Jump to content

ஒளியிலே தெரிவது டேட்டா தான்..! #Li-FiTechnology


Recommended Posts

ஒளியிலே தெரிவது டேட்டா தான்..! #Li-FiTechnology

டேட்டா li-fi

முன்பெல்லாம் வீட்டுக்கு நண்பர்கள் வந்தால் குடிக்கத் தண்ணீரும், சாப்பிட எதாவது கொடுப்பதும் வழக்கம். இப்போது அந்த உபசரிப்பு பட்டியலில் வைஃபை பாஸ்வேர்டும் சேர்ந்து விட்டது. ஆடம்பரம் என்ற நிலையில் இருந்து அத்தியாவசியம் என்ற நிலைக்கு இணையம் வந்து பல காலம் ஆகிவிட்டது.  இணையத்தின் வேகத்தை கூட்டவும், இன்னும் மேம்பட்ட சேவைகள் கிடைக்கவும் பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அதில் முக்கியமானது Li-Fi.

Li-fi என்றால் என்ன?

இருட்டில் டார்ச் லைட் அடிக்கும்போது, அந்த ஒளி செல்லும் பாதையை கவனித்ததுண்டா? பல நுண்ணிய துகள்கள் அதில் பயணிப்பது தெரியும். அதுபோல, டேட்டாவை ஒளி மூலம் கடத்துவதுதான் Li-fi தொழில்நுட்பம். 

இப்போதிருக்கும் wifi டெக்னாலஜியில், வீடு வரை கேபிள் மூலம் வரும் இந்த டேட்டா, வயர்லெஸ் மோடம் மூலம் ரேடியோ அலைகளாக மாற்றப்படுகிறது. ரேடியோ அலைகளில்  டேட்டா நமது மொபைல் அல்லது லேப்டாப்புக்கு கடத்தப்படுகிறது. அங்கே அந்த அலைகள் டீ-கோட் செய்யப்பட்டு தேவையான தகவல்களாக ஸ்க்ரீன் தெரிகிறது. இந்த ரேடியோ அலைகளின் வேகம் தான் இப்போது வைஃபையின் வேகத்தை நிர்ணயிக்கிறது.

Lifiயில் இந்த டேட்டா ஒளியின் மூலம் கடத்தப்படுவதால் அதன் வேகம் அதிகம். வைஃபையின் வேகத்தை விட பத்து மடங்கு அதிக வேகத்தில் டேட்டா பயணிக்கும்.   

எப்படி செயல்படுகிறது?

எல்.ஈ.டி. பல்புக்கு சீரான மின்சாரம் கிடைக்கும்போது அது ஃபோட்டானை வெளிப்படுத்துகிறது. அந்த ஃபோட்டானைத்தான் நாம் வெளிச்சம் என்கிறோம். எப்போதாவது லோ-வோல்டேஜில் மின்சாரம் வரும்போது அந்த ஒளி குறைவதை நாம் பார்த்திருக்கிறோம். பல்புக்கு வரும் மின்சாரத்தின் அளவைக் கட்டுப்படுத்தினால் பல்பும் அதற்கேற்றது போல ஃபோட்டானை வெளிப்படுத்தும். Lifi வசதி இருக்கும் மொபைல் அல்லது லேப்டாப் அந்த சிக்னலை டீ-கோட் செய்து டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளும். 

யார் கண்டுபிடித்தது?

ஜெர்மனைச் சேர்ந்த பேராசிரியர் ஹெரால்ட் ஹாஸ் என்பவர்தான் Li-fiயின் பிதாமகர். 2011-ம் ஆண்டு ஒரு கருத்தரங்கில் ஒளியால் டேட்டாவை கடத்த முடியும் என்ற தியரியை அவர்தான் முன் வைத்தார். அடுத்த ஆண்டில் இந்த தொழில்நுட்பம் பற்றி பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வந்த சிலரை ஒன்று சேர்த்து ’Pure Lifi' என்ற குழுவை உருவாக்கினார். இவர்கள் இதுவரை Lifiல் இயங்கும் இரண்டு புராடக்டுகளை தயாரித்திருக்கிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்.

pure li-fi

லைஃபை சிறப்புகள்:

100 MBPSக்கே நம்ம ஊர் நெட் நொண்டியடிக்க, 10GBPS எளிதில் கடத்தி சோதனையில் வெற்றிப்பெற்றிருக்கிறது லைஃபை. வைஃபை சிக்னலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் சுருக்க முடியாது. அதாவது நமது வீட்டைத் தாண்டி சிக்னல் போகாமல் பார்த்துக் கொள்ள லைஃபையில் வழியுண்டு என்பதால் பாதுகாப்பானது. ரேடியோ அலைகளோடு ஒப்பிடுகையில் சுற்றுசூழலுக்கு பாதுகாப்பானது. வீடுகளின் கூரைகள் மீது பொருத்தப்பட்ட சோலார் தகடுகள் பிராட்பேண்டு ரிசீவர்களாக செயல்படும் சாத்தியங்களும் இருக்கிறது. அதாவது நம் வீட்டுக்கு வரும் இணைய கேபிளுக்கும் குட்பை சொல்லிவிட்டு, அதையும் நேரிடையாக அருகில் இருக்கும் டவரில் இருந்து இணையத்தை பெற முடியும் என்கிறார்கள்.

வைஃபையில் ரேடியோ அலைகள் இருப்பதால் மருத்துவமனை, விமானங்கள், மற்றும் பல பாதுகாப்பான பகுதிகளில் பயன்படுத்தப்படுவதில்லை. அங்கெல்லாம் லைபை முக்கிய பங்காற்றும். 

குறைகள்:

லைஃபை என்பது வைஃபைக்கு மாற்று என சொல்ல முடியாது. ஒளி நாம் போகும் எல்லா இடங்களுக்கும் வந்துவிடாது. இதை இன்னொரு வயர்லெஸ் தொழில்நுட்பமாக மட்டுமே கருத முடியும். ஆனால், விலை குறைந்த, எந்த பாதகமும் இல்லாத எளிமையான, வேகமான தொழில்நுட்பம் என்று சொல்லலாம்.

ஆராய்ச்சிகள் வெற்றி பெற்றாலும் லைஃபை புராடக்டுகள் சந்தைக்கு வர இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். ஆனால், அது வரும்போது மிகப்பெரிய ஆச்சர்யங்கள் நமக்காக காத்திருக்கின்றன என்பது மட்டும் நிச்சயம். 

http://www.vikatan.com/news/information-technology/82876-how-does-li-fi-technology-work.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.