Jump to content

'ஜூன் மாதம் முதல் ஆபரேஷன் தமிழ்நாடு!’ - அ.தி.மு.க-வை அலறவிடும் மோடி வியூகம்!


Recommended Posts

'ஜூன் மாதம் முதல் ஆபரேஷன் தமிழ்நாடு!’ - அ.தி.மு.க-வை அலறவிடும் மோடி வியூகம்!

த்தரப்பிரதேசம் மற்றும் மணிப்பூரில், இன்று இறுதிக்கட்ட வாக்குப் பதிவு நடந்து கொண்டிருக்கிறது. 'தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டை நோக்கி பா.ஜ.க-வின் கவனம் திரும்பும். தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தியதால், தமிழ்நாட்டு அரசியலைச் சற்று தள்ளி வைத்திருந்தார் பிரதமர். இனி, வரப்போகும் நாட்கள் அ.தி.மு.க-வுக்கு மிகக் கடினமானதாக இருக்கும்' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில். 

Modi, மோடி

தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரதான கட்சியின் எம்பி அவர். மத்தியில் ஆளும் பா.ஜ.க-வின் முக்கிய நிர்வாகி ஒருவரை நேற்று சந்தித்தார். 'தற்போதுள்ள சூழலில், அ.தி.மு.க அணியில் சேர்ந்து செயல்படுவதற்கு வாய்ப்பில்லை. ஏதேனும் ஒரு கட்சியில் சேரலாமா அல்லது கட்சியைத் தொடங்கலாமா?' என்பது குறித்து ஆலோசித்துக்கொண்டிருக்கிறேன்' என விவரிக்க, 'அவசரப்பட்டு எந்த ஒரு நடவடிக்கையிலும் இறங்கிவிட வேண்டாம். ஒன்று, பன்னீர்செல்வம் அணியில் சேருங்கள் அல்லது பா.ஜ.க-வில் இணைந்துவிடுங்கள். தமிழ்நாட்டுக்கு ஜூன் மாதத்துக்குள் தேர்தல் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மத்திய உளவுத்துறையின் அறிக்கைகளும் அதைச் சுட்டிக்காட்டுகின்றன' எனத் தெரிவித்திருக்கிறார். 'அவரது பதிலால் அதிர்ந்துபோன அந்த எம்பி, தமிழ்நாட்டில் உள்ள அவரது ஆதரவாளர்களிடமும் இதைப் பற்றி விவாதித்துவருகிறார்' என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில். 

'இப்படியொரு தகவல் வெளிவருவது உண்மையா?' என்ற கேள்வியை பா.ஜ.க நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். "கோவை, ஈஷா யோக மையத்தில் நடந்த ஆதியோகி விழாவுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழக பா.ஜ.க நிர்வாகிகளிடம் விரிவாகவே ஆலோசித்தார். எங்கள் ஒவ்வொருவரின் கருத்துகளையும் கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் பேசும்போது, 'தமிழகம் மிக முக்கியமான மாநிலம். தற்போதுள்ள அரசியல் சூழலில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எந்தவித பாதிப்பும் வந்துவிடக் கூடாது' எனச் சொல்ல, 'இங்கு 39 எம்பி-க்கள் இருக்கிறார்கள்' என நிர்வாகி ஒருவர் குறுக்கிட, 'அவர்களுக்காக நான் சொல்லவில்லை. நமது கவனம் முழுக்க தமிழகத்தின் மீது இருக்க வேண்டும்' என உணர்த்தினார்.

பிரதமரின் வார்த்தைகளுக்குப் பின்னால், பல்வேறு விஷயங்கள் உள்ளன. தமிழக அரசியலை அவர் உன்னிப்பாக கவனித்துவருகிறார். அரசியல் சார்பில்லாத நபர்களின்மூலம் கிடைக்கும் தகவல்களையும், மத்திய உளவுப் பிரிவின் அறிக்கையையும் துல்லியமாக அலசுகிறார். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவர்களின் நடவடிக்கைகளையும் உடனுக்குடன் அறிந்துகொள்கிறார். உத்தரப்பிரதேச தேர்தலுக்குப் பிறகு, தமிழ்நாட்டின் மீது அமித் ஷாவும் மோடியும் கூடுதல் கவனம் செலுத்த இருக்கிறார்கள். இதையொட்டி, தேர்தல் தயாரிப்பு பணிகளுக்கான முதல்கட்டக் கூட்டத்தையும் மதுரையில் தொடங்கிவிட்டோம். தேர்தல் பொறுப்பாளர்களையும் நியமித்து வருகிறோம். உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக அரசியல் களத்தை நோக்கி காய்களை நகர்த்த இருக்கிறோம்' என்றார் நம்பிக்கையோடு. 

எடப்பாடி பழனிசாமி

"தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவதற்கு, ஆறு மாதங்கள் அவகாசம் இருக்கின்றன. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, நிதி மசோதா மீதான விவாதம் நடக்க இருக்கிறது. அந்த நேரத்தில், சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவதற்கு தி.மு.க தயாராக இருக்கிறது. இந்தத் தீர்மானத்தில் எதிர்க்கட்சிகள் வெற்றிபெற்றுவிட்டால், முதலமைச்சருக்கு சாதகமில்லாத ஒருவர்தான் சபாநாயகராக வருவார். அதை நோக்கி தி.மு.க காய்களை நகர்த்திக்கொண்டிருக்கிறது. மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் தமிழக முதல்வருக்கும் சசிகலா வகையறாக்களுக்கும் சாதகமாக இல்லை. உத்தரப்பிரதேச தேர்தல் பிரசாரம் நடந்துகொண்டிருந்ததால், கார்டனில் உள்ளவர்களின் எண்ணம் நிறைவேறியது. மத்திய அரசை அவர்களால் வழிக்குக் கொண்டு வர முடிந்தது. அந்தநேரத்தில் தேர்தல் இல்லாமல் இருந்திருந்தால், முடிவுகளும் வேறு பாதையை நோக்கிச் சென்றிருக்கும். சசிகலாவைச் சிறைக்கு அனுப்பியதன் மூலம் மத்திய அமைச்சர் ஒருவரின் நோக்கம் நிறைவேறிவிட்டது.

ஆனால், கூவத்தூர் ஆபரேஷனை அவரால் முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை. அந்தக் கோபத்தில்தான் அடுத்தகட்ட நடவடிக்கைகளை வேகப்படுத்திவருகிறார். உ.பி தேர்தல் முடிவுக்குப் பிறகு, டி.டி.வி. தினகரன் மீதான வழக்குகள் வேகம் பெறத் தொடங்கும். சேகர் ரெட்டியை குறிவைத்து நடத்தப்பட்ட ரெய்டு நடவடிக்கைகளும் அப்படியே இருக்கின்றன. அதன் விளைவுகளை இனிமேல்தான் ஆளும்கட்சி எதிர்கொள்ளப்போகிறது. இதை உணர்ந்து, அனைத்து தரப்பிலும் சமாதானப் படலத்தைத் தொடங்கியிருக்கிறார், எடப்பாடி பழனிசாமி. 'உங்களுக்கு எதிராக நாங்கள் இல்லை' என்பதை மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்லும் வேலைகளில் அவருடைய ஆட்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு, மத்தியில் ஆள்பவர்கள் எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை. இன்னும் நான்கு மாதத்துக்குள் தேர்தலைக் கொண்டுவரும் பணியில் இறங்கியிருக்கிறார்கள். இதனை ஆளும்கட்சி எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்று தெரியவில்லை" என்கிறார் டெல்லி அரசியலில் கோலோச்சும் தமிழகப் பிரமுகர் ஒருவர். 

உள்ளாட்சித் தேர்தல், தேர்தல் ஆணையம், ஓ.பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம், ஊழல் வழக்குகள் என நான்கு முனைத் தாக்குதலில் தள்ளாடிக்கொண்டிருக்கிறது, அண்ணா தி.மு.க. இந்நிலையில், மார்ச் 11 உ.பி தேர்தல் முடிவுக்குப் பிறகு, தமிழகத்தில் அதிரடிகளைக் காட்டத் திட்டமிட்டுள்ளது பா.ஜ.க.

அ.தி.மு.க எம்.எல்.ஏக்களைக் கண்கொத்திப் பாம்பாக கவனிப்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் தலையாய பணியாக இருக்கிறது. 

http://www.vikatan.com/news/tamilnadu/83011-tamil-nadu-is-very-important-to-bjp---narendra-modi.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.