Jump to content

ஜெ., மரணம் : 14 கேள்விகளுக்கு பதில் இல்லை! : முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி


Recommended Posts

ஜெ., மரணம் : 14 கேள்விகளுக்கு பதில் இல்லை! :
முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி
 
 
 

''அப்பல்லோ அளித்த முதல் தகவல் அறிக்கைக்கும், தற்போது வெளியிடப்பட்ட அறிக்கைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. எங்களுக்கு, 14 கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை,'' என, முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

 

Tamil_News_large_172578820170308000153_318_219.jpg

அவர் அளித்த பேட்டி:

அ.தி.மு.க., நியமன பொதுச் செயலர் விவகாரத்தில், அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

ஜெ.,வால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, ஆறு ஆண்டுகளாகும் நிலையில், தினகரன் மன்னிப்பு கடிதத்தை யார் ஏற்றது? தேர்தல் நடத்தி, புதிய பொதுச் செயலர் நியமிக்கப்படும் வரை, கட்சியை வழிநடத்தும் பொறுப்பு, கட்சியின் அவைத் தலைவர் மற்றும் பொருளாளருக்கு தான் உள்ளது.
இதை கட்சியின் சட்ட விதிகள் தெளிவாக குறிப்பிட்டுள்ளன. எனவே, தேர்தல் கமிஷனிடம், நாங்கள் வைத்த கோரிக்கையில், கண்டிப்பாக நல்ல முடிவை எதிர்பார்க்கிறோம்.

நீங்கள் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அ.தி.மு.க., - எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் வர வாய்ப்புஉள்ளதா?

எங்களிடம், 12 எம்.பி.,க்கள், 12 எம்.எல்.ஏ.,க்கள், 22 முன்னாள் அமைச்சர்கள், 100 முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் முன்னாள் மாவட்ட செயலர்கள், கட்சியின் பல்வேறு நிலைகளில் உள்ள நிர்வாகிகள், ஏராளமான பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். உண்ணாவிரதத்தில், பொதுக்குழு உறுப்பினர்கள், அதிக எண்ணிக்கையில் வெளிச்சத்துக்கு வந்து, தங்களை பன்னீர்செல்வம் ஆதரவாளர்களாக, அடையாளம் காட்டுவர்.

உண்ணாவிரதத்திற்கு பின், ஜெ., மரணம் தொடர்பாக, உங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

இந்த பிரச்னையை, நான்கு தளங்களில் கொண்டு செல்ல முடிவு செய்தோம். அதன்படி, மக்கள் மன்றம், சட்டசபை மற்றும் லோக்சபா;

ஜனாதிபதி, கவர்னர் மற்றும் தேர்தல் கமிஷனிடம் புகார் அளிப்பது என, மூன்று தளங்களில், நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். தேவைப்பட் டால், நான்காவது தளமான, கோர்ட் மூலம் வழக்கு தொடர்வோம்.

விரைவில், உள்ளாட்சி தேர்தல் மற்றும் ஆர்.கே.நகர் சட்டசபை இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அந்த அறிவிப்பு வந்ததும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, ஜெ., மரண சந்தேகங்கள் குறித்து, மக்கள் மன்றத்தில் முறையிட உள்ளார்.

மண்டல வாரியாக, பொதுக்கூட்டங்களுக்கும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. நிர்வாக வசதிக்காக, கட்சியை, 10 மண்டலங்களாக பிரித்து நடத்தி வருகிறோம். தர்மயுத்தம் வெற்றி பெறும்.

அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ஜெ.,வுக்கு மருத்துவம் செய்த டாக்டர்கள், அவருக்கு மருத்துவ ஆலோசனை வழங்கிய டாக்டர்கள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், போயஸ் கார்டனில் ஆரம்பம் முதலே, அவருக்கு சிகிச்சை அளிப்பதாக சொல்லப்பட்ட குடும்ப டாக்டர் சிவக்குமார் பெயர் இல்லையே?

அவருடைய பெயர், அறிக்கையில் எந்த இடத்திலும் இல்லை. பெரும்பாலான நேரம், அவர் அப்பல்லோவில் இருந்தார். மற்றவர்களிடம், அங்கு என்ன நடக்கிறது என்பதை, சொல்லும் இடத்தில் இருந்தார். இந்த மாதிரி பல விஷயங்களை, உண்ணாவிரதத்தில் பன்னீர்செல்வம் விரிவாகப் பேசுவார்.

ஜெ., கீழே விழுந்து அடிபட்டதாக, ஒரு கருத்து உள்ளது. அரசு தரப்பில் உள்ள தகவல்கள் எதிலும், எங்களுக்கு உடன்பாடு கிடையாது. அரசு தரப்பு அறிக்கையில், 'உறவினர்களுக்கும், முக்கிய அமைச்சர்களுக்கும்' என்ற வார்த்தையை, உபயோகப்படுத்தி உள்ளனர். எந்த உறவினருக்கு சொன்னார்கள் என்பது தெரியாது. ஆனால், முக்கிய அமைச்சர்கள், எவருக்கும் தகவல் தரப்படவில்லை. இது, அமைச்சர் விஜயபாஸ்கருக்கே தெரியும்.

கண்டிப்பாக, ஜெ., மரணத்தில், நீதி விசாரணை தேவை என்பது, தமிழக மக்களின் எண்ணம். ஜெ., மரணத்திற்கு காரணம் யார் என்பது தெளிவாக வேண்டும்.அப்பல்லோ அளித்த, முதல் தகவல் அறிக்கைக்கும், தற்போதையஅறிக்கைக்கும், நிறைய வேறுபாடுகள் உள்ளன. குறிப்பாக, ஜெ., நினைவின்றி மூன்று நாட்கள் இருந்தார் என்று, தற்போது வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட, முதல் தகவல் அறிக்கையில், 'ஜெ., சாப்பிட் டாங்க; அவருக்கு அதிக காய்ச்சல், உடலில் நீர் சத்து குறைபாடு இருந்தது' என்று சொல்லி உள்ளனர்.

 

அதற்கும், இந்த அறிக்கைக்கும், மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. அரசு தரப்பில் வெளியிடப்பட்ட, நான்கு பக்க அறிக்கையில் கூறப்பட்ட விஷயங்களுக்கு, 'மெடிக்கோ லீகல்' மொழியில், உண்ணாவிரதத் தில் விரிவாக பதில் கூறப்படும்.

முக்கியமாக அவருக்கு பொருத்தப்பட்ட, 'எக்மோ' உயிர் காக்கும் கருவியை எடுக்க, யார் உத்தரவிட்டது என்பது தெரிய வேண்டும். டிச., 4ல், அனைத்து அமைச்சர்களும், மாலை, 4:00 மணியில் இருந்து, அப்பல்லோவுக்கு வந்து சேர்ந்தோம்.

அப்போது, எங்களிடம், 'ஏழு நாட்களுக்கு, எக்மோ கருவி பொருத்தப்பட்டிருக்கும். அந்த ஏழு நாட்களுக்குள், உடல் உறுப்புகள், 10 சதவீதம் உயிர்த்தெழ வாய்ப்பு இருக்கிறது' என, தெரிவித்தனர். அந்த நம்பிக்கையில், இரவு முழுக்க காத்திருந்தோம். மறுநாள் காலை, அந்த கருவியை அகற்றியதாக அறிந்தோம்.

இதை எடுக்க உத்தரவிட்டது யார்? அந்தக் கருவியை எடுத்து, இயற்கையாக மரணத்தை நோக்கி, ஜெ., செல்ல பாதை வகுத்து கொடுத்தது யார்? இது முக்கியமான கேள்வி. அதற்கு நெருங்கிய ரத்த உறவினர்கள் தான், அனுமதி கொடுக்க முடியும். அப்படி கொடுத்திருந்தால், யார் கொடுத்தது? அந்த ரத்த உறவினர் என்பதற்கு என்ன அடையாளம் தரப்பட்டது என்பது மிக முக்கியமான கேள்வி.

அடுத்து, போயஸ் கார்டனில் இருந்து, தேசிய பாதுகாப்பு படையினரை விலக்க உத்தர விட்டது யார்? அந்த பாதுகாப்பு படை, ஏன் அப்பல்லோ வரவில்லை? அவர்கள் எங்கு சென்றனர்? இதுபோல், 14 கேள்விகளுக்கு, இன்னும் எங்களுக்கு விடை கிடைக்கவில்லை.

இந்த கேள்விகளுக்கெல்லாம், மத்திய அரசின் நேரடி மேற்பார்வையில், சி.பி.ஐ., விசாரணை நடத்தப்பட வேண்டும்.இவ்வாறு பாண்டியராஜன் தெரிவித்தார்.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1725788

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.