Jump to content

குருபீடம் - சிறுகதை


Recommended Posts

குருபீடம் - சிறுகதை

ஜா.தீபா - ஓவியங்கள்: ரமணன்

 

பேருந்து கிளம்பிவிட்டது. சென்னை எல்லையைத் தாண்டியதும் நடத்துநர் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்பாக வந்து நின்றார். பேருந்தின் உட்புறம் அமைதியானது. சிவகாமியின் இருக்கை, தொலைக்காட்சிப் பெட்டிக்குக் கீழே முதல் வரிசையில் அமைந்திருந்தது. பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட இருக்கை அது. திரையில் நீலம், பச்சை என வண்ணங்கள் மாறி மாறித் தெரியத் தொடங்கின. பிறகு, தெளிவான சித்திரங்களோடு திரைப்படம் ஆரம்பமானது. அது திரையரங்கில் அப்போது ஓடிக்கொண்டிருந்த பரபரப்பான ஒரு திரைப்படம். சிவகாமிக்கு நீளமான கொட்டாவி வந்தது.

p66a.jpg

தலைக்கு மேல் அலறப்போகும் வசனங்களை மீறித் தூங்குவதற்கு, அவசியம் பயிற்சி இருக்க வேண்டும். அது சிவகாமிக்குக் கொஞ்சமும் வசப்பட்டிருக்கவில்லை. காற்று இன்னும் கொஞ்சம் உள்ளே வரவேண்டி ஜன்னலை முழுதாகத் திறந்துவைத்தாள் சிவகாமி.

`ஆயிரம்தான் இருந்தாலும் நான் ஆம்பள. போலீஸாவே இருந்தாலும் நீங்க பொம்பள. முதல்ல பொம்பளயா நடந்துக்கங்க...’ என்று கதாநாயகன், நாயகி முன்பாகக் கையை வீசி வீராவேசமாகப் பேசிக்கொண்டிருக்கும்போது பக்கத்து ஸீட்டில் அமர்ந்திருந்த பெண் சிவகாமி மீது சரிந்தாள். அவளுக்கு நாற்பது வயது இருக்கும். இந்த அலறலிலும் அவளால் தூங்க முடிவது சிவகாமிக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. `ஆழத் தூங்குவது, நடுக்கடலின் அடிமட்டத்தில் கிடப்பதுபோன்றதான நிலை’ என்று ஏதோ ஒரு புத்தகத்தில் சிவகாமி படித்திருந்தாள். அது அநேகமாக ஒரு மனோவியல் புத்தகமாக இருக்கக்கூடும் என்றே, அவளால் தீர்மானத்துக்கு வர முடிந்தது. சமீபகாலமாக மனோவியல் சார்ந்த புத்தகங்களே அவளை வசீகரிக்கின்றன. `ஒரு மனம், ஆயிரம் புத்தகங்களுக்குச் சமானம். ஒரு புத்தகம் எப்படி ஆயிரம் பேர் மனங்கள் பற்றி ஆராய முடியும்?’ என சிவகாமி நினைத்துப்பார்த்திருக்கிறாள். ஆனாலும், அந்தப் புத்தகங்கள் அவளுக்குப் போதை அளித்தன. தூக்கம் அறவே வராத இரவுகளில் அவற்றைப் படிக்கிறபோது, அவள் தன்னுடைய மனதோடு மட்டுமே உரையாடினாள் எனச் சொல்லிவிட முடியாது. அவை பல மனங்களைத் தன்னோடு சேர்த்துக்கொண்ட இரவுகளாக அமைந்திருந்தன. இப்போது, இந்தப் பேருந்தில் எத்தனை பேர் கடலுக்கு அடியில் கிடக்கிறார்கள் என எண்ணிப்பார்க்க வேண்டும் என்று சிவகாமிக்குத் தோன்றியது பக்கத்து இருக்கைப் பெண்ணின் கைப்பையில் இருந்த அலைபேசி ஒலித்தது. சிவகாமி சன்னல் பக்கமாகத் திரும்பிக்கொண்டாள். நிலா கூடவே ஓடி வந்துகொண்டிருந்தது. தலைக்கு மேலே ஆர்ப்பாட்டமான வசனக் கூச்சல்கள், அதற்கும் மேலே அமைதியான நிலா என சிவகாமிக்குத் தோன்றியது. இதுபோன்று தொடர்பில்லாத எண்ண ஓட்டம் அமைவதுதான், பயணத்தின் தனித்துவம் என நினைத்துக்கொண்டாள்.

பக்கத்தில் உள்ள பெண்ணின் அலைபேசி மறுபடியும் அழைத்தது. அகாலவேளையில் ஒருவர் மீண்டும் மீண்டும் அழைப்பதற்கு ஏதேனும் முக்கியக் காரணம் இருக்க வேண்டும் என்ற புத்தியின் அறிவுறுத்தலால், சிவகாமி அந்தப் பெண்ணைத் தொட்டு எழுப்பினாள். தூக்கத்திலிருந்து முயற்சித்து பிறகு சட்டென அவளின் கண்கள் விழித்துக்கொண்டன. பதற்றத்துடன் சிவகாமியைப் பார்த்தாள்.

“போன் அடிக்குதுங்க.”

“என்னது?” என்றபடி வாயின் ஒருபக்க ஓரத்தைத் தன்னிச்சையாகப் புறங்கை விரல்களால் துடைத்துக்கொண்டாள்.

“உங்க போன்தான். ரொம்ப நேரமா அடிச்சிட்டேயிருக்கு.”

“ஓ... தேங்க்ஸ்” என்றாள் அவள். தூக்கம் முற்றிலுமாகக் கலைந்துபோயிருந்தது.

அலைபேசியை எடுக்க பைக்குள் துழாவினாள். அதற்குள் அது திரும்பவும் அழைப்புப் பாடலைப் பாடத் தொடங்கியிருந்தது.

அலைபேசியின் திரையைப் பார்த்துவிட்டு, “என் வீட்டுக்காரர்” என்று சிவகாமியிடம் சொல்லிவிட்டு வாயை அலைபேசியோடு அணைத்து, மறு கையினால் காதைப் பொத்திக்கொண்டு பேசத் தொடங்கினாள். இதற்குள் படத்தில் கதாநாயகிக்குக் காதல் வந்திருந்தது. அவள் ஆடிப் பாட ஆரம்பித்திருந்தாள்.

எப்படியாவது தூக்கத்தை வரவழைத்தாக வேண்டிய முயற்சியை சிவகாமி தொடங்கியிருந்தாள். கால்களை இருக்கைக்கு மேலாக மடித்துவைத்து, இருக்கையோடு சாய்ந்துகொண்டாள்; சரிந்துபார்த்தாள்.

“சரி... சரி...” என்பதை மட்டும் திரும்பத் திரும்ப அந்தப் பெண் அலைபேசியில் சொல்லிக்கொண்டே இருப்பது கேட்டது.

அவள் பேசி முடித்துவிட்டு இவள் பக்கம் திரும்பினாள்.

“என் வீட்டுக்காரர். ரொம்ப நேரமா கூப்பிட்டிருக்கார். நான் போன் எடுக்கலைன்னதும் பயந்துட்டார். நல்லவேளை நீங்க எழுப்பினீங்க.”

“எப்படி இந்தச் சத்தத்துல தூங்குறீங்க?’’ என்று வார்த்தையாகவும், மீதியைச் சைகையாலும் கேட்டாள்.

“பழகிருச்சுங்க. என் வீட்டுக்காரர் நடுராத்திரி வரைக்கும் டிவி பார்ப்பார். `சத்தமா வெச்சுக் கேட்டாத்தான் கேட்ட மாதிரி இருக்கும்’பார். நாங்களும் சத்தத்துக்குத் தூங்கப் பழகிட்டோம்” என்று சிரித்தாள்.

சிவகாமியும் சிரித்தாள்.

“கல்யாணமாகிடுச்சா?” என்று சிவகாமியிடம் கேட்டாள்.

“அடுத்த மாசம் கல்யாணம். பத்திரிகை குடுக்கிறதுக்குத்தான் ஊருக்குப் போயிட்டிருக்கேன்.”

“இப்பல்லாம் யாரும் நேர்ல போய் பத்திரிகை குடுக்கிறதில்லையே. வாட்ஸ்அப்ல அனுப்பிடுறாங்க. நீங்க நேர்ல போறீங்களே!”

“என்னோட ஸ்கூல் வாத்தியார் ஒருத்தருக்குப் பத்திரிகை குடுக்கிறதுக்காகப் போறேன்.”

அவள் வியந்துபோவாள் என்பதை சிவகாமி யூகித்திருந்தாள். அதைப் பொய்யாக்காத அந்தப் பெண், தன்னுடைய அடுத்த கேள்விக்குள் வரும் முன்பு மீண்டும் அவளுடைய அலைபேசி அழைத்தது.
 
“திரும்பவும் அவர்தான். பேசிட்டு வர்றேன்” என்றாள்.

ந்தாம் வகுப்பு எடுத்த ஆசிரியருக்குத் திருமணப் பத்திரிகை கொடுக்க இவ்வளவு தூரம் பயணம் செய்யப்போகிறேன் என்று சொன்னபோது, எல்லோருமே விசித்திரமாகத்தான் சிவகாமியைப் பார்த்தார்கள். வேலைபார்க்கும் நிறுவனத்திலும் விடுப்பு அனுமதி கேட்கும்போது, இந்தக் காரணத்தைத்தான் எழுதியிருந்தாள்.

வேறு ஏதாவது காரணம் சொல்லி விடுப்பு கேட்டிருக்கலாம்தான். ஆனால், எதற்காக மறைக்க வேண்டும்? திருமணத்துக்கு ஆசிரியரை அழைப்பது என்பது ஒன்றும் அசாதாரண செயலில்லையே! ‘அதுக்காக, கல்யாணத்தை வெச்சுட்டு இவ்வளவு தூரம் பயணம் போகணுமா?’ என மாப்பிள்ளை வீட்டில் அழுத்தம்கொடுத்தே கேட்டார்கள். சிவகாமி வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான சமாதானங்களைச் சொல்லிவிட்டே கிளம்பியிருந்தாள்.

சிவகாமி ஐந்தாம் வகுப்பு படித்தபோது, அவளுடைய அப்பாவுக்கு சென்னைக்குப் பணிமாறுதல் வந்தது. அந்த ஆண்டோடு ஊரைவிட்டு வந்ததுதான். மீண்டும் இருபது வருடங்கள் கழித்து, இப்போதுதான் சிவகாமி அங்கு போகிறாள். இடங்கள் மாறிப்போயிருக்கும். ஒருவேளை மாறன் வாத்தியார்கூட மாற்றலாகி வேறு ஊருக்குப் போயிருக்கலாம்; விசாரிக்கலாம் என்றால், அந்த ஊரில் யாருடைய தொடர்பும் கிடைக்கவில்லை.

இப்போதும் மாறன் வாத்தியாரின் முகம் நன்றாக நினைவிருக்கிறது. ஐந்து அடிதான் இருந்திருப்பார் என யூகிக்க முடிகிறது. யாரையும் சீக்கிரத்தில் கோபித்துக்கொள்ள மாட்டார். அப்படியே கோபம் வந்தால்கூட காது நுனியில் ஒரு கிள்ளு கிள்ளுவார். மாணவிகள் என்றால், மண்டையில் வலிக்காமல் ஒரு குட்டு. அவரிடம் அடிவாங்கியிருக்கிறோமா என்று சிவகாமி பலமுறை நினைத்துப்பார்த்தாள். இல்லை என்றுதான் உறுதியானது.

மாறன் வாத்தியார் ஆங்கில வகுப்பு எடுப்பது மிக அருமையாக இருக்கும். தினமும் ஒரு வார்த்தையைக் கரும்பலையில் எழுதி, அதை எந்தவிதத்தில் பேச்சில் பயன்படுத்த வேண்டும் என்பதைப் புரியும்படி சொல்லிக்கொடுப்பார். கூண்டில் அடைபட்ட பறவைகள் பேசிக்கொள்வதுபோல, அன்றைய தினம் வகுப்பு முழுவதும் அந்த வார்த்தையைத்தான் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கும்.

பிரிந்தே கிடப்பது கிராமத்துப் பள்ளியும் ஆங்கிலமும் என்பது தெளிவான ஒரு கல்வெட்டாகப் பதிந்திருந்த காலம் அது. இதை மாற்றவே அவர் முயற்சி எடுத்துக்கொண்டிருந்தார். ஆங்கிலப் பாடப்புத்தகத்தை ஒவ்வொருவராக எழுந்து சத்தமாக வாசிக்க வேண்டும். வாசிப்பது தவறாக இருந்தால் பொறுமையாகத் திருத்துவார். எல்லோருக்குள்ளும் அப்போது இதுவே தன்னம்பிக்கையாக வளர்ந்திருந்ததை, சிவகாமி பின்னாட்களில் பலமுறை நினைத்துப் பார்த்திருக்கிறாள்.

நகரத்தில் ஒரு பள்ளியில் ஆறாம் வகுப்பு ஆங்கிலவழிக் கல்வியில் சேர்ந்தபோது, ஆங்கிலத்தைக் கண்டு மிரளாமல் இருந்ததற்கு மாறன் வாத்தியாரின் ஆங்கிலப் பயிற்சியும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது. இன்று வேலைபார்க்கும் பன்னாட்டு நிறுவனத்தில், சிவகாமி முங்குநீச்சல் போட்டு எழுந்துவர இந்த ஆங்கிலம்தான் உதவுகிறது.

மாறன் வாத்தியாருக்கு எப்படியும் அறுபது வயது கடந்திருக்கும். ஓய்வுபெற்றிருப்பார். மகன் அல்லது மகள்களோடு வெளிநாடு எங்கேயாவது சென்றிருந்தால், ஒருவேளை இறந்தேபோயிருந்தால்? அவரைப் பார்ப்பதற்கான கடைசிக்கட்ட முயற்சி எடுத்தோம் என்ற எண்ணமே போதுமானதாக இருக்குமா என சிவகாமி நினைத்துக்கொண்டாள். கீறல் வலிபோல கண்களில் வழிந்த நீர், காற்றின் வேகம் பட்டுத் தெறித்தது.

பக்கத்து ஸீட் பெண்மணி சிவகாமியிடம் ‘குட்நைட்’ சொல்லிவிட்டுத் தூங்கத் தொடங்கினாள். சிவகாமி மீண்டும் நிலாவைப் பின்தொடர்ந்தாள்.

திகாலை நகரத்துக்குள் நுழைந்தது பேருந்து. சிவகாமி, ஏற்கெனவே ஆன்லைன் மூலம் அங்குள்ள ஒரு விடுதியில் அறையைப் பதிவுசெய்திருந்தாள். விடுதியில், அந்தக் காலையிலேயே சாம்பிராணி வாசனை வந்தது. விடுதி மேலாளர், சபரிமலைக்கு மாலை போட்டிருந்தார். அடையாள அட்டையைக் கேட்டார். ``இது பாதுகாப்பான விடுதி. எந்தக் கவலையும் இல்லாமல் தங்கலாம்'’ என்று, எந்தக் கேள்வியும் கேட்காமலேயே சிவகாமியிடம் கூறினார். சிவகாமி, தான் போகவேண்டிய கிராமத்தின் பெயரைச் சொல்லி, அங்கு போக கார் ஏற்பாடு செய்துதரும்படி கேட்டாள்.
 
“தனியாத்தான் போறீங்களா?” என்றார் மேலாளர்.

சிவகாமி `ஆமாம்’ எனத் தலையசைத்தாள்.

“கவலைப்படாதீங்க. டீசன்ட்டான டிரைவரை அனுப்புறேன். ஒரு பிரச்னையும் இருக்காது” என்றார்.

சிவகாமி சிரிக்க நினைத்துத் தவிர்த்துவிட்டாள்.

“எட்டு மணிக்கு டிபன் சாப்பிட்டுரலாம். எட்டரைக்கு வண்டி சொல்லிடுறேன். அது வேணுமா, இது வேணுமான்னு கேட்டு யாரும் உங்க ரூம் பக்கம் வர மாட்டாங்க. எதுவும் வேணும்னா இந்த நம்பருக்கு போன் செஞ்சா போதும். கவலைப்படாம ரெஸ்ட் எடுங்க” என்றார்.

லிஃப்ட்டில் நுழையும் முன்பு, `லிஃப்ட் நல்லா வேலைசெய்யும் கவலைப்படாதீங்க’ என்று சொல்லிவிடுவாரோ என நினைத்து, அவர் பக்கம் சிவகாமி திரும்பிப் பார்த்தாள். அவர் குனிந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தார்.

தன் முகம் அந்த அளவுக்குக் கவலைக்கிடமாக இருக்கிறதா என்று, லிஃப்ட்டில் இருந்த கண்ணாடியில் சிவகாமி ஒருமுறை நன்றாகப் பார்த்தாள். இல்லை என்று நினைக்க இயலவில்லை.

சொன்னபடி எட்டரை மணிக்கு கார் வந்துவிட்டது.

ஏறி உட்கார்ந்ததும் ஓட்டுநர் பாடலை ஓடவிட்டார். ஓட்டுநருக்கு நாற்பது வயது இருக்கும். எண்பதுகளில் வந்த காதல் பாடல்களின் தொகுப்பாக இருந்தது அவரது பாடல் ரசனை.

முதல் பாடலே சிவகாமி மிகவும் விரும்பும் ஒரு பாட்டு. தன்னையும் அறியாமல் சிவகாமி மெள்ள முணுமுணுக்கத் தொடங்கி நிறுத்திக்கொண்டாள்.

சட்டென, “பாட்டெல்லாம் வேண்டாங்க” என்றாள்.

“வேறதானும் புதுப் பாட்டு போடட்டுமா?”

“வேண்டாம்” என்றாள் உறுதியாக.

ஓட்டுநர் முன்பக்கக் கண்ணாடி வழியே சிவகாமியின் முகத்தைப் படிக்க முயன்றார்.

சிவகாமி கண்களை மூடிக்கொண்டாள்.

ர் வந்துவிட்டது.

சென்னையின் புறநகர்ப் பகுதி ஒன்றினுள் நுழைந்ததுபோல இருந்தது. சிவகாமி, தான் படித்த பள்ளியின் பெயரைச் சொல்லி விசாரிக்குமாறு ஓட்டுநரிடம் சொன்னாள். அவர் இறங்கிப்போய் விசாரித்துவிட்டு வந்தார்.

p66b.jpg

கார் செல்லும்போதே ஒவ்வோர் இடமாக சிவகாமிக்கு நினைவு வந்தது. இதற்குப் பிறகு வலதுபக்கம் திரும்ப வேண்டும் என நினைத்தாள். காரும் அதேபோல் திரும்பியது.

பள்ளிக்கூட வாசல் வந்தது. வண்ணங்களை இழந்து நின்றது இன்னும் பழசாய்ப்போன அவளின் பள்ளிக்கூடம்.

சிவகாமி படிக்கும்போதே தலைமை ஆசியருக்கு எனத் தனி அறை கிடையாது. கால மாற்றத்தால் இப்போது ஓர் ஓலைக்குடிசையின் வாசலில் `தலைமை ஆசிரியர்’ என்று ஒரு கரும்பலகையில் எழுதிவைத்திருந்தார்கள்.

இப்போது அந்தப் பள்ளிக்குப் பெண் ஒருவர், தலைமை ஆசிரியையாக இருந்தார். தான் அந்தப் பள்ளியின் பழைய மாணவி என்று சிவகாமி சொல்ல, அவர் மகிழ்ந்து பேசினார். அவள் படித்த வகுப்பறைகளைக் காட்டுவதற்காக தலைமை ஆசிரியை எழுந்தார். `வேண்டாம்' என அவசரமாக மறுத்துவிட்டு, மாறன் வாத்தியார் பற்றி விசாரித்தாள் சிவகாமி.

தலைமை ஆசிரியை சொன்ன தகவல்கள் சிவகாமிக்குத் திருப்தியாக இருந்தன.

மாறன் வாத்தியாரின் வீட்டைக் காண்பிக்கச் சொல்லி, ஒரு மாணவனை சிவகாமியுடன் அனுப்பினார். அந்த மாணவன் காரில் ஏறும் முன் மற்ற மாணவர்கள் தான் செல்வதைக் கவனிக்கிறார்களா என்பதைப் பார்த்துவிட்டே ஏறினான்.

இரண்டு தெரு தள்ளி கிழக்குத் தெருவில் மாறன் வாத்தியார் வீடு இருந்தது. உடன் வந்த மாணவன் இறங்கி வீட்டைக் காட்டிவிட்டு, “தேங்க்ஸ்க்கா” என்றான்.

“நான்தான்டா உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்” என்றாள் சிவகாமி.

பையன் வெட்கப்பட்டுச் சிரித்தபடி பள்ளியை நோக்கி ஓடினான்.

வாத்தியாரின் வீட்டு வாசலில், அவர் பெயரையும் செய்த தொழிலையும் சொல்லும் பலகை ஒன்று காணப்பட்டது. முகப்புக் கூரையில் ‘அன்னை பவனம் 1980’ எனக் கிளிப்பச்சை நிறத்தில் எழுதப்பட்டிருந்தது. செருப்பை எங்கே கழற்றுவது என சிவகாமி யோசிக்கும் நேரத்துக்குள்ளாகவே ஒரு பெண்மணி உள்ளே இருந்து எட்டிப்பார்த்தாள். அவரின் மனைவியாக இருக்கும்.

“மாறன் சார்..?”

“இருக்காங்க. உள்ள வாங்க. நீங்க யாருன்னு பிடிபடலையே?” என்று கேட்கும்போதே சிவகாமியை எடை போட்டாள்.

சிவகாமி உள்நுழையும்போதே சொன்னாள், “நான் சார்கிட்ட படிச்சேன்.”

“ஓ! அப்படிச் சொல்லு. இங்கே இரு” என்று தங்க நிறத்தில் பூப்போட்ட சிவப்பு நிற குஷன் நாற்காலி ஒன்றைத் தன் பக்கமாக இழுத்துப் போட்டாள். மற்றொரு பிளாஸ்டிக் நாற்காலி ஒன்றை சிவகாமியின் பக்கம் தள்ளிவைத்தாள்.

உள்ளே இருந்து மாறன் வாத்தியார் வந்தார். நினைத்தது சரிதான் ஐந்து அடிதான் இருந்தார். தோளில் குற்றாலத்துண்டு தொங்கியது. அதை எடுத்துச் சிவப்பு நிற குஷன் நாற்காலியின் முதுகில் போட்டார். உட்கார்ந்ததும் சிவகாமியை அவர் பார்த்த பார்வையில் யோசனையும் கூர்மையும் தெரிந்தன.
 
“வணக்கம் சார். நான் உங்கக்கிட்ட படிச்சேன். என் பேர் சிவகாமி.”

வாத்தியார் சிவகாமியின் தேர்ந்த தோற்றத்தை அளந்தபடி இருந்தார்.

கத்தரிக்கப்பட்டு தோளில் தொங்கிய முடி, திருத்தப்பட்ட புருவம், மெல்லிய ஒப்பனை, சென்ட் வாசம், வெள்ளை நிறச் சுடிதார் உடையில் நகரச் சாயலோடு இருந்தாள் சிவகாமி. நடுநடுவே கொஞ்சம் பெருமையோடு தன் மனைவியையும் பார்த்துக்கொண்டார்.

“நீங்களும் உட்காருங்களேன்” என்றாள் சிவகாமி, வாத்தியாரின் மனைவியைப் பார்த்து.

“இருக்கட்டும்” - இழுத்தபடி அவள் தயக்கமாக அவரைப் பார்த்தாள்.

“எனக்கு அடுத்த மாசம் கல்யாணம். பத்திரிகை கொடுக்கணும்” என்றதும் வாத்தியாரும் அவரது மனைவியும் ஆச்சர்யப்பட்டனர்.

“சந்தோஷம்... சந்தோஷம். என்னம்மா இதுக்கு இவ்வளவு தூரம் வரணுமா?” என்றார் பத்திரிகையைப் பிரித்து படித்தபடி. அவர் முகத்தில் அளவில்லா பெருமை பரந்து விரிந்தது.

“உங்களுக்குக் கொடுத்தே ஆகவேண்டிய கடமை இருக்கு சார்” என்றாள் அவள்.

உள்ளே இருந்து ‘ஆச்சி’ என்று குரல் கேட்டது.

“இங்கே வாம்மா” என்று அங்கு பார்த்துக் குரல்கொடுத்துவிட்டு, “என் பேத்தி... மூணு வயசாகுது. பக்கத்துத் தெருவுலதான் என் மகன் வீடு. ஆனா, இங்கேதான் எப்பவும் இருப்பா” என்றார் வாத்தியாரின் மனைவி. சொல்லும்போது அவரின் முகத்தில் அப்படி ஓர் ஆனந்தப் பெருமை.

சிவகாமி அப்பாவின் பெயர், வீடு இருந்த இடம், படித்த வருடம் எல்லாவற்றையும் வாத்தியார் விசாரித்தார். சிவகாமி நிதானமாக இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொன்னாள்.

அவர் யோசனையோடு தரையையே கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் பார்த்த இடத்தில் சங்கு ஒன்று பதிக்கப்பட்டிருந்தது கீறலாகத் தெரிந்தது.

“உனக்கு, இருபத்தஞ்சு வயசு இருக்குமா?” என்று கேட்டாள் வாத்தியாரின் மனைவி.

`‘முப்பது.’’

“இவ்வளவு நாள் கல்யாணம் பண்ணிக்காம இருந்திருக்கியே? பார்க்க லட்சணமா இருக்க. எங்க மகளுக்கு இருபது வயசுலேயே கல்யாணத்தை முடிச்சுட்டோம்” என்றாள்.

“கல்யாணம்னாலே பயமா இருந்தது அதான்.” என்றாள் சிவகாமி.

“அது என்ன அப்படி?’’

“நீ போய், குடிக்க கலர் எடுத்துட்டு வா” என்றார் வாத்தியார் வேகமாக.

சுவாரஸ்யப் பேச்சை அறுபடவிட மனமில்லாமல், உள்ளே போகாமலும் நிற்க முடியாமலும் சில நொடிகள் தவித்துப்போனாள் அவரின் மனைவி.

“எனக்கு எதுவும் வேண்டாம். நீங்க இங்கேயே இருங்க” என்றாள் சிவகாமி. ‘அதான் சரி’ என்பதுபோல் நின்றுவிட்டாள் வாத்தியாரின் மனைவி.

“என்னத்துக்குக் கல்யாணம் மேல பயம்?” என்று தொடர்ந்தாள்

“பயம்னு சொல்ல முடியாது. வெறுப்பு.”

“இப்ப சரியாகிருச்சா?” என்றாள் குசும்பான சிரிப்போடு.

“சரியாகிடும்னு நினைக்கிறேன். டாக்டரும் அப்படித்தான் சொன்னாங்க.

அவர்கள் புரியாமல் பார்க்க, “கல்யாணத்துல ஈடுபாடே இல்லாம இருக்கிறேன்னு எங்க வீட்டுல உள்ளவங்க மனநல டாக்டர் ஒருத்தரைப் பார்க்கக் கூட்டிட்டுப் போனாங்க. அவர்தான் சாரை நேர்ல போய்ப் பார்க்கக் சொன்னார்.”

வாத்தியாரின் மனைவி புருவம் உயர்த்தினாள்.

“சார், நல்லா இங்கிலீஷ் எடுப்பார். அதை நான் மறக்கவே இல்லை. அதோடு வேற ஒரு விஷயமும் செய்துட்டார். அதையும் மறக்க முடியலை” - சிவகாமிக்குக் குரல் அடைத்தது.
 
தரையில் நீட்டியிருந்த தன் காலை இழுத்துக்கொண்டார் வாத்தியார். முதுகு முன் வளைந்தது. லேசாக வாயைத் திறந்தே வைத்திருந்தார் மூச்சுக்காகவேண்டி.

“உங்களுக்கு மறந்திருக்காது. மறந்திருச்சுன்னும் சொல்லிராதீங்க சார். ஒருநாள் சாயங்காலம் எல்லா பிள்ளைங்களும் போன பின்னாடி என்னை மட்டும் இருக்கச் சொன்னீங்க. அன்னிக்கு நீங்க எங்கிட்ட நடந்துக்கிட்டது தப்புன்னு அப்பவே தெரியும். ஆனா, `யார்கிட்டயும் சொல்லக்கூடாது'ன்னு சொன்னீங்க. இதுவரைக்கும் நான் யார்கிட்டயும்  சொல்லலை. டாக்டர் கிட்டதான் முதல்ல சொன்னேன். அவர்தான் உங்களைப் பார்த்துட்டு வரச் சொன்னார்.”

அவள் வந்தபோது இருந்ததுபோல் இல்லை. இப்போது வேறு மாதிரி தெரிந்தாள்.

`‘சார், அன்னிக்கு என்ன நடக்கப்போகுதுன்னு எனக்குத் தெரியாது. ஆனா, ஏற்கெனவே திட்டமிட்டிருந்த உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். இல்லையா?

...இப்ப உங்களுக்கு என் முகம் நினைவுக்கு வருதா சார்?

நல்லா படிச்சிருக்கேன். நல்ல வேலையில இருக்கேன். ஆனாலும் அழிக்க முடியாத காயமா அது பதிஞ்சுபோச்சு. கல்யாணப் பேச்சு வந்தாலே, பயம், வெறுப்பு, எரிச்சல்னு அது அலைக்கழிச்சது எனக்குத்தான் தெரியும். கல்யாணம் செஞ்சுக்கச் சொல்லி எங்க வீட்டுல எல்லாரும் சொல்லிட்டே இருந்தாங்க. `முடியாது’ன்னு எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன். அவங்க கேட்கவே இல்லை. ஒருநாள் எனக்கும் எங்க அப்பாவுக்கும் பெரிய சண்டையே வந்தது. சாதாரணச் சண்டை இல்லை. ஆம்பளைங்கிறதால அவரை அடிக்கவே போயிட்டேன். அன்னிக்கு பஸ்ல போகும்போது திரும்பத் திரும்ப உங்க முகம் கண் முன்னாடி வந்துட்டே இருந்தது. சட்டுன்னு பஸ்ஸிலிருந்து குதிச்சுட்டேன். நல்ல அடி. நான் யாருன்னு கண்டுபிடிச்சு எங்க வீட்டுக்குத் தகவல் தெரியவரும் போது ரெண்டு நாள் போயிருந்தது. அந்த ரெண்டு நாளும் சுயநினைவே இல்லாம யாரோட துணையும் இல்லாம ஆஸ்பத்திரியில் இருந்திருக்கேன். அதுக்கு அப்புறமும் ஒரு மாசம் ஆஸ்பத்திரியிலதான் இருந்தேன். இதோ இப்ப வரைக்கும் என்னால வேகமா நடக்க முடியாது.

தூக்கமே வராம கஷ்டப்பட்டு உடம்பு உருக்குலைஞ்சுப்போய், அதுக்கு நீங்க மருந்து மாத்திரை எடுத்த அனுபவம் இருக்கா சார்?

இருட்டைப் பார்த்தாலே பயம் வந்து, அப்புறம் வெளிச்சம் இருந்தாத்தான் சுவாசிக்கவே முடியும்கிற நிலைமை வந்தா, மருந்து கொடுத்து சரிபண்ணுவாங்க. ஆனா, அந்த மருந்தைச் சாப்பிட்டா உடம்புக்குள்ள என்ன நடக்கும்னு உங்களுக்கு ஏதாவது தெரியுமா?

உங்களைப் பற்றி எப்ப நினைச்சாலும் தானாவே கண்ணீர் வரும். அதை அடக்க முடியாம போற அவமானம் எப்படிப்பட்டது தெரியுமா? தப்பே செய்யாத நான் இப்ப வரைக்கும் தொடர்ந்து தண்டனையில் இருக்கேனே சார். நீங்க நல்லாயிருக்கீங்களா?” என்று கேட்டுவிட்டு சிவகாமி, வாத்தியாரையே பார்த்தாள்.

அவர் நாற்காலியின் ஒரு மூலைக்குள் பொதிந்துபோனதுபோல இருந்தார்.

வீட்டின் உள்ளே இருந்து கொலுசுச்சத்தம் மெலிதாகக் கேட்டது.

வாத்தியாரின் மனைவி எப்போது தரையில் உட்கார்ந்தாள் என்பதை சிவகாமி யோசித்துப்பார்த்தாள்.

உள்ளே இருந்து குழந்தை கையில் சிறிய தட்டுடன் வந்து பாட்டியின் மடியில் உட்கார்ந்தது. சிவகாமியையே பார்த்தது. ஒரு கையால் கண்களை மூடிக்கொண்டு விரல்களின் இடைவெளி வழியே சிவகாமியைப் பார்த்து வெட்கத்தோடு புன்னகைத்தது.

“இவங்கதான் உங்க பேத்தியா? பள்ளிக்கூடத்துல சேர்த்தாச்சா?” என்று கேட்டாள் சிவகாமி.

இருவருமே பதில் சொல்லவில்லை!

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
    • வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
    • மனசை தளரவிட வேண்டாம் என அவருக்கு சொல்லவும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.