Jump to content

சசிகலா விரக்தி; 'கைத்தடி'கள் மிரட்சி


Recommended Posts

சசிகலா விரக்தி; 'கைத்தடி'கள் மிரட்சி
 
 
 

பெங்களூரு சிறையில், எதிர்பார்த்த கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி தராததால், கடும் விரக்தியில் இருக்கும் சசிகலா, தமிழக மூத்த அமைச்சர்கள் மீது அதிருப்தியில் உள்ளார். இதனால், மிரட்சியில் இருக்கும் அமைச்சர்கள், தமிழக சிறைக்கு அவரை மாற்ற, தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.

 

Tamil_News_large_172233420170302232444_318_219.jpg

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற, அ.தி.மு.க., தற்காலிக பொதுச் செயலர் சசிகலா, பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். சிறை யில், மற்ற கிரிமினல் கைதிகளை போன்றே, தானும் நடத்தப்படுவதால், சிறப்பு சலுகைகள் கேட்டு, கர்நாடக சிறைத் துறையிடம் மனு அளித்துள்ளார்.
 

சசிகலா கேட்டிருக்கும் சிறப்பு சலுகைகள்:


* தமிழகத்தில் அரசியல் ரீதியான எதிரிகள் இருப்பதால், சிறைக்குள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். உதவியாளர்கள் இருவரை நியமிக்க வேண்டும்

* சிறை விதிகளின்படி, 'ஏ கிளாஸ்' சிறைவாசி கள், தங்கியிருக்கும் அறையில், கூடுதலாக டேபிள் சேர், அலமாரிகள் வைக்க அனுமதி அளிக்க வேண்டும்

* தாங்கள் அடைக்கப்பட்டிருக்கும், 'செல்'லில் பிரிஜ், பேன், 'ஏர் கூலர்', கட்டில் மெத்தை, 'டிவி', நாளிதழ் வசதிகள் வேண்டும்

* சிறைக்குள் கழிப்பறைகள் சுகாதாரமாக இல்லை. தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதால், நவீன கழிப்பறை வசதி வேண்டும்

* உற்றார், உறவினர் தவிர, கட்சி நிர்வாகிகளை விரும்பிய போது சந்திக்க, அனுமதி தர வேண்டும்
* நிபந்தனையுடன் சிறைக்குள் தொலைபேசி,

லேப் - டாப் பயன்படுத்த சலுகை வேண்டும்
இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

சசிகலா மனு மீது சாதகமான முடிவு எடுக்கும்படி, அவரது கணவர் நடராஜன் அறிவுறுத்தலில், தமிழக அரசு தரப்பில் இருந்து, கர்நாடக சிறைத் துறைக்கு அழுத்தம் தரப்பட்டது. மத்திய அரசின் உயர் பொறுப்புகளிலுள்ள, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரி கள் சிலரும், கர்நாடக சிறை அதிகாரிகளுடன் பேசினர்.

நாளிதழ், 'டிவி', போர்வை,கழிப்பறை உள்ளிட்ட, சில அடிப்படை வசதிகளை வேண்டுமானால், மேம் படுத்தி தர இயலும் எனக்கூறிய அதிகாரிகள், பிரிஜ், கட்டில், மெத்தை, வீட்டு உணவு, தொலைபேசி, லேப் - டாப் உள்ளிட்ட வசதிகளை அளிக்க, சிறை விதிகளில் இடமில்லை என, கைவிரித்து விட்டனர்.

இதனால், விரக்தியில் இருக்கும் சசிகலா, மூத்த அமைச்சர்கள் மீதான அதிருப்தியை, தினகரனிடம் வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

மிரண்டு போன அமைச்சர்கள், சசிகலாவை, தமிழக சிறைக்கு விரைவில் மாற்றுவதற்கான முயற்சி களை மேற்கொள்ளும்படி, தங்களுக்கு மிக நெருக்கமான, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை நெருக்கி வருகின்றனர். இது தொடர்பான ஆலோசனைகளும், போயஸ் கார்டனில் தீவிரமடைந்து உள்ளன.
 

தமிழக சிறைத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:


இந்திய சிறைச் சாலைகள் சட்டம், 1894, சிறைவாசி கள் சட்டம், 1900, சிறை கைதிகள் பரிமாற்றச் சட்டம் 1948, ஆகியவற்றின்படியே, எந்த ஒரு மாநிலத்தின் சிறைத் துறையும் செயல்பட முடியும்.

ஒரு மாநிலத்தில் குற்றம் புரிந்து, தண்டனை விதிக்கப்பட்ட கைதி, உறவினர்கள் வசிக்கும், தன் சொந்த மாநிலத்தில் இருக்கும் சிறைக்கு, தன்னை மாற்றும்படி கோரலாம். அந்நபரின் மனு, சிறை அதிகாரிகள்மூலமாக, மாநில அரசின் உள்துறை யால் பரிசீலிக்கப்பட்டு, எந்த மாநிலத்துக்கு மாற்றப் பட வேண்டுமோ, அந்த மாநிலத்தின் உள்துறை யிடம் கருத்து கேட்கப்படும்.

கைதியை இட மாற்றுவதனால், சட்டம் - ஒழுங்கு பிரச்னையோ, வேறு பிரச்னையோ எழாது என, பதில் வரும்பட்சத்தில், கைதியின் இடமாற்றம் நிகழும்; இது வழக்கமானது தான்

பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல், முன்பு ஒரு முறை, தி.மு.க., ஆட்சியின் போது, பஞ்சாப் சிறையில் இருந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக, கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டு, பல மாதங்கள் இருந்தார்.

ஜம்மு - காஷ்மீர் குற்றவாளிகள், கேரளாவைச் சேர்ந்த கிரிமினல்கள் பலரும் இதுபோன்று மாற்றப்பட்டு உள்ளனர். இதன் அடிப்படை யிலேயே, சசிகலாவை, தமிழகத்துக்கு மாற்றுவதற்கான முயற்சிகள் நடக்கின்றன. எனினும், இது, உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட தண்டனை என்பதால், உரிய சட்ட வழிமுறைகளை பின்பற்றாமல் மாற்றுவது சிக்கலாகிவிடும் என்பதால், நடவடிக்கைகள் நிதானமாக நடக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
 

தொலைபேசிஉரையாடல் 'டேப்'


பெங்களூரு மத்திய சிறையில் உள்ள, பொது தொலைபேசி வசதியை பயன்படுத்தி, கைதிகள் தம் குடும்பத்தினருடன் உரையாட முடியும். தாங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் தொலைபேசி எண்களை, சிறை நிர்வாகத்திடம் அளித்து முன் அனுமதி பெற வேண்டும். அந்த எண் உறவினருடையது தானா என, உறுதிப் படுத்திய பின்னே அதிகாரிகள் அனுமதிப்பர்.

சிறை அதிகாரி முன், கைதி தொலைபேசியில் பேசலாம்; அந்த உரையாடலும் பதிவு செய்யப் படும். சசிகலா உள்ளிட்ட மூவரும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற போதிலும், உரையாடல் பதிவு செய்யப் படும் என்பதால், தயங்குவதாக கூறப்படுகிறது.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1722334

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
    • Published By: DIGITAL DESK 3    16 APR, 2024 | 12:07 PM யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார். அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையில் சுவிஸ் நாட்டில் கணவனை பிரிந்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார்.  இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, பெண்ணின் பூர்வீக சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்று இருந்தார்.  முறைப்பாடு செய்ய சென்ற நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த தமிழ் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  அந்த பழக்கம் பெண் வெளிநாடு சென்ற பின்னரும் தொடர்ந்து உள்ளது. ஒரு கட்டத்தில் அது காதலாக மலர்ந்துள்ளது. அதனை அடுத்து சுவிஸ் நாட்டு பெண், இங்குள்ள பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பணம், நகை என்பவற்றுடன் அன்பளிப்பு பொருட்கள் என பலவற்றை வழங்கி வந்துள்ளார்.  ஒரு கட்டத்தில் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தரை சுவிஸ் நாட்டிற்கு எடுப்பதற்கான முயற்சிகளையும் அப்பெண் மேற்கொண்டுள்ளார். அதற்கு பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தர் மறுப்பு தெரிவித்து, தான் நாட்டை விட்டு வர மாட்டேன் என கூறியுள்ளார்.  அதனால் அப்பெண் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய வேளை , அதற்கு அவர் உடன்படாத நிலையில், அது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.  அதனை அடுத்து, இப்பெண்ணிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஒரு தொகை நகை, பணம் என்பவற்றை மீள அளித்துள்ளார். மிகுதியை சிறு கால இடைவெளியில் மீள கையளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.  அதன் பிரகாரம் உரிய காலத்தில் மிகுதி பணம் நகையை மீள கையளிக்காததால், அப்பெண் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். https://www.virakesari.lk/article/181215
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.