Jump to content

'ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இவ்வளவு ஆதரவா!?' - அதிர்ச்சியில் சசிகலா, திவாகரன் #VikatanExclusive


Recommended Posts

'ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இவ்வளவு ஆதரவா!?' - அதிர்ச்சியில் சசிகலா, திவாகரன் #VikatanExclusive

ஓ.பி.எஸ்

ஓ.பி.எஸ். அணியினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்துக்கு கிடைத்த ஆதரவைக் கண்டு சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சிறையிலிருந்த சசிகலா, கட்சியினரை கண்டித்ததோடு சில கட்டளைகளையும் பிறப்பித்துள்ளார். 

சசிகலா Vs ஓபிஎஸ்

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன்விளைவு அ.தி.மு.க.வில் இரு அணிகள் உருவாகின. சசிகலா சிறைக்குச் சென்றுவிட்டதால் அவரது அணியில் இருந்த எடப்பாடி பழனிசாமி, முதல்வராகி விட்டார். ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு வந்த எம்எல்ஏக்கள், எம்பிக்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், சசிகலாவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுடன் இணைந்து செயல்படவுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அறிவித்தனர். ஆனால், தீபா, பேரவை தொடக்கம், கொடி அறிமுகம், நிர்வாகிகள் பட்டியல் என பிஸியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் ஜெயலலிதா சமாதியில் பன்னீர்செல்வமும், தீபாவும் சந்தித்தனர். ஆனால் அதன்பிறகு இருவரும் இணைந்து மக்களை சந்திக்கச் செல்லவில்லை. பன்னீர்செல்வம் அணியினர் மட்டும் மக்களை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.  

சசிகலா

ஜெயலலிதா மரணம் 

ஜெயலலிதாவின் பிறந்தநாள் தினமான பிப்ரவரி 24-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்துப் பேசத் தொடங்கினார்.  ஜெயலலிதாவின் மரணம் குறித்து பன்னீர்செல்வம் பேசத் தொடங்கியதும் அவருக்கு மக்களிடையேயும், கட்சியினரிடையும் ஆதரவு பெருகின. ஜெயலலிதா மரணம் குறித்த தகவல்களைக் கேட்க மக்களும் ஆர்வமாக இருக்கின்றனர். ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுக்களை அவிழ்க்க வலியுறுத்தி மகளிர் தினமான இன்று (மார்ச் 8) உண்ணாவிரதப் போராட்டத்தில் பன்னீர்செல்வம் அணியினர் ஈடுபட்டுள்ளனர். அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளில் உள்ள சந்தேகங்களை பன்னீர்செல்வம் அணி கேள்விகளாக மக்கள் மேடையில் கேட்டு வருகிறது. ஆனால் இதற்குப் பதில் அளிக்க வேண்டிய அப்போலோ மருத்துவமனை நிர்வாகமும், சசிகலா தரப்பும் அமைதியாக இருந்து வருகிறது. 

ஆதரவால் அதிர்ச்சி 

 தமிழகம், புதுச்சேரியில் நடந்த உண்ணாவிரதப் போராட்டங்களில் பங்கேற்க அதிகளவில் கட்சியினரும், மக்களும் வந்தனர். இந்த கூட்டத்தைப் பார்த்த பன்னீர்செல்வம் அணியினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே நேரத்தில் சசிகலா, டி.டி.வி.தினகரன் தரப்பினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நடத்திய போராட்டத்துக்கு சென்றவர்களின் பட்டியலை சசிகலா தரப்பு தயாரித்து கட்சித் தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளது. அதில் சில முக்கிய நிர்வாகிகளின் பெயர்களும் உள்ளன.  உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்காத கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் சிலர் மறைமுகமாக பன்னீர்செல்வம் அணியினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதில் எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். அவர்கள் குறித்த தகவலும் கட்சித் தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளதாம். அவர்களிடம் விரைவில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது அ.தி.மு.க.வில் பெரும்பாலானவர்களின் ஆதரவு பன்னீர்செல்வம் வசம் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் மாநகர உளவுப்பிரிவும், மாநில உளவுப்பிரிவும் அரசுக்கு ரிப்போர்ட் கொடுத்துள்ளதாம். பெண்கள் கூட்டம் கணிசமாக உள்ளதாக ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய உளவுப்பிரிவும் இதுதொடர்பான அறிக்கையை மத்திய அரசுக்கு கொடுத்துள்ளது. பன்னீர்செல்வத்துக்கு பெருகிய ஆதரவை அதிர்ச்சியுடன் சசிகலா அணியினர் பார்த்து வருகின்றனர். 

ஓ.பி.எஸ்

கேள்விக்கு மேல் கேள்விகள் 

பன்னீர்செல்வம் அணியினர் கூறுகையில், "தமிழக மக்கள் மனதில் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சந்தேகங்கள் இருந்து வருகின்றன. குறிப்பாக அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா நலமாக இருப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில் அவர் திடீரென மரணம் அடைந்ததை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்க வேண்டிய கடமை அப்போலோ மருத்துவமனைக்கு உள்ளது. அங்கு புதைந்திருக்கும் மக்களின் சந்தேகங்களை அவர்கள் தெளிவுப்படுத்தவில்லை. 75 நாள்களாக சிகிச்சை பெற்ற ஜெயலலிதா, நலமாக இருப்பதாக தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம் எதற்காக அவரது சிகிச்சையின்போது புகைப்படத்தை வெளியிடவில்லை. புகைப்படத்தை வெளியிடத் தடுத்த சக்தி யார், அந்த சமயத்தில் நடந்த இடைத்தேர்தலின்போது ஜெயலலிதா, ஏன் கையெழுத்துப் போடாமல் கைரேகை வைத்தார். அவருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை விலக்கியதற்கு என்ன காரணம் போன்ற கேள்விகளுக்கு சசிகலா நிச்சயம் பதில் அளிக்க வேண்டும். சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்பு அவசர, அவசரமாக முதல்வராக சசிகலா ஏன் ஆசைப்பட்டார். அந்த ஆசை நிறைவேறாததால் மன்னார்குடி குடும்பத்துக்கு விசுவாசமான எடப்பாடி பழனிசாமியை முதல்வராக தேர்வு செய்ததற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் காரணம் ஆகியவற்றை கட்சித் தலைமை வெளிப்படையாக தொண்டர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

இதுபோன்ற தொண்டர்கள், மக்களின் கோரிக்கைகளுக்காகவே இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி உள்ளோம். இதற்கும் பதில் கிடைக்கவில்லை என்றால் எங்களது போராட்டம் அடுத்தக்கட்டத்துக்குச் செல்லும். மக்கள், கட்சியினரின் ஆதரவு எங்களுக்கு இருப்பது சசிகலா அணியினருக்குத் நன்றாக தெரியும். அவர்களது அணியில் இருக்கும் எம்எல்ஏக்கள் இரட்டை இலை சின்னத்துக்காக அங்கு உள்ளனர். விரைவில் இரட்டை இலை சின்னம் எங்களிடம் வரும்போது அவர்களது ஆதரவு எங்களுக்கு கிடைக்கும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரால் வழிநடத்தப்பட்ட அ.தி.மு.க.வை அழிக்க விடமாட்டோம். அதற்காக எங்களது உயிரைத் தியாகம் செய்யக்கூட தயாராக இருக்கிறோம்" என்றனர். 

 ஓபிஎஸ் அணிக்கு 'செக்'

 "பன்னீர்செல்வம் அணியினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் குறித்து சிறையிலிருக்கும் சசிகலாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, போராட்டத்துக்கு கிடைத்த ஆதரவைக் கேட்ட சசிகலா, கோபமாகி உள்ளார். உடனடியாக டி.டி.வி. தினகரனுக்கு சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். 'நம்முடைய ஆட்சியில் பன்னீர்செல்வம் அணியினர் துணிச்சலாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி உள்ளனர். அங்கு சென்ற கட்சியினரை உங்களால் ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை.  இதே நிலை நீடித்தால் என்னவாகும் என்று நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. இனி இதுபோல நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். பன்னீர்செல்வம் அணிக்குச் செல்லும் கட்சியினரைக் கட்டுப்படுத்த வேண்டும். அவர்கள் செயல்படாமல் இருக்க முட்டுக்கட்டைகளை போடுங்கள்' என்று ஆவேசமாக கூறியுள்ளார். 

சசிகலா,தினகரன்


இதையடுத்து டி.டி.வி.தினகரன் தலைமையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். அதில் பன்னீர்செல்வம் அணியினருக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. பன்னீர்செல்வம் அணியைப் பிரிக்க வியூகமும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமனம் தொடர்பாக கொடுத்த நோட்டீசுக்குப் பதில் அளிப்பது தொடர்பான ஆலோசனையில் டி.டி.வி. தினகரன் இருந்ததால் பன்னீர்செல்வம் அணியின் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கண்டு கொள்ளவில்லை. சசிகலாவிடமிருந்து வந்த உத்தரவுக்குப் பிறகே பன்னீர்செல்வம் அணியையும் கவனிக்கத் தனி குழு அமைத்துள்ளோம்" என்றனர் சசிகலா அணியினர். 

http://www.vikatan.com/news/coverstory/83046-increasing-support-for-panneerselvam-shocks-sasikala-and-dhivakaran.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.