Jump to content

கருணாநிதி, ஜெயலலிதா அரசியலுக்கு ‘குட் பாய்’


Recommended Posts


கருணாநிதி, ஜெயலலிதா அரசியலுக்கு ‘குட் பாய்’
 
 

article_1488181596-article_1480303869-kaதமிழக அரசியல் களம் இன்றைக்கு டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் அலுவலகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசாங்கம் 122 வாக்குகளைப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.  

தமிழக சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் 234 இல் ஒரு பதவி காலியாக உள்ளது. மீதியுள்ள 233 சட்டமன்ற உறுப்பினர்களில் 117 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றால், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலையில் 122 வாக்குகளைப் பெற்று, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது சசிகலா தலைமையிலான அ.தி.மு.கட்சி.   

அந்தக் கட்சிக்குள் முதல் முறையாக, மறைந்த ஜெயலலிதாவுக்குப் பிறகு, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தையும் தவிர்த்து ஒரு முதலமைச்சர் தமிழகத்தின் மேற்கு மாவட்டத்திலிருந்து வந்திருக்கிறார்.  

இந்த வெற்றிக்குப் பின்னால் நடைபெற்ற களேபரங்கள்தான் இன்றைக்கு குடியரசுத் தலைவர் அலுவலகத்தை, இந்தக் காட்சிகளின் நடுநாயகனாக மீண்டும் கொண்டு வந்திருக்கிறது.   

பெப்ரவரி 18 ஆம் திகதி நிகழ்ந்த சட்டமன்ற வாக்கெடுப்பு, 1988 இல் நடைபெற்ற அ.தி.மு.கவைச் சேர்ந்த ஜானகி அணியின் வாக்கெடுப்புக்குச் சற்றும் சளைத்தது அல்ல.   

அதில் இரு வேறுபாடுகள் மட்டுமே தெரிகிறது. ஒன்று, அன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, ஜானகி அணி தலைமையிலான அமைச்சரவை கவிழ்ந்ததாகக் கருதி குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்தார் அன்றைய ஆளுநர்.   

ஆனால், இப்போது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசாங்கம் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

அதேபோல் 1988 இல் வன்முறை அ.தி.மு.கவுக்குள் வெடித்தது. மைக்கைப் பிடுங்கி அடித்துக் கொண்டது; மண்டையை உடைத்துக் கொண்டது எல்லாம் அ.தி.மு.க (ஜானகி அணி), அ.தி.மு.க (ஜெயலலிதா அணி) ஆகிய இரு அணிகளுக்குள்ளும் நடைபெற்றது.   

அன்று அவையில், தி.மு.க அணி அமைதியாக இருந்தது. இந்த வாக்கெடுப்பில் அ.தி.மு.கவுக்குள் அடிதடி இல்லை. சசிகலா அணியை எதிர்க்கும் ஓ.பி.எஸ் அணி எதிர்த்து வாக்களித்து விட்டு அமைதியாகி விட்டது.   

ஆனால், ஆட்சி அமைக்க முயற்சிக்காத தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் வன்முறையில் ஈடுபட்டுச் சட்டமன்றத்தை கலவர பூமியாக ஆக்கி விட்டார்கள்.  

1988 இல் நடைபெற்ற வாக்கெடுப்பில் அன்றைய சபாநாயகராக இருந்த பி.எச். பாண்டியன், ஜெயலலிதா அணியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை நீக்கியது களேபரத்துக்கு வித்திட்டது. ஆனால், இந்த வாக்கெடுப்பின் போது தி.மு.கவின் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் காரை வழிமறித்துப் போலீஸார் சோதனை நடத்தியது சட்டமன்ற களேபரத்துக்கு வித்திட்டது.   

ஆனால், ஒரேயொரு ஒற்றுமை என்னவென்றால், இரு வாக்கெடுப்பின் போதும் சட்டமன்றத்துக்குள் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த காவல்துறை அவைக்கு உள்ளே அழைக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக 1988 இல் சென்னை மாநகர பொலிஸ் கொமிஷனராக இருந்த வோல்ட்டர் தேவாரமே சட்டமன்றத்துக்குள் பொலிஸ் சீருடையில் உள்ளே நுழைந்தார்.  

ஆனால், இந்த வாக்கெடுப்பின் போது, பொலிஸ் கொமிஷனர் ஜோர்ஜ் அவைக்குள் வரவில்லை. ஆனால், வேறு சில ஐ.பி.எஸ் அதிகாரிகள் சட்டமன்ற அவைக்காவலர்கள் சீருடையில் உள்ளே நுழைத்து, தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியே கொண்டு சென்றார்கள்.   

இரு வாக்கெடுப்புகளுமே தமிழக சட்டமன்றத்தின் மாண்புகளை, கண்ணியத்தை கெடுத்து விட்டன என்பதுதான் நிச்சயமான உண்மை. அதனால்தானோ என்னவோ இன்னும் தமிழக சட்டமன்ற நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறது. 

இந்தச் சட்டமன்ற களேபரத்துக்கு முதலில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் முறையிட்டார்கள். அதற்கு பலனில்லை என்ற நிலையில், இப்போது சென்னை நீதிமன்றத்தின் கதவையும் குடியரசுத் தலைவர் அலுவலகத்தையும் தி.மு.க தட்டியிருக்கிறது.  

குடியரசுத் தலைவரை 23 ஆம் திகதி சந்தித்த தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நம்பிக்கை வாக்கெடுப்பை இரத்து செய்து விட்டு, புதிய வாக்கெடுப்பு, அதுவும் இரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.   

இதே கோரிக்கையை, தி.மு.க சென்னை உயர்நீதிமன்றத்திலும் வைத்திருக்கிறது. இந்த இரண்டில் குடியரசுத் தலைவரிடமிருந்து ஏதாவது நிவாரணம் கிடைக்குமா என்பதே இன்றைய நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் எண்ணமாக இருக்கிறது.  

ஆனால், தமிழக அரசியல் இதையெல்லாம் தாண்டி இப்போது திசை மாறி நிற்கிறது. அ.தி.மு.கவைப் பொறுத்தமட்டில் ‘சசிகலா அணி’, ‘தீபா அணி’ ‘ஓ.பி.எஸ் அணி’ என்றிருந்த நிலைமாறி, இப்போது கடைசியாக ‘தீபக்’ அணியும் உருவாகி விடுமோ என்று கருதும் நிலை உருவாகி விட்டது.  

 ‘தீபா’ மற்றும் ‘தீபக்’ அணி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உறவினர் அணி என்பதால், அவர்கள் அ.தி.மு.க அரசியலுக்குள் நிகழ்த்தப்போகும் திடீர் திருப்பங்கள், அ.தி.மு.கவின் ஒட்டு மொத்த வாக்கு வங்கிக்கும் உலை வைக்கும் விதத்தில் அமைந்து விடும் என்றே தெரிகிறது.   

ஓ.பி.எஸ் அணியை ஆதரிக்க ஜெயலலிதாவின் சமாதிவரை சென்று ஆதரவு தெரிவித்து விட்டு, இப்போது புதிய கட்சி தொடங்குகிறார் தீபா. அதேபோல், சசிகலாவை ஆதரித்து விட்டு, இன்றைக்கு சசிகலா, பெங்களூரில் சிறைவாசம் அனுபவிக்கும்போது, அ.தி.மு.கவின் துணை பொதுச் செயலாளராக ஆகியிருக்கும் டி.டி.வி. தினகரனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அறிவித்துள்ளார்.  

 அ.தி.மு.கவுக்குள் உருவாகியுள்ள இந்த நால்வர் அணியில் எந்த அணிக்குச் செல்வாக்கு என்பது ஒரு வேளை வரப்போகின்ற உள்ளூராட்சித் தேர்தலில் தெரியலாம்; அல்லது தெரியாமலும் போகலாம்.   

ஆனால், அடுத்து வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலோ, அல்லது திடீரென்று சட்டமன்றத் தேர்தல் வந்தாலோ நிரூபிக்கப்படலாம் என்று தெரிகிறது. அந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகுதான் உண்மையான அ.தி.மு.க இந்த நால்வர் அணியில் எது என்பது தெரிய வரும்.   

என்றாலும், இப்போதைக்கு ‘ஓ.பி.எஸ்’ அணிக்கும், ‘தீபா’ அணிக்கும் அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது. ஆகவே, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த அ.தி.மு.க இன்றைக்கு ஜெயலலிதா மறைவால் தடுமாறி நிற்கிறது.  

அ.தி.மு.க வெற்றிடத்தைக் கைப்பற்றிக் கொள்ள பாரதீய ஜனதா கட்சியும் முயற்சிக்கிறது; திராவிட முன்னேற்றக் கழகமும் முயற்சிக்கிறது. பா.ஜ.கவைப் பொறுத்தமட்டில் தி.மு.க, அ.தி.மு.க இரண்டையும் மக்கள் நம்பவில்லை என்ற பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்கிறது.   

அதற்கு ஏற்றால்போல், நடிகர் கமல்ஹாசன், நடிகர் சித்தார்த், நடிகர் சூர்யா போன்றவர்களின் அரசியல் சார்புள்ள கருத்துக்கள் ‘மாற்றுச் சக்தி’ ஒன்று உருவாகப் போடப்படும் அத்திவாரமோ என்று தமிழக அரசியல் பார்வையாளர்களைச் சிந்திக்க வைத்துள்ளது.   

ஆனால், பா.ஜ.கவுக்குக் கட்சி உட்கட்டமைப்பு மாநிலத்தில் இல்லை என்பது இந்த முயற்சிக்கு எந்த அளவுக்குக் கை கொடுக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முடியுமா என்ற திசையை நோக்கி பா.ஜ.க அரசியல் காய் நகர்த்துகிறது என்பது மட்டும் இன்றைக்கு தெளிவு.  

அதேநேரத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை, ஜெயலலிதாவின் மர்ம மரணம் என்பதை முன்னிறுத்தியும் குற்றவாளி சசிகலாவின் ‘பினாமி’ ஆட்சி என்றும் முன்னிலைப்படுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.  
 22ஆம் திகதி மாநிலம் முழுவதும் நடைபெற்ற அந்தக் கட்சியின் உண்ணாவிரதப் போராட்டம் இந்தப் பிரசாரத்தின் ஒரு கட்டம்தான்.

அதை திருச்சியில் உண்ணாவிரதம் இருந்த ஸ்டாலினின் பேச்சில் தெரிந்தது. “சசிகலாவின் பினாமி ஆட்சியை அகற்றும் வரை தி.மு.கவின் போராட்டம் ஓயாது” என்ற ஸ்டாலினின் பேச்சு அதைத்தான் எடுத்துக் காட்டுகிறது.   

இதன் அடுத்த கட்டமாக, தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், சொற்பொழிவாளர்கள் கூட்டம் என்றெல்லாம் களை கட்டிக் களத்துக்கு வருகிறது தி.மு.க  இதுவரை தமிழக அரசியல் வேறு விதமாக இருந்தது. 1967 வரை காங்கிரஸுக்கும் தி.மு.கவுக்கும் போட்டி. 1967 க்குப் பிறகு கருணாநிதிக்கும் எம்.ஜி.ஆருக்கும் போட்டி. 1988 க்குப் பிறகு கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் போட்டி.   

2016 டிசெம்பர் ஐந்தாம் திகதிக்குப் பிறகு ஸ்டாலினுக்கும் சசிகலாவுக்கும் போட்டி என்று தொடங்கியது. ஆனால், சொத்துக் குவிப்பு வழக்குக்குப் பிறகு இப்போது சசிகலா அணி என்பது நான்காக பிரிந்து நிற்கிறது. 

 ஆகவே, இன்றைக்கு பழைய போட்டி மறைந்து புதிய போட்டி பிறந்திருக்கிறது. அது, சசிகலாவுக்கு எதிரான அரசியல் போட்டி. இன்றைக்கு தி.மு.க, பா.ஜ.க மற்ற கட்சிகள் எல்லாமே ‘சசிகலா எதிர்ப்பு’ ஒன்றையே பிரதானமாக வைத்து அரசியல் செய்கின்றன.   

ஆகவே, இன்றைக்கு தமிழக அரசியல் வித்தியாசமான களத்துக்கு வந்து நிற்கிறது. ‘சசிகலா எதிர்ப்பை’ தங்களுக்கு சாதகமான வாக்காக மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு மாநிலம் முழுவதும் அ.தி.மு.கவுக்குப் போட்டியாக கட்சியின் உட்கட்டமைப்பை வைத்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இருக்கிறது என்பதுதான் நிஜமான அரசியல் நிலவரம். 

 அந்தச் சாதகம், உடனே தேர்தல் வந்தால் மட்டுமே கிடைக்குமா அல்லது நான்கு வருடம் கழித்து தேர்தல் வந்தாலும் கிடைக்குமா என்பதைத்தான் இனி பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.    

- See more at: http://www.tamilmirror.lk/192237/கர-ண-ந-த-ஜ-யலல-த-அரச-யல-க-க-க-ட-ப-ய-#sthash.3RaYcdem.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.