Jump to content

பிரித்தானியாவில் நிரந்தர வதிவுரிமை! இலங்கையர்கள் தொடர்பில் அரசின் அதிரடி முடிவு


Recommended Posts

13677.jpg

அண்மைக் காலமாக பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரியவர்கள் மற்றும் அகதிப் பிரஜையாக 5 வருடங்கள் வசித்து விட்டு நிரந்தர வதிவுரிமைக்காக விண்ணப்பித்தவர்களுடைய விண்ணப்பங்களை உள்விவகார அமைச்சு பல மாதங்களாக முடிவுகள் எடுக்காமல் நிலுவையில் வைத்துள்ளது.

சாதாரணமாக உள்விவகார அமைச்சின் விதிமுறைகளுக்கு அமைவாக 6 மாதங்களுக்குள் அவர்களுடைய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

ஆனால் தற்பொழுது 6 மாதங்களுக்கு மேலாகவும் பல மாதங்களாக ஏராளமான விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.

இலங்கை தொடர்பாக கொள்கை மாற்றம் வந்தமையினால்தான் உள்விவகார அமைச்சு இவ்வாறாக விண்ணப்பங்களை நிலுவையில் வைத்துள்ளதாக பல தரப்பாலும் பேசப்பட்டு வந்துள்ளது.

இது தொடர்பாக உள்விவகார அமைச்சு,

“தற்பொழுது உள்விவகார அமைச்சின் இணயத்தளத்தில் உள்ள இலங்கைக்கான Guide தவிர கொள்கை மாற்றம் தொடர்பாக எங்களிடம் தகவல்கள் இல்லை” என உள்விவகார அமைச்சு Jay Visva Solicitorsக்கு தெரிவித்துள்ளது.

இருப்பினும், நாட்டுக்குரிய கொள்கை மற்றும் தகவல் குழு (Country Policy and Information Team) இலங்கைக்கு அண்மையில் ஒரு உண்மை கண்டறியும் பயணத்தை 2016 ஜூலை 09ற்கும் 23ஆம் திகதிக்குமிடையில் மேற்கொண்டதாகவும், அது தொடர்பான அறிக்கையை விரைவில் வெளியிட உள்ளதாகவும் உள்விவகார அமைச்சு Jay Visva Solicitorsக்கு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் உள்விவகார அமைச்சு முடிவுகள் எடுக்காமால் இருக்கின்ற விண்ணப்பங்களுக்கு விரைவில் முடிவுகள் எடுக்கலாம் அல்லது அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் கொள்கை மாற்றங்களைக் கொண்டுவந்து விண்ணப்பதாரர்களிடம் மேலதிக விபரங்களை கேட்டறிந்து Asylum Policy Instruction Revocation Of Refugee Status Version (4.0) அமைவாக முடிவுகள் எடுக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிய நீங்கள் Jay Visva Solicitors தொடர்பு கொள்ளலாம்.

Jay Visva Solicitors
First Floor
784 Uxbridge Rd
HayesUB4 0RS
Tell: 020 8573 6673

http://www.valampurii.lk/valampurii/content.php?id=13677&ctype=news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விளம்பரம், அப்பாவிகளை ஏமாற்ற,

ஏமாந்திடாதீங்க..... ஏமாத்துவாங்க......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, MEERA said:

நல்ல விளம்பரம், அப்பாவிகளை ஏமாற்ற,

ஏமாந்திடாதீங்க..... ஏமாத்துவாங்க......

 
 
 
 

இப்பவும் இப்படி கிளம்புறார்களா?

முன்பு மார்க்கண்டு சொலிஸிட்டர்ஸ். விளம்பரம் வாங்கப் போன பத்திரிக்கையாளருக்கு... இந்த கட்டுரையைப் போடுங்கோ காசு தாறம்...  என்று கொடுத்து... இதே மாதிரி அவிச்சு இறக்க... 

சனம் அல்லோல கல்லோலமாக அள்ளுப்பட்டது. பிறகு MK Sri, Raja & Co. 

எல்லோரும், காத்தில அடிபட்டுப்போன பூச்சிகள் போல, legal aid இல்லாது போனவுடன் போய் விட்டார்கள். 

இப்ப புதுசா இவையள் கிளம்பி இருக்கினம்.

அகதிகள் கொள்கை நாடுகள் ரீதியானது. ஆனால் உள்ளே சட்டபூர்வமாக வாழும் ஒருவருக்கான நிரந்தர வதிவுடைமை குறித்த முடிவுகள் நாடு தழுவிய ரீதியில் எடுக்க முடியாது. சட்டம் பொதுவானது.

இவையளுக்கு, வந்த கடிதத்தின் கருத்து அவயலுக்கே விளங்கவில்லை போல கிடக்குது.

Link to comment
Share on other sites

10 hours ago, MEERA said:

நல்ல விளம்பரம், அப்பாவிகளை ஏமாற்ற,

ஏமாந்திடாதீங்க..... ஏமாத்துவாங்க......

 

9 hours ago, Nathamuni said:

இப்பவும் இப்படி கிளம்புறார்களா?

முன்பு மார்க்கண்டு சொலிஸிட்டர்ஸ். விளம்பரம் வாங்கப் போன பத்திரிக்கையாளருக்கு... இந்த கட்டுரையைப் போடுங்கோ காசு தாறம்...  என்று கொடுத்து... இதே மாதிரி அவிச்சு இறக்க... 

சனம் அல்லோல கல்லோலமாக அள்ளுப்பட்டது. பிறகு MK Sri, Raja & Co. 

எல்லோரும், காத்தில அடிபட்டுப்போன பூச்சிகள் போல, legal aid இல்லாது போனவுடன் போய் விட்டார்கள். 

இப்ப புதுசா இவையள் கிளம்பி இருக்கினம்.

அகதிகள் கொள்கை நாடுகள் ரீதியானது. ஆனால் உள்ளே சட்டபூர்வமாக வாழும் ஒருவருக்கான நிரந்தர வதிவுடைமை குறித்த முடிவுகள் நாடு தழுவிய ரீதியில் எடுக்க முடியாது. சட்டம் பொதுவானது.

இவையளுக்கு, வந்த கடிதத்தின் கருத்து அவயலுக்கே விளங்கவில்லை போல கிடக்குது.

நன்றி மீரா, நாதஸ் ..... இந்த செய்தியில் இருந்த Jay Visva Solicitors என்ற பெயரை கவனிக்க மறந்து விட்டேன்.., ஏதோ அரச நிறுவனத்தின் விலாசம் என நினைத்து விட்டேன்.

தெளிவுபடுத்தியமைக்கு நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.