Jump to content

ஜெனீவாவில் இன்று மங்கள உரை


Recommended Posts

ஜெனீவாவில் இன்று மங்கள உரை

1683919244mangala_samaraweera.jpg

வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனிவாவில் இன்று இடம்பெறும் மனித உரிமைகள் அமர்வில் உரையாற்றவுள்ளார். 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடர் நேற்று ஆரம்பமாகியுள்ளதோடு, எதிர்வரும் 24ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 
 

http://tamil.adaderana.lk/news.php?nid=88544

 

Link to comment
Share on other sites

“இதயத்தில் இடம்பிடித்த நாடு சிறிலங்கா” – மங்களவிடம் மனம் திறந்த ஐ.நா பொதுச்செயலர்

 

mangala - UN Secretary-General Antonio Gueterres (1)ஜெனிவாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசை நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

கடந்த ஜனவரி முதலாம் நாள் புதிய ஐ.நா பொதுச்செயலராகப் பொறுப்பேற்ற பின்னர் அன்ரனியோ குரெரெசை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, முதல்முறையாகச் சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் பலப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை வரவேற்ற ஐ.நா பொதுச்செயலர்,  மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்காவுக்கு உதவ ஐ.நா தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

mangala - UN Secretary-General Antonio Gueterres (1)mangala - UN Secretary-General Antonio Gueterres (2)

அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையராக பணியாற்றிய போது உள்ளிட்ட பல சந்தர்ப்பங்களில், 1978ஆம் ஆண்டில் இருந்து தாம் பலமுறை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டதாகவும், சிறிலங்கா தமது இதயத்தில் இடம்பிடித்த நாடு என்றும் ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2017/02/28/news/21654

Link to comment
Share on other sites

ஜெனிவா ஐ.நா.மனித உரிமை பேரவையில் குவிந்துள்ள தமிழர்கள்.

 

media in genevaஐ.நா.மனித உரிமை பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகிய நிலையில் இக் கூட்டத்தொடரில் அரசசார்பற்ற நிறுவனங்கள் ஊடாக சுமார் 25க்கு மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

பி.ரி.எவ் எனப்படும் பிரித்தானிய தமிழர் பேரவை, கனடிய தமிழ் கொங்கிரஸ், உலக தமிழர் பேரவை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், ஈழத்தமிழரவை, பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையம், உட்பட பல அமைப்புக்களின் பிரதிநிதிகளை இம்முறை ஜெனிவாவில் காணக்கூடியதாக உள்ளது.

இலங்கையிலிருந்தும் சிலர் வருகை தந்துள்ளனர்.

இதேவேளை சிறிலங்கா அரச தரப்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் சுமார் 10க்கும் மேற்பட்டவர்கள் வருகை தந்துள்ளனர்.

media-in-geneva.jpg

http://thinakkathir.com/?p=67982

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதில் இலங்கை உறுதியாகவுள்ளது – ஐநாவில் மங்கள

 

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதில் இலங்கை உறுதியாகவுள்ளதாக, அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.  இன்றையதினம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடரின் 34வது அமர்வில் உரையாற்றுகையிலேயே  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பில் கடந்த 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் இணைப் பங்காளர்களாக இணைந்து கொண்டு சுமார் 15 மாதங்கள் கடந்துள்ள நிலையில் தான் இன்று உரையாற்றுவதாக தெரிவித்த அவர்  சிலர் தமது  செயற்பாட்டை நாட்டை காட்டிக் கொடுத்ததாகவும்   துரோகமிழைத்தாகவும்  விமர்சித்து வருகின்றனர் என தெரிவித்தார்.

1948ம் ஆண்டு சுதந்திரத்தினைப் பெற நாம் அனைவரும் ஜாதி, மத, இன பேதங்களின்றி ஒன்றாக பணியாற்றி வெற்றி பெற்ற போதும்  அனைத்து மக்களையும் சமமாக நடத்தி hட்டை கட்டியெழுப்பத் தவறியமையால் கடந்த 69 வருடங்கள் வலிகள், வன்முறைகளுடன் பயணித்தாகவும்  விலைமதிப்பற்ற மனித வளங்கள் மற்றும் வாழ்க்கை என்பவற்றை இழந்தோம் எனத் தெரிவித்தார்.

மேலும்  இலங்கையை நீதியான ஆட்சியை கட்டியெழுப்ப கோருகிறோம் எனக் குறிப்பிட்டுள்ள அவர் சுமார் 5,515.98 ஏக்கர் அரச காணிகள் மற்றும் 2,090.03 ஏக்கர் தனியார் காணிகள் 2016ம் ஆண்டில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 1,383.51 அரச காணிகள் 30.54 ஏக்கர் தனியார் காணிகள் கடந்த மாதம் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.

அத்துடன், நல்லிணக்க கலந்தாய்வுச் செயலணி பாதிக்கப்பட்ட சுமார் 7000 பேரின் கருத்துக்களை எழுத்து மூலம் பெற்றுக் கொண்டுள்ளதாகவும், இந்த அறிக்கை தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

http://globaltamilnews.net/archives/19388

Link to comment
Share on other sites

போர் குற்ற விவகாரம் : கால அவகாசம் கிடைக்கும் பட்சத்தில் முழுமையான தீர்வினை ஏற்படுத்த முடியும் : மங்கள சமரவீர

 

 

இன்னும் இரண்டு வருடங்கள் கொடுக்கும் பட்சத்தில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு, சாதகமான முடிவுகளை ஏற்படுத்த முடியுமென்பதோடு, புதிய அரசியலமைப்பு மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வை இவ்வாண்டுக்குள் எட்டுவோம் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனிவாவில் இன்று உறுதி வழங்கியுள்ளார்.

hqdefault.jpg

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடர்  நேற்று திங்­கட்­கி­ழமை (27) ஐ.நா.மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹசைனின் உரை­யுடன் ஆரம்­ப­மா­னது.

எதிர்­வரும் மார்ச்  மாதம் 24 ஆம் திக­தி ­வரை நடை­பெ­ற­வுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்டத்  தொடரில் உலக நாடு­களின்  மனித உரிமை நிலை­மைகள் குறித்து  ஆரா­யப்­ப­ட­வு­டள்­ளன. 

இந்நிலையில் இன்று உரையாற்றிய  வெளிவிவகார அமைச்சர், இலங்கை அரசானது சுதந்திரமடைந்த கடந்த 69 ஆண்டுகாலமாக நிகழ்ந்த இரத்தம் சிந்திய போராட்ட சூழல் மற்றும் பதற்ற சூழலை எதிர் கொண்டதால், சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திகளை எட்ட முடியாமல் போனதை தாம் ஏற்று கொள்வதாக தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த காரணங்களினாலேயே இலங்கை அரசாங்கமானது, விமர்சனங்களுக்கும், குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது. இவற்றை எதிர்கொள்ளவே, காணாமல் போனோரை கண்டு பிடிப்பதற்கான தனியான ஆணைக்குழு, தேசிய மனித உரிமைகள் செயற்பாட்டு குழு மற்றும் தகவலறியும் உரிமைச்சட்டம் உருவாக்கல் போன்ற செயற்பாடுகளை கடந்த ஆறு மாதங்களுக்குள் செயற்படுத்தியுள்ளது.

இருப்பினும் தனியார் தொண்டு நிறுவனங்களின் அழுத்தம் காரணமாக, இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்திற்கும், இராணுவத்திற்கும் எதிரான குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு, சர்வதேச நீதிபதிகளின் ஊடான விசாரணை பொறிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

தனது சார்பில் யுத்தக்குற்றங்கள் குறித்த எவ்வித குறிப்புகளையும் வெளியிடாத நிலையில், குறித்த விவகாரம் இலங்கையில் நடைமுறையிலுள்ள ஒன்றித்த அரசாங்கத்தின் செயற்பாடுகளில், சர்ச்சைக்குரிய விடயமாக இருப்பதனால் ஜனாதிபதிய மைத்திரிபால சிறிசேன, குறித்த சர்வதேச நீதிபதிகள் பொறிமுறையை நிராகரித்து வருவதாக விளக்கமளித்துள்ளார்.

சுமுகமான தீர்மானம் ஒன்றை ஏற்படுத்த பிரிட்டனின் அனுசரனைகள் கிடைத்திருந்தாலும், இலங்கையின் போர்க்குற்ற பொறுப்பு கூறலுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் கொடுக்கும் பட்சத்தில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு, சாதகமான முடிவுகளை ஏற்படுத்த முடியுமென தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கையில் வடக்கு கிழக்கு பிராந்தியங்களில் இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள நிலங்கள் கட்ட கட்டமாக விடுவிக்கப்பட்டு வரும் சம்பவத்தால், ஆணையாளர் அரசாங்கத்தை விமர்சித்து வரும் நிலையில், எதிர்வரும் வாரங்களில் இலங்கையின் நடப்பு விவகாரங்கள் தொடர்பான விவாதங்கள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/17195

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3    16 APR, 2024 | 12:07 PM யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார். அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையில் சுவிஸ் நாட்டில் கணவனை பிரிந்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார்.  இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, பெண்ணின் பூர்வீக சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்று இருந்தார்.  முறைப்பாடு செய்ய சென்ற நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த தமிழ் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  அந்த பழக்கம் பெண் வெளிநாடு சென்ற பின்னரும் தொடர்ந்து உள்ளது. ஒரு கட்டத்தில் அது காதலாக மலர்ந்துள்ளது. அதனை அடுத்து சுவிஸ் நாட்டு பெண், இங்குள்ள பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பணம், நகை என்பவற்றுடன் அன்பளிப்பு பொருட்கள் என பலவற்றை வழங்கி வந்துள்ளார்.  ஒரு கட்டத்தில் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தரை சுவிஸ் நாட்டிற்கு எடுப்பதற்கான முயற்சிகளையும் அப்பெண் மேற்கொண்டுள்ளார். அதற்கு பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தர் மறுப்பு தெரிவித்து, தான் நாட்டை விட்டு வர மாட்டேன் என கூறியுள்ளார்.  அதனால் அப்பெண் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய வேளை , அதற்கு அவர் உடன்படாத நிலையில், அது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.  அதனை அடுத்து, இப்பெண்ணிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஒரு தொகை நகை, பணம் என்பவற்றை மீள அளித்துள்ளார். மிகுதியை சிறு கால இடைவெளியில் மீள கையளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.  அதன் பிரகாரம் உரிய காலத்தில் மிகுதி பணம் நகையை மீள கையளிக்காததால், அப்பெண் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். https://www.virakesari.lk/article/181215
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.