Jump to content

தீர்மானங்களை நிறைவேற்ற, கால அட்டவணையை இலங்கையிடம் கோருகிறது ஐ.நா!


Recommended Posts

தீர்மானங்களை நிறைவேற்ற, கால அட்டவணையை இலங்கையிடம் கோருகிறது ஐ.நா!

unhr.jpgஜெனீவாவில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவையியின் கூட்டத்தொடரில் புதிய தீர்மானமொன்றை இலங்கை முன்வைக்கும்போது, கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கான கால அட்டவணையை இலங்கையிடம் ஐ.நா. கோரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வின் நிரந்தர தூதரகத்தில் கையளிக்கப்பட்டுள்ள சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் இலங்கை தொடர்பான கடிதத்தின் அடிப்படையிலேயே குறித்த கால அட்டவணை கோரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த தீர்மானத்தில் காணப்படும் 25 உறுதிமொழிகளில் சிலவற்றை செயற்படுத்த இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை வரவேற்றுள்ள சர்வதே மனித உரிமைகள் கண்காணிப்பகம், நிலைமாறுகால நீதிப் பொறிமுறையின் அடிப்படையிலான செயற்பாடுகளில் எதுவித முன்னேற்றமும் இல்லையென சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அலுவலகத்தை அமைப்பதற்கான சட்டமூலத்திற்கு உரிய ஆலோசனை பெறப்படவில்லை என்றும் இதுவரை குறித்த அலுவலகம் அமைக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்தோடு, சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம், உண்மையை கண்டறிதல் மற்றும் நல்லிணக்க பொறிமுறை, பாதிப்புகளுக்கான இழப்பீடு வழங்குதல் ஆகியவற்றில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லையெனவும் குறிப்பிட்டுள்ளது.

இவை குறித்த சட்டமூலங்களை உருவாக்கி வருவதாக அரசாங்கம் கூறிவந்தாலும், இதுவரை காத்திரமான செயற்பாடுகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லையென சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

http://globaltamilnews.net/archives/19155

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3/3/3015 நிறைவேற்றப்படும் உறுதியளிக்கின்றனர்:rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.