Jump to content

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் நாளை ஆரம்பம்


Recommended Posts

ஐ.நா. மனித உரி­மைகள் பேரவை கூட்டத்தொடர் நாளை ஆரம்பம்

06-13-06HRC-4a0faa7940ff1ce80b06219c451b1c491dce0f73.jpg

 

- லியோ நிரோஷ தர்ஷன் - 

சவால்­களை எதிர்­கொள்ள அர­சாங்கம் பல முனை­களில் வியூகம்

* சர்­வ­தேச அமைப்­புகள் போர்க்­கொடி

*ஆதா­ரத்­துடன் மீண்டும் போர்க்­குற்­றங்கள்

*பொறுப்­புக்­கூ­ற­லுக்கு கால அட்­ட­வணை

பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் அர­சாங்கம் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் தொடர்ந்தும் கால அவ­கா­சத்தைக் கோர உள்­ளது. இதற்கு கடு­மை­யாக எதிர்ப்­பு­களை வெளி­யிட்­டுள்ள அரச சார்­பற்ற சர்­வ­தேச அமைப்­புக்கள் தமிழ் மக்கள் மத்­தியில் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்தி அவர்­களின் தலை­வி­தியை அவர்­களே நிர்­ண­யிக்கும் சந்­தர்ப்­பத்தை ஐ.நா. ஏற்­ப­டுத்திக் கொடுக்க வேண்டும் என்று கோரி­யுள்­ளன. 

இதே­வேளை, அர­சாங்கம் உறுப்பு நாடு­க­ளுடன் ஏற்­க­னவே இரா­ஜ­தந்­திர ரீதியில் கலந்­தா­லோ­சித்து நெருக்­க­டி­களை எவ்­வாறு எதிர்­கொள்­வது என்­பது தொடர்பில் மேலும் பல முனை­களில் வியூ­கங்­களை வகுத்து செயற்­ப­டு­கின்­றது.

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடர் நாளை திங்கட் கிழமை ஜெனீ­வாவில் ஆரம்­பிக்­கப்­பட உள்­ளது. இந்தக் கூட்­டத்­தொ­டரில் கலந்­து­கொள்­வ­தற்­காக வெளி­வி­வ­கார அமைச்சர் மங்கள சம­ர­வீர தலை­மை­யி­லான குழு ஜெனீவா சென்­றுள்­ளது. தொடர்ந்தும் மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரையில் இடம்­பெற உள்ள மனித உரி­மைகள் பேர­வையின் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்­பான மூன்று அறிக்­கைகள் மற்றும் ஐ.நா. உறுப்பு நாடு­களின் ஐரோப்­பிய பிரிவின் தீர்­மானம் என பல­முனை நகர்­வுகள் இடம்­பெ­ற­வுள்­ளன. 

இந்­நி­லை­யி­லேயே மார்ச் 22ஆம் திகதி இலங்கை தொடர்­பான ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் அறிக்கை விவா­தத்­துக்கு எடுத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

இலங்­கையின் நல்­லி­ணக்கம், பொறுப்­புக்­கூறல் மற்றும் மனித உரி­மைகள் நிலையில் ஏற்­பட்­டுள்ள முன்­னேற்­றங்கள் தொடர்­பான ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் அறிக்கை இந்தக் கூட்­டத்­தொ­டரின் போது சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

2015ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட 30/1 தீர்­மா­னத்­துக்கு அமை­வாக, இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்டு நிலை­மை­களை அவ­தா­னித்த பின்னர், ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் சமர்ப்­பிக்கும் விரி­வான அறிக்கை இது­வாகும்.

இதே­வேளை, இந்தக் கூட்­டத்­தொ­டரில், கடந்த ஆண்டு இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த ஐ.நாவின் சிறப்பு அறிக்­கை­யா­ளர்கள் இரு­வரின் அறிக்­கை­களும் சமர்ப்­பிக்­கப்­பட்டு பேர­வையில் விவா­திக்­கப்­ப­ட­வுள்­ளன.

சித்­தி­ர­வ­தைகள் தொடர்­பான ஐ.நா. சிறப்பு அறிக்­கை­யாளர் நில்ஸ் மெல்சர் சமர்ப்­பிக்கும் இலங்கை தொடர்­பான அறிக்கை மீதும் விவாதம் இடம்­பெ­ற­வுள்­ளது.

மேலும் இலங்கை மற்றும் இரண்டு நாடு­க­ளுக்கு மேற்­கொண்ட பய­ணங்­களின் அடிப்­ப­டையில், சிறு­பான்­மை­யினர் விவ­கா­ரங்­க­ளுக்­கான ஐ.நா. சிறப்பு அறிக்­கை­யாளர் ரீட்டா ஐசாக் சமர்ப்­பிக்கும் ஆண்டு அறிக்கை குறித்தும் மார்ச் 15ஆம் திகதி பேர­வையில் விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையில் இலங்கை தொடர்பில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­களை அமுல்­ப­டுத்­து­வது தொடர்பில் நேர அட்­ட­வ­ணை­யொன்று சமர்ப்­பிக்­கப்­பட வேண்­டு­மென மனித உரிமை கண்­கா­ணிப்­பகம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வை­யினால் இலங்கை தொடர்பில் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது. இந்தத் தீர்­மா­னத்­திற்கு இலங்­கையும் இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தது.

எனினும் தீர்­மா­னத்தில் முன் வைக்­கப்­பட்­டுள்ள பரிந்­து­ரைகள் அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னவா? என்­பது குறித்து ஆராயும் பொதுக் கால அட்­ட­வ­ணையின் அடிப்­ப­டையில் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டு­மென மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

பாலியல் வல்­லு­றவு மற்றும் சித்­தி­ர­வதை குற்­ற­வா­ளி­க­ளான படை அதி­கா­ரிகள் பற்­றிய தக­வல்­க­ளுடன் பெண்­க­ளுக்கு எதி­ரான பாகு­பா­டு­களை அகற்றும் ஐ.நா. குழு­விடம், அனைத்­து­லக உண்மை மற்றும் நீதிக்­கான திட்டம் சமர்ப்­பித்­துள்­ளது.

தென்­னா­பி­ரிக்­காவின் ஜொஹ­னஸ்­பேர்க்கை தலை­மை­ய­க­மாக கொண்­டி­யங்கும் இந்த அமைப்பின் நிறை­வேற்றுப் பணிப்­பா­ள­ராக, அனைத்­து­லக மனித உரி­மைகள் சட்ட நிபுணர் யஸ்மின் சூகா பணி­யாற்­று­கிறார்.

நாளைய கூட்­டத்தில், இந்த விட­யத்தை இலங்கை தரப்­பு­க­ளுடன் ஐ.நா. குழு பகிர்ந்து கொள்ளும் என்றும், நம்­ப­க­மான விசா­ர­ணைகள் நடக்கும் வரையில் இந்த அதி­கா­ரி­களை இடை­நி­றுத்­து­மாறு கோரப்­படும் என்றும் யஸ்மின் சூகா தெரி­வித்­துள்ளார்.

பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் பெயர் மற்றும் ஏனைய விப­ரங்­களை பெண்­க­ளுக்கு எதி­ரான பாகு­பா­டு­களை அகற்றும் ஐ.நா. குழுவின் மூல­மாக இலங்கை எம்­மிடம் கோரி­யி­ருந்­தது . ஆனால் நாங்கள் குற்­ற­வா­ளிகள் பற்­றிய தக­வல்­களை அளித்­துள்ளோம்.

பெண்­க­ளுக்கு எதி­ரான பாகு­பா­டு­களை அகற்றும் ஐ.நா. குழு­வுக்கு அனைத்­து­லக உண்மை மற்றும் நீதிக்­கான திட்டம் சமர்ப்­பித்­துள்ள அறிக்கை, சித்­தி­ர­வதை, மோச­மான பாலியல் தாக்­கு­தல்கள், மற்றும் நீண்­ட­காலம் தடுப்­புக்­கா­வலில் பாலியல் அடி­மை­க­ளாக வைக்­கப்­பட்­டி­ருந்த மூவர் உள்­ளிட்ட பாதிக்­கப்­பட்ட 55 பெண்­களின் சாட்­சி­யங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்­ட­தாகும் என மனித உரி­மைகள் சட்ட நிபுணர் யஸ்மின் சூகா தெரி­வித்­துள்ளார்.

உள்நாட்டு போரின்போது பார­தூ­ர­மான மனித உரிமை மீறல்­க­ளினால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் மற்றும் சாட்­சி­யங்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக ஐக்­கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் இலங்­கை­யுடன் ஒப்­பந்­தத்தை மேற்­கொள்ள வேண்டும். இத­னூ­டாக கடு­மை­யான அச்­சு­றுத்­தல்­களை எதிர் கொள்ளும் பாதிக்­கப்­பட்டோர் மற்றும் சாட்­சி­யங்­களை உறுப்பு நாடு­க­ளுக்கு அழைத்து கொள்ள முடியும் என சர்­வ­தேச மன்­னிப்பு சபை தெரி­வித்­துள்­ளது. 

நீதி , உண்மை மற்றும் இழப்­பீ­டுகள் பொறி­மு­றையின் போது பாதிக்­கப்­பட்டோர் மற்றும் சாட்­சி­களின் பாது­காப்பு தொடர்பில் இலங்­கை­யுடன் அவ­சர ஒப்­பந்­தத்தை ஐக்­கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் மேற்­கொள்ள வேண்டும். இதனை வலி­யு­றுத்தி சர்­வ­தேச மன்­னிப்பு சபை ஐ. நா. மனித உரிமைப் பேர­வையில் எழுத்து மூல சமர்ப்­ப­ணத்தை தாக்கல் செய்­துள்­ளது.

இலங்­கையின் நீதி , உண்மை மற்றும் இழப்­பீ­டுகள் பொறி­மு­றைக்கு தேவை­யான நிதி மற்றும் நிபு­ணர்­களின் ஒத்­து­ழைப்­பு­களை ஐக்­கிய நாடுகள் சபை கட்­டா­ய­மாக அனுப்பி வைக்க வேண்டும். அந்த பொறிமுறையின் சர்வதேச தரத்தை உறுதிப்படுத்துவதற்கு இவ்வாறான ஒத்துழைப்புகள் இன்றியமையாததாகும். அத்துடன் சட்ட சீர்திருத்தம் மற்றும் மீண்டும் ஏற்படுதலை தடுப்பதற்கான உறுதிப்பாடுகளும் வழிமுறைகளும் கையாளப்பட வேண்டும். . 

சர்­வ­தேச சட்­டத்தின் அல்­லது கடு­மை­யான மனித உரிமை மீறல்கள், நியா­ய­மான விசா­ரணை, பாது­காப்பு மற்றும் மரண தண்­ட­னையை சுமத்­து­வ­தற்கு உட்­பட்டும் குற்­றங்கள் சந்­தே­கிக்­கப்­படும் நபர்கள் மீது வழக்குத் தொடர, முயற்­சி­களை ஆத­ரிக்க இலங்கை ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும் என்­ப­துடன் பரஸ்­பர சட்ட உதவி வழங்க சர்­வ­தேச சமூகம் வலி­யு­றுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-02-26#page-1

Link to comment
Share on other sites

ஜெனிவா சமர் இன்று ஆரம்பம்

 

(ரொபட் அன்­டனி)

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்­கட்­கி­ழமை ஐ.நா.மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைனின் உரை­யுடன் ஆரம்­ப­மா­கின்­றது.   

எதிர்­வரும் மார்ச் மாதம் 24 ஆம் திக­தி ­வரை நடை­பெ­ற­வுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடரில் உலக நாடு­களின் மனித உரிமை நிலை­மைகள் குறித்து ஆரா­யப்­ப­ட­வு­டள்­ளது.   

அத்­துடன் இலங்கை தொடர்­பான ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் அறிக்கை பேர­வையில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­துடன் இலங்கை தொடர்­பான பிரே­ரணை ஒன்றும் பிரிட்டன் உள்­ளிட்ட ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­க­ளினால் முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளது.

இன்று திங்­கட்­கி­ழமை ஆரம்­ப­மா­க­வுள்ள முத­லா­வது அமர்வில் ஐக்­கிய நாடு­களின் பொதுச் செய­லாளர் நாயகம் அன்­டோ­னியோ கட்ரஸ் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் உள்­ளிட்டோர் உரை­யாற்­ற­வுள்­ளனர்.

மேலும் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர எதிர்­வரும் 28 ஆம் திகதி ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் இலங்­கையின் சார்பில் உரை­யாற்­ற­வுள்ளார்.

இம்­முறை கூட்டத் தொடர் இலங்­கைக்கு மிகவும் முக்­கி­ய­மா­ன­தாக அமை­ய­வுள்­ளது. விசே­ட­மாக கடந்த 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான ஜெனிவா பிரே­ர­ணையை அர­சாங்கம் எவ்­வாறு அமுல்­ப­டுத்­தி­யது என்­பது தொடர்­பாக ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் எழுத்­து­மூல அறிக்­கையை எதிர்­வரும் 22 ஆம் திகதி சமர்ப்­பிக்­க­வுள்ளார்.

அது­மட்­டு­மன்றி ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் உறுப்பு நாடு­களின் பிர­தி­நி­தி­களும் சர்­வ­தேச அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் பிர­தி­நி­தி­களும் இலங்கை தொடர்­பாக உரை­யாற்­ற­வுள்­ளனர்.

எதிர்­வரும் இரண்டாம் திக­தியும் 15 ஆம் திக­தியும் ஐ.நா. விசேட நிபு­ணர்­களின் இலங்கை தொடர்­பான அறிக்­கைகள் குறித்த விவா­தமும் 23 ஆம் திகதி இலங்கை தொடர்­பான பிரே­ரணை குறித்த விவா­தங்­களும் நடை­பெ­ற­வுள்­ளன. மேலும் 22 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் அறிக்கை மீதான விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது.

சிறு­பான்மை மக்­களின் விட­யங்­களை ஆராயும் ஐக்­கிய நாடுகள் விசேட நிபுணர் ரீட்டா ஐசாக் நாடி­யாவின் இலங்கை தொடர்­பான அறிக்கை ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வைக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் அது தொடர்­பான விவாதம் எதிர்­வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது.

இதன்­போது தனது இலங்கை தொடர்­பான அறிக்­கையின் சுருக்­கத்தை ஐ.நா. விசேட நிபுணர் ரீட்டா ஐசாக் மனித உரிமை பேர­வையில் முன்­மொ­ழிவார். தொடர்ந்து உறுப்பு நாடுகள் தமது நிலைப்­பா­டு­களை முன்­வைக்கும்.

 சித்­தி­ர­வ­தைகள் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் விசேட நிபுணர் வோன் மென்டோஸ் முன்­வைத்த அறிக்கை தொடர்­பான விவாதம் எதிர்­வரும் மார்ச் மாதம் இரண்டாம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது.

இந்த விவா­தத்­திலும் இலங்கை தொடர்­பாக சித்­தி­ர­வ­தைகள் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் விசேட நிபுணர் வோன் மென்டோஸ் முன்­வைத்த அறிக்­கையின் பரிந்­து­ரை­களை மேற்­கோள்­காட்டி உறுப்பு நாடுகள் உரை­யாற்­ற­வுள்­ளன.

இம்­முறை கூட்டத் தொடரில் இலங்­கையின் சார்பில் உயர்­மட்ட தூதுக்­கு­ழு­வினர் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர உள்­ளிட்ட உயர் மட்ட அதி­கா­ரிகள் இந்தக் கூட்டத் தொடரில் இலங்­கையின் சார்பில் கலந்­து­கொள்­வார்கள் என எதிர்­பார்க்­கப்­டு­கி­றது. ஜெனி­வா­வி­லுள்ள ஐ.நா. மனித உரிமை பேர­வையில் இலங்கை அலு­வ­ல­கத்தின் பிர­தி­நி­தி­களும் இலங்கை தூதுக்­கு­ழு­வுடன் இணைந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

இம்­முறை இலங்­கையின் சார்பில் முன்­னேற்­றங்­களை வெ ளிப்­ப­டுத்த 18 மாத கால அக­வாசம் கோரப்­ப­ட­வுள்­ளது. அதா­வது பேர­வையில் நாளை உரை­யாற்­ற­வுள்ள அமைச்சர் மங்­கள சம­ர­வீர கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்­கையில் ஏற்­பட்ட ஆட்சி மாற்­றத்தின் பின்னர் அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வரும் நல்­லி­ணக்க வேலைத்­திட்­டங்கள் மற்றும் தேசிய ஒற்­று­மையை பலப்­ப­டுத்­துதல் ஜன­நா­ய­கத்தை வலுப்­ப­டுத்­துதல் உள்­ளிட்­டவை தொடர்பில் விளக்­க­ம­ளிக்­க­வுள்ளார்.

அத்­துடன் நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு மேலும் அவ­காசம் வேண்டும் என்றும் அமைச்சர் மங்­கள சம­ர­வீர கோரிக்கை விடுக்­க­வுள்ளார்.

இதே­வேளை 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு மேலும் கால அவ­கா­சத்தை வழங்கும் வகை­யி­லான பிரே­ரணை ஒன்று பிரிட்டன் உள்­ளிட்ட ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­க­ளினால் முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளது.

அதா­வது இலங்­கைக்கு நல்­லி­ணக்­கத்­தையும் பொறுப்­புக்­கூ­ற­லையும் முன்­னெ­டுக்க மேலும் கால அவ­கா­சத்தை வழங்கும் நோக்­கி­லேயே இவ்­வாறு பிரே­ர­ணை­யொன்று முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்த பிரே­ரணை குறித்த வாக்­கெ­டுப்பு மார்ச் மாதம் 23 ஆம் திகதி நடை­பெறும். இலங்கை அதற்கு இணை அனு­ச­ரணை வழங்­கினால் ஒரு­வேளை வாக்­கெ­டுப்­புக்கு விடப்­ப­டாமல் கடந்த 2015 ஆம் ஆண்டில் நடை­பெற்­றதைப் போன்று ஏக­ம­ன­தாக பிரே­ரணை நிறை­வேற்­றப்­ப­டலாம்.

மேலும் செய்ட் அல் ஹுசேனின் இலங்கை தொடர்­பான அறிக்­கை­யிலும் நல்­லி­ணக்­கத்­தையும் பொறுப்­புக்­கூ­ற­லையும் முன்­னெ­டுக்க இலங்­கைக்கு கால அவ­கா­சத்­தையும் பிரே­ரிப்பார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அதனை அடி­யொட்­டி­ய­தா­கவே பிரிட்டன் கொண்­டு­வ­ர­வுள்ள பிரே­ரணை அமையும் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. "

பல்­வேறு நாடுகள் பங்­கேற்பு

கூட்டத் தொடரில் பிரிட்டன், அவுஸ்­தி­ரே­லியா, சுவிடன், பிரான்ஸ், டென்மார்க், நெதர்­லாந்து, கனடா, பெல்­ஜியம் உள்­ளிட்ட நாடு­களின் பிர­தி­நி­திகள் கலந்­து­கொண்டு உரை­யாற்­ற­வுள்ள நிலையில் அவர்கள் இலங்கை விக­வாரம் தொடர்­பிலும் பிரஸ்­தா­பிப்­பார்கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

டென்­மார்க்கின் வெளி­வி­வ­கார அமைச்சர் அன்டஸ் சாமுவேல் சென், நெதர்­லாந்தின் வெளி­வி­வ­கார அமைச்சர் பேர்ட் கொன்டஸ், கன­டாவின் வெளி­வி­வ­கார அமைச்சர் கிரிஸ்­டியா பீரிலன், பிரான்ஸின் வெளி­வி­வ­கார அமைச்சர் ஜீன் மார்க், பிரிட்­டனின் உள்­ளிட்­டோரும் உரை­யாற்­ற­வுள்­ளனர்.

சுவீ­டனின் வெளி­வி­வ­கார அமைச்சர் மாகட் வோல்ஸ்ட்ரோம், பொது­ந­ல­வாய அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் பற்றீசியா ஸ்கொட்லன்ட், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் பீட்டர் மோரேர் ஆகியோரும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில் ஆரம்ப அமர்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.

இதேவேளை சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் மனித கண்காணிப்பகம் என்பன இம்முறை கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் பல யோசனைகளை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக சர்வதேச பங்களிப்புடன் கூடிய விசாரணை பொறிமுறையை இந்த அமைப்புக்கள் முன்வைக்கும் என கூறப்படுகின்றது. எனினும் அரசாங்கம் கால அவகாசத்தையே கோரும் என கூறப்படுகின்றது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-02-27#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.