Jump to content

சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணைமுறி விநியோக வர்தமானியில் மஹிந்தவின் கையெழுத்து.? நாளை விசாரணை ஆரம்பம்


Recommended Posts

சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணைமுறி விநியோக வர்தமானியில் மஹிந்தவின் கையெழுத்து.? நாளை விசாரணை ஆரம்பம்

 

 

(க.கமலநாதன்)

2015 ஆம் ஆண்டு  ஜனவரி முதலாம் திகதியன்று மத்திய வங்கி பிணை முறி விநியோகத்தின் நிமித்தம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கையெழுத்து சகிதம் வெளியிடப்பட்டுள்ளதா என்பது குறித்த விசாரணைகள் அரச அச்சகத்தின் பணிப்பாளரிடத்தில் நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளது.

central_bank.jpg

மேலும் நிதி அமைச்சின் செயலாளரிடத்திலும் இது குறித்த சாட்சியங்கள் பதிவு செய்யப்படவுள்ளன.

மேற்படி திகதியில் வெளியிடப்பட்டுள்ள மத்திய வங்கி பிணைமுறி விநியோகம் தொடர்பிலான வர்தமானி அறிவித்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கையெழுத்து இடப்பட்டுள்ளதாக சிரேஷ்ட அரச சட்டவாதி அவந்தி பெரேரா மத்திய வங்கி பிணை முறி விவகாரத்தினை பரிசீலிப்பதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவிடத்தில் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறான ஒரு வர்தமானி அறிவித்தல் குறித்து தான் அறிந்திருக்கவில்லை என நீதி அமைச்சு மற்றும் திறைசேரியின் செயலாளரான ஆர்.எச்.எஸ். சமரதுங்க பதிலளித்திதார்.

பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்களான உயர் நீதிமன்ற நீதியரசர்களான கே.டீ.சித்திசிறி, பி.எஸ். ஜெயவர்தன மற்றும் ஓய்வுபெற்ற உதவி கணக்காய்வாளர் வேலுபிள்ளை ஆகியோர் முன்னிலையில் இந்த விசாரணை கடந்த வியாழக்கிமையன்று மூன்றாவது  நாளாகவும் முன்னெடுக்கபட்ட போதே நிதி அமைச்சின் செயலாளரிடத்தில் மேற்படி சாட்சியம் பதிவு செய்யப்பட்டது. 

இதன்போது முதற்கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போது விசாரணைகள் நிதி அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ். சமரதுங்கவிடத்தில் அவரின் தொழில்சார் செயற்பாடுகள் குறித்து வினவப்பட்டது. இந்த கேள்விகளை மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் வசந்த கோதாகொட தொடுத்திருந்தார்.

அதனை தொடர்ந்து மத்திய வங்கி பிணை முறி விவகாரம் குறித்த கேள்விகளை நெறிப்படுத்தி வினவிய அரச சிரேஷ்ட சட்டவாதி அவந்தி பெரேரா 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியன்று வெளியிடப்பட்டுள்ள வர்தமானி அறிவித்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கையெழுத்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த நிதி அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க, இந்த வர்தமானி அறிவிப்பு குறித்து தான் அறிந்திருக்கவில்லை என குறிப்பிட்டார். அதனையடுத்து ஆணைக்குழுவின் தலைவர் கே.டீ.சித்தசிறி இந்த விசாரணைகளை நாளை வரையில் ஒத்திவைப்பதாகவும் அதற்கு முன்னர் நாளை விசாரணைகளின் போது அரச அச்சகத்தின் பணிப்பாளரை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறும் அறிவித்தார்.

மேலும் இந்த குழப்பத்தின் மத்தியில் விசாரணைகளை முன்னெடுக்க முடியாது எனவே  2015.01.01 வர்தமானியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கையொப்பம் இடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளமையினால் அச்சீட்டின் போது திகதியில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்க கூடுமா? என்பது குறித்த விரிவான விசாரணைகள் நாளை முன்னெடுக்கப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்தார்.

அதன் பிரகாரம் இந்த விவாகாரம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மற்றும் நிதி அமைச்சி, திறைசேரியின் செயலாளர் ஆர்.எச். எஸ் சமரதுங்கவிடத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்போது மேற்படி சர்ச்சைக்குரிய பிணைமுறி விநியோக விவகாரத்தின் பிரகாரம் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி  வெயிளிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கையெழுத்து இடப்பட்டுள்ளமை குறித்த தீர்க்கமான விசாரணைகள் முன்னெடுக்கபடவுள்ளமையினால் மத்திய வங்கி விவகாரத்தில் திருப்பு முனை ஏற்படக்கூடும் என்ற எதிர்பார்ப்புக்கள் மேலீட்டுள்ளன.

http://www.virakesari.lk/article/17075

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சீமான் உட்பட எவருமே தங்கம் இல்லை. ஆகவே இவரும் மாற்று இல்லை. ஒரு கள்ளனை இன்னொரு கள்ளனால் பிரதியிடுவது அல்ல மாற்று. ஓம். ஏன் எண்டால் அவர் சின்ன கருணாநிதி என நான் எப்போதோ அடையாளம் கண்டு கொண்டதால்.
    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.