Jump to content

போர் முற்றுப்புள்ளி இல்லை!- ஈழத்திலிருந்து மற்றுமொரு ஆவணம்


Recommended Posts

போர் முற்றுப்புள்ளி இல்லை!- ஈழத்திலிருந்து மற்றுமொரு ஆவணம்

ஈழப் போர் முடிந்ததற்கு பிறகான வாழ்வைப் பேசும் முற்றுப்புள்ளியா

மே 2009,  இனப்போரும் படுகொலைகளும்  எங்கேயோ தூர தேசத்தில் நிகழ்ந்து வருவதைப் பற்றி மட்டுமே செய்தியாகப் படித்த வந்த தமிழக மக்களுக்கு தங்கள் அருகிலேயே ஈழத்தில் அப்பாவிப் பொதுமக்கள் உடைமையும் உயிரும் துண்டாடப்பட்டு உரிமைக்கான போர் முடிவுக்கு வந்த மாதம், அங்கே இலங்கையில் மக்கள் சிந்திய ரத்தம் கடல்வழியே தமிழகக் கறைகளை அடைந்து பல்லாயிரக்கணக்கான மக்களை இந்த இனப்படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுக்க செய்தது. போருக்கு பிறகு சூறையாடப்பட்ட அந்த மக்களின் நிலங்களை திருப்பித் தருவதாக அரசு அறிவித்தது ஆனால் இராணுவ ஆக்கிரமிப்புகள் இன்றளவும் அந்த பகுதியில் தொடர்ந்தபடிதான் இருக்கிறது. மேலும் சிங்கள மக்களின் குடியேற்றமும் ரகசியமாக அந்த பகுதிகளில் நடந்தேறி வருவதாகக் கூறப்படுகிறது.

போர் முடிவுக்கு வந்து எட்டு வருடங்கள் ஆகிவிட்ட சூழலில் தனக்கான நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கையுடன் மக்கள் இருப்பதை “முற்றுப்புள்ளியா?” என்கிற தனது கதையின் மூலம் படமாக்கியுள்ளார் இயக்குனர் ஷெரின். கதை போருக்குப் பிறகான மக்களது மனநிலையை படமாக்கியுள்ளது. போரின் முடிவை பல்வேறு தரப்பினரும் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதில் தொடங்குகிறது கதை. போர் முடிந்தது என்று அறிவிப்பு வந்த நாளன்று, ஒரு பக்கம் பட்டாசுச் சத்தம் கேட்கிறது மறுபக்கம் கண்ணீர் விசும்பல்கள்.அது வரை போர் பற்றி மௌனத்துடன் இருந்த உலக நாடுகள் போருக்கு எதிராகக் குரல் கொடுக்கின்றன. ஏதேதோ திசைகளில் பிரிந்து செல்கிறார்கள் நெருக்கமானவர்கள். பாதுகாப்பான பகுதிகளுக்கு தஞ்சம் புகுந்தவர்கள் பாதுகாப்பற்ற பகுதிகளில் இருக்கும் தங்கள் உறவுகள் எப்படி இருப்பார்கள், இருக்கிறார்களா? என்கிற பல கேள்விகளுடனே வாழ்வினை கழிக்கிறார்கள். சுந்தரி (எ) ஆதிரை அப்படியான பாத்திரம்தான். தன் இரண்டு பிள்ளைகள், வயிற்றில் ஒரு பிள்ளையென்று போருக்கு பாதுகாவலாக கணவனை விட்டுவிட்டு வன்னியிலிருந்து பாதுகாப்பான பகுதிக்கு செல்லுகிறாள். போரில் இறந்தவர்களின் உடல் மருத்துவமனை எங்கும் கிடக்க அதற்கிடையேவே குழந்தையும் பிறக்கிறது. போர் முடிந்தது என்கிற அறிவிப்பும் வருகிறது. ஆனால் அதற்குப் பிறகுதான் அவளது தனிப்போர் தொடங்குகிறது. போர் முடிந்தாலும் கணவனைப் பற்றிய தகவல் எதுவும் கிடைக்காத சூழலில் வெள்ளைத்தாள் போல அவளது வாழ்க்கையை எவ்வித ஊன்றுகோலும் இல்லாமல் மீண்டும் தொடங்குகிறது, சமூகம் பிள்ளைகளின் கேள்விகள் என அனைத்தையும் கடந்து அவள் வாழ்க்கையை எப்படிச் சந்திக்கிறாள் என்பதை படம் காண்பிக்கிறது. இப்படியான பெண்களைச் சந்திப்பது இயல்புதான் என்றாலும் போர்ச் சூழலில் இது போன்ற பெண்கள் உண்மையாகவே வாழ்கிறார்கள், இது அவர்களது உண்மைக் கதை என்பதுதான் இதில் இருக்கும் கூடுதல் வலிமை. ஆதிரை போன்று வெவ்வேறு சூழலில் வேறு வேறான கதாப்பாத்திரங்கள் திரை முழுக்க வருகிறது, தன் நிலங்கள் மொத்தத்தையும் இராணுவத்திடம் இழக்கும் ஒருவன், தன் தாயுடன் தனியே காடுகளில் வாழும் சிறுமி என விரவிக்கிடக்கிறார்கள் கதையெங்கும். சினிமாவின் சட்டதிட்டங்கள் எதற்கும் உட்படாமல் மிகைப்படுத்தலின்றி இயல்பாக வலியை வலியாகவே பதிவு செய்திருக்கிறார் படத்தின் இயக்குநர் ஷெரின் சேவியர்.

செய்தி ஊடகங்களால் மக்களிடம் வெளியே தெரியும் காயங்களைத்தான் காட்டமுடிந்தது. அவர்கள் இன்றளவும் சந்தித்து வரும் வலிகள் வேறானது. அதைதான் உண்மைச் சம்பவத்தை சொல்லும் தனது கதை வழியாக பதிவு செய்திருப்பதாகக் கூறுகிறார் ஷெரின். எனக்கு சினிமா வேண்டும் என்று செல்பவர்களுக்கு படம் நிச்சயம் ஏமாற்றமாக இருக்கும் ஆனால் உரிமைப்போர் பற்றிய நீட்சியான ஆவணங்களில் நிச்சயம் ’முற்றுப்புள்ளியா?’ திரைப்படத்தின் பங்கும் இருக்கும்.

http://www.vikatan.com/news/world/82285-muttrupulliya-a-story-on-the-pains-and-sufferings-of-eelam-people-after-war.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

முற்றுப்புள்ளி அல்ல... முடியாத துயரம்! - ஈரம் கசியும் ஈழத் திரைப்படம்

 

‘2009-க்குப் பிறகு ஈழம் எந்த நிலையில் இருக்கிறது... உடலியல் ரீதியாக மட்டுமல்லாமல் உளவியல் அடிப்படையிலும் அந்த மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப் பட்டுள்ளார்கள்’ என்பதை ‘முற்றுப்புள்ளியா?’ என்கிற ஈழப் போர் குறித்தான சமீபத்திய திரைப்படம் பதிவு செய்துள்ளது. இந்தப் படத்தின் இயக்குநர் ஷெரின் சேவியர். இவர், மனிதநேய செயற்பாடுகளுக்காக பிரான்ஸின் உயரிய ‘செவாலியே’ விருதைப் பெற்ற முதல் இலங்கைப் பெண்மணியும்கூட. ஷெரின் அளித்த பேட்டியிலிருந்து...

p28a.jpg

‘‘ஈழப் போர் தொடர்பான பல புத்தகங்கள், திரைப்படங்கள் வந்தபடி இருக்கின்றன. ‘முற்றுப்புள்ளியா?’ திரைப்படம் எடுக்கப்பட, தனிப்பட்ட காரணம் ஏதேனும் உள்ளதா?’’

‘‘நான் 1987-ல் இலங்கையிலிருந்து திருச்சிக்கு வந்தவள். போராளிகளுக்கு வக்கீலாக என் அப்பா செயல்பட்டு வந்ததால், நாங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுக்கொண்டிருந்தோம். இலங்கைக்கு இடையிடையே சென்றுவந்தபடி இருந்தேன்.

2007-ல் போர் தீவிர நிலையை அடைந்த காலகட்டத்தில் அங்குதான் இருந்தேன். நான் தமிழ்ப் பெண் என்றாலும், ஒரு சர்வதேச மனித உரிமை ஆர்வலராக அவர்கள் என்னை அங்கே அனுமதித்திருந்தார்கள். சர்வதேச நீதிமன்றங்கள் குற்றங்களாக வரையறுத்திருந்த அத்தனை விஷயங்களும் அங்கே அரங்கேறின. மனித உரிமை ஆர்வலராக இருந்தும் எங்கள் கைகள் கட்டப்பட்டிருந்தன. சிலசமயம் எங்கள் மீதும் தாக்குதல் நடந்தது. இதை எப்படியேனும் ஆவணப்படுத்த வேண்டும் என்ற முயற்சிதான்... ‘முற்றுப்புள்ளியா?”

‘‘போரினால், தனிப்பட்ட முறையில் உங்களுக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டன?’’

‘’மனிதநேய செயற்பாட்டாளர் என்பதால், சர்வதேச அளவில் பல நாடுகளில் நான் களப்பணியில் ஈடுபட்டிருக்கிறேன். ஆனால், நான் பிறந்த  மண்ணில்  என்னால்  செயல்படமுடியவில்லை. 2008-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி மையப்பகுதியான வன்னியிலிருந்து மனிதநேய ஆர்வலர்கள் அத்தனை பேரும் ராணுவத்தினரால் கூண்டோடு வெளியேற்றப்பட்டோம். தவறு நடக்கப் போகிறது என்று தெரிந்திருந்தது. ஆனால், எங்களால் அங்கே ஒன்றும் செய்யமுடியவில்லை.’’

‘‘போர் பற்றிய படைப்புகள் கமர்ஷியல் ஆகிவிட்டதாக நினைக்கிறீர்களா?’’

‘‘போர் பற்றி மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த இத்தகைய ஆவணங்கள் தேவை. அவற்றை கமர்ஷியல் என ஒட்டுமொத்தமாகப் புறம்தள்ள முடியாது. அதைப் பற்றி வெளிவரும் புத்தகங்கள், திரைப்படங்கள் என அனைத்துமே ஏதோ ஒரு விதத்தில் அங்கிருக்கும் மக்களுக்கு உதவியபடிதான் இருக்கின்றன. ஆனால், சிலசமயம் கலை என்கிற போக்கில் அது மிகைப்படுத்தப்படுகிறது. வன்னியில் இருந்த அனைத்துப் பெண்களுமே பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார்கள் என்று ஒரு செய்தி வெளியானதைப் பார்த்தேன். பெண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. சொல்ல முடியாத வகையில், உடல் ரீதியான துன்புறுத்தல்களை சிலருக்கு ராணுவம் கொடுத்தது. ஆனால், அனைத்துப் பெண்களுமே பாதிக்கப்பட்டார்கள் என்பது போன்ற செய்திகள் மிகவும் அக்கறையற்றதாக இருந்தன. இது, அந்த மக்களை உளவியல் ரீதியாக அனைத்து வகையிலுமே பாதித்தது. இதுபோன்ற தவறுகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.’’

p28.jpg

‘‘போர் நிறுத்த ஒப்பந்தம் செய்ததுதான் எல்லா பிரச்னைக்கும் காரணம் எனத் திரைப்படத்தில் கூறியிருந்தீர்களே?’’

‘‘அங்கே இருக்கும் மக்கள் அப்படித்தான் நினைத்தார்கள். அதுவரை வலுவாக அவர்களைப் பாதுகாத்து வந்த அமைப்பும் அதன் பிறகுதான் பிரச்னைகளை அதிகம் சந்திக்கத் தொடங்கியதாக அவர்கள் எண்ணுகிறார்கள்.’’

‘‘படத்தில் வரும் ஆதிரை பாத்திரம் பற்றி?’’

‘‘போர் முடிவதற்குச் சில காலம் முன்புதான் ஆதிரையைச் சந்தித்தேன். ஆனால், ஆதிரைக்கு இருக்கும் மனவலிமையில் இரண்டு சதவிகிதம்கூட நம்மில் பலருக்கு இல்லை. தற்போது ஆசிரியையாக ஒரு பள்ளியில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். மூன்று பிள்ளைகளைத் தனியாளாகத்தான் வளர்த்துக்கொண்டிருக்கிறார். போர்க் காலத்தில் காணாமல் போன தன் கணவர் மீண்டும் வருவார் என்கிற நம்பிக்கை இன்றும் அவரிடம் இருக்கிறது. யாழ்ப்பாண சர்வதேச திரை விழாவில், இந்தப் படத்தை அவருக்குக் காண்பித்தேன். ‘நீங்கள் என் கதாபாத்திரத்தை சாகாவரம் பெற்றதாக்கிவிட்டீர்கள். நானே இறந்தாலும் என் கதாபாத்திரம் வழியாக என் கணவர் வருவார் என்கிற நம்பிக்கையுடன் நான் இருக்க முடியும்’ என்று படத்தைப் பார்த்து முடித்ததும் கூறினார். ஆதிரை, அங்கே வசிக்கும் பெரும்பாலான மக்களைப் பிரதிபலிப்பவர்.’’

‘‘அங்கே தற்போதைய சூழல் என்ன?’’

‘‘ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பிறகு அங்கே சூழல் கொஞ்சம் மாறி இருக்கிறது. ஆனால், தொடக்கத்தில் நுழைந்த ராணுவம் இன்றளவும் எண்ணிக்கையில் குறையவில்லை. மூச்சுவிடுகிறோம். ஆனால், விடிவு எப்போது என்பதுதான் இன்னும் தெரியவில்லை.’’

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.