Jump to content

சசிகலாவுக்கு எதிராக விசாரணைக் கமிஷன்! - எடப்பாடி பழனிசாமியை எகிற வைக்கும் கடிதம் #VikatanExclusive


Recommended Posts

சசிகலாவுக்கு எதிராக விசாரணைக் கமிஷன்! - எடப்பாடி பழனிசாமியை எகிற வைக்கும் கடிதம் #VikatanExclusive

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை கேட்டு உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருக்கிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அதேநேரத்தில், 'சசிகலா மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக விசாரணைக் கமிஷன் அமையுங்கள்' என முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார் சசிகலா புஷ்பா எம்.பி.

எடப்பாடி பழனிசாமி 

ஆர்.கே.நகரில் நலத்திட்ட பணிகள், மாவட்டங்களில் சுற்றுப் பயணம் என இடைத்தேர்தல் பிளஸ் உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு செயல்படுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 'அம்மாவுக்குக் கிடைத்த வரவேற்பு எங்களுக்கும் கிடைக்கும்' என்ற நம்பிக்கையில் கோட்டையில் வலம் வருகிறார். புதிய அரசுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் அணி வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்கியுள்ளது. 'இந்த ஆட்சி எத்தனை நாள் என்று பாருங்கள்' என பா.ஜ.க நிர்வாகிகளும் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால், பன்னீர்செல்வத்தைப் போலவே, புன்னகை மாறாத முகத்துடன் வலம் வருகிறார் எடப்பாடி பழனிசாமி. "ஆட்சி அதிகாரத்திற்குள் எந்தவித சிக்கலும் வந்துவிடக் கூடாது என்ற நோக்கில், ஆளும்கட்சி எம்.எல்.ஏக்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.

ஒவ்வொரு எம்.எல்.ஏக்களின் பின்னாலும், உளவுத்துறை காவலர்கள் எந்த நேரமும் வலம் வருகின்றனர். சந்தேக வளையத்தில் உள்ள எம்.எல்.ஏக்களுக்கு கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளனர். மாநில அரசின் நிதிநிலை மசோதா தாக்கல் செய்யப்பட்ட பிறகு, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவும் எதிர்க்கட்சிகள் ஆலோசித்து வருகின்றன. அதை எதிர்கொள்வது குறித்தும் அ.தி.மு.க வட்டாரத்தில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும், ஆட்சிக்கு எதிரானவர்களை சரிக்கட்டும் வேலைகளிலும் எடப்பாடியின் ஆட்கள் களமிறங்கியுள்ளனர்" என விவரித்த சசிகலா புஷ்பா ஆதரவாளர் ஒருவர், 

"நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து சசிகலா புஷ்பாவை சிலர் அணுகியுள்ளனர். 'உங்கள் மீதான வழக்குகளை நீர்த்துப் போகச் செய்கிறோம். எங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் வேகப்படுத்த வேண்டாம். எங்களை நீங்கள் உறுதியாக நம்பலாம்' என வாக்குறுதி அளித்துள்ளனர். சசிகலா புஷ்பா மீதான வழக்குகளை நீர்த்துப் போகச் செய்வது குறித்து உறுதிமொழி அளித்துள்ளனர். முதல்வரின் தூதுவர்களை நம்பலாமா என விவாதித்து வருகிறார் சசிகலா புஷ்பா. இதற்கும் ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. 'இந்த மாத இறுதியில் அரசியல் கட்சி தொடங்க இருக்கிறார் புஷ்பா. ஜெயலலிதாவுடன் மோதல்போக்கு தொடங்கியதும், ராஜ்யசபாவிலேயே ஜெயலலிதா எதிர்த்துப் பேசினார்.

சசிகலா புஷ்பா

இந்த அவமானத்தை ஜெயலலிதாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தொடர்ந்து முதல்வருக்கு எதிராக பேசி வந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், சசிகலாவை எதிர்ப்பைக் கையில் எடுத்தார். தேர்தல் ஆணையத்தில் ஜெயலலிதா கையெழுத்து தொடர்பான புகாரைக் கொண்டு சென்றார். இதன் விளைவாகவே கை நாட்டு போடப்பட்ட விண்ணப்பத்தை வேட்பாளர்கள் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவரது மரணம் தொடர்பாக, குடியரசுத் தலைவர் மற்றும் உள்துறை செயலரிடம் புகார் கொடுத்தார். இரட்டை இலை என்றாலும் மருத்துவமனை விவகாரமாக இருந்தாலும், சசிகலா புஷ்பா தொடங்கி வைத்ததைத்தான் பன்னீர்செல்வம் அணியினர் பின்தொடர்கிறார்கள். புதிய கட்சி தொடங்கும்போது, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொங்கு மண்டலத்தில் சமூக பலத்தை முன்வைக்கும் முடிவில் அவர் இருக்கிறார். 

'அமைச்சரவையிலும் அதிகாரிகள் மட்டத்திலும் நாடார் சமூகத்தை புறக்கணிக்கிறார்கள். இந்த அரசாங்கம் நமக்கு துரோகம் செய்கிறது' என்ற முழக்கத்தை அவர் முன்னெடுத்துச் செல்ல இருக்கிறார் என்று மாநில உளவுத்துறை அறிக்கை அளித்திருக்கிறது. இப்படியொரு நடவடிக்கை வேகமெடுத்தால், கொங்கு மண்டலத்தில் பலவீனத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்துதான் எடப்பாடி தரப்பில் இருந்து சமாதானப் பேச்சைத் தொடங்கியிருக்கிறார்கள். சசிகலா புஷ்பா  எப்படிச் சென்றாலும், தங்களை நோக்கி வந்துவிடக் கூடாது என்பதில் எடப்பாடி உறுதியாக இருக்கிறார்.

இந்தத் தூது எந்தளவுக்கு உண்மையானது என்பது பற்றி எச்சரிக்கை உணர்வோடு கவனித்து வருகிறார் சசிகலா புஷ்பா. 'சமரசத்திற்கு அழைத்துவிட்டு, கைது நடவடிக்கையை வேகப்படுத்திவிடக் கூடாது' எனவும் அச்சப்படுகிறார். இதன் தொடர்ச்சியாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம் எழுத இருக்கிறார் சசிகலா புஷ்பா. அந்தக் கடிதத்தில், 'ஜெயலலிதா மரணம் ஒரு கொலைதான். இந்த விவகாரத்தில் சசிகலா, ஜெயலலிதா வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண்கள், அமைச்சர் விஜயபாஸ்கர், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை உட்படுத்தி அந்த விசாரணை அமைய வேண்டும். இவர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும். உங்கள் அரசு இதற்கான பணிகளில் இறங்க வேண்டும்' எனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதத்திற்குக் கிடைக்கும் எதிர்வினையைப் பொறுத்தே, மாநில அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த இருக்கிறார்" என்றார் விரிவாக. 

http://www.vikatan.com/news/tamilnadu/82887-letter-says-an-investigative-commission-will-be-formed-against-sasikala.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதைத் தான் நானும் விரும்புகிறேன். ஆனாலும் ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்ற யார் இருக்கிறார்கள்? காட்டுங்க கை கோர்க்கிறேன் என்கிறார். இதுக்கு யாரிடமும் பதில் இல்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் தேவைகளை உணர்ந்து செயல்படலாம். இதுவரை நாம்தமிழர் வாக்குவங்கி கூடிக் கொண்டு தானே போகுது? எப்படி 3 வீதம் என்று கணித்தீர்கள்?
    • அவருக்கு பெரியமனசு. எப்படி அடித்தாலும் தாங்குவார்.
    • முதலில் நான் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும்,..எந்த தலைவருக்கும். எதிரானவன். இல்லை என்பதை  பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்  .....இங்கு எழுதுவது கருத்துகள் மட்டுமே  [அதாவது நடைமுறையில் சாத்தியம் எது என்று நான் கருதுவது ]. தமிழ்நாட்டில் எந்தவொரு தலைவரும் தனித்து நின்று வெல்ல முடியாது  ..இது சீமானுக்கும். பொருந்தும்    எந்த கட்சியும். வெல்ல வேணும் என்றால் கூட்டணி அவசியமாகும் ...செல்வாக்கு உள்ள கட்சிகளின் கூட்டணி அமைத்தால். மட்டுமே வெல்லலாம்.  சீமான் தலைமையில் எந்த கட்சியும். கூட்டணி அமைக்கப்போவதில்லை  ....சரியா? அல்லது பிழையா??   சீமான் வேறு கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்க முடியும்,.....ஆனால் அடுத்த அடுத்த தேர்தலில் அவரது   ஆதரவு   குறைத்து விடும்   3% கூட வரலாம்”      
    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.