Jump to content

யாழ் கள IPL T20 கிரிக்கெட்போட்டி 2017


Recommended Posts

58) IPL 2017 Eliminator இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

                            கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி.

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெறும் என்று  கிருபன் பதில் தந்து 3 புள்ளிகளை  பெறுகிறார்.

 

சன் ரைசர்ஸ்  வெற்றி பெறும் என்று ஈழப்பிரியன், Ahasthiyan பதில் தந்து இருந்தார்கள்.

ஏனையோர் சரியான அணியை தேர்வு செய்யவில்லை.

 

 

 

 

58 வது கேள்விக்கும் புள்ளிகள் வழங்கியபின்...

 

1. வாத்தியார்  35

2. கிருபன்  34

3. nesen  33

4. நந்தன்  32

5. Ahasthiyan  31

6. suvy  29

7. nunavilan  29

8. தமிழினி  27

9. ஜீவன் சிவா  27

10. vasanth1  24

11. ஈழப்பிரியன்  23

12. கறுப்பி  22

Link to comment
Share on other sites

  • Replies 629
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா! மழை மூன்று புள்ளிகளை தூக்கப் போகின்றது என்று நினைத்தேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அப்பாடா! மழை மூன்று புள்ளிகளை தூக்கப் போகின்றது என்று நினைத்தேன்!

வாழ்த்துக்கள் கிருபன் ஜி

Link to comment
Share on other sites

இதுவரை நடந்த IPL 2017 போட்டிகளில்  அதிக விக்கெட்களை கைப்பற்றிய வீரர் யார்?  எத்தனை விக்கெட்கள்?

முதலில் சரியான விடை தருபவருக்கு ஒரு பச்சை..:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புவனேஸ்வர் குமார். s .r .h .... 15....!

Link to comment
Share on other sites

36 minutes ago, suvy said:

புவனேஸ்வர் குமார். s .r .h .... 15....!

புவனேஸ்வர் குமார் என்பது சரி

ஆனால் 15 விக்கெட்கள் இல்லை... இன்னும் கூட

Link to comment
Share on other sites

3 போட்டியாளர்கள் மும்பை இந்தியன்ஸ் வெற்றிபெறும் என்றும்,

2 போட்டியாளர்கள் கொல்கத்தா வெற்றிபெறும் என்றும் பதில் தந்து உள்ளார்கள்.

Link to comment
Share on other sites

59) IPL 2017 Qualifier 2 இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

                                 மும்பை இந்தியன்ஸ் வெற்றி

 

மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெறும் என்று பதில் தந்து புள்ளிகளை பெறுபவர்கள்.

                                              தமிழினி, nesen, Ahasthiyan.

 

கொல்கத்தா வெற்றி பெறும் என்று வாத்தியார், கிருபன்  பதில் தந்து  இருந்தார்கள்.

            ஏனையோர் சரியான அணியை தேர்வு செய்யவில்லை.

 

Link to comment
Share on other sites

 

59 வது கேள்விக்கும் புள்ளிகள் வழங்கியபின்...

 

1. nesen  36

2. வாத்தியார்  35

3. Ahasthiyan  34

4. கிருபன்  34

5. நந்தன்  32

6. தமிழினி  30

7. suvy  29

8. nunavilan  29

9. ஜீவன் சிவா  27

10. vasanth1  24

11. ஈழப்பிரியன்  23

12. கறுப்பி  22

Link to comment
Share on other sites

19 minutes ago, நவீனன் said:

7. suvy  29

8. nunavilan  29

9. ஜீவன் சிவா  27

10. vasanth1  24

11. ஈழப்பிரியன்  23

12. கறுப்பி  22

நம்மட இடத்தைத்தான் கறுப்பியும் ஈழப்பிரியனுமும் உடும்பு பிடியா பிடிக்கிறாங்க எண்டு பாத்தா

மேல இருந்து சுவியர் வேற கீழ வாறன் எண்டு வெருட்டுறார்.:grin:

Link to comment
Share on other sites

20 minutes ago, ஜீவன் சிவா said:

நம்மட இடத்தைத்தான் கறுப்பியும் ஈழப்பிரியனுமும் உடும்பு பிடியா பிடிக்கிறாங்க எண்டு பாத்தா

மேல இருந்து சுவியர் வேற கீழ வாறன் எண்டு வெருட்டுறார்.:grin:

Hollywood இல் நின்று இடம் பார்க்கும்போதும் இந்த கவலை..:grin:

 

Link to comment
Share on other sites

இதுவரை நடந்து முடிந்த IPL 2017 போட்டிகளில் அதிக catches எடுத்த வீரர் யார்?  எத்தனை catches?

Link to comment
Share on other sites

ஐ.பி.எல். கோப்பையை வெல்வது யார்? மும்பை- புனே இன்று பலப்பரீட்சை

 
ஐ.பி.எல். கோப்பையை வெல்வது யார்? மும்பை- புனே இன்று பலப்பரீட்சை
 
 

 

201705211048177830_dhoni-sssss._L_styvpf

 

 

201705211048177830_bumrah-s._L_styvpf.gi

Link to comment
Share on other sites

ஸ்மித் வியூகம், தோனி ஃபினிஷிங் கைகொடுக்க சாம்பியனாகுமா புனே?! #IPLfinal

 
 

‘Maharashtra Derby’ - பத்தாவது ஐபிஎல் சீசனில், புதிதாக ட்ரெண்ட்டிங் ஆன வார்த்தை இது. விளையாட்டு உலகில் ஒரே நகரைச் சேர்ந்த, ஒரே இனத்தைச் சேர்ந்த, ஒரே மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு அணிகள் மோதும் போட்டிக்கு, ‘Derby’ என்று பெயர். கால்பந்தில் இந்த வார்த்தை மிகவும் பிரபலம். உதாரணத்துக்கு, ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் இரு க்ளப்கள் உள்ளன. ரியல் மாட்ரிட், அட்லெடிகோ மாட்ரிட்; ஸ்பானிஷ் லீக், சாம்பியன்ஸ் லீக்; கேபா டெல் ரே என எந்தத் தொடரில் இந்த இரு அணிகள் மோதினாலும், ‘Madrid Derby’ என்ற ஹேஸ்டேக்கில் ரசிகர்களின் குடுமிப்புடிச் சண்டை நடக்கும். இது வெறுமனே வெற்றிக்கான மோதல் மட்டுமல்;. ஒவ்வொரு Derby மோதலுக்குப் பின்னாலும், ரத்தமும் சதையுமாக ஒரு கதை இருக்கும். சரி சரி... இப்போ IPL-லுக்கு வருவோம்...

IPL

இந்த பத்தாவது ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில், வெற்றிக் கோப்பைக்கு புனே - மும்பை அணிகள் இன்று இரவு ஐதராபாத்தில் பலப்பரிட்சை நடத்துகின்றன. இரண்டுமே மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவை. ‘Maharashtra Derby’ - பெயர்க்காரணம் புரிகிறதா? சர்வ நிச்சயமாக, இது மகாராஷ்டிரா மாநிலத்தவர்கள் மட்டுமே மார் தட்டிக்கொள்ளும் உணர்ச்சிப்பூர்வமான மோதலாக இருக்கப்போவது இல்லை! சொல்லப்போனால் புனேவில் உள்ளவர்களுக்கும், மும்பையில் உள்ளவர்களுக்கும் இந்த மேட்சால் துளிகூட சண்டை வராது; ஆனால் மகாராஷ்டிராவை விட தமிழ் ட்விட்டர் சந்தில்தான், காச்மூச் என ஒரே சத்தமாக இருக்கும். காரணம் மகேந்திர சிங் தோனி எனும் அந்த ஒற்றை மனிதன்! (தோனி இல்லையெனில், புனேவை யார் சீண்டப் போகிறார்கள்?). ஏழாவது முறையாக, ஐபிஎல் ஃபைனலில் இன்று விளையாடப் போகிறார் எம்.எஸ்.தோனி. சிஎஸ்கே ரசிகர்களுக்கு, தோனி ரசிகர்களுக்கு இந்த ஒரு பெருமையே போதும்!

போதும் தோனி புராணம். இனி மும்பை, புனே அணிகளின் பிளஸ், மைனஸ் பேசுவோம். 

பக்கா பிளான்:

IPL

குஜராத் லயன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில், 41 பந்துகளில் 93 ரன்கள் விளாசினார் கொல்கத்தாவின் கிறிஸ் லின். அந்த அபாரமான இன்னிங்ஸைப் புகழ்வதை விட்டுவிட்டு, அவரது பலவீனம் என்னவென உட்கார்ந்து யோசித்தது மும்பையின் டெக்னிக்கல் டீம். அப்போட்டியில் கிறிஸ் லின்னின் wagon wheel அலசி ஆராயப்பட்டது. அவர் அடித்த 93 ரன்களில், ஸ்கொயர் ஆஃப் தி விக்கெட் ஏரியாவில், அடிக்கப்பட்டது வெறும் 4 பவுண்டரிகள் மட்டுமே. பெரும்பாலான ரன்கள். லாங் ஆன் திசையில் அடிக்கப்பட்டவை. ஆக, முடிந்தவரை லின்னுக்கு புல்-லென்த்தில் பந்துவீச வேண்டும்; அவர் எப்படியும் லாங் ஆனில் தூக்கி அடிக்க முயற்சிப்பார். அந்நேரத்தில் ஒன்றிரண்டு சிக்ஸர்கள் போனாலும் பரவாயில்லை. மூன்றாவது முயற்சியில் கேட்ச் பிடித்து விடலாம் என்பதே மும்பை அணியின் திட்டம். எலிமினேட்டர் சுற்றில் கிறிஸ் லின் பேட்டிங் செய்ய வந்ததும், மிட் ஆனில் இருந்த ஃபீல்டரை லாங் ஆனில் நிறுத்தினார் ரோகித் சர்மா. பும்ரா வீசிய ஃபுல் லென்த் பந்தை, வழக்கம் போல சிக்ஸருக்குத் தூக்கினார் லின். அதை லாங் ஆனில் இருந்த பொல்லார்டு சிரமமின்றி கேட்ச் செய்தார். கிறிஸ் லின், வெறும் 4 ரன்களுக்கு அவுட்! மும்பையின் ஹோம் ஒர்க், ரோகித் சர்மாவின் கேப்டன்சி, டெக்னிக்கல் டீமின் நேர்த்தியான திட்டமிடல் மூன்றும் இணைந்த புள்ளி அது! 

ஸ்கெட்ச் போட்டு... 

IPL

சுனில் நரைன் எலிமினேட்டர் சுற்றுக்கு முன்புவரை, சிறப்பான ஸ்ட்ரைக் ரேட்டுடன் 214 ரன்களை அடித்திருந்தார். அதில் 78 ரன்கள் (24 பந்துகளில்), அதாவது 36.45 சதவீதம் ரன்கள், மிட் ஆஃப் திசையைக் கடந்து அடிக்கப்பட்டவை. இதை ஈடன் கார்டனில் இரு அணிகளும் மோதிய முந்தைய போட்டியிலேயே சரியாகக் கணித்திருந்தது மும்பை அணி. எனவே முடிந்தவரை சுனில் நரைனை டிரைவ் ஆட விடாமல் தடுத்து, அதேநேரத்தில் இரண்டு ரன்களையும் அடிக்க விடாமல் தடுக்கும் வகையில், லாங் ஆஃப் திசையில் ஒரு ஃபீல்டரை நிறுத்தி இருந்தார் ரோகித் சர்மா. ஆக வேறு வழியின்றி டிம் செளதியின் பந்தை லாஃப்ட் செய்து, ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து, டக் அவுட்டாகி வெளியேறினார் சுனில் நரைன்! கடந்த போட்டியிலும் அதே திட்டம்தான். மிட்செல் ஜான்சன், மலிங்கா, பும்ரா மூவரும் இணைந்து 10 பந்துகளில் சுனில் நரைனை 7 ரன்கள் மட்டுமே அடிக்க அனுமதித்திருந்தனர். அதில் ஸ்கொயர் லெக் திசையில் பறந்த சிக்ஸரைத் தவிர, மீதி பந்துகள் எல்லாம் டாட் பால்தான்! எனவே கரண் சர்மா கையில் பந்து கிடைத்ததும், தன்னால் முடிந்தவரை அவரது கால் பேடை குறிவைத்துத்தான் பந்து வீசினார். இதனால் ஒருகட்டத்தில் கடுப்பான சுனில் நரைன், கரண் சர்மாவின் கூக்ளியை இறங்கி அடிக்க முயல, க்ரீஸைத் தவறவிட்டதில் ஸ்டம்பிங் ஆனார். ஒரு குறிப்பிட்ட வீரரை மும்பை அணி எப்படியெல்லாம் கட்டம் கட்டுகிறது, அதற்கேற்ப எப்படியெல்லாம் திட்டம் தீட்டுகிறது என்பதற்கு இது சின்ன உதாரணம் அவ்வளவே! 

இனி மும்பை அணியின் பலம், பலவீனம்: 

IPL

இந்த சீசனில் மும்பையை மூன்று முறை வீழ்த்தி விட்டது புனே. அதற்காக இறுதிப் போட்டியிலும் புனேதான் வெல்லும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனெனில் மும்பை எப்போதுமே பேப்பரைக் கட்டிய பின் வேகவேகமாக எழுதும் மாணவனின் ரகம். கடைசி நேரத்தில்தான் சுதாரிக்கும். அதற்கு கொல்கத்தாவை வீழ்த்தி ஃபைனலுக்கு வந்ததே சான்று! மும்பை அணியின் ஓபனிங் ஜோடி, அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கிறது. லெண்டில் சிம்மன்ஸ் அதிரடியாக ஆடுபவர் என்றாலும், அவரிடம் கன்சிஸ்டன்ஸி இல்லை. எனவே இவருக்கு பக்கபலமாக அடித்து ஆடும் பார்த்திவ் படேல் விக்கெட்டை விரைவில் வீழ்த்திவிட்டால், பவர் பிளேவில் மும்பை தள்ளாடி விடுவது வாடிக்கையாகிவிடுகிறது. அதேபோல ஒன் டவுனில் இறங்குபவர்களையும் அடிக்கடி மாற்றுகிறார்கள். இந்த ஐபிஎல்லில் பல ஆட்டங்களில் நிதிஷ் ராணா களமிறங்கினாலும், கடந்த சில மேட்ச்களில் அம்பதி ராயுடு வருகிறார். இப்படி டாப் ஆர்டரிலேயே குழப்பங்கள் இருப்பதால், அணியின் கேப்டனான ரோகித் சர்மா பின்வரிசையில் களமிறங்க நேர்கிறது. இதனால் விக்கெட் வீழ்ச்சியைத் தடுக்கும் பொருட்டு, அவரால் பல நேரங்களில் அதிரடியாக ஆட முடியவில்லை. க்ருனால் பாண்டியா, ஆல்ரவுண்டருக்கான பணியைக் கச்சிதமாகச் செய்துவருகிறார். இவர் அதே ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே போதும்! ஹர்திக் பாண்டியாவிடம் பெரிதாக எந்த டெக்னிக்கும் இல்லாமல் ஆடுகிறார்;

IPL

இது மும்பைக்குச் சில போட்டிகளில் வெற்றியைக் கொடுத்தாலும், அவரது பலவீனம் எதிரணிகளுக்கு அத்துப்படி. பொல்லார்டு, இன்னும் தனது முழுத்திறனை வெளிப்படுத்தவில்லை. அவர் சீறும் பட்சத்தில், அது மும்பைக்குப் பெரும் பலம். மும்பையின் பேட்டிங்கைப் போல, பவுலிங்கிலும் அவ்வப்போது மாறுதல்களைத், தொடர் முழுக்க செய்துகொண்டே இருந்தார் ரோஹித் சர்மா. ஆரம்பம் முதலே அசத்தலாகப் பந்துவீசிய மிட்செல் மெக்கிளீனன், இதுவரை தொடரில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில், தேவையில்லாமல் மிட்செல் ஜான்சனை ஏன் களமிறக்குகிறார்கள் என்பது புரியவில்லை. ஹர்பஜன் சிங் அதிக விக்கெட்களை எடுக்காவிட்டாலும், அவரது எகானமி ரேட் சிறப்பாகவே இருக்கிறது. இவருக்கு மாற்றாக வந்த கரண் ஷர்மா, சில முக்கியமான போட்டிகளில் மும்பைக்கு வெற்றி தேடி தந்து, அணி நிர்வாகத்தின் குட்புக்கில் இடம்பிடித்துவிட்டார். இதற்கான சிறந்த உதாரணமாக, கொல்கத்தாவுக்கு எதிராக எலிமினேட்டர் மேட்சில், 4 விக்கெட்களை எடுத்து, ஐ.பி.எல் தொடரின் வரலாற்றிலேயே தனது பெஸ்ட் பெர்ஃபாமென்ஸைக் கொடுத்ததே சான்று. யார்க்கர் கூட்டணியான பும்ரா - மலிங்கா இருவரும், டெத் ஓவர்களில் மிரட்டி விடுகின்றனர். இப்படி அணியின் காம்பினேஷனை, அடிக்கடி மாற்றுவதில் பிளஸ், மைனஸ் இரண்டும் இருக்கிறது ரோஹித்! 

புனே  அணியின் பிளஸ், மைனஸ்: 

IPL


மும்பை போல புனேவின் ஓபனிங்கில் எந்த பிரச்னையும் இல்லை. இந்த ஐபிஎல்லின் துவக்கத்தில் ரஹானேவுடன் களமிறங்கிய மயங்க் அகர்வால் தொடர்ந்து சொதப்ப, அவருக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட ராகுல் திரிபாதி பவர் பிளேவில் நின்றுவிட்டால், புனேவுக்கு மினிமம் 30 ரன்கள் கன்ஃபார்ம்.  ஒன் டவுனில் களமிறங்கும் ஸ்டீவ் ஸ்மித்தின் பேட்டிங்கை, அணியின் கேப்டன் என்ற கூடுதல் பொறுப்பு பாதித்து விட்டதோ? ஏனென்றால் இந்த ஐபிஎல்லின் தொடக்க ஆட்டங்களில் சிறப்பாக ஆடிய அவர், முக்கியமான ஆட்டங்களில் ஃபார்ம் அவுட் ஆகிவிட்டார். எனவே முதன்முறையாக ஐபிஎல்-லின் இறுதிப்போட்டியில் புனே அணியின் கேப்டன் என்ற முறையில் களம்காணும் அவர், ஒரு பொறுப்பான ஆட்டத்தை ஆட வேண்டியது அவசியம். இல்லையெனில் வார்னே, கில்கிறிஸ்ட், டேவிட் வார்னருக்கு அடுத்ததாக ஐ.பி.எல் வென்ற ஆஸி கேப்டன்கள் என்ற வரிசையில் இடம்கிடைக்காமல் போய்விடும்.

புனேயின் டாப் ஆர்டர் கொஞ்சம் ஊசலாட்டத்தோடு இருந்தாலும், அதனை ஓரளவுக்கு சீர் செய்வது, மிடில் ஆர்டரில் களமிறங்கும் மகேந்திர சிங் தோனி - மனோஜ் திவாரி கூட்டணிதான்.

IPL

இவர்கள் அணிக்குத் தேவையான ரன்களை அடித்தாலும், இவர்கள் வந்ததில் இருந்தே அடித்து ஆடினால்தான், அணியின் ரன் ரேட் சீராக ஏறும்... கடைசி ஓவர்களில் மட்டும் சிக்ஸர்களை அடிக்க முற்படுவது, எல்லா நேரத்திலும் ஓர்க் அவுட் ஆகாது சாரே! அணியில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் இம்ரான் தாஹிர் இல்லாததை, டேனியல் கிறிஸ்டியன் மற்றும் ஆடம் ஜம்பா ஓரளவுக்கு கவர் செய்துவிட்டார்கள். ஆனால் இவர்கள் எல்லா மேட்ச்சிலும் கிளிக் ஆகவில்லை. அணி நிர்வாகம் தன்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை, வாஷிங்டன் சுந்தர் காப்பாற்றிவருகிறார். இவரின் சுழல் ஜாலத்துடன், எதிரணியின் ரன்ரேட்டைக் கட்டுப்படுத்தக்கூடிய திறன்படைத்த வேகப்பந்து வீச்சாளர்களான ஷர்துல் தாக்கூர் & ஜெயதேவ் உனத்கட் ஆகியோர், மீண்டும் அசத்தலாக ஆடக் காத்திருக்கிறார்கள். புனேவின் நான்காவது வெளிநாட்டு வீரராக இடம்பிடித்திருக்கும் பெர்குசன், ஆல்ரவுண்டர் என்ற அடிப்படையில் அணியில் இருக்கிறார். ஆனால்  இவருக்குப் பதிலாக, ஓபனிங் பேட்ஸ்மேனாக இறங்கி அதிரடியாக ஆடக் கூடிய. உஸ்மான் கவாஜாவை அணியில் சேர்ப்பது நல்லது. 

கோப்பை யாருக்கு?

IPL

இரண்டு முறை (2013,2015) ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கும் மும்பைக்கு, பிரதான சிம்ம சொப்பனமாகத் திகழ்பவர், நம்ம மகேந்திர சிங் தோனி மட்டுமே! சிஎஸ்கே இருந்த நாட்களில் இருந்து இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் ரோகித் ஷர்மா, பொல்லார்டு, ஹர்பஜன் சிங், அம்பதி ராயுடு போன்றவர்கள், மும்பை அணி சாம்பியன் ஆனபோது அணியில் இருந்தவர்கள். எனவே ஐபிஎல் ஃபைனல் மேட்ச்சில், எப்படி ஆடினால் ஜெயிக்கலாம் என்ற அனுபவம், அவர்களுக்கு அதிகமாக இருக்கிறது. மும்பையைப் பொறுத்தவரை, ஆடாமல் பெஞ்ச்சில் இருக்கும் மாற்று வீரர்கள்கூட, திறமையானவர்களாக இருக்கிறார்கள். மேலும் எந்நேரத்திலும் தனி ஆளாக ஆட்டத்தின் போக்கை மாற்றும் மேட்ச் வின்னர்கள் பலர் அணியில் இருப்பது மும்பையின் பிளஸ்.

IPL

 

கடந்த தொடரில் அறிமுகமான புனே அணிக்கும், இம்முறை ஆடும் அணிக்குமே பல வித்தியாசங்கள். கடந்த முறை அணியில் பல திறமையான வீரர்கள் இருந்தும், ஃப்ளே ஆஃப் சுற்றுக்குக் கூட முன்னேறவில்லை. இந்தமுறை ஃபைனல் வரை வந்திருக்கிறது. இது எல்லாம் புதிய கேப்டனால்தான் நடந்ததாக அணி நிர்வாகம் மார்தட்டிக் கொண்டாலும், வீரர்கள் தமது பொறுப்பை உணர்ந்து ஆடியதே, இதற்கான முக்கியக் காரணம். மும்பை போல அணித்தேர்வில் எந்த குழப்பங்களும் இல்லாமல் தெளிவாகச் செயல்படும் பெருமை, அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளமிங்கைச் சேரும். மேலும் புனே அணி வெற்றி பெற்ற போதெல்லாம். அதில் தோனியின் பங்கு கணிசமாக இருந்திருக்கிறது. எனவே அவர் தனது வழக்கமான பாணியைக் கடைபிடித்தாலே, எதிரணி பாடு திண்டாட்டம்தான்! இவருடன் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் ரஹானேவின் பேட்டிங் சேரும்போது, இமாலய இலக்கு நிச்சயம். மும்பை போல, புனேவின் பவுலிங் பலமாகவே இருக்கிறது. மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற அணி என்ற சாதனையை மும்பை படைக்குமா? அல்லது முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை புனே வெல்லுமா? என்ற கேள்விகளுக்கு, இன்றைய போட்டி சுவாரஸியமிக்க பதிலாக அமையும்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இண்டைக்கு புனே புண்பட்ட நெஞ்சத்துடன் புயலாய் பறக்கப் போகுது.....!  tw_blush:

குறித்து வைத்துக் கொள்ளுங்கள் இன்றைய புள்ளிகள் முழுதும் சுவிக்கே .....!  :108_metal:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மும்பைக்காக காசைக் காசெண்டு பாராமல்  இறக்கி விட்டிருக்கு.....!tw_blush: 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.