Jump to content

அறிவித்தல்: யாழ் இணையம் 19ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்


Recommended Posts

வணக்கம்,

யாழ் இணையம் 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்கள் பலரும் மிகவும் உற்சாகமாகத் தமது படைப்புத் திறனை தொடர்ந்தும் வெளிக்கொணர்ந்தவண்ணம் உள்ளனர். இவ்வாறு சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்த கள உறுப்பினர்களுக்கு நன்றிகள். மேலும் பல சுய ஆக்கங்கள் விரைவில் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.

மேலும் பல சுயமான ஆக்கங்களுக்கு இடம் கொடுக்கும் வகையில் இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 15 ஏப்ரல் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை அறியத் தருகின்றோம்.

 

25 மார்ச் வரை "யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும் 28 ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • Replies 71
  • Created
  • Last Reply
On 2017-03-24 at 7:56 PM, தமிழ் சிறி said:

ஹலோ...  நியானி, :)
நிழலி...  தனது பதிவை.... இன்னும் இணைக்கவில்லை. :rolleyes:
இனியும்.... இணைக்காவிடில், 
வாற... பஞ்சாயத்து கூட்டத்தில்....  :119_busts_in_silhouette:
இதனைப் பற்றி...... காரசாரமாக, விவாதித்து... :47_tired_face:
கரும் புள்ளி, செம்புள்ளி  குத்தி....:70_poop:
ஊரின்... நடுவே...... அம்மணமாக  ஓட வைப்போம். :8_laughing:

அந்தப் பதிவின் இணைப்பு இது: :110_writing_hand:

 

இதை யாழின் 19 ஆவது அகவைக்காக நான் எழுத தொடங்கவில்லை. என் இரண்டாவது பயணத்தின் போது  நான் தாயகத்தில் பார்த்து உணர்ந்து கொண்ட சில விடயங்களை பகிர்வதற்காகவே எழுத தொடங்கினேன். இதன் இணைப்பை இங்கு இணைக்காமல் தவிர்த்தது, யாழின் 19 ஆம் அகவைக்காக மினக்கெட்டு எழுதும் அன்பான உறவுகளின் முயற்சிகளை பாதிக்கும் எம கருதியதால்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நிழலி உங்கள் பதிவு எப்படி மற்றவர்களில் முயற்சிகளைப் பாதிக்கும்.???? ஆனாலும் உங்கள் நேர்மை பிடித்திருக்கிறது.  மற்றவர் ஆசைப்பட்டுவிட்டார்கள் என்பதற்காக உங்கள் பதிவை கொண்டுவந்து இணைக்கவில்லை.

Link to comment
Share on other sites

11 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஏன் நிழலி உங்கள் பதிவு எப்படி மற்றவர்களில் முயற்சிகளைப் பாதிக்கும்.????

ஓம், பாதிக்கும் என்ற வார்த்தை தவறான வார்த்தை. மற்றவர்களின் முயற்சிகளை மலினப்படுத்தும் என்று எழுதி இருக்க வேண்டும். தவறான சொல்லை பயன்படுத்தியமைக்காக வருந்துகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலினப்படுத்தும் என்பதும் தவறுதான். அந்த அளவுக்கு உங்கள் பதிவை நீங்கள் இறக்கவும் தேவையில்லை. நீங்கள் என்ன எழுதத் தெரியாதவரா?? அது தன்பாட்டில் தொடர புதிய ஒரு பதிவை யாழ் அகவைக்காக எழுதிவிடுங்கோவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

இதை யாழின் 19 ஆவது அகவைக்காக நான் எழுத தொடங்கவில்லை. என் இரண்டாவது பயணத்தின் போது  நான் தாயகத்தில் பார்த்து உணர்ந்து கொண்ட சில விடயங்களை பகிர்வதற்காகவே எழுத தொடங்கினேன். இதன் இணைப்பை இங்கு இணைக்காமல் தவிர்த்தது, யாழின் 19 ஆம் அகவைக்காக மினக்கெட்டு எழுதும் அன்பான உறவுகளின் முயற்சிகளை பாதிக்கும் எம கருதியதால்.

உங்களது நன் நோக்கத்தை.... தவறாக புரிந்து கொண்டமைக்கு, மன்னிக்கவும் நிழலி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/03/2017 at 10:44 AM, நியானி said:

மேலும் பல சுயமான ஆக்கங்களுக்கு இடம் கொடுக்கும் வகையில் இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 15 ஏப்ரல் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை அறியத் தருகின்றோம்.

கால அவகாசத்தை நீடித்தமைக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

வணக்கம்,

யாழ் இணையம் 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்கள் பலரும் மிகவும் உற்சாகமாகத் தமது படைப்புத் திறனை தொடர்ந்தும் வெளிக்கொணர்ந்தவண்ணம் உள்ளனர். இவ்வாறு சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்த கள உறுப்பினர்களுக்கு நன்றிகள். மேலும் பல சுய ஆக்கங்கள் விரைவில் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.

இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 15 ஏப்ரல் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை அறியத் தருகின்றோம்.

 

28 மார்ச் வரை "யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும் 34 ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கால போவானும்... சுய ஆக்கம் எழுதக்  கூடியவர். 
இன்னும்... எழுதாமல் இருப்பதை பார்த்தால், 
அவருக்கு,  "தேன் நிலவு"  இன்னும் முடியவில்லைப் போலுள்ளது. :grin:  :D:

Link to comment
Share on other sites

வணக்கம்,

யாழ் இணையம் 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்கள் பலரும் மிகவும் உற்சாகமாகத் தமது படைப்புத் திறனை தொடர்ந்தும் வெளிக்கொணர்ந்தவண்ணம் உள்ளனர். இவ்வாறு சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்த கள உறுப்பினர்களுக்கு நன்றிகள். மேலும் பல சுய ஆக்கங்கள் விரைவில் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.

இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 15 ஏப்ரல் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை அறியத் தருகின்றோம்.

 

01 ஏப்ரல் வரை "யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும் 38 ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

 

 

இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகத்தினருக்கு.... கீழே உள்ள பதிவு, சுய ஆக்கம் பகுதியில்... 
இணைக்க தகுதி உள்ளதாக இருந்தால்... அங்கு நகர்த்தி விடுங்கள். நன்றி.

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு,

.

யாழ் இணையம் 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம்.

சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம்.  கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.

எனினும் இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 19ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது.

எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் கள உறவுகள் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம்.

யாழ் களம் 19 ஆவது அகவைக்குள் காலடி வைக்கும் 30.03.2017 அன்று யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கத்தை வெளியிடுவோம். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் ஒரு மாத காலம்தான் இருக்கின்றது. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள்.

 

இந்த கோரிக்கையை  ஏற்று இங்கு தமது சுய ஆக்கங்களை  வைத்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

இதில் பலரது திறமைகள்  வெளிக்கொணரப்பட்டன

இதுவரை எழுதாத பலரும் எழுதி அசத்தியிருந்தனர்

அதற்காக யாழுக்கும் அதன்  நிர்வாகத்துக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்...

இதில் முடிந்தால் ஒவ்வொருவரும் உங்களது ஆக்கத்தின் போதான ஏக்கங்கள்

கள  உறவுகளின் ஆதரவு

மற்றும்  பெறுபேறுகள் சார்ந்து எழுதினால்  நாம் எம்மை 

எமது எழுத்துக்கள் சார்ந்த சுயவிமர்சனப்படுத்திக்கொள்ள உதவும்.

இதில் 

1

2

3

என மூவரை தெரிவு செய்து பாராட்டலாம் என்பது எனது விருப்பம்.

உங்கள் கருத்தையும் எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சுய ஆக்கங்கள் எழுதி எங்களையெல்லாம் குஷிப்படுத்திய் அனைவருக்கும் நன்றி.  திருவிழா மாதிரி  வருடத்திற்கு ஒரு தடவை என்றில்லாமல் தொடர்ந்தும் சுய ஆக்கங்களை எல்லோரும் படைப்பார்கள் என்று நினைக்கின்றேன்.

விசுகு ஐயா,

ஆக்கங்களைப் படைத்தவர்களை ஊக்கப்படுத்தி விருப்பப் புள்ளியும் கருத்துக்கள் மூலம் பாராட்டியும் விமர்சிப்பதுமே போதும் என்று நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையம் 19 நிறைவை ஒட்டி,  சுய ஆக்கங்களை இணைக்கும் படி கள உறவுகளிடம் கோரிய, 
கடந்த 45 நாட்களில்.... உறவுகளிடம் இருந்து 53 சுய ஆக்கங்கள்... புற்றீசல் போல் கிளம்பியதை, உண்மையில்  நான் எதிர் பார்க்கவில்லை. அதாவது சராசரி தினமும் ஒரு புதிய  பதிவுக்கு மேல் பதிந்து...  அசத்தியதை  பார்க்க  மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. :)

சுய ஆக்கங்களை.... இணைக்காதவர்கள்  கூட, அங்குள்ள பதிவுகளை வாசித்து... கருத்தையும் பகிர்ந்து, ஊக்கத்தையும் கொடுத்த உற்சாகம் உண்மையில் மனதை நெகிழ வைத்து  விட்டது. :love:  நன்றி உறவுகளே..... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, கிருபன் said:

 கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சுய ஆக்கங்கள் எழுதி எங்களையெல்லாம் குஷிப்படுத்திய் அனைவருக்கும் நன்றி.  திருவிழா மாதிரி  வருடத்திற்கு ஒரு தடவை என்றில்லாமல் தொடர்ந்தும் சுய ஆக்கங்களை எல்லோரும் படைப்பார்கள் என்று நினைக்கின்றேன்.

விசுகு ஐயா,

ஆக்கங்களைப் படைத்தவர்களை ஊக்கப்படுத்தி விருப்பப் புள்ளியும் கருத்துக்கள் மூலம் பாராட்டியும் விமர்சிப்பதுமே போதும் என்று நினைக்கின்றேன்.

உண்மைதான்

ஆனால் இதில் ஒரு சிலரது திறமைகள் 

நாம் அறியாததாக 

ஏன்  அவர்களே அறியாததாக இருந்திருக்கின்றன

எனவே அவர்களை வெளிக்கொணர்தலை  அல்லது இனம் காட்டுதலை 

அடுத்தபடிக்கு நகர்த்த இந்த தெரிவு உதவலாம் என நினைக்கின்றேன்

யாழின் நோக்கமும் அது தானே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தரப்படுத்தல் என்று தொடங்கினால் போரரட்டம் தொடங்கும்.

ஒவ்வொரு திரியின் போதும் பாரபட்சமின்றி நேரங்கள் கிடைக்கும் போது கருத்துக்களையும் ஐந்தே ஐந்து பச்சைகளை வைத்து தடுமாறி தடுமாறி பச்சைப் புள்ளிகளை வழங்கி உற்சாகப்படுத்தி ஆதரவுகளை வழங்கியதை பார்த்த போது நீண்ட நாட்களின் பின் எல்லோரும் யாழ் இணையத்துக்காக ஒன்றாக கை கோர்த்திருப்பதைக் காண முடிந்தது.

இந்த எண்ணக் கருவை விதைத்த போது மோகனோ மற்றும் பொறுப்பாளர்களோ இந்த அளவுக்கு வெற்றி பெறும் என எண்ணியிருக்க மாட்டார்கள்.

இங்கே ரொம்ப முக்கியமாக எல்லோரும் பார்க்க வேண்டியதென்னவென்றால் 

கடந்த கால திரிகளில் வெட்டு கொத்து கடையைப் பூட்டு என்று இருந்த நிலைமை முற்று முழுதாக ஆயுதங்கள் இல்லாமல் வெறும் பேனாவுடனே ஒற்றுமையாக பயணித்திருக்கிறோம்.
தொடர்ந்தும் பயணிப்போம்.

Link to comment
Share on other sites

பலர் பங்களித்து இருக்கின்றார்கள்.

நானும் முடியுமான அளவு அனைத்து ஆக்கங்களுக்கும் தேடித்தேடி பச்சைகளை குத்தினேன். மொபைலூடு பார்ப்பதால் ஒன்றும் எழுதமுடியவில்லை. குருஜியின் துருச்சாமியும், கிருபனின் இருட்டடியும் வாசிப்பதற்கு பரபரப்பாய் இருந்தது.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது படைப்புக்கும் சக படைப்பாளிகளின் படைப்புக்கும்  பச்சை புள்ளிகள் வழங்கியும்,கருத்துகள் எழுதியும் ,வாசித்தமைக்கும் சகல உறவுகளுக்கும் நன்றிகள்

5 hours ago, ஈழப்பிரியன் said:

வெறும் பேனாவுடனே ஒற்றுமையாக பயணித்திருக்கிறோம்.
தொடர்ந்தும் பயணிப்போம்.

சகிக்க முடியவில்லையே   இவ்வளவு நல்லவனாகவா இருந்திருக்கிறோம்:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு,

.

யாழ் இணையம் 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம்.

சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம்.  கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.

எனினும் இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 19ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது.

எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் கள உறவுகள் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம்.

யாழ் களம் 19 ஆவது அகவைக்குள் காலடி வைக்கும் 30.03.2017 அன்று யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கத்தை வெளியிடுவோம். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் ஒரு மாத காலம்தான் இருக்கின்றது. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள்.

 

இந்த கோரிக்கையை  ஏற்று இங்கு தமது சுய ஆக்கங்களை  வைத்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

இதில் பலரது திறமைகள்  வெளிக்கொணரப்பட்டன

இதுவரை எழுதாத பலரும் எழுதி அசத்தியிருந்தனர்

அதற்காக யாழுக்கும் அதன்  நிர்வாகத்துக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்...

இதில் முடிந்தால் ஒவ்வொருவரும் உங்களது ஆக்கத்தின் போதான ஏக்கங்கள்

கள  உறவுகளின் ஆதரவு

மற்றும்  பெறுபேறுகள் சார்ந்து எழுதினால்  நாம் எம்மை 

எமது எழுத்துக்கள் சார்ந்த சுயவிமர்சனப்படுத்திக்கொள்ள உதவும்.

இதில் 

1

2

3

என மூவரை தெரிவு செய்து பாராட்டலாம் என்பது எனது விருப்பம்.

உங்கள் கருத்தையும் எழுதுங்கள்.

இன்றைய காலகட்டத்தில் என்னைப்பொறுத்தவரைக்கும் இவ்வளவு சுயசரிதைகளும்,கவிதைகளும்,கதைகளும்  வந்ததே பெரிய புண்ணியம் என நான் நினைக்கின்றேன்.

அதிலும் முகநூல்/ரிவிட்டர் மற்றும் ஏனைய போட்டிகளுக்கு மத்தியில் யாழ்களமும் சரிசமனாக நிற்கும் என நினைக்கின்றேன்.

அது இனிவரும் காலங்களை பொறுத்தது.

யாழ்களத்தில் ஒருசில தரப்படுத்தலின் மூலம் பல உறவுகள் வெளியில் நிற்கின்றார்கள்.

அந்த வடிகட்டிய நிலமை இனியும் வேண்டாம் என நினைக்கின்றேன்.:(

முதலில் நான் தமிழன்.:)
திரிகளை பொறுத்து என் கருத்தாடல் இருக்கும்.
இதுதான் எனது யாழ்கள கொள்கை.
:cool:

Link to comment
Share on other sites

வணக்கம்,

யாழ் இணையம் 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்கள் பலரும் மிகவும் உற்சாகமாகத் தமது படைப்புத் திறனை வெளிக்கொணர்ந்து பல்வேறு வகைமைகளில் 53 சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். சுய ஆக்கங்களைப் படைத்துச் சிறப்பித்த அனைத்துக் கள உறுப்பினர்களுக்கும், ஆக்கங்களை ஊக்குவித்து பச்சைப்புள்ளிகளை வழங்கியும், பாராட்டுக் கருத்துக்கள் பதிந்தும், படைப்புக்களை மெருகூட்ட ஆக்கபூர்வமானதும் காத்திரமானதுமான கருத்துக்களையும் வைத்த கள உறுப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 15 ஏப்ரலுடன் நிறைவடைந்தமையால் புதிய ஆக்கங்களை அவற்றிற்குரிய கருத்துக்களப் பகுதிகளில் இணைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

"யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும் 53 ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

 

 

நன்றி.

நியானி (யாழ் இணைய நிர்வாகம் சார்பாக)

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 16.4.2017 at 5:08 PM, நியானி said:

"யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும் 53 ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

 

 

நன்றி.

நியானி (யாழ் இணைய நிர்வாகம் சார்பாக)

யாழிணையத்தின் 19வது அகவைநிறைவுக்கான ஆக்கங்களைக் கோரியபோது எழுதவேண்டும் என்று எண்ணினாலும், காலம் கடந்துவிடக் காலத்தை நீடித்துக் களத்திற்கு  படைப்புகளை உள்வாங்கிய களநிர்வாகத்தினருக்கும்,  களத்திலே ஒரு ஆக்கம் பதிவாகியதும் படித்து அதற்குப் பச்சைப்புள்ளிகளை வழங்கி ஊக்கப்படுத்தியதோடு, உற்சாகத்தோடும் களஉறவுகள் செயற்பட்டவிதம் யாழிணையத்தின் வெற்றிகரமான நகர்வுக்குக் கிடைத்த பரிசென்றால் மிகையன்று. யாருடை ய படைப்பாயினும் அதற்குப்பொருத்தமான படங்களை இணைத்தல், கருத்துகளால் மெருகூட்டுதல், புள்ளிகளை வழங்குதல் என்று படைப்பாளியாகவும், வாசகனாகவும், களஉறுப்பினராகவும் செயற்பட்டவிதம் யாழிணையக்குடும்பத்தின் கூடுதல் பெருமைக்குரியதாகிறது. குறித்துரைத்த காலப்பகுதியில் பல்வேறுவிதமான கருக்களோடுகூடிய 53 படைப்புகளை யாழிணையம் வெளிக்கொணர்ந்திருப்பதானது வாசகனைப் படைப்பாளியாக்கும் பரிமாணத்துக்குள் கொண்டுசென்றமை இன்னொரு பாய்ச்சலாகும். நின்றுநிலைத்துத் தொடர்கநின்பணி. 

இவ்வேளையில் எனது ஆக்கத்தையும் வாசித்துக் கருத்தெழுதிப் பச்சைப்புள்ளிகளை வழங்கியோர், படித்துச்சுவைத்தோரென்று அனைவருக்கும் எனது நன்றியைப் பகிர்வதில் நிறைவடைகின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 01/05/2017 at 9:52 PM, nochchi said:

யாழிணையத்தின் 19வது அகவைநிறைவுக்கான ஆக்கங்களைக் கோரியபோது எழுதவேண்டும் என்று எண்ணினாலும், காலம் கடந்துவிடக் காலத்தை நீடித்துக் களத்திற்கு  படைப்புகளை உள்வாங்கிய களநிர்வாகத்தினருக்கும்,  களத்திலே ஒரு ஆக்கம் பதிவாகியதும் படித்து அதற்குப் பச்சைப்புள்ளிகளை வழங்கி ஊக்கப்படுத்தியதோடு, உற்சாகத்தோடும் களஉறவுகள் செயற்பட்டவிதம் யாழிணையத்தின் வெற்றிகரமான நகர்வுக்குக் கிடைத்த பரிசென்றால் மிகையன்று. யாருடை ய படைப்பாயினும் அதற்குப்பொருத்தமான படங்களை இணைத்தல், கருத்துகளால் மெருகூட்டுதல், புள்ளிகளை வழங்குதல் என்று படைப்பாளியாகவும், வாசகனாகவும், களஉறுப்பினராகவும் செயற்பட்டவிதம் யாழிணையக்குடும்பத்தின் கூடுதல் பெருமைக்குரியதாகிறது. குறித்துரைத்த காலப்பகுதியில் பல்வேறுவிதமான கருக்களோடுகூடிய 53 படைப்புகளை யாழிணையம் வெளிக்கொணர்ந்திருப்பதானது வாசகனைப் படைப்பாளியாக்கும் பரிமாணத்துக்குள் கொண்டுசென்றமை இன்னொரு பாய்ச்சலாகும். நின்றுநிலைத்துத் தொடர்கநின்பணி. 

இவ்வேளையில் எனது ஆக்கத்தையும் வாசித்துக் கருத்தெழுதிப் பச்சைப்புள்ளிகளை வழங்கியோர், படித்துச்சுவைத்தோரென்று அனைவருக்கும் எனது நன்றியைப் பகிர்வதில் நிறைவடைகின்றேன். 

இதனை மீண்டும் வாசிக்க... பெருமையாக உள்ளது, நொச்சி.
சுவி, குறிப்பிட்டது போல்... இருக்கும், ஐந்தை வைத்து..... ஆருக்குப் போடுவது என்ற திண்டாட்டம்.
கிருபன், குறிப்பிட்டது போல்... இது ஒரு திருவிழாவாக இல்லாமல், அனைவரும் அவ்வப் போது.. சொந்த ஆக்கங்களை இணைக்க வேண்டும். என்ற கருத்துகள்.. என் மனதில், பசுமரத்தாணி போல் பதிந்து விட்ட வசனங்கள். 

அதற்கிடையில்..... தும்பளையானின்,  "கலைஞன் மற்றும் அவுஸ் கள உறவுகளுடனான எனது சந்திப்பு" என்ற திரி ஒரு பக்கம் ஓட.... "திக்கு முக்காடி" போய்விட்டோம். அதிலும்... திடீரென்று  அவுஸ் நண்பர்களின் புகைப்படங்களை பிரசுரித்த  போது.... வந்த,  மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.  அந்த நேரம்... அதற்கு கருத்து உடனடியாகவே எழுதவில்லை என்ற, கவலை.... என்னை, இன்றும் யோசிக்க வைக்கின்றது.

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.