Jump to content

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நியமனம் குறித்த தினகரன் பதிலை ஏற்க முடியாது: தேர்தல் ஆணையம்


Recommended Posts

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நியமனம் குறித்த தினகரன் பதிலை ஏற்க முடியாது: தேர்தல் ஆணையம்

 
சசிகலா | கோப்புப் படம்.
சசிகலா | கோப்புப் படம்.
 

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நியமனம் குறித்த தினகரன் பதிலை ஏற்க முடியாது. அது குறித்த நோட்டீஸுக்கு சசிகலாதான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ''அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நியமனம் குறித்து தேர்தல் ஆணையம் அளித்த நோட்டீஸுக்கு பதில் அளித்த தினகரன் பதிலை ஏற்க முடியாது.

தேர்தல் ஆணையத்தில் உள்ள ஆவணங்களில் அதிமுக நிர்வாகிகள் பட்டியலில் தினகரன் பெயரோ, அவரது பொறுப்பு விவரமோ இல்லை. தினகரன் அதிமுகவில் எந்த ஒரு அதிகாரபூர்வ பதவியிலும் இல்லை. கட்சியில் அதிகாரபூர்வ பதவியில் இருப்பவர் மட்டுமே பதிலளிக்க முடியும்.

நோட்டீஸுக்கு சசிகலாதான் பதிலளிக்க வேண்டும். வரும் 10-ம் தேதிக்குள் சசிகலா கையெழுத்திட்ட பதிலை அனுப்ப வேண்டும்'' என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பின்னணி:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், டிசம்பர் 29-ம் தேதி அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வானார். டிசம்பர் 31-ம் தேதி பொறுப்பேற்றார். ஜெயலலிதா காலமான அன்றே முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம், பிப்ரவரி 5-ம் தேதி தன் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் சசிகலா சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டு, முதல்வராகும் முயற்சியை எடுத்தார்.

இந்நிலையில், பிப்ரவரி 7-ம் தேதி அதிமுக தலைமையை ஓ.பன்னீர்செல்வம் எதிர்த்தார். அடுத்தநாள் அதிமுக பொருளாளர் பொறுப்பில் இருந்து பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். அப்போதே, பொருளாளர் பொறுப்பில் இருந்து தன்னை நீக்க சசிகலாவுக்கு அதிகாரம் இல்லை என பன்னீர்செல்வம் தெரிவித்தார். அதன்பின், அவைத் தலைவர் மதுசூதனன், ஓ.பன்னீர் செல்வம் பக்கம் வந்தார். அவரையும் கட்சியை விட்டு சசிகலா நீக்கினார். அப்போது, சசிகலா தன்னை நீக்கும் முன் நான் அவரை நீக்கிவிட்டதாக மதுசூதனன் தெரிவித்தார்.

தொடர்ந்து, அதிமுகவின் சட்ட விதிகளை காரணம் காட்டி, சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனத்தை ஏற்க கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு மதுசூதனன் கடிதம் எழுதி னார்.

கடந்த 14-ம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் சசிகலா சிறைக்கு சென்றார். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்பியான வி.மைத்ரேயன் தலைமையில் 11 எம்பிக்கள் கொண்ட குழுவினர் கடந்த 16-ம் தேதி டெல்லியில், இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்தனர். அதில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புகாருக்கு பதிலளிக்கும்படி, தேர்தல் ஆணையம் சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. சசிகலா இப்போது இருக்கும் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அந்த நோட்டீஸுக்கான பதிலை அதிமுகவின் துணை பொதுச் செயலாளர் தினகரன் அனுப்பினார். தற்போது அந்த பதிலை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை என்று அறிவித்துள்ளது.

நோட்டீஸுக்கு சசிகலாதான் பதிலளிக்க வேண்டும். வரும் 10-ம் தேதிக்குள் சசிகலா கையெழுத்திட்ட பதிலை அனுப்ப வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

http://tamil.thehindu.com/tamilnadu/அதிமுக-பொதுச்-செயலாளர்-சசிகலா-நியமனம்-குறித்த-தினகரன்-பதிலை-ஏற்க-முடியாது-தேர்தல்-ஆணையம்/article9569738.ece?homepage=true

Link to comment
Share on other sites

பொதுச்செயலர் நியமனம் தொடர்பாக, சசிகலா வுக்கு அனுப்பிய நோட்டீசுக்கு, தினகரன் கையெழுத்திட்டு தரப்பட்ட விளக்கம் செல்லாது. அவர், கட்சியில் எந்த அதிகாரப்பூர்வ பதவியிலும் இல்லை. அதனால், உரிய முறை யில் மீண்டும் விளக்கம் அளிக்க வேண்டும்' என சசிகலாவுக்கு, தேர்தல் ஆணையம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

 

Tamil_News_large_172296020170303230500_318_219.jpg

அ.தி.மு.க.,வில், சசிகலா மற்றும் பன்னீர் செல்வம் அணியினர், தினமும் பல விஷயங் களில் போட்டி போட்டு செயல்பட்டாலும், அவை அனைத்தும், வெளியுலகத்திற்காக மட்டுமே. உண்மையில், அ.தி.மு.க., பொதுச் செயலர் விவகாரத்தில், தேர்தல் ஆணையம் என்ன தீர்ப்பு வழங்கப் போகிறது என்பதே, இரு அணிகளிலும் உள்ளவர்களின் பதைபதைப்பாக உள்ளது.

காரணம், தேர்தல் ஆணையம் வழங்கும் தீர்ப்பு தான், எதிர்காலத்தில் கட்சியும், சின்னமும் யாருக்கு சொந்தம் என்பதை நிர்ணயிக்கும்.
 

'சஸ்பென்ஸ்'


கிரிக்கெட் விளையாட்டில், களத்தில் உள்ள இரு அம்பயர்களும், முடிவை தீர்மானிக்க இயலாத நிலையில், மூன்றாவது அம்பயரின் கையில் முடிவு விடப்படும். அப்போது, இரு அணிகளின் வீரர்கள் மட்டுமின்றி, பார்வையாளர்கள் அனை வரின் கவனமும், பெரிய, 'ரிசல்ட்' பலகையை நோக்கியே இருக்கும். கிட்டத்தட்ட அதே நிலையில் தான், அ.தி.மு.க.,வின் முன்னணி

தலைவர்கள் முதல், அடிமட்ட தொண்டர்கள் வரை, தேர்தல் ஆணையம் என்ற, மூன்றாவது அம்பயரின் தீர்ப்புக்காக,உச்சகட்ட,'சஸ்பென்ஸ்' உடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், சசிகலாவை பொதுச்செயலராக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பன்னீர் செல்வம் அணியினர் கொடுத்த புகார் மனு தொடர்பாக, சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அந்த நோட்டீசுக்கான சசிகலாவின் விளக்கம், தேர்தல் ஆணையத்திற்குவந்து சேர்ந்திருந்தாலும், அது, தினகரன் சார்பில் தரப்பட்டு இருந்தது.

வானகரத்தில் பொதுக்குழு கூட்டம் நடந்த போது இருந்த, நிர்வாகிகள் பட்டியல் தான், தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. அதில், தினகரனின் பெயர் இல்லை.அதனால், தினகரன் கையெழுத்துடன் தேர்தல் ஆணையத்தில் தரப்பட்ட விளக்கம் செல்லாது. தேர்தல் ஆணை யத்திற்கு,அவர் விளக்கம் தர முடியாது. எனவே, 'நீங்கள் தான் உரிய முறையில் விளக்கம் தர வேண்டும்' என, சசிகலாவுக்கு தேர்தல் ஆணை யம் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக, டில்லி தலைமை தேர்தல் ஆணைய வட்டாரங்கள் நேற்று கூறியதாவது:

அ.தி.மு.க., பொதுச் செயலர் நியமன பிரச்னையில், சசிகலாவுக்கு அனுப்பியிருந்த நோட்டீசிற்கு, தினகரன் பெயரில், விளக்கம் வந்தது. அதை தலைமைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளவில்லை.சசிகலா சார்பில், தினகரன் கொடுத்த விளக்கத்தை விரிவான முறையில், ஆய்வு செய்த அதிகாரிகள், அதை ஏற்க முடியாது என தீர்மானித்துள்ளனர்.
 

ஏற்க முடியாது


தினகரன் கையெழுத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட

 

அந்த விளக்கம் செல்லாது என, முடிவு செய்து உள்ளனர். அதனால், சசிகலாவுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பி, விளக்கம் கோர முடிவு செய்யப் பட்டது. அதன்படி, சசிகலாவுக்கு தேர்தல் கமிஷனின் செயலர் பிரமோத் குமார் சர்மா, மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீசில் கூறப்பட்டுஉள்ளதாவது:

தினகரன் யார் என்றே தெரியாத சூழ்நிலையில், உங்கள் சார்பில், அவர் பெயரில் விளக்கம் கொடுத்ததை ஏற்க முடியாது. எங்களிடம் உள்ள அதிகாரப்பூர்வ ஆவணங்களில், தினகரனின் பெயர் இல்லாததால், தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் அளிக்க, அவருக்கு அதிகாரமோ, உரிமையோ கிடையாது. எனவே, நீங்கள் தான் உரிய முறையில் விளக்கம் தர வேண்டும்.

நீங்கள் சிறையில் இருப்பதால், தினகரன் விளக்கம் கொடுத்தார் என, சொன்னாலும், அதை ஏற்பதற்கு இல்லை. உங்களின் கையெழுத்திட்ட விளக்க கடிதம் தான் எங்க ளுக்கு தேவை. விளக்கம் இல்லை யெனில், பொதுக்குழுவின் போது, அ.தி.மு.க., நிர்வாகி கள் பட்டியலில் இடம் பெற்றிருந்த, மூத்த தலைவர் அல்லது நிர்வாகிகளில் யாராவது ஒருவர் விளக்கம் தரலாம்.

அப்படி விளக்கம் தரும் போது, அவர் விளக்கம் தருவதற்கு, நீங்கள் அதிகாரம் அளித்துள்ள தற்கான சான்றும், உடனிருக்க வேண்டும். அப்போது தான், உங்களது விளக்கம் ஏற்றுக் கொள்ளப்படும். தற்போது அனுப்பப் பட்டுள்ள புதிய நோட்டீ சுக்கான, உங்களின் விளக்கம், வரும், ௧௦ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத் திற்கு வந்து சேர வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1722960

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் பலமுறை இவ்வாறு கணித்து ஏமாந்து இருக்கிறேன். 
    • கீரை கூட்டு இப்படி செய்து பாருங்கள்.......!  👍
    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.