல் குற்றவாளி விஜயபாஸ்கர் தான்.கடந்த, 2011ல், ஜெ., ஒரு அறிக்கை வெளியிட்டார். 'சசிகலா, அவரது கணவர் நடராஜன், உறவினர்கள் திவாகரன், தினகரன், பாஸ்கரன், சுதாகரன், வெங்கடேஷ், ராமச்சந்திரன், அடையாறு மோகன், ராஜராஜன், மகாதேவன், தங்கமணி ஆகியோர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும், நீக்கி வைக்கப்படுகின்றனர். அவர்களுடன் யாரும், எந்த தொடர்பும் வைத்து கொள்ளக் கூடாது' என அறிவித்தார். நான்கு மாதம் கழித்து, சசிகலா

 

மன்னிப்பு கடிதம் கொடுத்தார். அந்தக் கடிதத் தில், அக்காவுக்கு எதிராக, எனது உறவினர்கள் சில சதித்திட்டங்கள் தீட்டப்பட்டன என்பதை அறிந்து, அதிர்ச்சி அடைந்தேன். அவர்களுடன், எனக்கு ஒட்டும் இல்லை; உறவும் இல்லை' என, கூறியிருந்தார். அதை ஏற்று, சசிகலாவை மட்டும் சேர்த்தஜெயலலிதா, அவரது குடும்பத் தினரை சேர்க்கவில்லை.

ஜெ., மறையும் வரை, நான் சசிகலாவுடன் பேசியதில்லை. மருத்துவமனையில் ஜெ., சேர்க்கப்பட்டு, 20 நாட்கள் கழித்து சசிகலா வெளியே வந்து, 'ஜெ., நலமாக இருக்கிறார்' என என்னிடம் தெரிவித்தார்.

சசிகலா குடும்பத்தினர் செய்த சதி என்ன தெரியுமா? அவரது குடும்பத்தில் ஒருவரை கட்சியிலும், ஆட்சியிலும் கொண்டு வர வேண்டும் என்பது தான். அந்த சதி திட்டம், இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.அவர்களிடம் இருந்து, அ.தி.மு.க.,வை காப்பாற்ற, இந்த தர்மயுத்தம் துவக்கப்பட்டுள்ளது. சசிகலாவின் பினாமி ஆட்சிக்கு ஆதரவாக, 122 எம்.எல்.ஏ.,க் கள் உள்ளனர்; மக்கள் நம்முடன் உள்ளனர். பினாமி ஆட்சியை, யார் நடத்துகிறார் என்பதை, மக்கள் தெரிந்து வைத்துள்ளனர். உரிய நீதி விசாரணை வந்தால் மட்டுமே, மரணத்தில் உள்ள மர்ம முடிச்சு விலகும். நீதி விசாரணை வரும் வரை, நமது போராட்டம் தொடரும்.

சசிகலாவின் பிடியில் இருந்து, நம் கட்சி யையும், ஆட்சியையும் மீட்கும் வரை, தர்மயுத் தம் ஓயாது. அதற்காக, எந்த தியாகத்தையும் செய்ய, தயாராக உள்ளோம். இந்த போராட்டம் தொடரும்; மக்கள் இயக்கமாக வளரும். இவ்வாறு பன்னீர்செல்வம் பேசினார்.
 

ஓ.பி.எஸ்., பாடல்'சிடி' வெளியீடு


* பன்னீர்செல்வம் புகழ் பரப்பும் பாடல்கள் அடங்கிய, 'புறப்பட்டார் தலைவர் புறப்பட்டார்' என்ற, 'சிடி' வெளியிடப்பட்டது.

* பன்னீர் அணி செய்தி தொடர்பாளர் அழகு தமிழ்செல்வி, பன்னீர்செல்வம் பிரசார வேனை, அவரிடம் வழங்கினார்.

* உண்ணாவிரத பந்தலில், பேச்சாளர்கள் பேசுவதை பார்க்க, எல்.இ.டி., திரைகள் ஆங்காங்கு அமைக்கப்பட்டிருந்தன.

* பல்வேறு முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்கள், உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்; மாற்று திறனாளிகளும் பங்கேற்றனர்.

* பன்னீருக்கு வாழ்த்து தெரிவிக்க வந்தவர்கள், பூங்கொத்து மற்றும் சால்வை கொண்டு வந்தனர்; அவற்றை அவர் வாங்கவில்லை.

* அ.தி.மு.க., நிர்வாகிகள், கட்சியில் தாங்கள் வகிக்கும் பொறுப்பை, பேனர்களில் குறிப்பிட்டிருந்தனர்.

* அதிக அளவில் கட்சியினர் பங்கேற்றதால், அந்த சாலையில், போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1726399

Link to comment
Share on other sites

ஜெ., மரணத்தில் நீதி விசாரணை கேட்டு உண்ணாவிரதத்தில் குவிந்த தொண்டர்கள்

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து, மத்திய அரசின் நீதி விசாரணை வேண்டி, பன்னீர்செல்வம் அணி சார்பில் நேற்று, தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில், நிர்வாகிகள், தொண்டர்கள் என, ஆயிரக்கணக்கில் குவிந்தனர்.

 

சேலம், கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு, காலை, 9:00 மணி முதல், கட்சி நிர்வாகி கள், தொண்டர்கள், பெண்கள் குவிந்தனர்.மேட்டூர், எம்.எல்.ஏ., செம்மலை
பேசியதாவது:

இது, காசு கொடுத்து கூட்டிய கூட்டம் அல்ல; தானாக சேர்ந்த கூட்டம். ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து, சி.பி.ஐ., மூலமாகவோ, வேறு அமைப்புகள் மூலமாகவோ, மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும்.செப்., 22ல், போயஸ் கார்டனில் என்ன நடந்தது என்பதை வெளிக்கொணர வேண்டும். பிரதமர் மோடி வந்து பார்த்திருந்தால், வெளிநாட்டு சிகிச்சைக்கு கூட ஏற்பாடு செய்திருக்கலாம். விரைவில், 'பினாமி' ஆட்சி முடிவுக்கு வரும். இவ்வாறு செம்மலை பேசினார்.
 

gallerye_231345938_1726452.jpg

'டிபாசிட்' கிடைக்காது

நாமக்கல், பூங்கா சாலையில் நடந்த போராட்டத்தில், எம்.பி., சுந்தரம் பேசியதாவது:
ஜெயலலிதா இறப்பில் மர்மம் உள்ளது. அவர் இறந்த பின், எங்களை பார்க்க அனுமதிக்கவில்லை. எம்.ஜி.ஆர்., அண்ணாதுரை இறந்த பின், இரண்டு நாட்கள் வைத்திருந்தனர். ஆனால், ஜெயலலிதாவை, ஒரு நாள் கூட வைக்கவில்லை.

எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள், 3 கோடி ரூபாய், 3 கிலோ தங்கத்துக்கு விலை போய் விட்டனர். இவர்கள் ஆட்சி, மூன்று அல்லது ஆறு மாதம் தான். அப்புறம் நடுத்தெருவுக்கு வரவேண்டும். முதல்வர் பழனிசாமி, இடைப்பாடியில் நின்று டிபாசிட் வாங்கினால், நான் அரசியலை விட்டு போகிறேன்.

தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன் நடந்த போராட்டத்தில், ஓ.பி.எஸ்., அணி மற்றும் தீபா பேரவையினர் கலந்து கொண்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெண்கள் உட்பட, பல ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

நடிகன் - மகா நடிகன்

ஈரோடு, வீரப்பன்சத்திரம் பஸ் ஸ்டாப் அருகே, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சார்பில், உண்ணாவிரத போராட்டம் நடந்த நிலையில், அப்பகுதியில், முதல்வர் பழனி சாமி ஆதரவாளர்கள் சார்பில், 'நடிகன் - மகா நடிகன்' என பிளக்ஸ் மற்றும் பேனர்கள் வைத்திருந்தனர்.

அதில், 'ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும், காவிரி பிரச்னை தொடர்பாக, செயலர்களிடம் பேசியதாகவும் முன்பு கூறிய பன்னீர், தற்போது மாற்றி பேசுகிறார். ஸ்டாலின்
பின்னணியில் செயல்படுகிறார்' என, குற்றம்சாட்டி உள்ளனர்.

திருத்திய நடராஜன்

கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே போராட்டத்தை துவக்கி வைத்து, 'மாஜி' அமைச்சர் முனுசாமி, நிருபர்களிடம் கூறியதாவது:ஜெ., இறந்த சில நாட்கள் கழித்து, உடல்நிலை சரியில்லை என, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்ந்த நடராஜன், மருத்துவ அறிக்கையில் திருத்தம் செய்துள்ளதாகசந்தேகம் எழுந்துள்ளது.

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனைக்கு, எந்த நிலையில் கொண்டு வரப்பட்டார் என, தீவிரமாக விசாரிக்க வேண்டும். ஜெயலலிதா இறப்பதற்கு முன், அவரை சந்தித்த நபர்கள் யார் என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும். இவ்வாறு முனுசாமி கூறினார்.

கூண்டு காத்திருக்கு

திண்டுக்கல்லில் நடந்த உண்ணாவிரதத்தில், 'மாஜி' அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது: இந்த உண்ணாவிரதத்தை கண்டு, ஆளும் தரப்பினர் புலம்புகின்றனர். நாங்கள், ஓ.பி.எஸ்., அணியல்ல; ஜெ., அணி. 'வெகுமதி கிடைக்கும்' என எதிர்பார்த்து இருப்பவர்கள் சசிகலா அணி. இந்த உண்ணாவிரதம் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது. அதன்மூலம், ஜெ., மரணம் குறித்து விசாரணை துவங்கும்; குற்றவாளிகள் அனைவரும் கூண்டில் ஏற்றப்படுவர்.
இவ்வாறு நத்தம் விஸ்வநாதன் பேசினார்.

வேலுார் அண்ணா கலையரங்கம் அருகே, எம்.பி., செங்குட்டுவன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவையை சேர்ந்தவர்கள் உட்பட, 1,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் நடந்த போராட்டத்தில், எம்.பி., வனரோஜா, முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் தலைமை வகித்தனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, அ.தி.மு.க.,வினர் திரண்டனர்.

திருவண்ணாமலை - சென்னை சாலையில், 500 மீட்டருக்கு, ஷாமியானா பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. கூட்டம் கட்டுக்கடங்காமல் வழிந்ததால், சாலையின், இருபுறமும் வெயிலையும் பாராமல் பலர் உண்ணாவிரத போராட்டத் தில் பங்கேற்றனர். எம்.பி., வனரோஜா, ''ஜெ., மரணம் குறித்து, நீதி விசாரணை கேட்டு வலியுறுத்தி, லோக்சபாவில் பேசுவேன்,'' என்றார்.

உண்மை வரும்

கோவை சிவானந்தா காலனியில், முன்னாள் அமைச்சர் தாமோதரன் பேசுகையில், ''90 சதவீத தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். ஜெ., மரணத்தில் மர்மம் விலக வேண்டும். நீதி விசாரணைநடத்தினால், படிப்படியாக, உண்மை வெளிச்சத்துக்கு வரும்,'' என்றார்.

சினிமா இயக்குனர், பவித்ரன்,ஆர்.சுந்தர்ராஜன், எம்.எல்.ஏ.,க்கள் ஆறுக்குட்டி, சின்ராஜ், அருண்குமார் உட்பட திரளான தொண்டர்கள் பங்கேற்றனர்.திருச்சியில் நடந்த உண்ணாவிரதத்துக்கு, முன்னாள் அமைச்சர் பூனாட்சி தலைமை வகித்தார். இதில் பேசிய அனைவரும், 'ஜெயலலிதாவை, திட்டமிட்டு சசிகலா தரப்பினர் கொலை செய்து விட்டனர். ஆகையால், மத்திய அரசு நீதி விசாரணை நடத்தி, அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்' என்பதை
வலியுறுத்தினர்.

திருச்சியில், 1,500, பெரம்பலுாரில், 300, அரியலுாரில், 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.கடலுார், மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்த போராட்டத்தில், 8,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விழுப்புரத்தில், எம்.பி., ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் மோகன் உட்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நடிகர் ராமராஜன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்து பேசினார்.

தொண்டர்கள் குவிந்ததால், விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு முதல், காந்தி சிலை வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்று வழியில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.புதுச்சேரியிலும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. அ.தி.மு.க., முன்னாள், எம்.எல்.ஏ., ஓம்சக்தி சேகர் தலைமை வகித்தார். ஆயிரக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

- நமது நிருபர் குழு -

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1726452

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்காலத்திலை அரிசி கள்ளரை விட அரசியல் கள்ளர் எக்கச்சக்கமாய் கூடீட்டாங்கள்.:grin:

Link to comment
Share on other sites

சசி அணியை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஓ.பி.எஸ். அணியின் போராட்டம்

95027643unnamed-ec0f4eadb19b3d2acd6685fbdf03fa2873e98ed2.jpg

 

முன்னாள் முதல்வர் ஜெய­ல­லி­தாவின் மர­ணத்தில் மர்மம் இருப்­ப­தாக தமி­ழ­கத்தின் அர­சியல் கட்­சி­களும், பொது அமைப்­புக்­களும், பொது­மக்­களும் பர­வ­லாகத் தெரி­வித்து வரு­வ­துடன், அது­பற்றி விசா­ரணை செய்­யப்­ப­ட­வேண்­டு­மென்றும் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.

இந்த நிலையில் ஜெய­ல­லி­தாவின் மரணம் குறித்து உரிய விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டு­மென்று வலி­யு­றுத்தி, அ.தி.மு.க.வின் ஓ.பன்­னீர்­செல்வம் அணி­யினர் கடந்த புதன்­கி­ழமை தமி­ழ­கத்தின் பல்­வேறு இடங்­க­ளிலும் ஒரு நாள் அடை­யாள உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை நடத்­தினர். ஓ.பி.எஸ்.ஸின் ஆத­ர­வா­ளர்கள் பெரும் எண்­ணிக்­கையில் இதில் கலந்து கொண்­டனர்.

இது ஓ.பி.எஸ்.ஸுக்கு அ.தி.மு.க. தொண்­டர்­க­ளி­டையே இருக்கும் பெரும் ஆத­ரவை வெளிப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­தி­ருந்­தது. இதன் மூலம் இரண்டு விட­யங்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன. ஒன்று அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.ஸுக்கே அதி­க­ளவில் ஆத­ரவு இருக்­கி­ற­தென்­பது, மற்­றை­யது சசி­கலா தரப்­பினர் ஆட்­சியைக் கைப்­பற்­றி­யி­ருந்­தாலும் அவர்­க­ளுக்கு அ.தி.மு.க.தொண்­டர்­களின் ஆத­ரவு இல்­லை­யென்­ப­தாகும்.

ஓ.பி.எஸ்.ஸுக்கு சேர்ந்த மக்கள் கூட்டம் சசி­கலா தரப்­பி­ன­ருக்கு குறிப்­பாக துணைப் பொதுச் செய­லாளர் டி.டி.வி.தின­கரன், முத­ல­மைச்சர் எடப்­பாடி பழ­னிச்­சாமி ஆகி­யோ­ரி­டத்தில் பெரும் அதிர்ச்­சி­யையும் ஏமாற்­றத்­தையும் கொடுத்­தி­ருக்­கின்­றது.

ஓ.பி.எஸ்.தரப்­பினர் நடத்­திய உண்­ணா­வி­ரதப் போராட்­டங்­களில் பெரும் எண்­ணிக்­கை­யி­லான தொண்­டர்கள் கலந்து கொண்­டாலும், அதில் பெண்­களின் தொகை அதிக­மென்று தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

சென்னை, ராஜ­ரத்­தினம் மைதா­னத்தில் நடை­பெற்ற உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஓ.பன்னீர் செல்வம், மது­சூ­தனன், முன்னாள் சபா­நா­யகர் பி.எச்.பாண்­டியன் உள்­ளிட்ட பல முக்­கி­யஸ்­தர்கள் கலந்து கொண்­டனர். காலை 10 மணிக்கு ஆரம்­ப­மாகி மாலை 5 மணிக்கு நிறை­வு­பெற்­றது.

அதே­போன்று மதுரை, சேலம், திருச்சி, சிவ­கங்கை, திருப்பூர், கரூர், தஞ்­சாவூர், நீல­கிரி, கிருஷ்­ண­கிரி, ஆவடி, நாமக்கல் உள்­ளிட்ட சுமார் 38 இடங்­களில் உண்­ணா­வி­ரதப் போராட்­டங்கள் இடம்­பெற்­றுள்­ளன. திட்­ட­மிட்­டப்­படி ஓ.பி.எஸ்.அணி­யினர் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை நடத்தி முடித்­துள்­ளனர். இந்த உண்­ணா­வி­ரதப் போராட்­டங்­களை தடுத்து நிறுத்­து­வ­தற்கும், மக்­களை பங்­கு­பற்­ற­வி­டாமல் செய்­வ­தற்கும் சசி­கலா தரப்­பினர் பல்­வேறு முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருந்த போதும், அத­னை­மீறி பெரும் எண்­ணிக்­கை­யி­லானோர் கலந்­து­கொண்­டனர்.

இது ஆளும் தரப்­பி­ன­ருக்கு பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­ய­துடன், அவர்­க­ளி­டையே பெரும் அச்­சத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

ஏனெனில், ஜெய­ல­லிதா மரணம் தொடர்­பி­லான விசா­ரணை மேற்­கொள்ள வேண்­டு­மென்று வலி­யு­றுத்­தி­ய­துடன், அ.தி.மு.க. ஆட்­சி­யையும் சசி­கலா குடும்­பத்­தினர் கைப்­பற்­றி­ய­மைக்கு எதிர்ப்பும் தெரி­வித்­தி­ருந்­தனர். சசி­கலா குடும்­பத்­தி­னரின் ஆதிக்­கத்தை விரும்­பாத அ.தி.மு.க. நிர்­வா­கி­களும், தொண்­டர்­களும் ஓ.பன்­னீர்­செல்­வத்­துக்கு ஆத­ரவு வழங்­கு­கின்­றனர்.

ஜெய­ல­லி­தாவின் மர­ணத்தின் பின்­னணி, அவர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த போது இடம்­பெற்­றவை, வைத்­திய சிகிச்­சைகள், போயஸ் கார்டன் இல்­லத்தில் இடம்­பெற்ற சம்­ப­வங்கள் அனைத்­தையும் ஓ.பி.எ.ஸ். அணி­யி­லுள்ள முன்னாள் சபா­நா­யகர் பி.எச்.பாண்­டியன் மற்றும் மனோஜ் பாண்­டியன், பொன்­னையன் போன்றோர் விளா­வா­ரி­யாக ஊட­கங்­க­ளுக்குத் தெரி­வித்து வரு­கின்­றனர். இது உட­னுக்­குடன் மக்­களைச் சென்­ற­டை­கின்­றன. இதனால் மக்கள் சசி­கலா தரப்­பினர் மீது கடும் அதி­ருப்தி மற்றும் கோபத்­துடன் இருக்­கின்­றனர்.

சில­வேளை, ஜெய­ல­லிதா மரணம் தொடர்­பாக சி.பி.ஐ.விசா­ரணை நடை­பெ­று­மானால் தான் சாட்­சி­ய­ம­ளிக்கத் தயா­ராக இருப்­ப­தாகத் தெரி­வித்­துள்ள ஓ.பன்­னீர்­செல்வம், ஜெய­ல­லிதா மர­ணத்­துக்கு தமி­ழக சுகா­தா­ரத்­துறை அமைச்சர் விஜ­ய­பாஸ்­கரும் பொறுப்­புக்­கூற வேண்டும் என்று தெரி­வித்­துள்ளார். இதனை நிரா­க­ரித்­துள்ள அமைச்சர் விஜ­ய­பாஸ்கர் ஓ.பன்­னீர்­செல்­வத்தின் குற்­றச்­சாட்டு சிறு­பிள்­ளைத்­த­ன­மா­னது என தெரி­வித்­துள்ளார்.

ஜெய­ல­லிதா சுக­யீ­ன­முற்று வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டது முதல், அவ­ரது இறப்­பு­வரை மர்மம் நீடிக்­கி­ற­தென்­பது உண்மை. அவர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­போதும், உயி­ரி­ழந்த­போதும் அவர் ஒரு சாதா­ரண பிரஜை என்ற வகையில் அல்­லாமல், ஒரு மாநில முத­ல­மைச்சர் என்ற அடிப்­ப­டை­யி­லேயே மர­ண­மானார். எனவே, அவ­ரது சுக­யீனம், அவ­ருக்கு வழங்­கப்­பட்ட சிகிச்­சை­களின் விபரம், வைத்­தி­யர்­களின் விபரம், வைத்­தி­ய­சாலை பற்­றிய தகவல் போன்ற அனைத்­தையும் வெளி­யி­ட­வேண்­டிய பொறுப்பு ஒட்­டு­மொத்த தமி­ழக அமைச்­ச­ர­வை­யி­டமும், அர­சாங்­கத்­தி­டமும் இருந்­தது. இதனை எவரும் மறுக்க முடி­யாது.

அப்­போ­தைய காலப்­ப­கு­தியில் அமைச்­ச­ர­வையில் ஓ.பன்­னீர்­செல்­வமும் முக்­கிய பொறுப்­பினை வகித்தார். அமைச்­ச­ர­வையில் முதல்­வ­ருக்கு அடுத்த இட­மான நிதி­ய­மைச்­ச­ராக இருந்தார். அதே­போன்று விஜ­ய­பாஸ்­கரும் சுகா­தார அமைச்­ச­ராக இருந்தார். இருக்­கிறார்.

இவர்கள் அனை­வரும் ஜெய­ல­லி­தாவின் விட­யத்தில் தங்­க­ளது கட­மை­களை சரி­வர நிறை­வேற்­றா­த­வர்­க­ளா­கவே இருந்­துள்­ளனர். அதா­வது மாநில முத­ல­மைச்­சரின் சுக­யீனம் பற்­றிய தக­வல்­களை பொது­மக்­க­ளுக்கு வழங்­கா­த­வர்­க­ளா­கவே இருந்­துள்­ளனர். அமைச்­ச­ரவை சசி­க­லா­வையும், அவ­ரது குடும்­பத்­தி­ன­ரையும் மட்டும் நம்பி அவர்­களின் பொறுப்பில் முதல்­வரை விட்­டி­ருந்­தனர்.

இத்­த­னைக்கும் சசி­க­லாவும், அவ­ரது குடும்­பத்­தி­னரும் ஜெய­ல­லி­தாவின் நெருங்­கிய உற­வி­ன­ரா­கவோ அல்­லது அர­சாங்­கத்தின் ஒரு முக்­கி­யஸ்­த­ரா­கவோ இருந்­தி­ருக்­க­வில்லை. அவ்­வா­றான ஒரு­வரை நம்பி முதல்­வரை (நலன்­க­வ­னிக்க) அனு­ம­தித்­தது ஏன் என்ற கேள்வி பல­ராலும் எழுப்­பப்­பட்டு வரு­கி­றது. அதற்கு இது­வரை அமைச்­சர்கள், அரச அதி­கா­ரிகள் எவ­ரி­ட­மி­ருந்தும் இது­வரை பதில் வர­வில்லை.

ஜெய­ல­லிதா கால­மா­ன­தாக அறி­விக்­கப்­பட்ட அதே சந்­தர்ப்­பத்தில் முத­ல­மைச்­ச­ராக பத­வி­யேற்­றுக்­கொண்ட ஓ.பன்­னீர்­செல்வம் அடுத்து வந்த சில தினங்­களில் ஜெய­ல­லிதா மரணம் பற்றி விசா­ரணை நடத்­து­மாறு அரச புல­னாய்­வுப்­பி­ரிவு மற்றும் பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­விட்­டி­ருக்­கலாம். அப்­போது அவ­ருக்கு அதி­காரம் இருந்­தது.

(3 ஆம் பக்கம் பார்க்க)

சசி அணியை.....

(2ஆம் பக்கத்தொடர்ச்சி)

ஆனால், அவர் அதைச் செய்­ய­வில்லை. வேறு எதை­யெல்­லாமோ பேசினார்,

செய்தார். செய்ய வேண்­டி­யதைச் செய்­ய­வில்லை.

பதவி பறி­போ­னதன் பின்­னர்தான் , 'ஜெய­ல­லி­தாவின் மரணம் ஒரு மர்ம மரணம் என்றும் அதற்­காக சி.பி.ஐ.விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டு­மென்ற ஞானோ­த­யமும்' ஏற்­பட்­டது.

சில­வேளை, முத­ல­மைச்சர் பத­வியில் ஓ.பன்­னீர்­செல்வம் தொடர்ந்­தி­ருப்­பா­ரே­யானால், ஜெய­ல­லி­தாவின் மரணம், மர்ம மரணம் என்றோ அதற்கு நீதி விசா­ரணை, சி.பி.ஜ. விசா­ரணை தேவை­யென்றோ கேட்­டி­ருப்­பாரா? என்­பது சந்­தே­கத்தான்.

எனவே, ஜெய­ல­லி­தாவின் மர­ணத்­துடன் தொடர்­பு­டைய அனைத்து விட­யங்­க­ளுக்கும் அப்­போ­தி­ருந்த அமைச்­ச­ர­வையும், அர­சாங்­கமும், சசி­கலா குடும்­பத்­தி­னரும் பொறுப்­பேற்க வேண்டும் என்­பதே உண்மை. ஒவ்­வொ­ரு­வரும் மற்­றவர் மீது குற்­றத்தை சுமத்­தி­விட்டு தப்­பித்துக் கொள்ள முடி­யாது. இவ்­வி­ட­யத்தில் அனை­வ­ருக்கும் பொறுப்­புள்­ளது.

நீதி­யான, நேர்­மை­யான விசா­ரணை ஒன்று நடத்­தப்­ப­டு­மானால், பல்­வேறு தரப்­பி­னரும், விசா­ரணை செய்­யப்­படக் கூடும். அப்­போது உண்­மைகள் வெளி­வரும். அப்­போது யார் குற்­ற­வாளி யார் குற்­ற­மற்­றவர் போன்ற விப­ரங்கள் வெளி­யாகும். உண்மை எப்­போதும் ஊமை­யாகி விடு­வ­தில்லை.

இத­னி­டையே சென்னை ஆர்.கே.நகர் சட்­டப்­பே­ரவைத் தொகு­திக்­கான இடைத்­தேர்தல் அடுத்­த­மாதம் 12 ஆம் திக­தி­யன்று நடை­பெ­று­மென்று தேர்தல் ஆணை­ய­கத்­தினால் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. எதிர்­வரும் (மார்ச்) 14 ஆம் திகதி வேட்­பு­மனு தாக்கல் ஆரம்­ப­மாகும். ஏப்ரல் 12 ஆம் திகதி வாக்­க­ளிப்பு இடம்­பெ­று­வ­துடன், ஏப்ரல்15 ஆம் திகதி தேர்தல் முடி­வுகள் அறி­விக்­கப்­படும்.

ஆர்.கே.நகர் தொகு­தியில் கடந்த பொதுத்­தேர்­தலில் ஜெய­ல­லிதா போட்­டி­யிட்டு வெற்றி பெற்­றி­ருந்தார். அவ­ரது மறைவைத் தொடர்ந்தே அத்­தொ­கு­திக்கு தற்­போது இடைத்­தேர்தல் நடை­பெ­ற­வுள்­ளது.

2015 ஆம் ஆண்டு கர்­நா­டக மாநில உயர் நீதி­மன்­றத்தில் நடை­பெற்ற சொத்­துக்­கு­விப்பு வழக்குத் தீர்ப்­பை­ய­டுத்து விடு­தலை செய்­யப்­பட்ட ஜெய­ல­லிதா ஆர்.கே.நகர் தொகு­தியில் போட்­டி­யிட்டு 1 இலட்­சத்து 50 ஆயிரம் வாக்­குகள் வித்­தி­யா­சத்தில் வெற்றி பெற்றார்.

தொடர்ந்து கடந்த வருடம் (2016) மே மாதம் நடை­பெற்ற சட்­டப்­பே­ரவைப் பொதுத்­தேர்­த­லிலும் ஜெய­ல­லிதா அதே தொகு­தியில் போட்­டி­யிட்டார். ஜெய­ல­லி­தா­வுக்கு எதி­ராக பல்­வேறு கட்­சி­களும் வேட்­பா­ளர்­களை நிறுத்­தின. இவ்­வாறு 45 வேட்­பா­ளர்கள் அந்தத் தொகு­தியில் போட்­டி­யிட்­டனர்.

இது ஜெய­ல­லி­தா­வுக்கு கடும் போட்­டி­யாக அமைந்­தது. இவரை எதிர்த்து தி.மு.க.சார்பில் சிம்லா முத்­துச்­சோழன் போட்­டி­யிட்டார். இவரே ஜெய­ல­லி­தா­வுக்கு பிர­தான சவா­லாகக் காணப்­பட்டார். எனினும் இவ­ருக்கு 57 ஆயி­ரத்து 673 வாக்­கு­களே கிடைத்­தது. எனவே தோல்­வியைத் தழு­வினார்.

ஜெய­ல­லி­தா­வுக்கு 97 ஆயி­ரத்து 218 வாக்­குகள் கிடைத்­தன. 39 ஆயி­ரத்து 545 மேல­திக வாக்­கு­களால் ஜெய­ல­லிதா வெற்றி பெற்றார்.

2015 ஆம் ஆண்டு ஒரு இலட்­சத்து 50 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட வாக்­கு­களைப் பெற்­றிந்த ஜெய­ல­லி­தா­வுக்கு ஒரே வரு­டத்தில் அதா­வது 2016 இல் நடை­பெற்ற தேர்­தலில் சுமார் 53 ஆயிரம் வாக்­குகள் குறை­வாகக் கிடைத்­தமை மக்­க­ளிடம் அவ­ருக்­கான செல்­வாக்கு குறை­வ­டைந்­த­மையை எடுத்துக் காட்­டி­யது.

பெரும் சவால்­க­ளுக்கு மத்­தி­யி­லேயே மேற்­கு­றித்த எண்­ணிக்­கை­யி­லான வாக்­கு­களை ஜெய­ல­லி­தாவால் பெற முடிந்­தது. தமி­ழ­கத்தின் முதல்­வ­ரா­கவும், செல்­வாக்குப் படைத்­த­வ­ரா­கவும் காணப்­பட்ட ஜெய­ல­லி­தா­வுக்கே அப்­ப­டி­யொரு நிலைமை ஏற்­பட்­டது.

தற்­போது ஜெய­ல­லி­தாவின் மறைவின் பின்னர் அ.தி.மு.க.பல பிரி­வு­க­ளாக சிதறிப் போயுள்­ளது. சசி­கலா – எடப்­பாடி பழ­னிச்­சாமி – டி.டி.வி.தின­கரன் ஒரு புறம். முன்னாள் முதல்வர் ஓ.பன்­னீர்­செல்வம் தலை­மை­யி­லான அணி மறு­புறம். இத­னி­டையே ஜெய­ல­லி­தாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா அணி இன்­னொ­ரு­புறம். இந்த மூன்று பிரி­வி­ன­ருமே ஆர்.கே. நகர் தொகுதி இடைத்­தேர்­தலில் போட்­டி­யிடத் தயா­ராகி வரு­கின்­றனர்.

அ.தி.மு.க. சார்பில் அதன் துணைப் பொதுச் செய­லாளர் டி.டி.வி. தின­க­ரனும், எம்.ஜி.ஆர். அம்மா, தீபா பேரவைத் தலைவர் ஜே.தீபாவும், ஓ.பன்னீர் செல்வம் அணியின் சார்பில் ஒரு­வரும் போட்­டி­யிடப் போவ­தாக அறி­விப்­புகள் தெரி­விக்­கின்­றன. இவ்­வாறு ஒரே கட்­சியைச் (அ.தி.மு.க) சேர்ந்த மூவர் தனி­த­னி­யாக போட்­டி­யி­டு­வதால், அ.தி.மு.க.வின் வாக்­கு­களே பிரி­வ­டைந்து மூவ­ருக்கும் செல்­லக்­கூ­டிய வாய்ப்­புக்கள் ஏற்­படும். இதனால் அ.தி.மு.க.வுக்கு பெரும் பாதிப்பு ஏற்­படும். வெற்றி பெறு­வது கடினம்.

இதே­வேளை, இத்­தொ­குதி இடைத்தேர்தலில் தி.மு.க.வும் போட்டியிடலாமென்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பொதுத் தேர்தலில் தி.மு.க.வேட்பாளர் சிம்லா முத்துச் சோழன் 57 ஆயிரத்து 673 வாக்குகளை, அதுவும் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டுப் பெற்றிருந்தார். அந்த நிலையில் இம்முறையும் தி.மு.க.வேட்பாளர் போட்டியிட்டால் அவர் வெற்றிபெறக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

அ.தி.மு.க.வுக்குள் உட்கட்சி குழப்பம், அரச இயந்திரத்தின் மந்த செயற்பாடு, அமைச்சர்கள் மீதான அதிருப்தி, இலஞ்சக் குற்றச்சாட்டுகள், சசிகலாவின் பிடிக்குள் அ.தி.மு.க. சிக்கியுள்ளமை, அவரது குடும்பத்தவர்களின் தலையீடு ஆதிக்கம் என்று அ.தி.மு.க. மீது மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அந்த அதிருப்தியின் வெளிப்பாடு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெளிப்படக்கூடும்.

அதேவேளை, தற்போதைய நிலையில் தமிழகத்தில் எந்தக் கட்சிக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்பதை தெளிவுபடுத்தும் ஒரு தேர்தலாகவும் இந்த இடைத்தேர்தல் இருக்கப்போகிறது. சென்னை மாநகராட்சி பெரும்பாகத்திற்குள் வரம் ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளர்களின் தீர்ப்பு கற்றறிந்த, அரசியல் தெளிவுபெற்ற முற்போக்கு சிந்தனையுடைய மக்களின் தீர்ப்பாக இருக்குமென்பது பொதுவான எதிர்பார்ப்பாகும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-03-12#page-2

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.