Jump to content

குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்டவர்கள் சயனைட் அருந்தி தற்கொலை: ராஜூவ் காந்தி கொலைக்கும் அதுவே காரணம்


Recommended Posts

குமரப்பா மற்றும் புலேந்திரன் உள்ளிட்ட விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பிர்கள் சயனைட் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக மேஜர் ஷெனன் சிங்குக்கு இலங்கை இராணுவத்தினரால் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவமே இந்திய இராணுவத்தினரின் மீது விடுதலைப் புலிகள் காழ்ப்புணர்ச்சியாக மாற்றமடைய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய முன்னாள் இராணுவ வீரரும், இந்திய அமைதிகாக்கும் படை அதிகாரியாக இலங்கையில் பணியாற்றியவரும் ஊடகவியலாளருமான சுஷாந்த் சிங் எழுதி வெளியிட்டுள்ள நூலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mission overseas - daring operations by the indian military என்ற தலைப்பில் இந்த நூல் எழுதி வெளியிட்டப்டுள்ளது.

இந்தியாவுக்கு வெளியே இந்திய இராணுவத்தினர் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகள் குறித்து இந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 1987ஆம் ஆண்டு பவன் என்ற பெயரில் இந்திய இராணுவம் இலங்கையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து இந்த நூலில் பல தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், இந்திய அமைதி காக்கும் படையினர் வசம் இருந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் 13 பேரையும், இலங்கை இராணுவத்திடம் ஒப்டைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், குறித்த 13 பேரையும் தடுத்து வைத்திருந்த பலாலி உணவகத்தின் பாகாப்பை இலங்கை இராணுவத்தினரிடன் கையளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி காலை 10 மணியளவில் இலங்கை இராணுவுத்தின் 54ஆவது படைப்பிரிவில் இருந்து இந்த தகவல் வழங்கப்பட்டது.

எனினும், இந்த தகவல், இந்திய அமைதி காக்கும் படைக்கு மேஜர் ஷெனன் சிங்குக்கு கடும் அதிருப்தியை எற்படுத்தியிருந்தாகவும் அந்த நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரணம், குறித்த 13 பேருக்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களை மீண்டும் கையளிப்பது முறையல்ல எனவும், மேஜர் ஷெனன் சிங் கருதினார்.

அத்துடன், குறித்த 13 பேரும் கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டால் சித்திரவதைக்கு உட்படுத்தப்படலாம் என விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தனர்.

மேலும், இலங்கையின் அழுத்தங்களுக்கு இந்திய இராணுவம் அடிப்பணியாது என விடுதலைப்புலிகள் நம்பியிருந்ததாகவும் அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதயைடுத்து, இலங்கை இராணுவத்திடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலை டெல்லிக்கு தெரியப்படுத்திய போது குறித்த 13 பேரையும் இலங்கை இராணுவத்திடம் கையளிக்குமாறு மேஜர் ஷெனன் சிங்குக்கு உத்தரவு வழங்கப்பட்டது.

இதனைக்கேட்டு தெரிந்து கொண்ட முன்னாள் போராளி குமரப்பா, ”ஏன் இப்படி செய்கின்றீர்கள்..? எங்களை இலங்கை இராணுவத்திடம் கையளித்தால் அதுவே எமது கடைசி நாளாக அமையும். இதனை எங்கள் தலைவர்கள் கூறியிருக்கின்றார்கள்” என மேஜர் ஷெனன் சிங்கிடம் தெரிவித்தார்.

எனினும், குறித்த 13 பேரையும் மேலிடத்தின் உத்தரவுக்கு அமைய அன்று மாலை 4 மணிக்கு இலங்கை இராணுவத்திடம் கையளிக்கப்பட்டனர்.

எவ்வாறாயினும், சிறிது நேரத்தின் பின்னர் மேஜர் ஷெனன் சிங்கை தொடர்பு கொண்ட இலங்கை இராணுவத்தினர் குறித்த 13 பேரும் சயனைட் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவமே இந்திய இராணுவத்தினரின் மீது விடுதலைப் புலிகள் காழ்ப்புணர்ச்சியாக மாற்றமடைய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசியில் குறித்த விடயமானது இந்தியாவின் முன்னாள் பிராமர் ராஜூவ் காந்தியை கொலை செய்வதற்கு காரணமாக அமைந்தது என அந்த புத்தகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/special/01/137410?ref=top-popular

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.