Jump to content

ஈழப் போராட்டமும் சங்க பாடல்களும் - வ.ஐ.ச.ஜெயபாலன்


poet

Recommended Posts

INFLUENCE OF SANGAM IN EELAM STRUGLE.
-V.I.S.JAYAPALAN

ஈழப் போராட்டமும் சங்க பாடல்களும்

- வ.ஐ.ச.ஜெயபாலன்

கடந்த ஆறேழு பதின்மங்களாக (decades) ஈழத் தமிழர்களை அதிகம் பாதித்த கதைகளுள் பாரி மன்னனின் கதை முக்கியமானதாகும். பாடல்களில் எங்களை அதிகம் பாதித்தது ஐந்தாம் வகுப்பில் படித்த “கெடுக சிந்தை கடிதிவள் துணிவே” என்ன ஆரம்பிக்கும் வீரத் தாய் பற்றிய பாடலென இலகுவாகச் சொல்லிவிடலாம். அப்பாடலில் போர்க் கழத்தில் வீழ்ந்த தன் பாலகனின் முதுகில் வேல்பாய்திருந்தால் அவனுக்கு பால்தந்த முலைகளை அறுத்தெறிவேன் என வீரத் தாயொருத்தி சபதம் செய்கிறாள்.

பெரும்பாலான சங்ககாலப் புறப்பாடல்கள் கிழக்கு மற்றும் தென்மேற்க்குக் கரையோரப் பட்டினங்களில் இருந்து உள்நோக்கி விரிவடைந்து வந்த நிலப்பிரபுத்துவ வேந்தர்களின் ஆக்கிரமிப்பு யுத்தத்தை எதிர்கொண்ட குறுநில மன்னர்களின் விழுமியங்களும் மா வீரமும் பற்றியதாகும். இராசதந்திரமற்ற அரசியலோடும் இராணுவ தந்தரமற்று நேரடி இரானுவ உத்திகலோடும் மா வீரத்தோடு சாகும்வரை அழிந்துகொண்டிருந்த ஆதிக்குடி குறுநில மன்னர்கள் பற்றிய பாடல்களாகும்.

சங்ககாலக் குறுநில மன்னர்களின் மத்தியில் மூவேந்தர்களைப் பிரித்தாளும் ராஜதந்திரமோ முதலெதிரிக்கு எதிராக அயலில் உள்ள சகோதர குறுநிலங்களை ஐக்கியப் படுத்துகிற அரசியலோ குறும்பு போர் எனப்படும் பொருத்தமான கெரிலா இரானுவ உத்திகளோ பெஇதும் மேம்படவில்லை. இதனால் பேரரசுகள் குறு நிலங்களை இலகுவாக முற்றுகையிடுவதும் குறுநில மன்னர்களை நேரடி இரானுவ ரீதியான தற்காப்பு போருக்கு இழுத்து வெற்றி கொள்வதும் சாத்தியமாக இருந்தது..பாரி மன்னன் மலையை விட்டு இறங்கி சம வெளியில் மட்டிக் கொள்ளா விட்டாலும் நேரடி இராணுவ ரீதியான வெற்றி வாய்ப்புக் குறைந்த தற்காப்புப் போரை ஏற்றுகொண்டான். எதிர்காலத்தில் காடுகளை நீங்கி கடற்கரைச் சம வெளியில் முற்றுகைக்குள் சிக்கி நேரடி இஆணுவ மோதலில் சிக்கி வீரத்தோடு போராடி மாவீரராய் வீழ்ந்த ஈழத்து முள்ளி வாய்க்கால் யுத்தத்தை இராணுவ ரீதியாக ஆரய்கிறவர்கள் சங்க காலக் குறுநில மன்னர்களின் வீர யுத்தங்களை நினைவு கூரக்கூடும்.
*

போராடி வீழ்ந்த சங்க கால மாவீரர்களையும் வீரத்தாய்களையும் போற்றும் பாடல்களையும் கதைகளையும் கேட்டே நாம் வளர்ந்தோம். பின்னர் பிரபலமான கட்டபொம்மன் சங்கிலியன் பண்டார வன்னியன் கதைகள் கூட சங்க கால குறுநில மன்னர்களின் கதைகளின் செல்வாக்குடனேயே சொல்லப்பட்டன.

ஆச்சரியப் படத்தக்க வகையில் எனது ஐந்தாம் அல்லது ஆறாம் வகுப்பு பாட நூலில் ”கெடுக சிந்தை கடிதிவள் துணிவே” பாடலும் கதையும் வீரத்தாய் என்கிற தலைப்பில் இடம் பெற்றிருந்தது. சின்ன வயசிலேயே எங்கள் பள்ளிக்கூடத்தில் பாரி மன்னன் கதையை நாடகமாகப் பார்த்திருக்கிறேன்.

எனினும் தனிப்பட்ட முறையில் பகைபட்ட சகோதர குறுநிலங்களிடை யாதும் ஊரே யாவரும் கேளிர் என திரிந்த பாணர்கள்தான் என்னை ஆகர்சித்தார்கள். ஈழப் போரில் ஒரு பாணனைப்போல பாடினிபோலத்தான் நான் வாழ்ந்தேன்.

சங்க புறப்பாடல்களின் வீர கதைகளின் பின்னனியில் ஈழத் தமிழர்களது முன்னனிப் போராட்ட அமைப்புகளையும் தலைவர்களையும் ஆராய்வது பயனுள்ளது. 1987ல் ”இந்தியா என்ன அமரிக்கா வந்தாலும் நாங்கள் அடிப்போம்” என்கிற நிலைபாடெடுத்த முன்னணித் தலைவர் ஒருவரை பாரி மன்னனின் மறு பிறப்போ என நான் கருதியதும் உண்டு.

மூவேந்தர்கள் திரைகடலோடிச் சேர்த்த திரவியம் முத்து மிழகு ஏற்றுமதி போன்ற பல்துறை வாணிபம் ஆற்றுக் கழிமுக விவசாயமென என குவிந்த உபரிச் செல்வத்தில் செழித்தனர். பேரரசுகளின் கடற்கரைப் பட்டினங்களையும் மிழகு மலைகளையும் இணைக்கும் வழித் தடங்களில் குறு நிலங்கள் நிமிர்ந்திருந்தன. பேரரசர்களை உள்நோக்கி தள்ளியதில் வர்த்தகத்தைப்போலவே தொடர் சுனாமிகளுக்கும்கூட பங்கிருக்கலாம். குறுநிலங்கள் ஒன்றில் திறை தந்து தமது பிரதானிகளாகப் பணிய வேண்டும் அல்லது அழிய வேண்டும் என்கிற நிலைபாடு ஓங்கிய காலம் அது. பெண்கொலை செய்த நன்னன் (மாசாணி அம்மன் கதை) போன்ற கதைகளை வாசிக்கும்போது வாணிபக் குழுக்களுக்கு குறுநில மன்னர்களோடு முரண்பாடும் பேரரசர்களோடு நட்ப்பும் இருந்தமையும் புலப்படுகிறது. வரலாறு முழுக்க அந்தந்தக் காலக்கட்டத்துக் கிழக்கிந்தியக் கம்பனிகள் இருந்திருக்குமென்றே தோன்றுகிறது. மூ வேந்தர்கள் அயல் சகோதர குறுநிலங்கள் என நாலு பக்கத்தோடும் ஓயாமல் மோதி இறுதியில் புகழுடன் வீழுவதே சங்க கால புற வாழ்வின் தர்மமாக இருந்தது போலும். இந்த தர்மத்தை நாங்களும் வரித்திருந்தோம். இன்னும் விடுபட்ட பாடில்லை.

தன்னைச் சார்ந்த குடிகளையும் மண்னையும் பேணுவது பாரியின் வாழ்க்கை நெறியாக இருந்தது. மறு புறத்தில் முதல் எதிரி மட்டுமன்றி ஏனையோரொடும்கூட எந்தவிதச் சமரசத்துக்குத் தயாரில்லாத ஒரே சமயத்தில் பலரோடு முரண்பட்டு மோதுகிற ராஜதந்திரமற்ற மாவீரம் அவனது புற வாழ்வின் தர்மமாக இருந்தது.

இத்தகைய சங்ககால குறுநில மன்னர்களின் குறிப்பாக பாரி மன்னனின் மாவீர பண்புகளையும் பொருத்தமற்ற நேரடி மரபுவழி இராணுவ முறைமையையில் தற்காப்பு யுத்தத்தை எதிர்கொண்டமையுமே மாவீரத்துடன் போராடிய முள்ளிவாய்க்கால் போர்க் கலம் பாறம்பு மலைப் படுகளமானதற்க்கு முக்கிய காரணமாயிற்று. 
 *

எப்பவும் பாரி மன்னனின் கதையைக் கேட்க்கும்போது மாவீரர்களான எங்கள் தலைவர்கள்தான் நினைவுக்கு வருகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போராட்டம் என்றாலே அது முள்ளிவாய்க்காலில் எப்படி முடிவுக்கு வந்தது என்பதுதான் எப்போதும் நினைவில் வருகின்றது.

பாடகர் சாந்தனைப் பற்றிய பிபிசி விவரணத்திலுள்ள குறிப்பு இப்படி உள்ளது. 

After the defeat of the Tamil rebels, no one dared to hum a tune of one of his songs, even privately. He was the voice of the rebellion. Tapes of his songs were buried under the blood soaked red sand of the backyards or discreetly burnt in small bonfires. He had lost all the glory, mansion with ten rooms, all his instruments, his dignity was lost the day they lined up all the men at the refugee camp, naked in front of their elders and younger relatives.

 

http://www.bbc.co.uk/programmes/p03tnxmx

Link to comment
Share on other sites

279. செல்கென விடுமே!

பாடியவர்: ஒக்கூர் மாசாத்தியார்

திணை: வாகை துறை: மூதின் முல்லை

கெடுக சிந்தை ; கடிதுஇவள் துணிவே;
மூதின் மகளிர் ஆதல் தகுமே;
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை,
யானை எறிந்து, களத்துஒழிந் தன்னே;
நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன்,
பெருநிரை விலக்கி, ஆண்டுப்பட் டனனே;
இன்றும் செருப்பறை கேட்டு, விருப்புற்று மயங்கி,
வேல்கைக் கொடுத்து, வெளிதுவிரித்து உடீஇப்,
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி,
ஒருமகன் அல்லது இல்லோள்,
‘செருமுக நோக்கிச் செல்க’ என’ விடுமே!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
    • நேற்று 72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு இன்று 69 ச‌த‌வீத‌மாம் 3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌ நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும் அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.