Jump to content

தாயக மண்ணின் கோலங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஜீவன் விடுப்பில் நின்ற நாளுக்கெல்லாம் சேர்த்து பச்சை தந்து விட்டார்கள் போல, எனக்கு செம்புக் காசை எடுத்து எடுத்து  பிச்சை போடுவது போல் இருக்கு....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply
10 minutes ago, suvy said:

என்ன ஜீவன் விடுப்பில் நின்ற நாளுக்கெல்லாம் சேர்த்து பச்சை தந்து விட்டார்கள் போல, எனக்கு செம்புக் காசை எடுத்து எடுத்து  பிச்சை போடுவது போல் இருக்கு....!  tw_blush:

இல்லையே 

எண்ட செம்புக்குள்ள ஒண்டுமேயில்லை எண்டு திட்டுதே.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 2 weeks later...

எத்தனையோ மனிதர்கள் இந்த உலகத்துக்கு வந்த இடம் இது. இணுவில் மருத்துவமனை. 

அதுமட்டுமில்லை சண்டேஸ்வரரின் 267வது மறுபிறப்பும் இங்குதான் ஜீவன் சிவா என்ற பெயரில் அவதரித்தது என்ற புகழ் பெற்ற வைத்தியசாலையும் இதுதான்.

ஒரு காலத்தில் மந்திகை + மூளாய் + மானிப்பாய் + இணுவில் + தெல்லிப்பளை மருத்துவமனைகளில் பிறக்காத குழந்தைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம் .

மந்திகை + மூளாய் மருத்துவமனைகள் ஓரளவு பராமரிக்கப்பட்டு இயங்குகின்றன. ஆனால் மானிப்பாய், இணுவில், தெல்லிப்பளை மருத்துவமனைகளைப்  பார்க்க மனது கஷ்டமாயிருக்கும்.

 

IMG_1327.jpg

 

IMG_1331.jpg

 

IMG_1332.jpg

 

IMG_1336.jpg

 

IMG_1339.jpg

 

IMG_1347.jpg

 

IMG_1349.jpg


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பதிவுகள் தொடருங்கள் ...... நன்றி ஜீவன் சிவா.

Link to comment
Share on other sites

கந்தரோடைக்கு போகும்போதெல்லாம் களவா கள் + தம் அடித்த கவிட்டுப்போட்ட சிரட்டைகள் என்று அன்பா நாங்கள் அழைத்த இடம் இப்ப புனித பூமியாம். பெயர் வேற கந்தரட்டவோ எதோ. சில சிரட்டைகள் மீது கலசமும் குந்தி இருக்குது. பத்தாததுக்கு புத்தரும் வந்திட்டார். அலரிமரம் + அரசமரமும் வந்தாச்சு. வேலிக்குள்ள மொழியும் மாறிவிட்டது.

ஆனாலும் ஒரு கரிக்குருவி மட்டும் பாசத்தோட படம் எடடா எண்டு பக்கத்தில வந்து குந்திச்சு // ஆனால் அதுவும் கமராவை கண்டதும் பின்புறத்தை மட்டும் காட்டிச்சு. :unsure:

 

IMG_1500.jpg

 

vh9btd.jpg

 

10g0177.jpg

 

4t3nl5.jpg

 

IMG_1521.jpg

 

IMG_1526.jpg

 

IMG_1532.jpg


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தங்கள் பதிவுகளுக்கு நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஜீவன் சிவா said:

முதற் தடவையாக அத்திமரத்தை கண்டபோது

மரியாதை கெட்டவேலை....அதை வேறை வெளியிலை சொல்லிக்காட்டிக்கொண்டு....:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஜீவன் சிவா said:

முதற் தடவையாக அத்திமரத்தை கண்டபோது

 

20170419_114616.jpg

 

ji2536.jpg


 

நன்றாக இருக்கு ...
காத்திருந்து அத்தி பூக்கும் போதும் 
ஒரு படம் எடுத்து போட்டால் நன்றாக இருக்கும்!

Link to comment
Share on other sites

9 hours ago, குமாரசாமி said:

மரியாதை கெட்டவேலை....அதை வேறை வெளியிலை சொல்லிக்காட்டிக்கொண்டு....:grin:

தெரியாததை தெரியாதெண்டு ஒத்துக்கொள்ளவும் ஒரு தைரியம் வேணும்.

அந்த தைரியம் எனக்கு நிறையவே உண்டு - அதனால்தான் இன்றும் எதையோ புதிது புதிதாக அறிகின்றேன்.

ஆனால் எனக்கு தெரியும் என்று நாடகம் போட்டால் வாழ்நாள் பூராவும் குண்டுசட்டிக்குள் குதிரை அல்லது யானை + ..... ஓட்டவேண்டியதுதான். :grin::grin:

 

இந்தப் படம் பண்ணை மீன் சந்தைக்கு முன்னர் எடுத்தது. இந்த மரத்தை நான் முன்னர் கண்டதில்லை. அருகில் இருந்தவரிடம் கேட்டபோது என்ன மரம் என்று தெரியாதென்றார். இன்னமும் சிலரிடம் கேட்டுக்கொண்டிருந்தபோது ஒரு பெரியவர் தானாகவே அருகே வந்து தம்பி இது அத்திமரம் என்றார். அதுமட்டுமில்லை இன்னமும் அரிதான மரங்களிரண்டை பற்றியும் அவற்றின் இருப்பிடம் பற்றியும் கூறினார். அவையாவன பூநாறி மரம் + பெருக்க மரம்

எனக்கு தெரியாதென்று சொன்னபடியால் என்னால் மூன்று அரிதான மரங்களைப் பற்றி அறியக்கூடியதா இருந்தது.

தெரிந்தமாதிரி பீலா விட்டிருந்தால் // அறிவு அங்கயே குந்திக்கின்னு கொட்டாவி விட்டுக்கொண்டிருந்திருக்கும்.

எனக்கு தெரியாது என்று சொல்வது மரியாதை கேட்ட வேலை என்றால் // அதை மரியாதையாக சாகும்வரை செய்வான் இந்த ஜீவன்.

 

Link to comment
Share on other sites

6 hours ago, Maruthankerny said:

காத்திருந்து அத்தி பூக்கும் போதும் 
ஒரு படம் எடுத்து போட்டால் நன்றாக இருக்கும்!

அத்தி மரத்துக்கு தண்ணி ஊத்தி பசளை போட்டு

அது பூக்கும் படம் காட்டலாம்

இல்லை இல்லை படம் எடுக்கலாம் என்று காத்திருக்க நான் என்ன முட்டாளா :grin::grin::grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Résultat de recherche d'images pour "figuier arbre"Résultat de recherche d'images pour "figuier arbre"

இங்குள்ள அத்தி மரம் இப்படித்தான் இருக்கும். இதை பிஃக் fig tree என்பார்கள்....!

விடயம் அதுவல்ல....! இந்தப் பண்ணையை அண்டிய ஒரு ஸ்தாபனத்தில் சில வருடங்கள் நான் வேலை செய்திருக்கின்றேன். இப்படியொரு மரத்தை நான் கவனிக்கவே இல்லை. அல்லது கவனிக்க நேரமின்றி அலைந்திருக்கின்றேன்.(அம்மம்மா அப்பவே சொன்னவ, நாய்க்கு வேலையுமில்லை நடக்க நேரமுமில்லை என்று.) பூநாறி மரம் தெரியும். நாச்சிமார் கோவிலுக்கு அண்மையில் உள்ளது......!

அந்த மீன்சந்தையில் படகுகளில் வரும் மீன் குவியல்களை ஏலம் விடுபவர்களில் ஒருவர் எனது நண்பரும்கூட....! இப்ப எப்படி எங்கு இருக்கிறாரோ தெரியாது....! tw_blush:

 

 

Link to comment
Share on other sites

5 minutes ago, suvy said:

பூநாறி மரம் தெரியும். நாச்சிமார் கோவிலுக்கு அண்மையில் உள்ளது......!

சிறிய மாற்றம் 

நாச்சிமார் கோவிலுக்கும் தட்டாதெருவுக்கும் இடையில் உள்ள பஸ் தரிப்பு நிலையம். இந்த பஸ் தரிப்பு நிலையத்துக்கும் பூநாறி மரத்தடி என்றுதான் பெயர். யாழில் இன்னொமொரு இடத்திலும் இந்த மரம் இருக்குதாம் // சஸ்பென்ஸ்.

இதுவரை பூநாறி என்றது இதுதான் என்று மொக்குத்தனமாக நினைத்திருந்தேன். தெரியாது என்று சொன்னேன் - விளக்கம் கிடைத்தது.

தெரியுமெண்டு வாய் சவடால் விட்டிருந்தால் - இதுவும் தெரிந்திருக்காது. :grin:

 

IMG_5166.jpg

 

IMG_5167.jpg

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ற கைதான் பாருங்க யாராவது ரேகையை தேடப்படாது சொல்லிப்போட்டன் 

அத்தி மரம் தெரியாமல் ஒரு மனுசன் இலங்கையில் இருந்திருக்கு   அது சரி இது என்ன பழம் 

 

 

20170101_120533.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாச்சிமார் கோவிலில் இருந்து தட்டாதெரு வரும் வழியில் ஒரு சின்ன ஒழுங்கை இருக்கும் அங்கே அந்த மரம் இருந்ததாக ஞ<பகம்.....! :unsure:

Link to comment
Share on other sites

2 minutes ago, suvy said:

நாச்சிமார் கோவிலில் இருந்து தட்டாதெரு வரும் வழியில் ஒரு சின்ன ஒழுங்கை இருக்கும் அங்கே அந்த மரம் இருந்ததாக ஞ<பகம்.....! :unsure:

தலைவா உங்கள் ஞாபக சக்திக்கு அளவே இல்லையா 

200.webp#9-grid1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாச்சிமார் கோவிலடியிலிருந்து கொக்குவில் நோக்கி செல்லும் போது பூநாறி மரத்தடி

Link to comment
Share on other sites

4 hours ago, MEERA said:

நாச்சிமார் கோவிலடியிலிருந்து கொக்குவில் நோக்கி செல்லும் போது பூநாறி மரத்தடி

உண்மை மீரா

இது நாச்சிமார் கோவிலுக்கும் கொக்குவிலுக்கும் இடையில்தான் உள்ளது - நான்தான் தவறாக எழுதிவிட்டேன்

படம் - கூகிள் 

Uten_navn.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2017-3-7 at 7:24 AM, ஜீவன் சிவா said:

வாழ்விழந்தது எமது மீனவர்கள் மட்டுமில்லை
துருப்பிடித்து சிதைந்து போகும் அவர்கள் படகுகளும்தான். 

IMG_8073.jpg

IMG_8074.jpg

IMG_8075.jpg

இது காரைநகர் இறங்குதுறையின் இருபுறமும் அநாதரவாக மீன்பிடி படகுகள்.
இந்த படகுகள் எமதா அல்லது இந்திய மீனவர்களதா என்பது தெரியாது.

நன்றி

இந்த படகுகளின் தோற்றத்தை பார்க்கும்போது இந்திய மீனவர்கள் பயன் படுத்தும் படகுகள் போன்றே உள்ளது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஜீவன் சிவா said:

தெரியாததை தெரியாதெண்டு ஒத்துக்கொள்ளவும் ஒரு தைரியம் வேணும்.

அந்த தைரியம் எனக்கு நிறையவே உண்டு - அதனால்தான் இன்றும் எதையோ புதிது புதிதாக அறிகின்றேன்.

ஆனால் எனக்கு தெரியும் என்று நாடகம் போட்டால் வாழ்நாள் பூராவும் குண்டுசட்டிக்குள் குதிரை அல்லது யானை + ..... ஓட்டவேண்டியதுதான். :grin::grin:

 

இந்தப் படம் பண்ணை மீன் சந்தைக்கு முன்னர் எடுத்தது. இந்த மரத்தை நான் முன்னர் கண்டதில்லை. அருகில் இருந்தவரிடம் கேட்டபோது என்ன மரம் என்று தெரியாதென்றார். இன்னமும் சிலரிடம் கேட்டுக்கொண்டிருந்தபோது ஒரு பெரியவர் தானாகவே அருகே வந்து தம்பி இது அத்திமரம் என்றார். அதுமட்டுமில்லை இன்னமும் அரிதான மரங்களிரண்டை பற்றியும் அவற்றின் இருப்பிடம் பற்றியும் கூறினார். அவையாவன பூநாறி மரம் + பெருக்க மரம்

எனக்கு தெரியாதென்று சொன்னபடியால் என்னால் மூன்று அரிதான மரங்களைப் பற்றி அறியக்கூடியதா இருந்தது.

தெரிந்தமாதிரி பீலா விட்டிருந்தால் // அறிவு அங்கயே குந்திக்கின்னு கொட்டாவி விட்டுக்கொண்டிருந்திருக்கும்.

எனக்கு தெரியாது என்று சொல்வது மரியாதை கேட்ட வேலை என்றால் // அதை மரியாதையாக சாகும்வரை செய்வான் இந்த ஜீவன்.

 

தெரியாததை தெரியாது எண்டுதான் சொல்ல வேணும்..... அதுக்காக அலஸ்காவிலை இருந்து வந்தவன் மாதிரி அத்திமரத்தை பாத்து பினாத்தினால் கண்டவன் கிண்டவன் எல்லாரும் சிரிக்கத்தான் செய்வாங்கள்.......:grin:

இனி அடுத்தது நெல்லிமரமாக்கும் :cool:

அந்த முருகனே! தெரியாததை ஔவையாரிட்டை தான் கேட்டு தெரிஞ்சு கொண்டானாமெல்லே :innocent:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/19/2017 at 5:12 AM, ஜீவன் சிவா said:

எத்தனையோ மனிதர்கள் இந்த உலகத்துக்கு வந்த இடம் இது. இணுவில் மருத்துவமனை. 

எனது மூத்த மகளும் இங்கு தான் பிறந்திருந்தாள்.

அருமையான படங்கள் இணைப்புக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தெரியாததை தெரியாது எண்டுதான் சொல்ல வேணும்..... அதுக்காக அலஸ்காவிலை இருந்து வந்தவன் மாதிரி அத்திமரத்தை பாத்து பினாத்தினால் கண்டவன் கிண்டவன் எல்லாரும் சிரிக்கத்தான் செய்வாங்கள்.......:grin:

இனி அடுத்தது நெல்லிமரமாக்கும் :cool:

அந்த முருகனே! தெரியாததை ஔவையாரிட்டை தான் கேட்டு தெரிஞ்சு கொண்டானாமெல்லே :innocent:

அப்ப உவர எந்த பாட்டியிற்ற அனுப்புற  அதாவது கேட்டு தெரிந்து கொள்ள  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, முனிவர் ஜீ said:

அப்ப உவர எந்த பாட்டியிற்ற அனுப்புற  அதாவது கேட்டு தெரிந்து கொள்ள  

Bild könnte enthalten: 1 Person, sitzt und Text

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.