Jump to content

திரிசங்கு நிலையில் அ.தி.மு.க... திணறும் தினகரன்!


Recommended Posts

திரிசங்கு நிலையில் அ.தி.மு.க... திணறும் தினகரன்!

சசிகலா

“இருபத்தி ஐந்து ஆண்டுகள் அதிகாரத்தில் இல்லாமலேயே அதிகாரம் செலுத்த முடிந்த நம்மால், அதிகாரம் நேரடியாக கைக்கு வந்தபின் அதை முழுமையாக செயல்படுத்த முடியாத துரதிர்ஷ்டம்  ஏற்பட்டுள்ளதே” என்ற வருத்தத்தில் ஆழ்ந்திருக்கிறது ஒட்டுமொத்த சசிகலா உறவினர்கள். இதனால் திக்..திக்..என்ற நிலையில் தினகரன் இருந்து வருகிறார். 

ஒன்றரைக் கோடி தொண்டர்களைக்  கொண்ட அ.தி.மு.க என்ற இயக்கத்தையும், நான்கரை ஆண்டுகால தமிழகத்தின் ஆளுங்கட்சி என்ற அந்தஸ்தையும் சசிகலா குடும்பம் இனி முழுமையாக பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்துமா, செலுத்தாதா? என்ற குழப்பத்துக்கு இன்னும் சில தினங்களில் விடை கிடைத்துவிடப் போகிறது. ஆம்! ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், இந்திய தேர்தல் ஆணையம் அ.தி.மு.க மீது கண் வைக்க உள்ளது. 

அ.தி.மு.கவின் துணைப்பொதுச்செயலாளராக ஒரே நாளில் அதிரடியாக நியமிக்கப்பட்டார் சசிகலாவின் அக்காள் மகன் டி.டி.வி.தினகரன். பொதுச்செயலாளருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் துணைப்பொதுச்செயலாளருக்கும் உண்டு என்ற அறிவிப்போடு பொதுச்செயலாளர் சசிகலா ஒப்புதல் பெற்று தினகரன் அறிவிக்கப்பட்டார். அ.தி.மு.கவின் பலருக்கு அறிமுகமான முகம், அனைத்து மாவட்டங்களிலும் ஆதரவாளர்கள் உண்டு, சசிகலா குடும்பத்திலே அதிக ஆண்டுகள் அ.தி.மு.க-வில் பதவியில் இருந்தவர் என்ற தகுதிகள்தான் தினகரனை முன்னிலைப்படுத்தின. ஆனால் சசிகலா குடும்பத்தினர் மீது ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு எழுந்த சர்ச்சைகள் தினகரன் மீதும் வெறுப்பை பொதுமக்களிடம் ஏற்படுத்திவிட்டன. குறிப்பாக சசிகலாவுக்குச் சமமாக தினகரன் என்பதை அடிமட்டத் தொண்டர்களே  ஏற்க விரும்பவில்லை. ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சசிகலாவுக்கு எதிரான தாக்குதலால், தினகரன் தரப்பு கொஞ்சம் ஆடிப்போய் விட்டது. 

ஒ.பி.எஸ் ஆதரவு எம்.பிக்கள்

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு மத்திய அரசு அ.தி.மு.கவின் நிலையை உன்னிப்பாக கவனித்துதான் வருகிறது. ஒட்டுமொத்த சசிகலா குடும்பத்தினர் மீதும் மத்திய அரசுக்கு நெகடிவ் இமேஜ் இருக்கிறது. இதனால் அவர்கள் ஆட்சியையோ, கட்சியை கையில் வைத்திருப்பதையோ ஆரம்பத்தில் இருந்தே மத்திய அரசு விரும்பாமல் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால்தான் சசிகலாவை முதல்வராகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்க கால தாமதம் செய்தது. சசிகலாவுக்கு எதிராக நீதிமன்றத்தை முடக்கிவிட்டது போன்ற சம்பவங்களை சுட்டிக் காட்டுகின்றார்கள். இந்நிலையில் சசிகலா சிறைக்குப் போனாலும், அவரின் அதிகாரத்தை தொடர்ந்து கொண்டுசெல்லும் வகையில் கட்சிக்குத் தினகரனையும், ஆட்சியில் தனக்கு நம்பிக்கையான எடப்பாடியையும் சசிகலா தேர்வு செய்தார் என்கிறார்கள். இந்த இரண்டு  தேர்வையுமே மத்திய அரசு விரும்பவில்லையாம். சசிகலா தலையீடு இல்லாத ஆட்சியும், கட்சியும் தான் இருக்க வேண்டும் என்ற மனநிலையில் அவர்கள் இருக்கிறார்கள். 

இரண்டிலும் இருந்தும் சசிகலா குடும்பத்தை அப்புறப்படுத்துவதற்கு மத்திய அரசு தேர்தல் ஆணையத்தைத் தான் இப்போது கருவியாகப் பயன்படுத்த உள்ளார்கள். அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா தேர்வானது சட்டப்படி செல்லாது என்று சசிகலா புஷ்பாவும், ஓ.பி.எஸ் தினகரன்அணியும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர். தேர்தல் ஆணையம் இதுகுறித்து சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அதற்கு சசிகலா பதில் அளிக்காமல் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருக்கும் தினகரன் பதில் கடிதம் அனுப்பினார். ஆனால் தேர்தல் ஆணையம், தினகரன் பதவியே முறையாக தேர்வு செய்யப்படாமல் இருப்பதால் அவர் இதற்கு பதில் அளிக்க முடியாது என்று கடிதத்தைத் திருப்பி அனுப்பி தினகரனுக்கு அதிர்ச்சி அளித்தது. 

சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி குறித்து விரைவில் முடிவு அறிவிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாழ்வா, சாவா? பிரச்னையாக இந்த முடிவை சசிகலா குடும்பம் பார்க்கிறது. காரணம் சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி செல்லாது என்று அறிவித்துவிட்டால், அவரால் அ.தி.மு.கவில் நியமிக்கப்பட்ட பதவியும், நீக்கிய பதவிகளும் செல்லாமல் போய்விடும். அப்போது பொதுக்குழுவைக் கூட்டித்தான் புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முடியும். பொதுக்குழுவைக் கூட்டும் பொறுப்பு அப்போது அவைத்தலைவர் என்ற முறையில் மதுசூதனன் கைக்கு வந்துவிடும். ஓ.பி.எஸ், மதுசூதனன், பொன்னையன் போன்றவர்கள் கை கட்சிக்குள் ஓங்கிவிடும். கட்சி நிர்வாகம் தங்கள் கையை விட்டுப் போனால் ஆட்சியும் அவர்கள் கைக்குள் போய்விடும் என்ற அச்சத்தில் இப்போது சசிகலா குடும்பத்தினர் உள்ளார்கள். 

தேர்தல் ஆணையம் தங்களுக்குச் சாதகமாக நடந்து கொள்ளாது என்ற யூகத்தில் சசிகலா குடும்பத்தினரும் உள்ளார்கள். அதனால் தான் மாவட்டச் செயலாளர்களிடம் கட்சி நிர்வாகிகளை சரி செய்து வையுங்கள் என்று சொல்லியுள்ளனர். ஒருவேளை பொதுக்குழுக் கூட்ட வேண்டிய நிலை வந்தால் இவர்கள்தான் வாக்களிக்கவேண்டிவரும் என்பதை அவர்கள் உணர்ந்துவிட்டார்கள். 

மாவட்ட வாரியாக நிர்வாகிகளை தினகரன் சந்தித்து வருவதன் பின்னணியும் இதுதான். மத்திய அரசு சார்பில் உளவுத்துறை அதிகாரி ஒருவர் எடப்பாடி பழனிசாமி  தரப்பிடம் பேசியுள்ளார். அப்போது “சசிகலா குடும்பத்தை நீங்கள் ஒதுக்கி வைத்துவிட்டால் மத்திய அரசு உங்களுக்கு உதவும். அதேபோல் ஓ.பன்னீர்செல்வமும் நீங்களும் இணைந்து செயல்படவேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. அப்படி நடந்தால் மட்டுமே கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றிக்கொள்ள முடியும்” என்று எச்சரிக்கும் விதமாக சொன்னாராம். 

இதைக்கேட்டு எடப்பாடி தரப்பு என்ன செய்வது என்று புரியாமல் முழித்துவருகிறதாம். தினகரனோ, கட்சி நம் குடும்பத்தை விட்டுப் போய்விடக்கூடாது என்ற பதட்டத்தில் உள்ளார். மத்திய அரசு பொறுமையாக இதனைப் பார்த்து வருகிறது. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வந்ததும் அ.தி.மு.க -வின் மீது சில முடிவுகளை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அந்த உற்சாகத்தில்தான் ஓ.பி.எஸ் தரப்பினர் இப்போது உள்ளார்கள். அ.தி.மு.க வின் எதிர்காலம் இப்போது மத்திய அரசின் கையில் இருக்கிறது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

http://www.vikatan.com/news/tamilnadu/82982-this-is-the-current-situation-of-aiadmk-now.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.