Jump to content

ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டாரா?- அடுக்கடுக்காக சந்தேகங்களை எழுப்பும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்


Recommended Posts

ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டாரா?- அடுக்கடுக்காக சந்தேகங்களை எழுப்பும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

 

 
முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் (இடது), மனோஜ் பாண்டியன் (வலது) | கோப்புப்படம்: கே.பிச்சுமணி.
முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் (இடது), மனோஜ் பாண்டியன் (வலது) | கோப்புப்படம்: கே.பிச்சுமணி.
 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டதாக அப்போலோ மருத்துவமனை டிஸ்சார்ஜ் அறிக்கையில் இருப்பதாக கூறியுள்ள முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், இது தொடர்பாக அரசும், மருத்துவமனையும் விளக்கமளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிலிருந்து இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார் பி.எச்.பாண்டியன். இந்த சந்திப்பின்போது அவருடன், அவரது மகன் மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் கே.பாண்டியராஜன் மற்றும் ஓபிஎஸ் ஆதரவு எம்.பி.க்கள் உடனிருந்தனர்.

செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பி.எச்.பாண்டியன், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டதாக அப்போலோ டிஸ்சார்ஜ் அறிக்கையில் இருக்கிறது. அவர் கீழே தள்ளிவிடப்பட்டாரா என்பதை மருத்துவமனை தரப்பு விளக்க வேண்டும்.

ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ம் தேதி இரவு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிட்டால் அவர் எந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார் என்பது மக்களுக்குத் தெரியவரும்.

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட பின்னர் மருத்துவமனையிலிருந்து 27 சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டுள்ளன. இந்தக் கேமராக்களை அகற்ற உத்தரவிட்டது யார் என்பது தெரிய வேண்டும்.

கடந்த 1991-ம் ஆண்டு முதலே ஜெயலலிதாவுக்கு என்.எஸ்.ஜி. பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவருக்கு அந்த பாதுகாப்பு வழங்கப்படவில்லை. என்.எஸ்.ஜி. வீரர்களை பாதுகாப்புப் பணியில் இருந்து விலகிக் கொள்ளுமாறு உத்தரவிட்டது யார் என்பது தெரிய வேண்டும்.

மேல் சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனையிலிருந்து ஜெயலலிதாவை சிங்கப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சென்னை விமான நிலையத்துக்கு மத்திய அரசு ஏர் ஆம்புலன்ஸ் அனுப்பியதாகத் தெரிகிறது. ஏர் ஆம்புலன்ஸ் அனுப்பப்பட்டும், ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க தேவையில்லை என முடிவு செய்தது யார் என்பது தெரிய வேண்டும்.

அப்போலோ மருத்துவமனையிலேயே உயர்தர பிசியோதெரபி சிக்கிச்சை அளிக்கும் நிபுணர்கள் இருக்கும்போது சிங்கப்பூரிலிருந்து பிசியோதெரபிஸ்டுகள் வரவழைக்கப்பட்டது ஏன்?

வேட்பாளர்களுக்கான தேர்தல் ஆணையத்தின் 'பி' படிவத்தில் ஜெயலலிதா கைநாட்டு இடப்பட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும். இதேபோல், வேறு என்னென்ன ஆவணங்களில் கைநாட்டு பெறப்பட்டன என்பது அப்போதுதான் தெரியவரும்.

ஜெயலலிதாவுக்கு எக்மோ சிகிச்சை அளிக்க ஒப்புதல் அளித்தது யார் என்பது தெரிய வேண்டும்.

அதேபோல், அப்போலோ மருத்துவமனை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், "ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட எக்மோ மருத்துவ சிகிச்சையை நிறுத்தி அவரது உயிர் இயற்கையான முறையில் பிரிய உரிய அனுமதி பெறப்பட்டது" எனக் கூறப்பட்டிருக்கிறது. அப்படியிருந்தால், யார் அந்த அனுமதியை அளித்தது என்பது விளக்கப்பட வேண்டும்.

ஜெயலலிதாவின் முகத்தில் உள்ள 4 துளைகள் எதற்காக இடப்பட்டன என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும்" என்றார்.

தொடர்ந்து பேசிய, பி.எச்.பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன், "பொதுவாக, நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சையை நிறுத்த வேண்டும் என்றால், அவரது ரத்த சொந்தங்களின் எழுத்துப்பூர்வ சம்மதம் பெற வேண்டும். ஜெயலலிதா, அரசு நிர்வாகத்தில் உயர் பதவியில் இருக்கக் கூடியவர் என்பதால் தலைமைச் செயலாளர் மற்றும் அடுத்த நிலையில் உள்ளவர்களிடம் சம்மதம் பெற வேண்டும்.

ரத்த சொந்தங்கள் நிச்சயமாக ஜெயலலிதாவை பார்க்கவில்லை. எனவே, சிகிச்சையை நிறுத்த யார் முடிவெடுத்தது, அவருக்கு யார் அதிகாரம் அளித்தது என்பது குறித்தும் விரிவாக விசாரிக்க வேண்டும்" என்றார்.

http://tamil.thehindu.com/tamilnadu/ஜெயலலிதா-கீழே-தள்ளிவிடப்பட்டாரா-அடுக்கடுக்காக-சந்தேகங்களை-எழுப்பும்-ஓபிஎஸ்-ஆதரவாளர்கள்/article9567090.ece?homepage=true

Link to comment
Share on other sites

gallerye_232735702_1722306.jpg

''அப்பல்லோ மருத்துவமனை வருவதற்கு முன், ஜெயலலிதா தாக்கப்பட்டுள்ளார்; அவரது மரணத்திற்கு காரணமான, குற்றவாளிகளை நெருங்கி விட்டோம்,'' என, முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் கூறியுள்ளது, அ.தி.மு.க., வட்டாரத்தில், அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

 

Tamil_News_large_172230620170302232327_318_219.jpg

தமிழக சட்டசபையின் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், அவரது மகன் மனோஜ் பாண்டியன் ஆகியோர், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வீட்டில், நேற்று அளித்த பேட்டி:
கடந்த, 2016 செப்., 22ல், சென்னை, போயஸ் கார்டன் வீட்டில், ஜெயலலிதா கீழே தள்ளி விடப்பட்டுள்ளார் என, அப்பல்லோ மருத்துவமனையின், 'டிஸ்சார்ஜ் சம்மரி'யில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரை மருத்துவமனையில் சேர்க்கும் முன், போயஸ் கார்டனுக்கு ஆம்புலன்ஸ் அனுப்பும் படி, அப்பல்லோ மருத்துவமனைக்கு ஒருவர் போன் செய்துள்ளார். அந்த டி.எஸ்.பி., யார்; அவர் பெயர் என்ன என்பது எங்களுக்கு தெரியாது.
 

கண்காணிப்பு கேமரா


மருத்துவமனையில் இருந்து, ஆம்புலன்ஸ் எத்தனை மணிக்கு கிளம்பியது; எப்போது போயஸ் கார்டன் சென்றது. எத்தனை மணிக்கு ஜெ.,வை அழைத்துக் கொண்டு, மருத்துவ மனைக்கு வந்தது; உடன் வந்தது யார் என்பதை தெரிவிக்க வேண்டும்.ஆம்புலன்ஸ் வேன் வந்த காட்சிகள், கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கும்.

போயஸ் கார்டனிலும், கண்காணிப்பு கேமரா உள்ளது; அவற்றின் பதிவுகளை வெளியிட வேண்டும். அப்போது தான், ஜெ., எப்படி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்ற உண்மைகளை அறிய முடியும்.மருத்துவ மனையில் பொருத்தப்பட்டிருந்த, 27 கண்காணிப்பு கேமராக்கள், ஜெ., வந்த பின் அகற்றப்பட்டுள்ளன. அவற்றை அகற்ற உத்தர விட்டது யார் என்பதை தெரிவிக்க வேண்டும்.

2016 மே மாதம், ஜெ.,க்கு சிகிச்சை அளித்த, பிரபல டாக்டர் சாந்தாராம், 'வீட்டில் தருகிற சிகிச்சை, உங்களுக்கு மாரடைப்பை

வரவழைக்கும்' என, தெரிவித்துள்ளார்.மறு நாளில் இருந்து, அந்த டாக்டரை உள்ளே அனுமதிக்கவில்லை; அவரை வெளியேற்றி விட்டனர். இதற்கும் பதில் கூற வேண்டும். அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், ஜெ., மறைவு தொடர்பான வழக்கில்,சென்னை உயர் நீதிமன்றத்தில், பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளது. அதில், ஜெ., உயிரை எடுக்க, சிகிச்சையை நிறுத்திய தாக தெரிவித்துள்ளனர்.

இதற்கு, அனுமதி அளித்தது யார்; உயிரை எடுக்க சொன்னது யார்; இது, புரியாத புதிராக உள்ளது. ஜெயலலிதாவின் முடிவை நிர்ணயித்த சக்தி யார்; குடும்ப உறுப்பினர் அல்லாத ஒருவர், இந்த உத்தரவை பிறப்பிக்க, அதிகாரம் உண்டா என்பதை தெரிவிக்க வேண்டும்.
 

தடுத்தது யார்?


மத்திய அரசு,2015 மே, ஜூன் மாதங்களில், ரகசியமாக ஒரு கடிதத்தை அனுப்பியது. அத்துடன், ஜெ.,வை சிகிச்சைக்காக, சிங்கப்பூரில் உள்ள செயின்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, 'பாரா ஆம்புலன்ஸ்' ஹெலிகாப்டரை, சென்னைக்கு அனுப்பியது. ஆனால், அவர் அங்கு அழைத்து செல்லப்படவில்லை; அதை தடுத்தது யார்?

டில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள், ஜெ.,க்கு சிகிச்சை அளித்தனர். அந்த மருத்துவ அறிக்கையை, மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். ஜெ.,க்கு, 'இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஜெ., மருத்துவமனைக்கு வந்த போது, தேசிய பாதுகாப்பு படையினரை, வீட்டுக்கு போகும்படி சொன்னது யார்?

தலைவர்களை பாதுகாக்கும், தேசிய பாதுகாப்பு படை வீரர்கள், தலைவரை பாதுகாக்க தவறி னால், துாக்கு தண்டனை வழங்க வேண்டும் என, சட்டம் உள்ளது. தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் இல்லாமல், அப்பல்லோவில் ஜெய லலிதா இருந்துள்ளார். இதனால், குறிப்பிட்ட குடும்பத்தினர், அங்கு சர்வ சாதாரணமாக நடமாடி உள்ளனர். ஜெ., மறைவுக்கு காரண மான குற்றவாளிகளை, நாங்கள் நெருங்கி விட்டோம். ஜெ.,க்கு பல் வேறு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சிகிச்சை களை வழங்க, அனுமதி அளித்தது யார்; ஜெ., இட்லி சாப்பிட்டார், தோசை சாப்பிட்டார் என, கூறினர். 'இசட்' பிரிவு பாதுகாப்புள்ள ஜெ.,க்கு கொடுக்கப் படும் உணவு, ஆய்வு செய்யப்பட்டு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு ஆய்வு செய்யப்பட்ட, உணவு அறிக்கைகளை வெளியிட வேண்டும்.

ஜெ., சிகிச்சையில் இருந்த நாட்களில், நவ., 2 முதல், டிச., 5 வரை, வெளிநாட்டு மருத்துவர் கள் வரவில்லை; அதற்கு, என்ன காரணம்?

ஜெ.,க்கு சிகிச்சை அளித்த வெளி நாட்டு டாக்டர்களுக்கு, தமிழ் தெரியாது; ஆங்கிலம் மட்டும் தெரியும். அருகில் இருந்த வர்களுக்கு, ஆங்கிலம் தெரியாது. அப்படிப் பட்ட நிலையில், ஜெ.,க்கு சிகிச்சை அளிக்க, அனுமதி அளித்தது யார்?

ஜெ., கன்னத்தில் நான்கு ஓட்டைகள் இருந்தன. 'பிளாஸ்திரி' ஒட்டப்பட்டு, தோல் கிழிந்துள்ள தாக தெரிவித்தனர். 'எம்பார்மிங்' செய்த டாக்டர், அதை பார்க்கவில்லை என, தெரிவித் தார். அந்த ஓட்டை விழ காரணம் என்ன; அதை தெரிவிக்க வேண்டும்.கவர்னர், மத்திய அமைச்சர்கள் என, யாரும் ஜெ.,வை பார்க்க வில்லை. அவர்கள் வருகையை, போலீசார் குறித்து வைத்துள்ளனர். ஜெ.,வால் விலக்கி வைக்கப்பட்டவர்கள் வந்த விபரமும் இருக்கும். அதை, அரசு வெளியிட வேண்டும்.

ஜெ.,க்கு, 'எக்மோ' சிகிச்சை அளிக்க, குடும்ப உறுப்பினர்கள் அனுமதி அளிக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் எனக்கூற வழங்கப்பட்ட ஆதாரங்கள் எவை; அவற்றை வெளியிட வேண்டும்.

ஜெ., மறைவில் எழுப்பப்பட்ட சந்தேகங்கள் அடிப்படையில், அவர், 2016 டிச., 4 மாலை, 4:30 மணிக்கு இறந்துள்ளார். அதன்பின், எக்மோ சிகிச்சை துவக்கப்பட்டு, டிச., 5 வரை நடந்துள்ளது. அந்த விபரங்களுக்கு எந்த பதிலும் இல்லை. அதை, நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.

இடைத்தேர்தலின் போது, படிவங்களில் ஜெ., கையை எடுத்து, கட்டை விரல் ரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போதிருந்த டாக்டர் பாலாஜி, விசாரிக்கப்பட வேண்டும். அப்போது, வேறு என்ன ஆவணங்களில் கையெழுத்து வாங்கப்பட்டது என்பது தெரிய வேண்டும். அப்பல்லோ மருத்துவமனையில், உலகத்தரம் வாய்ந்த, 'பிசியோதெரபிஸ்ட்'கள் இருக்கும் போது, சிங்கப்பூரில் இருந்து ஏன் வரவழைக்க வேண்டும்; இதற்கான பதில், நாட்டு மக்களுக்கு தேவை.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பிப்ரவரி, ௭ம் தேதி, சென்னை அண்ணாநகரில் உள்ள தன் வீட்டில், நிருபர்களுக்கு பேட்டி அளித்த பி.எச்.பாண்டியன், 'அப்பல்லோ மருத்துவமனையில், ஜெ., அனுமதிக்கப்படு வதற்கு முன், அவரது வீட்டில் வாக்குவாதம் நடந்துள்ளது. மன அழுத்தத்தில் கீழே விழுந்த அவர், துாக்கி விடக்கூட ஆளில்லாமல் தவித்துள்ளார்' என, தெரிவித்தார்.

இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனை வருவதற்கு முன், ஜெ., தாக்கப்பட்டுள்ளார் என, மீண்டும் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது, அ.தி.மு.க., வட்டாரத்தில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1722306

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடைசி நிமிடத்தில் வந்தாலும் இந்தியத் தேர்தல் ஆணையம் போல் சாக்குப் போக்குச் சொல்லாமல் போட்டியில் என்னையும் இணைத்துக் கொண்ட கிருபன்ஜிக்கு நன்றி
    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??   அடடா   இவ்வளவு இருக்க  .....ஒரு சிறந்த தலைவராக வரும் வாய்ப்புகள்  அறவேயில்லை  ......🤣🤣🤣
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டி விதிகள்  1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.   3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்  4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்  
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.