Jump to content

“எம்.எல்.ஏ-க்களை இழுக்க முடியாதா என்று கேட்கிறார்கள்!’’ – ஸ்டாலின் கலகல


Recommended Posts

“எம்.எல்.ஏ-க்களை இழுக்க முடியாதா என்று கேட்கிறார்கள்!’’ – ஸ்டாலின் கலகல

 

ட்டமன்றத்தில் தி.மு.க-வின் எம்.எல்.ஏ-க்கள் வெளியேற்றப் பட்டதைக் கண்டித்து, கடந்த 22-ம் தேதி தமிழகம் முழுவதும், தி.மு.க சார்பில் உண்ணா விரதப் போராட்டம் நடைபெற்றது. திருச்சியில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். சென்னையில் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் போராட்டத்தில் குதித்தார்கள்.

p34a1.jpg

இந்தப் போராட்டத்துக்காக, முதல் நாள் இரவே திருச்சி வந்துவிட்ட ஸ்டாலின், உண்ணாவிரதப் பந்தலுக்கு காலை 8.40 மணிக்கு வந்தார். 9 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது. தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, எம்.எல்.ஏ-க்கள் லால்குடி சவுந்தர்ராஜன், துறையூர் ஸ்டாலின் குமார், திருவெறும்பூர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஜெரோம் ஆரோக்கிய ராஜ், ஆர்.சி.பாபு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், விவசாய சங்கத் தலைவர்கள் பூ.விஸ்வநாதன், அய்யாக்கண்ணு ஆகியோர் கலந்துகொண்டனர்.

சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு, அன்றைய தினம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விவரங்களை உண்ணாவிரதப்பந்தலில் இருந்து கொண்டே அப்டேட் செய்து கொண்டிருந்தார் ஸ்டாலின்.

p34.jpg

போராட்டத்தில் பேசிய பலரும் ‘ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர்’ என புகழ்ந்து தள்ளினார்கள். ‘‘தலித்துகள் தேர்தலில் போட்டியிட முடியாமல் இருந்த பாப்பாப்பட்டி, கீரிப்பட்டியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்திய இயக்கம், அருந்ததிய சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்காக 3 சதவிகிதம் உள்ஒதுக்கீடு தந்த இயக்கம்... தி.மு.க! இப்படிப்பட்ட பேரியக்கத்தைச் சார்ந்த எங்களை நோக்கி, சாதி பார்த்து தன்னை இழிவுபடுத்திவிட்டதாக சபாநாயகர் சொல்வதா?’’ என தனபாலுக்குப் பதிலடி கொடுத்தார் திருச்சி சிவா.

பள்ளிக் குழந்தைகள், மாணவர்கள், பெண்கள் எனப் பலரும் உண்ணாவிரத மேடைக்கே வந்து, ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். ஆதரவு தெரிவிக்க வந்த மாணவர்கள், சசிகலாவுக்கு எதிராக கோஷங்கள் போட்டனர். திருச்சி சிவா, அவர்களுக்கு வாசகங்களை எழுதிக் கொடுத்தார்.

இறுதியாகப் பேசிய ஸ்டாலின், “இந்தப் போராட்டம் தி.மு.க-வின் போராட்டம் அல்ல. தமிழகத்தில் நடைபெறும் பினாமி ஆட்சியை அப்புறப்படுத்தக்கூடிய ஒரு போராட்டம். இதற்கு அனைத்துத் தரப்பு மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். இனி தி.மு.க-வினர், ‘மன்னார்குடி மாஃபியா’ என அழைக்கக்கூடாது. அந்தப் பகுதி மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, இனி ‘மாஃபியா கும்பல்’ என்றுதான் அழைக்க வேண்டும். தமிழகத்தில் பினாமி ஆட்சி நடைபெறுகிறது. ஜெயலலிதா மறைந்த பிறகு, தி.மு.க நினைத்திருந்தால் இந்த ஆட்சியைக் கலைக்கச் செய்திருக்க முடியும். ‘20 எம்.எல்.ஏ-க்களை உங்களால் இழுக்க முடியாதா?’ என எல்லோரும் கேட்கிறார்கள். ஆனால், தேர்தலை சந்தித்துத்தான் தி.மு.க ஆட்சியைப் பிடிக்கும்.

இந்த ஆட்சியின் ரிமோட் கன்ட்ரோல் பெங்களூரு சிறையில் உள்ளது. ஒருபோதும் இந்த பினாமி ஆட்சியை ஏற்கமாட்டோம். தி.மு.க-வுக்கு வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்துத்தான் நாங்கள் போராடுகிறோம்.

ஜெயலலிதா இறந்தவுடன் ஓ.பி.எஸ் முதல்வராகப் பதவி ஏற்றுக்கொண்டார். கொஞ்சநாளில், முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். பதவியை ராஜினாமா செய்த கையோடு ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்தவர், சசிகலா தன்னை மிரட்டி ராஜினாமா கடிதம் வாங்கியதாகக் கூறினார். ‘இப்போது 10 சதவிகித உண்மைகளை மட்டுமே தெரிவித்துள்ளேன். மீதியை விரைவில் சொல்வேன்’ என்றார். 10 சதவிகிதத்துக்கே இப்படி என்றால், மீதி 90 சதவிகிதத்துக்கு எப்படி இருக்குமோ! அப்பப்பா...
p34b.jpg
புதிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தில் இருந்தால், திராணி இருந்தால், ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தட்டும். இந்த ஆட்சி நீடித்து நிலைக்காது. விரைவில் மக்கள் உங்களைத் தூக்கி வீசுவார்கள். அப்படித் தூக்கி எறிந்ததும் தி.மு.க ஆட்சி அமைக்கும். எங்களது முதல் கையெழுத்து ‘ஜெயலலிதா மரணத்தின் மீதான நீதி விசாரணை நடத்தப்படும்’ என்பதாகத்தான் இருக்கும். இது உறுதி!’’ என்றார்.

- சி.ய.ஆனந்தகுமார்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்


திருமண நாளில் உண்ணாவிரதம் இருந்தவர்!

ண்ணாவிரதம் நடைபெற்ற பிப்ரவரி 22-ம் தேதி திருவெறும்பூர் எம்.எல்.ஏ-வும், தி.மு.க இளைஞரணி மாநில துணைச் செயலாளருமான அன்பில் மகேஷுக்கு திருமண நாள். அன்று காலை முதல் மாலை வரை உண்ணாவிரதப் பந்தலிலேயே உட்கார்ந்திருந்தவர், தமிழகம் முழுவதும் நடைபெற்றுவந்த போராட்டங்கள் குறித்து ஸ்டாலினுக்கு அப்டேட் செய்துகொண்டிருந்தார்.

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.