Jump to content

என் இரு பயணங்கள்: ஒரு சிறு வரைவு - நிழலி


Recommended Posts

On ‎3‎/‎17‎/‎2017 at 10:20 AM, ரதி said:

காக்கா இறைச்சி தேடிப் போயிருப்பார்.:unsure:

ரதி, ஒருக்கால் என்றாலும் ஊருக்கு போகும் நேரத்தில் நீர்க்காக்கா இறைச்சி சாப்பிட்டுப் பாருங்கள்.
பதின்ம வயதில் பாசையூர் நண்பனின் வீட்டில் சாப்பிட்டு விட்டு அம்மாவுக்கு அதைச் சொல்லாமல் ஒழித்து இருக்கின்றேன்.

On ‎3‎/‎17‎/‎2017 at 11:36 AM, வல்வை சகாறா said:

வெட்டுக்கிளி மகா ரசிகன் என்று தெரியும் காலம் ஆளை மாத்தியிருக்கும் என்று நினைத்தேன் ஊகூம் கொஞ்சமாவது திருந்தினதா தெரியேல்லை.... இந்தக் கவிதாப் பொண்ணுக்கு சரியாகக் கடிவாளம் போடத் தெரியலை<_<

மனைவி கவிதா என்னை விட மகா ரசிகை. :10_wink::10_wink:

15 hours ago, Thumpalayan said:

ஐயோ அங்க மட்டும் கேட்டிச்சா. நல்ல சைனீஸ், கொரியன் அயிட்டங்கள் வச்சிருப்பாங்களே (சாப்பாட்டை சொன்னனப்பா). 

மற்றது மூண்டு பிரண்டிப் போத்தலோட போனதால பாறுக்குப் போயிருக்க மாட்டியள் - சரியான குட்டி பார், விலையும் யானை விலை.

அந்த எயர் கொஸ்டசிண்ட  வெளிர் வயிறையும் திமிரும் மார்பயும் வாசிச்சுப்போட்டு பயபுள்ளைங்க மார்க்கமா அலையிறாங்க பாஸ். இன்னொரு இடைச்செருகல் போட்டால் குறைஞ்சே போவியள்?

ஓமோம்... அங்கு நிறைய சைனீஸ் கொரியன் ஐயிட்டங்கள் இருக்கு. ஆனால் எனக்கு இந்த வகையை கண்டாலே கொஞ்சம் அலர்ஜி ஆக இருக்கும்.  என் ரசனைக்குரிய வகைக்குள் இவை இல்லை. எனக்கு ஊர்ச்  சாயல் இருக்கும் சாப்பாடும் நாட்டுக் கோழியும் தான் பிடிக்கும் (சாப்பாட்டு ஐயிட்டங்களை சொல்றேனப்பா)

அங்குள்ள பாரிற்கு போகவில்லை. ஆனால் அங்க்கு சுற்றி பலர் சோடி சோடியாக அமர்ந்து பகல் நேரத்திலும் தண்ணி அடிச்சுக் கொண்டு இருந்திச்சினம்.

திரும்பி சென்னைக்கு போகும் போதும் அந்த இடைச்செருகலை சந்திக்க முடிஞ்சுது..அப்படி ஒரு ராசி எனக்கு

 

13 hours ago, MEERA said:

நிழலி தயவு செய்து மடியில் கனம் இல்லை என்று கூறாதீர்கள். உங்களுக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து விட்டே பயணம் மேற்கொண்டிருக்கிறீர்கள். சிங்களத்தில் கதைப்பதும் சிறு உதவியே.

 

"Juliana hotel" ஒரு மார்க்கமான இடத்தில் தான் தங்கியிருக்கிறீர்கள். இப்பவும் "அப்படி" நடக்கிறதா? 

 

 

ஓம் மீரா...கனம் இல்லை என நினைச்சாலும் உள்ளூர பயம் இருக்கத்தான் செய்தது.  என்னுடன் சேர்த்து கனம் சுமந்தவர்களில் அனேகர் மகிந்தவுடன் கொஞ்சி குலாவி விட்டதால் அதை காலம் கரைத்து விட்டது.

 வில் வெளிப்படையாக இப்ப நடப்பதில்லை. ஆனால் மேல் மாடியில் ஒரு மசாஜ் கிளப் உள்ளது என்றும் அங்கு நடப்பதாகவும் அறிந்தேன். இவற்றுக்கு மேலாக 16 வயதளவை சேர்ந்த சிறுவன் / சிறுமிகளும் கூட இணைந்து வந்து ஹோட்டலில் ரூம் எடுப்பதை காண முடிந்தது. காலை வெளியே போய் இரவு படுக்க மட்டும் வரும் அளவுக்கு திட்டங்கள் / வேலைகள் இருக்கும் ஒருவருக்கு இது ஏற்ற விடுதி. குடும்பத்துடன் தங்க ஏற்ற விடுதி அல்ல. காசும் ஒரு நாளைக்கு 5000 தான். இதை விட நட்பான சேவை.

 

10 hours ago, புங்கையூரன் said:

அனுபவப் பகிர்வு நன்றாக உள்ளது...நிழலி!

நானும் பல தடவைகள் போய் வருகின்றேன்! போர் நடந்த காலங்களிலும்..கட்டாயமாகப் போயே ஆக வேண்டுமென்ற நிலையிலும் போய் வந்திருக்கிறேன்! ஆனால்..எப்போதும்.. பொம்பிளையள் உள்ள பக்கம் தான் போறது வழக்கம்! இப்படியான பிரச்சனைகள் வரவில்லை! ஒரே ஒரு முறை மட்டும் ஒரு ஆண் உத்தியோகத்தரிடம் போக வேண்டி ஏற்பட்டது! எனது கடவுச் சீட்டில் 'பிறந்த இடம்' மாத்தளை என்று பதியப்பட்டிருந்தது! நான் சிங்களவனா, தமிழனா என்று அனுமானிக்க முடியாமல் உள்ளதாக மேலதிகாரிக்குச் சிங்களத்தில் கூறுவது எனக்குப் புரிந்தது! மேலதிகாரியும்...சரி..சரி..ஆளை விடு..என்று கூறுவதும் கேட்டது! ஒரு கருவாட்டுப் பார்வையுடன் விசாவைக் குத்தித் தந்தார்கள்!

சில வேளைகளில் ..எந்த நாட்டுக் கடவுச் சீட்டு என்று பார்த்து அலுப்புக் குடுக்கிறார்களோ தெரியாது!
அனேகமாக..ஆங்கிலத்தில் தான் உரையாடலை முடித்துக் கொள்வதுண்டு!

சிங்களம் ஓரளவுக்குக் கதைக்கத் தெரியும் எனினும்...எவருடனும்க வலிந்து கதைக்க விரும்புவதில்லை!

வழக்கமாக நானும் பொம்பளையள் பக்கம் தான் தான் போவது உண்டு. ஆனால் என் நேரத்துக்கு அன்று ஒரு பெண் அதிகாரியும் இருக்கவில்லை (மற்றப்படி நிழலியாவது பெண்ணை புறக்கணித்து ஆணிடம் செல்வதாவது...ஹ்ம்)

ஒரு மொழியாக எனக்கு சிங்களம் மிகவும் பிடிக்கும். இங்கும் சிங்கள பாடல்களை கேட்பது தொடர்கின்றது.

9 hours ago, ஈழப்பிரியன் said:

நிழலி இப்போது கொழும்பில் ரைக்சி ஆட்டே பிடிப்பதை விட ஊபர் (UBER) பிடிப்பது லாபம் சேவையும் நன்று என்று கூறுகிறார்கள்.இதன் அனுபவம் ஏதாவது?

இல்லை, தனிப்பட்ட ரீதியில் எனக்கு ஊபர் (UBER) பிடிப்பதில்லை.

இலங்கையில் கொழும்புக்குள் பயணப்பட ஓட்டோவை தான் பயன்படுத்தினேன்.  என்று போட்டு வருபவை தூரத்துக்கு ஏற்றவாறு நியாயமாக கட்டணம் அறவிடுகின்றனர். மீற்றர் காட்டியதுக்கும் மேலாக கேட்பதும் இல்லை.  என்று வருபவற்றை தவிர்க்க சொல்லி நண்பர்கள் ஆலோசனை கொடுத்து இருந்தார்கள்

Link to comment
Share on other sites

  • Replies 139
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிஞ்சு கட்டுநாயக்கா எயார்போட்டில காசு மாத்தின முதல் தமிழ் ஆள் நிழலிதான்?

அங்குள்ள மணி எக்ஸ்சேஞ்ச் அப்பாவிகளாக வரும் ரூரிஸ்ட்டுக்களுக்கு மட்டும்தான்.

நான் அடிக்கடி போவதில்லை. போனபோதெல்லாம் உண்டியலூடாகவே அனுப்பிவிட்டுத்தான் போனேன். கரன்ஸியாகக் கனக்கக் கொண்டுபோவதும் இல்லை!

Link to comment
Share on other sites

5 hours ago, நிழலி said:

ஓமோம்... அங்கு நிறைய சைனீஸ் கொரியன் ஐயிட்டங்கள் இருக்கு. ஆனால் எனக்கு இந்த வகையை கண்டாலே கொஞ்சம் அலர்ஜி ஆக இருக்கும்.  என் ரசனைக்குரிய வகைக்குள் இவை இல்லை. எனக்கு ஊர்ச்  சாயல் இருக்கும் சாப்பாடும் நாட்டுக் கோழியும் தான் பிடிக்கும் (சாப்பாட்டு ஐயிட்டங்களை சொல்றேனப்பா)

அங்குள்ள பாரிற்கு போகவில்லை. ஆனால் அங்க்கு சுற்றி பலர் சோடி சோடியாக அமர்ந்து பகல் நேரத்திலும் தண்ணி அடிச்சுக் கொண்டு இருந்திச்சினம்.

திரும்பி சென்னைக்கு போகும் போதும் அந்த இடைச்செருகலை சந்திக்க முடிஞ்சுது..அப்படி ஒரு ராசி எனக்கு

எனக்கும் இவர்களில் ஆண்களையும் பெண்களையும் கஞ்சத்தனமாகவே பிரம்மன் படைத்துவிட்டான் என்றொரு கோவம் ஆதலால் "யெல்லோ வீவர்" இல்லை ஆனால் ஜப்பானுக்கு விதிவிலக்கு குடுக்கவேண்டியதாப் போச்சு.

"கம குக்குல" வேணுமெண்டால் தக்குண பத்த தான் போக வேண்டும். தாமரை இலையில சூதுரு சம்பா சோறு, ஆத்து மீன் அம்புல் தியால், கொட்டுக் கொல சம்பல், பொலொஸ் கறியுடன் தென்னங் கள்ளு. அனுபவிச்சாத் தான் தெரியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎21‎/‎03‎/‎2017 at 7:29 PM, நிழலி said:

ரதி, ஒருக்கால் என்றாலும் ஊருக்கு போகும் நேரத்தில் நீர்க்காக்கா இறைச்சி சாப்பிட்டுப் பாருங்கள்.
பதின்ம வயதில் பாசையூர் நண்பனின் வீட்டில் சாப்பிட்டு விட்டு அம்மாவுக்கு அதைச் சொல்லாமல் ஒழித்து இருக்கின்றேன்.

மனைவி கவிதா என்னை விட மகா ரசிகை. :10_wink::10_wink:

ஓமோம்... அங்கு நிறைய சைனீஸ் கொரியன் ஐயிட்டங்கள் இருக்கு. ஆனால் எனக்கு இந்த வகையை கண்டாலே கொஞ்சம் அலர்ஜி ஆக இருக்கும்.  என் ரசனைக்குரிய வகைக்குள் இவை இல்லை. எனக்கு ஊர்ச்  சாயல் இருக்கும் சாப்பாடும் நாட்டுக் கோழியும் தான் பிடிக்கும் (சாப்பாட்டு ஐயிட்டங்களை சொல்றேனப்பா)

அங்குள்ள பாரிற்கு போகவில்லை. ஆனால் அங்க்கு சுற்றி பலர் சோடி சோடியாக அமர்ந்து பகல் நேரத்திலும் தண்ணி அடிச்சுக் கொண்டு இருந்திச்சினம்.

திரும்பி சென்னைக்கு போகும் போதும் அந்த இடைச்செருகலை சந்திக்க முடிஞ்சுது..அப்படி ஒரு ராசி எனக்கு

 

 

ஓம் மீரா...கனம் இல்லை என நினைச்சாலும் உள்ளூர பயம் இருக்கத்தான் செய்தது.  என்னுடன் சேர்த்து கனம் சுமந்தவர்களில் அனேகர் மகிந்தவுடன் கொஞ்சி குலாவி விட்டதால் அதை காலம் கரைத்து விட்டது.

 வில் வெளிப்படையாக இப்ப நடப்பதில்லை. ஆனால் மேல் மாடியில் ஒரு மசாஜ் கிளப் உள்ளது என்றும் அங்கு நடப்பதாகவும் அறிந்தேன். இவற்றுக்கு மேலாக 16 வயதளவை சேர்ந்த சிறுவன் / சிறுமிகளும் கூட இணைந்து வந்து ஹோட்டலில் ரூம் எடுப்பதை காண முடிந்தது. காலை வெளியே போய் இரவு படுக்க மட்டும் வரும் அளவுக்கு திட்டங்கள் / வேலைகள் இருக்கும் ஒருவருக்கு இது ஏற்ற விடுதி. குடும்பத்துடன் தங்க ஏற்ற விடுதி அல்ல. காசும் ஒரு நாளைக்கு 5000 தான். இதை விட நட்பான சேவை.

 

வழக்கமாக நானும் பொம்பளையள் பக்கம் தான் தான் போவது உண்டு. ஆனால் என் நேரத்துக்கு அன்று ஒரு பெண் அதிகாரியும் இருக்கவில்லை (மற்றப்படி நிழலியாவது பெண்ணை புறக்கணித்து ஆணிடம் செல்வதாவது...ஹ்ம்)

ஒரு மொழியாக எனக்கு சிங்களம் மிகவும் பிடிக்கும். இங்கும் சிங்கள பாடல்களை கேட்பது தொடர்கின்றது.

இல்லை, தனிப்பட்ட ரீதியில் எனக்கு ஊபர் (UBER) பிடிப்பதில்லை.

இலங்கையில் கொழும்புக்குள் பயணப்பட ஓட்டோவை தான் பயன்படுத்தினேன்.  என்று போட்டு வருபவை தூரத்துக்கு ஏற்றவாறு நியாயமாக கட்டணம் அறவிடுகின்றனர். மீற்றர் காட்டியதுக்கும் மேலாக கேட்பதும் இல்லை.  என்று வருபவற்றை தவிர்க்க சொல்லி நண்பர்கள் ஆலோசனை கொடுத்து இருந்தார்கள்

சீக்tw_astonished:(நீர்க் காக்கா? அப்படி ஒரு பறவை இருக்கா? உண்மையிலேயே தெரியவில்லை):unsure:

On ‎21‎/‎03‎/‎2017 at 7:48 PM, கிருபன் said:

எனக்குத் தெரிஞ்சு கட்டுநாயக்கா எயார்போட்டில காசு மாத்தின முதல் தமிழ் ஆள் நிழலிதான்?

அங்குள்ள மணி எக்ஸ்சேஞ்ச் அப்பாவிகளாக வரும் ரூரிஸ்ட்டுக்களுக்கு மட்டும்தான்.

நான் அடிக்கடி போவதில்லை. போனபோதெல்லாம் உண்டியலூடாகவே அனுப்பிவிட்டுத்தான் போனேன். கரன்ஸியாகக் கனக்கக் கொண்டுபோவதும் இல்லை!

 நானும் ஒரு தடவை அவசரத்திற்கு கொஞ்சம் மாத்தி இருக்கன்....ஆனால் எனக்கு மாத்த முதலே தெரியும் எப்படியும் குறைச்சுத் தான் கிடைக்கும் என்று:rolleyes:

Link to comment
Share on other sites

On 20/03/2017 at 10:39 PM, நிழலி said:

எப்ப இலங்கையை விட்டு வெளியேறினாய் -ஆங்கிலத்தில் கேட்கின்றார்

நான் சரியாக எப்ப வெளியேறினான் என்பதை திகதி / நேரம் வாரியாக சிங்களத்தில் பதில் சொல்கின்றேன்

ஏன் இடையில் ஒருக்காலும் வரவில்லை - சிங்களத்தில் அவர்

'இவ்வளவு நாளும் வர எனக்கு பிடிக்கவில்லை'

என் முகத்தை பார்த்து விட்டு 'கப்பலிலால போனாய்'  என நக்கலும் ஏளனமுமாக கேட்கின்றார்

அனுபவப் பகிர்வுக்கு நன்றி. எனக்கு சென்னை பரிட்சயமான இடம். ஆனால் எக்காலத்திலும் கொழும்புக்கு நான் சென்றதில்லை. என்னுமொரு பதிவில் புத்தன் எழுதியதும் சரி இதில் நடக்கும் சிறு விசாரணையும் சரி கொழும்பு ஊடாக பயணம் செய்யும் நோக்கத்தையே சிதைக்கின்றது. ஒருவிதமான மனத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. பல இடங்களில்  அன்றாடம் நெருக்கடிகளைள சந்திக்கின்றோம் ஆனால் சிங்களவர்கள் இந்திய அதிகாரவர்க்கம் கொடுக்கும் உளவியல் நெருக்கடிகளை மனம் சகிப்பதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15.3.2017 at 3:18 AM, நிழலி said:

ஒரு விருந்தாளியின் பார்வை -1

மனம் முழுசும் மகிழ்வும் நெகிழ்வும் குடி கொண்டு இருந்தன.

அக்காவை பெற்ற தம்பிகளுக்குத்தான் தெரியும் அக்கா என்பது இன்னொரு அம்மா மட்டுமல்ல நல்ல தோழி என்றும். அதே போன்று அக்காவின் கணவர் எனும் உறவு நட்புக்கும் சகோதரருக்கு இடைப்பட்ட மிக உன்னதமான உறவு. அத்தான்மார்களால் வாழ்வு பெற்ற பலர் எம் சமூகத்தில் இருக்கினம்.----

 

நிழலி.... உங்கள் அக்காவின் மேல் வைத்திருக்கும் பாசம்... எம்மை, மெய்சிலிர்க்க  வைக்கின்றது.
முதல் பிறந்தவர்களுக்கு.... பொறுப்பு அதிகம். 
எனக்கு.... அக்கா, அண்ணா.. இருந்து இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசிப்பதும் உண்டு.

Link to comment
Share on other sites

கொழும்பில் முதல் மூன்று நாட்கள்

விமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு வந்தவுடன் பசி வயிற்றைக் கிள்ளுகின்றது

ஜூலியானா ஹோட்டலுக்கு அருகில் கொஞ்சம் சுத்தமாக தோன்றும் ஒரு உணவு விடுதியைக் கண்டு உள்ளே செல்கின்றேன். அங்கு ஒரு தமிழர் தான் பொறுப்பாக இருக்கின்றார். அவரிடம் பின்னர் பேச்சுக் கொடுத்ததில் லண்டனில் நான்கு ஐந்து KFC வைத்து இருந்ததாகவும், மே 2009 இன் பின்னர் நான்கு நண்பர்களுடன் (3 பேர் தமிழர்கள் ஒருவர் முஸ்லிம்) இணைந்து இலங்கைக்கு ஏதோ பொருட்களை இறக்குமதி செய்யும் வியாபாரத்தில் இறங்க, தன்னுடன் கூட்டுச் சேர்ந்த நான்கு பேரும் ஏமாற்றி விட்டதாகவும், பெருத்த நஷ்டம் ஏற்பட்டு இப்ப கொழும்பில் வழக்கு போவதாகவும், வழக்கிற்காக அடிக்கடி  லண்டனில் இருந்து கொழும்பு வருவது கஷ்டம் என்பதால் இங்கேயே தங்கி ஒரு முஸ்லிம் நண்பருடன் இணைந்து இந்த ஹோட்டலை நடத்துவதாகவும் கவலைப்பட்டு சொன்னார்.

(ஜனவரியில் இரண்டாம் தடவை கொழும்புக்கு போன போது, அவருக்கு இதயம் தொடர்பான வருத்தம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் இருக்கின்றார் என அறிந்து கொண்டேன்)

"தம்பி ஆரோட பிசினஸ் செய்தாலும் எங்கட ஆக்களோட மட்டும் செய்திறாதையுங்கோ" என்று அங்கு போகும் ஓவ்வொரு தடவையும் கூறுவார். சாப்பாடு அங்கு பரவாயில்லை. பெரிய திறம் என்று இல்லாட்டியும் ஓரளவுக்கு சுவையானதாக இருந்தது. அவர்களின் Fried Rice சும் கோழிப் பொரியலும் நல்ல டேஸ்ட். மற்றக் கடைகளை விட விலை சற்று அதிகம்.

************************************************* *************************************************

நான் இலங்கைக்கு செல்ல விரும்பியதற்கு / செல்ல வேண்டியதுக்கு மூன்று காரணங்கள். ஒன்று என் EPF / ETF காசை இன்னும் எடுத்து இருக்கவில்லை. அது தொடர்பாக வேலை பார்க்க.

அடுத்தது பல ஆண்டுகளாக சந்திக்க முடியாமல் போன நெருங்கிய உறவுகளை சந்திப்பதற்கு.

இந்த 9 ஆண்டு கால இடைவெளியில் நெருங்கிய மூன்று உறவுகளை இழந்து இருக்கின்றேன். பலர் 70 இற்கு அருகிலும் அதைக் கடந்தும் செல்லத் தொடங்கி விட்டனர். எனக்கும் 40 + ஆகிவிட்டது. விரைவாக எல்லாரையும் சந்தி என்று மனம் சொல்லிக் கொண்டு இருந்தது.

நான் போன அன்றே இரவு இதயத்தில் அறுவை சிகிச்சை (Open heart surgery) செய்த மாமியையும், அவர் மகனையும், ஒன்று விட்ட தங்கையையும் அவரது சின்னஞ் சிறு குழந்தையையும் சந்தித்தேன்.

மூன்றாவது நல்லா இலங்கை சாப்பாடு சாப்பிட.

இரவு இரண்டு மச்சான் மாருடன் sapphire hotel லில் தலை சுற்றும் அளவுக்கு நல்ல தண்ணி அடி. கன நாளைக்கு பிறகு Extra special Arrack அடித்தேன்

xp4v95.jpg

அடுத்த நாள் காலையில் வெள்ளவத்தைக்கு சென்று மைசூர் கபே யில் இரண்டு போண்டா சாப்பிட்டு விட்டு எனக்குப் பிடிச்ச Light tea  வாங்கிக் குடிச்சேன். வெள்ளவத்தையில் இருக்கும் உணவு விடுதிகளில் எனக்கு எப்பவும் பிடிச்சது சந்தைக்கு முன் இருக்கும் மைசூர் கபே தான். இன்னு  அதே சுவை.. அதே interior

72rfiu.jpg

(Light Tea)

புதனும் வியாழனும் கொழும்பில் சொந்த வேலைகளை பார்க்க நேரம் போனது.

எல்லாரும் குறிப்பிடுவது போன்று விலைவாசி மிக மோசமாக ஏறி இருக்கு. சில பொருட்களை கனடிய டொலரில் மதிப்பிட்டு பின் என் வருமானத்தையும் கனடிய டொலரில் மதிப்பிட்டு, இங்குள்ளவர்களின் சராசரி வருமானத்தையும் சேர்த்து ஒப்பிடும் போது கொழும்பில் / இலங்கையில் பொருட்களின் விலை அதிகமாகவே தோன்றுகின்றது.  இதற்கு வெறுமனே யுத்தம் மட்டும் காரணமல்ல. மகிந்த அரசு வாங்கிய பல ஆயிரம் கோடி கடன்களும், இப்ப இருக்கும் அரசின் VAT வரியும் (15% ?), மோசமான நிதி மேலான்மையும் காரணங்கள் என்று ஓரளவுக்கு பொருளாதாரம் பற்றித் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.

காலி வீதி கொழும்பை அண்மிக்கும் பகுதிகளில் இருந்து one way ஆக்கி இருந்தார்கள். இது தெரியாமல் ஒரு 10 நிமிடங்களுக்கும் மேல் பம்பலபிட்டியில் இருந்து வெள்ளவத்தைக்கு போக காலி வீதியில் bus இற்காக காத்து இருந்து ஏமாந்து போனேன்.

நான் சென்ற EPF / ETF  ஆகிய அரச அலுவலகங்களில் கொஞ்சம் மந்தமாக வேலைகள் நடப்பினும், நட்பாக பழகுகின்றனர். தமிழர் என்ற காரணத்துக்காக என்னை அலைக்கழிக்க வைக்கவில்லை. தமிழ் உத்தியோகத்தவர்களை காண்பது அரிதாக இருக்கு. ஆனால் நிறைய முஸ்லிம் அலுவலர்களை காண முடிந்தது.

Fashion விடயத்தில் அதிக முன்னேற்றத்தினை காண முடிகின்றது. அழகான பெண்கள், அழகான ஆடைகள், கவர்ச்சியான சிங்கள யுவதிகள்.

கணணி தொழில்நுட்ப விடயத்தில் முன்னேற்றம் நிறைய வந்திருக்கு . மென்பொருள் வர்த்தகத்தில் விரைவில் மேலும் பல மடங்கு முன்னேறுவார்கள்.

தனியார் துறையில் படித்த தமிழ் இளைஞர்களை காண முடிகின்றது. இலங்கைக்கான Oracle கிளையில் என் நண்பன் தான் மேலதிகாரியாக இருக்கின்றான். வங்கிகளிலும் பல உயர் மட்டங்களில் தமிழர்களை காண முடிகின்றது. JKCS இலும் தமிழர்கள் நல்ல நிலையில் வேலை செய்கின்றனர்.

வெள்ளவத்தை தமிழர்களின் கட்டிடக் காடாக காட்சியளிக்கின்றது. தடுக்கி விழுந்தால் ஒரு அபார்ட்மென்ட். இதில் deeds இனை வாங்கியவருக்கு கொடுக்காமல், அதை வைச்சு வங்கியில் இன்னும் கடன் வாங்கி சுத்து மாத்து செய்து கட்டிடம் கட்டும் நிறுவனங்களும் உள்ளன.

ஆசையாக சாப்பிடப் போன ரொலக்ஸ் ஹோட்டலின் உணவை இப்ப நினைச்சாலும் குமட்டுகின்றது.

மீற்றர் ரக்ஸி என்று போட்டு வரும் ஆட்டோக்கள் நியாயமாக நடந்து கொள்கின்றனர்.

பழைய ரயில்கள் புதிய ரயில்கள் என கதம்பமாக ரயில்கள் ஓடுகின்றன.

வெள்ளவைத்தைக் கடற்கரை பல பல பசுமையான நினைவுகளை அருட்டுகின்றது. பத்தைகளும் புதர்களும் சில நினைவுகளை மீட்டி புன்னகையை தருவிக்கின்றது.

இரவு விடுதிகள் அருமையாக உள்ளன.

பல வருடங்களாக வாழ்ந்த கொழும்பு நகரம் வந்திறங்கிய அந்த நொடிப் பொழுதில் இருந்து மீண்டும் மனசுக்குள் நெருக்கமாக வந்து குடி கொள்கின்றது

வெள்ளி இரவு யாழ்ப்பாணத்துக்கு புறப்படுகின்றேன்.

(மிச்சம் பிறகு)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

வெள்ளவைத்தைக் கடற்கரை பல பல பசுமையான நினைவுகளை அருட்டுகின்றது. பத்தைகளும் புதர்களும் சில நினைவுகளை மீட்டி புன்னகையை தருவிக்கின்றது.

அனுபவம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/03/2017 at 1:52 PM, நிழலி said:

இடைச் செருகல்

இதுவரைக்கும் கிட்டத்தட்ட 45 முறையாவது விமானப்பயணம் மேற்கொண்டு இருக்கின்றேன். ஆனால் இது வரைக்கும்  Sri Lankan airlines இல் பயணித்தது இல்லை. நான் பயணித்த 45 தடவையும் 2009 முன்

இது 46 ஆவது முறை. Sri Lankan airlines  இல்

அந்த பெண்ணை ஏன் எனத் தெரியவில்லை... மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றுகின்றது. மிக அழகிய air hostessத

வெளிர் நிற வயிறும் அதற்கு மேலாக கண்களை செலுத்தும் போது இலங்கை விமான சேவைக்குரிய பிளவுசும் .....அதற்குள் அகப்பட மறுத்து திமிரும் மார்புகளும்.

ஒரு போதும் அவரை மீண்டும் சந்திக்க முடியாது என நான் நினைத்து இருந்தேன்

ஆனால் பின்னர் சந்திக்க முடிந்தது

இடைச் செருகல் இத்துடன் முடிவடையலாம்

 

இந்த விமர்சனம் என்னை மீண்டும் ஒருக்கா அப்பேரட்ட விமானசேவையில் ஏற தூண்டுது.....எங்கன்ட பெடிச்சியள் என்றபடியால்தான் .....திரும்ப திரும்ப பார்க்க தூண்டுதோ?:10_wink:உங்கள் அழகிய எழுத்து நடைக்கு ஒரு சலாம் ....தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இது உன் தாய் நாடு அல்ல, எங்காவது ஓடிப் போ அல்லது செத்து போ என்று பெரும்பான்மை சிங்கள அரசு மூர்க்கமாக மோதித் தள்ளினாலும் இல்லை, இதற்குள் தான் என் தாய் நாடும் உள்ளது என நாமும் மூர்க்கமாக மோதிக் கொண்ட நாட்டில் காலடி வைக்கின்றேன்.

Quote

இங்க தான் நாங்கள் மீண்டும் எழுந்து நிற்கின்றோம்....83 ஆம் ஆண்டு கொழும்பில் ஏற்பட்ட அழிவுகளின் பின்பும் வெள்ளைவத்தை வெள்ளவத்தையாக ............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பைப் பற்றி பல உருப்படியான தகவல்களை அறிய முடிந்தது ! 

இரவு விடுதிகள் கொழும்பில் உள்ளனவா? இவை சட்ட ரீதியாக அஙுகு இயங்க முடியுமா?

இந்தத் தகவல் எனக்கு மிகவும் புதியது! அது தான் கேட்டேன்!

தொடருஙகோ நிழலி !

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் நிழலி , ரசனையாக எழுதிக் கொண்டு போகின்றிர்கள்....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

xp4v95.jpg

உதை என்னெண்டுதான் குடிச்சு இறக்கிறாங்களெண்டு எனக்கு தெரியேல்லை.....tw_astonished:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நிழலி said:

மீற்றர் ரக்ஸி என்று போட்டு வரும் ஆட்டோக்கள் நியாயமாக நடந்து கொள்கின்றனர்.

கொழும்பில் ஊபர் (Uber)ஆட்டோவை விட மிக மலிவு என்கிறார்கள்.பாவிக்கலியோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நிழலி said:

கொழும்பில் முதல் மூன்று நாட்கள்

விமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு வந்தவுடன் பசி வயிற்றைக் கிள்ளுகின்றது

ஜூலியானா ஹோட்டலுக்கு அருகில் கொஞ்சம் சுத்தமாக தோன்றும் ஒரு உணவு விடுதியைக் கண்டு உள்ளே செல்கின்றேன். அங்கு ஒரு தமிழர் தான் பொறுப்பாக இருக்கின்றார். அவரிடம் பின்னர் பேச்சுக் கொடுத்ததில் லண்டனில் நான்கு ஐந்து KFC வைத்து இருந்ததாகவும், மே 2009 இன் பின்னர் நான்கு நண்பர்களுடன் (3 பேர் தமிழர்கள் ஒருவர் முஸ்லிம்) இணைந்து இலங்கைக்கு ஏதோ பொருட்களை இறக்குமதி செய்யும் வியாபாரத்தில் இறங்க, தன்னுடன் கூட்டுச் சேர்ந்த நான்கு பேரும் ஏமாற்றி விட்டதாகவும், பெருத்த நஷ்டம் ஏற்பட்டு இப்ப கொழும்பில் வழக்கு போவதாகவும், வழக்கிற்காக அடிக்கடி  லண்டனில் இருந்து கொழும்பு வருவது கஷ்டம் என்பதால் இங்கேயே தங்கி ஒரு முஸ்லிம் நண்பருடன் இணைந்து இந்த ஹோட்டலை நடத்துவதாகவும் கவலைப்பட்டு சொன்னார்.

(ஜனவரியில் இரண்டாம் தடவை கொழும்புக்கு போன போது, அவருக்கு இதயம் தொடர்பான வருத்தம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் இருக்கின்றார் என அறிந்து கொண்டேன்)

"தம்பி ஆரோட பிசினஸ் செய்தாலும் எங்கட ஆக்களோட மட்டும் செய்திறாதையுங்கோ" என்று அங்கு போகும் ஓவ்வொரு தடவையும் கூறுவார். சாப்பாடு அங்கு பரவாயில்லை. பெரிய திறம் என்று இல்லாட்டியும் ஓரளவுக்கு சுவையானதாக இருந்தது. அவர்களின் Fried Rice சும் கோழிப் பொரியலும் நல்ல டேஸ்ட். மற்றக் கடைகளை விட விலை சற்று அதிகம்.

************************************************* *************************************************

தமிழர்களை நம்ப வேண்டாம் என்று சொல்பவர், மீண்டும் கூட்டு வியாபாரம் செய்யும் போது.... முஸ்லீம் நண்பரை சேர்த்து வைத்துள்ளார். அவ்வளவிற்கு மோசமானவர்களா நம்மவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/24/2017 at 11:58 PM, ரதி said:

சீக்tw_astonished:(நீர்க் காக்கா? அப்படி ஒரு பறவை இருக்கா? உண்மையிலேயே தெரியவில்லை):unsure:

22fb6f7a1e79b361c0e6a4508d76aae6.jpg

செம ரேஸ்ட் 

பல வெளிநாட்டு பயணிகள் வருவது சில  இறைச்சி வகைகளை உண்ணத்தான்     

4 hours ago, குமாரசாமி said:

xp4v95.jpg

உதை என்னெண்டுதான் குடிச்சு இறக்கிறாங்களெண்டு எனக்கு தெரியேல்லை.....tw_astonished:

இலங்கையில் இந்த சப்பட்டை தான் பேமசு 

 

தொடரட்டும் நிழலி  

Link to comment
Share on other sites

On 2017-03-29 at 2:49 AM, MEERA said:

அனுபவம்?

சுய தணிக்க tw_blush:

 

On 2017-03-29 at 4:29 AM, putthan said:

இந்த விமர்சனம் என்னை மீண்டும் ஒருக்கா அப்பேரட்ட விமானசேவையில் ஏற தூண்டுது.....எங்கன்ட பெடிச்சியள் என்றபடியால்தான் .....திரும்ப திரும்ப பார்க்க தூண்டுதோ?:10_wink:உங்கள் அழகிய எழுத்து நடைக்கு ஒரு சலாம் ....தொடருங்கள்

எந்த  பரதேசம் போனாலும் எங்க பெடிச்சியளைக் கண்டால் ஒரு இனம்புரியாத கவர்ச்சி ஏற்படத்தான் செய்யுது. வருகைக்கு நன்றி புத்ஸ்

On 2017-03-29 at 5:11 AM, புங்கையூரன் said:

 

இரவு விடுதிகள் கொழும்பில் உள்ளனவா? இவை சட்ட ரீதியாக அஙுகு இயங்க முடியுமா?

இந்தத் தகவல் எனக்கு மிகவும் புதியது! அது தான் கேட்டேன்!

 

 

கொழும்பில் இரவு விடுதிகள் நிறைய இருக்கு புங்கை. அநேகமானவை லைசென்ஸ் பெற்று நடத்தப்படுவை. அரசியல்வாதிகள் தான் அதிகமானவற்றுக்கு உரிமையாளர்கள்.  இவை ஒவ்வொரு genre / type இல் இருக்கு. மேலைதேய நாடுகள் போல நிர்வாண நடனம் போன்றவை அங்கு இல்லை என்றாலும் ஆடிப்பாடி குதூகலிக்கவும் நண்பர்களுடன் அமர்ந்து லயிச்சு அனுபவிக்கவும் முடியும். கனடிய /அமெரிக்க இரவு விடுதிகளுடன் ஒப்பிடும் போது வன்முறை / ஆட்களை சுடுவது என்பன மிக மிக குறைவு (மகிந்தவின் புதல்வர்கள் முன்னர் அட்டகாசம் செய்தவர்கள் இங்கு)

அழகிய மேட்டுக்குடியை சேர்ந்த பாலியல் தொழிலாளர்களையும் இளம் யுவதிகளையும் Pickup பண்ணும் இடங்களும் இவைதான். ஆனால் நான் அச்சா பிள்ளை என்பதால் இவை பற்றி அனுபவம் இல்லை.

On 2017-03-29 at 5:17 AM, suvy said:

தொடருங்கள் நிழலி , ரசனையாக எழுதிக் கொண்டு போகின்றிர்கள்....! tw_blush:

நன்றி அண்ணா

On 2017-03-29 at 10:55 AM, ஈழப்பிரியன் said:

கொழும்பில் ஊபர் (Uber)ஆட்டோவை விட மிக மலிவு என்கிறார்கள்.பாவிக்கலியோ?

எனக்கு இது பற்றி தெரியவில்லை ஈழப்பிரியன். அத்துடன் Uber நிறுவனம் பற்றி எனக்கு நல்ல எண்ணம் இல்லை என்பதால் இங்கு கனடாவிலும் அதை ஆதரிப்பது இல்லை.

On 2017-03-29 at 8:48 AM, குமாரசாமி said:

xp4v95.jpg

உதை என்னெண்டுதான் குடிச்சு இறக்கிறாங்களெண்டு எனக்கு தெரியேல்லை.....tw_astonished:

கு.சா,

உத இங்க குளிர் நாட்டில் அடிச்சால்..'சப்' என்று இருக்கும். ஆனால் அங்க போய் இதை 'கங்கூன்' கீரையை taste ஆக சாப்பிட்டுக் கொண்டு அடிக்க அந்த மாதிரி இருக்கும். ஒருக்கா மாமா வரும் போது இதை கனடாவுக்கு கொண்டு வரச் சொல்லி அடிக்க, வெறுப்பாக இருந்தது. ஆனால் அங்கு அமிர்தம்!

On 2017-03-29 at 11:46 AM, தமிழ் சிறி said:

தமிழர்களை நம்ப வேண்டாம் என்று சொல்பவர், மீண்டும் கூட்டு வியாபாரம் செய்யும் போது.... முஸ்லீம் நண்பரை சேர்த்து வைத்துள்ளார். அவ்வளவிற்கு மோசமானவர்களா நம்மவர்கள்.

தெரியவில்லை தமிழ்சிறி. எனக்கும் இந்த கேள்வி மனசுக்குள் எழுந்ததாயினும், அவரிடம் கேட்கவில்லை

On 2017-03-29 at 1:44 PM, முனிவர் ஜீ said:

22fb6f7a1e79b361c0e6a4508d76aae6.jpg

செம ரேஸ்ட் 

பல வெளிநாட்டு பயணிகள் வருவது சில  இறைச்சி வகைகளை உண்ணத்தான்     

இலங்கையில் இந்த சப்பட்டை தான் பேமசு 

 

தொடரட்டும் நிழலி  

நன்றி முனி... நீர்க்காக்காவை கடந்த இரு முறையும் காணக் கிடைக்கவில்லை.

Link to comment
Share on other sites

கொழும்பு - யாழ்ப்பாண பேருந்து எனும் ‘வெருட்டல்’ சேவை.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ‘யாழ் – கொழும்பு’ தனியார் சொகுசு (?) பேரூந்தில் செல்கின்றவர்கள் பலருக்கு பல விரும்பத்தகாத அனுபவங்கள் கிடைத்ததை அறிந்து இருந்தமையால்  அதை தவிர்த்து ரயிலில் செல்ல முதல் முடிவு செய்து இருந்தேன்.

ஆயினும் தனியப் போவது பம்பலாக இருக்காது என்பதால் மச்சானையும் இறுதி நேரத்தில் வரச் சொல்லிக் கேக்க, அவன் தனியாக வராமல் தன் மனைவியையும் இரு குட்டி வாண்டுகளையும் கூட்டிக் கொண்டு வர முடிவெடுக்க, ரயிலில் இனி இருக்கைகள முன்பதிவு செய்ய நேரம் போதாமையால் இறுதியில் தனியார் சொகுசு பேருந்தில் பயணம் செய்ய முடிவெடுத்தோம்.

யாழ் – கொழும்பு தனியார் சொகுசு (?) பஸ்களை சேவையில் ஈடுபடுகின்ற அநேக கம்பெனிகள் தமிழர்களின் கம்பெனிகள் தான். ஆனால் சாரதிகளாக சிங்களவர்களை தான் அதிகம் வைத்து உள்ளனர். இதன் காரணம் தமிழர்கள் சாரதிகளாக வர விரும்பான்மை அல்ல, வரும் பயணிகளிடம் சிங்களத்தில் கதைத்து தமிழ் பயணிகளை ‘வெருட்ட’. சில தமிழ் சாரதிகளும் சிங்களவர்களைப் போன்று தலை மயிரை கட்டையாக வெட்டி பயணிகளுடன் சிங்களத்தில் தான் கதைக்கின்றனர்.

யாழ் கொழும்பு மார்க்கத்தில் ஈடுபடும் பேருந்து சேவையில் ‘PPT’ எனும் பேரூந்து சேவை ஒரு மோசமான உதாரணம் எனக் கேள்விப்பட்டு இருந்தேன். பேரூந்து சில கிலோ மீற்றர் கடந்து நகரப் பகுதிகளை தாண்டியபின் Air condition னை நிப்பாட்டி விடுவார்கள் என்றும், யன்னல்கள் திறக்க முடியாத அந்த பஸ்ஸில் வேர்த்து களைச்சு தான் ஊர் போய்ச் சேர்வார்கள் என்றும் அறிந்து இருந்தேன்.  எதிர்த்துக் கேள்வி கேட்டால் சிங்களத்தில் முரட்டுத்தனமாக கதைச்சு  வெருட்டி  பயணிகளை கேவலமாக நடத்துவர் என்றும் கேள்விப்பட்டு இருந்தமையால் எக்காரணம் கொண்டும் அந்த பஸ்ஸில் இருக்கைகளை முன் பதிவு செய்யாதே என்று மச்சானுக்கு சொல்லி இருந்தேன்.

இரவு 7:30 இற்கு வெள்ளவத்தை இராமகிருஸ்ணன் வீதிக்கருகில் வரிசையாக பேரூந்துகள் யாழ் செல்ல நிற்கின்றன. நல்ல உயரமான சொகுசு பேரூந்துகளாக தெரிகின்றன.

மச்சான் ஒவ்வொரு பேரூந்தாக கடந்து இறுதியாக இதில் ஏறு எனச் சொல்லி ஒரு பேரூந்தைக் காட்டுகின்றான்.

அதன் பெயர்பலகையை பார்க்கின்றேன்.

அழகான எழுத்துகளுடன் ‘PPT’ என எழுதப்பட்டு இருக்கின்றது.

இதை ஏன் முன் பதிவு செய்தாய் என்று கேட்க, தான் அடிக்கடி பயணிப்பதாகவும் இது வரைக்கும் ஒரு நாள் கூட பிரச்சனை வரவில்லை என்றும் சொல்கின்றான் மச்சான் ("எல்லாம் இந்த மூதேவி வந்த ராசி" என அவன் மைன்ட் வொய்ஸ் சொல்லுவது கேட்கின்றது)
பேரூந்து புறப்படுகின்றது.

நல்ல A/C….சும்மா ஜில் என்று இருக்கு. மூன்றாவது சீட்டில் ஒரு இளம் பெண் குளிருது என்று இழுத்து போர்க்கின்றார்.

கொஞ்ச தூரம் தான் தாண்டி இருக்கும்…. A/C நின்று விட்டது. நான் மச்சானின் முகத்தை பார்க்கின்றேன். அவனுக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை.

சாரதியும் கிளீனரும் என்னவோ எல்லாம் செய்து பார்த்தும் A/C சரி வரவில்லை. பின் இன்னொரு பேரூந்தைக் கொண்டு வந்து எம்மை ஏற்றி இரவு 9 மணியளவில் யாழ் செல்ல  மீண்டும் தொடங்குகின்றனர்.

கும்மிருட்டில் பேரூந்து விரைகின்றது.

ஓமந்தையை தாண்டி செல்கின்றது.

புளியங்குளத்தை தாண்டுகின்றது

இதே புளியங்குளத்தில் தான் என்னை / எம்மை “போட்டு வாங்கோ அண்ணை’ என்று சொல்லி வழியனுப்பி வைத்த வீரப் புதல்விகளின் நினைவு வந்து செல்கின்றன.

பீரங்கி படையணியின் பொறுப்பாள நண்பனுடன் இறுதியாக கதைச்ச இடம் கடக்கின்றதா என கண்களை குறுக்கி வெளியே பார்க்கின்றேன்.

கும்மிருட்டில் எல்லாம் கடந்து போகின்றன.

பல்லாண்டுகளாக பல மணி நேரம் எடுத்து கடந்த பிரதேசங்கள், சில மணி நேரங்களில் கடந்து செல்கின்றன.

கண்ணீரும் செந்நீரும் பேராறாக ஓடிய கிராமங்கள் இருட்டில் அரவமற்று கிடக்கின்றன.

ஒவ்வொரு அங்குலத்திற்காகவும் ஆயிரக்கணக்கில் தம் உயிரை கொடுத்து காத்து, ஈற்றில் எதுவுமே இல்லாமல் போய்விட்ட  A9 சாலையில் பேரூந்து விரைகின்றது

பெருமூச்சு கூட வரண்டு போய் கிடந்தது எனக்கு.

ஒரு காலத்தில் இது என் தேசம் என மார்தட்டிய இடங்களில் ஒரு விருந்தினராக சென்று கொண்டு இருக்கின்றேன்.

விம்மி வெடிக்க வேண்டிய நெஞ்சம், வேறு வழி இல்லை என ஏற்று சமாதானம் கொள்கின்றது.

இந்தச் சமாதானம் கொள்ளும் மனம் இல்லாவிட்டால் இறங்கி நின்று போராட வேண்டும். ஆனால் இப்படி சாக்கு போக்கு சமாதானம் சொல்வது தான் ஈசியாக இருக்கு. தொடர்ந்து விருந்தினனாக வந்து போகவும் வசதியாக இருக்கும்.

***************************************************************

சரியாக அதிகாலை 4:00 இற்கு யாழ்ப்பாண நகரத்தில் உள்ள கச்சேரி அருகே எம்மை இறக்கி விடுகின்றனர்.

என் 73 வயது மாமா (அம்மாவின் அண்ணா) எமக்காக அந்த சாமத்திலும் தன் வெள்ளை நிற பழைய waxwagan car (beetle) இல் வந்து மாமியுடன் காத்து நிற்கின்றார்

நான் யாழ் சென்றடைந்தது September 24, 2016 சனிக்கிழமை.

‘எழுக தமிழ்’ யாழ்ப்பாணத்தில் நிகழும் அதே நாள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, நிழலி said:

-----

கும்மிருட்டில் பேரூந்து விரைகின்றது.

ஓமந்தையை தாண்டி செல்கின்றது.

புளியங்குளத்தை தாண்டுகின்றது

இதே புளியங்குளத்தில் தான் என்னை / எம்மை “போட்டு வாங்கோ அண்ணை’ என்று சொல்லி வழியனுப்பி வைத்த வீரப் புதல்விகளின் நினைவு வந்து செல்கின்றன.

பீரங்கி படையணியின் பொறுப்பாள நண்பனுடன் இறுதியாக கதைச்ச இடம் கடக்கின்றதா என கண்களை குறுக்கி வெளியே பார்க்கின்றேன்.

கும்மிருட்டில் எல்லாம் கடந்து போகின்றன.

பல்லாண்டுகளாக பல மணி நேரம் எடுத்து கடந்த பிரதேசங்கள், சில மணி நேரங்களில் கடந்து செல்கின்றன.

கண்ணீரும் செந்நீரும் பேராறாக ஓடிய கிராமங்கள் இருட்டில் அரவமற்று கிடக்கின்றன.

ஒவ்வொரு அங்குலத்திற்காகவும் ஆயிரக்கணக்கில் தம் உயிரை கொடுத்து காத்து, ஈற்றில் எதுவுமே இல்லாமல் போய்விட்ட  A9 சாலையில் பேரூந்து விரைகின்றது

பெருமூச்சு கூட வரண்டு போய் கிடந்தது எனக்கு.

ஒரு காலத்தில் இது என் தேசம் என மார்தட்டிய இடங்களில் ஒரு விருந்தினராக சென்று கொண்டு இருக்கின்றேன்.

விம்மி வெடிக்க வேண்டிய நெஞ்சம், வேறு வழி இல்லை என ஏற்று சமாதானம் கொள்கின்றது.

இந்தச் சமாதானம் கொள்ளும் மனம் இல்லாவிட்டால் இறங்கி நின்று போராட வேண்டும். ஆனால் இப்படி சாக்கு போக்கு சமாதானம் சொல்வது தான் ஈசியாக இருக்கு. தொடர்ந்து விருந்தினனாக வந்து போகவும் வசதியாக இருக்கும்.

நிழலி....  அந்நேரம் இருந்த, உங்கள் உணர்வுகளை...  எழுத்தில் வாசித்த போது,
எமக்கும் கண்கள் கலங்கி... பெருமூச்சுதான் வந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

கண்ணீரும் செந்நீரும் பேராறாக ஓடிய கிராமங்கள் இருட்டில் அரவமற்று கிடக்கின்றன.

ஒவ்வொரு அங்குலத்திற்காகவும் ஆயிரக்கணக்கில் தம் உயிரை கொடுத்து காத்து, ஈற்றில் எதுவுமே இல்லாமல் போய்விட்ட  A9 சாலையில் பேரூந்து விரைகின்றது

பெருமூச்சு கூட வரண்டு போய் கிடந்தது எனக்கு

நன்றி...நிழலி..!

எம்மில் பலரது உணர்வுகளை...உங்கள் எழுத்துக்களே பிரதி பலிக்கின்றன!

தொடருங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இருந்தாலும் ஓமந்தை புளியங்குளத்தை நினைக்கையில் நெஞ்சு அடைக்குது....!

தொடருங்கள் நிழலி.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

நல்ல A/C….சும்மா ஜில் என்று இருக்கு. மூன்றாவது சீட்டில் ஒரு இளம் பெண் குளிருது என்று இழுத்து போர்க்கின்றார்

அந்த நேரம் உங்களின் ஜக்கற்றையாவது களற்றி கொடுக்க வேண்டும் போல இருந்திருக்குமே?உறவினர்கள் இருந்தது தடையாக போய்விட்டதோ?

8 hours ago, நிழலி said:

புளியங்குளத்தை தாண்டுகின்றது

இதே புளியங்குளத்தில் தான் என்னை / எம்மை “போட்டு வாங்கோ அண்ணை’ என்று சொல்லி வழியனுப்பி வைத்த வீரப் புதல்விகளின் நினைவு வந்து செல்கின்றன.

பீரங்கி படையணியின் பொறுப்பாள நண்பனுடன் இறுதியாக கதைச்ச இடம் கடக்கின்றதா என கண்களை குறுக்கி வெளியே பார்க்கின்றேன்.

கும்மிருட்டில் எல்லாம் கடந்து போகின்றன.

பல்லாண்டுகளாக பல மணி நேரம் எடுத்து கடந்த பிரதேசங்கள், சில மணி நேரங்களில் கடந்து செல்கின்றன.

கண்ணீரும் செந்நீரும் பேராறாக ஓடிய கிராமங்கள் இருட்டில் அரவமற்று கிடக்கின்றன.

இப்ப கூட அந்த இடங்களை தவழ்ந்து போக சொன்னால் கூட மனதுக்கு கஸ்டமாக இருக்காது.

ஆனால் ஒரு தோற்றுப் போன இனமாக போகும் போது மனதுக்கு மிகவும் கஸ்டமாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓமந்தை புளியங்குளம் சுகமான சுமை  வரிசை செக்கிங்  உற்றுப்பார்த்தல் கறுப்பு என்றால்  முறைத்துப்பார்த்தல் :unsure:

ஆனால் அதை தாண்டி செல்லும் போது தான் நானும் நினைத்தேன் இது அந்த இடம் தானா என்று:104_point_left:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிழலி said:

சில தமிழ் சாரதிகளும் சிங்களவர்களைப் போன்று தலை மயிரை கட்டையாக வெட்டி பயணிகளுடன் சிங்களத்தில் தான் கதைக்கின்றனர்.

சிங்கள பகுதிகளில் வேலைசெய்யும் நம்மவர்கள் 77களின் பின் தலைமயிரை கட்டையாக வெட்டிம் மீசையை வழித்தும் உருவமாற்று தந்திரங்களை செய்து வாழ்ந்தார்கள்.அதே தந்திரம் இப்போது சனத்தை வெருட்ட பயன்படுத்துகின்றார்கள்.:grin:

சுவாரசியமான பயணக்கட்டுரை தொடரட்டும்.tw_thumbsup:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடியுங்க ராசா

முழுவதுமாக வாசித்துவிட்டு கருத்து எழுதலாம்  என்று இருக்கிறேன்.

அடியேனை மன்னியுங்கள்

நேரம் ரொம்ப ரொம்ப இறுக்கமாக இருக்கு..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.