Jump to content

தேர்தல் கமிஷன் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என்ற நம்பிக்கையில், அ.தி.மு.க.,வை கைப்பற்ற, பன்னீர்செல்வம் அணியினர், சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றனர்.


Recommended Posts

 

தேர்தல் கமிஷன் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என்ற நம்பிக்கையில், அ.தி.மு.க.,வை கைப்பற்ற, பன்னீர்செல்வம் அணியினர், சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

 

Tamil_News_large_1718644_318_219.jpg

சசிகலாவின் பொதுச்செயலர் பதவி பறிபோனால், பொதுக்குழுவை கூட்டவும் திட்டமிட்டுள்ளனர். பன்னீர்செல்வம், மார்ச் 1ல், புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என, அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.

அ.தி.மு.க.,வினர், சசிகலா அணி, பன்னீர் செல்வம் அணி என, இரண்டாக பிரிந்துள்ளனர். எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் ஆட்சியை தக்க வைக்க, பன்னீர்செல்வம் முடிவு செய்தார். ஆனால், சசிகலா தரப்பினர், எம்.எல்.ஏ.,க் களுக்கு ஆசை வார்த்தை கூறி, தங்கள் விசுவாசியான இடைப்பாடி பழனிசாமியை முதல்வராக்கி, ஆட்சியை தங்கள் வசமாக்கிவிட்டனர்.

சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சசிகலா, சிறைக்கு செல்லும் முன், தங்கள் குடும்பத்தை விட்டு கட்சி போய் விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார்.

அதனால்,தன் அக்கா மகன் தினகரனை, துணை பொதுச்செயலராக நியமித்தார்.

கட்சியும் ஆட்சியும், அவர்கள் கட்டுப்பாட்டில் வந்தாலும் தொண்டர்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. பிப்., 24ல், கட்சி அலுவலகத் தில் நடந்த, ஜெ., பிறந்த நாள் விழாவிற்கு, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வரவில்லை. ஆனால், ஆர்.கே.நகரில், பன்னீர் செல்வம் பங்கேற்ற விழாவில், கட்சியினர் பெரும் திரளாக பங்கேற்றனர். இது, பன்னீர் செல்வம் தரப்பிற்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

அதன்தொடர்ச்சியாக, கட்சியை கைப்பற்ற வியூகங்கள் வகுக்கும் பணியை, சுறுசுறுப்பாக துவக்கி உள்ளனர். 'சசிகலா பொதுச்செயலராக நியமிக்கப்பட்டது செல்லாது' என அறிவிக்கக் கோரி, தேர்தல் கமிஷனில் மனு கொடுத்துள்ள னர். தேர்தல் கமிஷனும், வரும், 28க்குள் பதில் அளிக்கும்படி, சிறையில் உள்ள சசிகலாவுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.

இவ்விவகாரத்தில், சசிகலாவை பொதுச்செய லராக தேர்வு செய்தது செல்லாது என, தேர்தல் கமிஷன் அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்புடன், பன்னீர்செல்வம் அணியினர் காத்திருக்கின்ற னர். தேர்தல் கமிஷன் அவ்வாறு அறிவித்தால், உடனே பொதுக் குழுவை கூட்டி, பொதுச் செய லர் தேர்தலை அறிவிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக, மண்டல வாரியாக, கட்சி நிர்வாகி கள், தொண்டர்கள் மற்றும் பொது மக்களை சந்தித்து பேச, பன்னீர்செல்வம் முடிவு

 

செய்துள்ளார். அதற்கான பயணத் திட்டமும் தயாராகி வருகிறது. பதவியில் உள்ள, எம்.எல். ஏ.,க்கள் தவிர,மற்றவர்களின் ஆதரவு இருப்ப தால், கட்சியை எளிதாக கைப்பற்றி விடலாம் என, பன்னீர் செல்வம் தரப்பினர் நம்புகின்ற னர்.அதே நேரத்தில், தேர்தல் கமிஷனின் நெருக்கடியால் இருந்து, எப்படி தப்புவது என்ற தீவிர ஆலோசனையில் உள்ள சசிகலா தரப்பினர், பன்னீர்செல்வம் அணியினரின் சுறுசுறுப்பை பார்த்து, கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு பாதக மாக தீர்ப்பு வந்தது போல, தேர்தல் கமிஷனும், பொதுச்செயலர் விவகாரத்தில் சிக்கலான தீர்ப்பை அளித்து விட்டால் என்ன செய்வது என்றும் கலக்கம் அடைந்துள்ளனர்.
 

அடுத்த மாதம் புதிய அறிவிப்பு?


அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளில், பெரும்பாலானோர் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித் துள்ளனர். அவர்கள், சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவாக, பல கருத்துக்களை பரப்பி வருகின் றனர். தற்போது, 'ஓ.பி.எஸ்., பார் தமிழ்நாடு' என்ற தலைப்பில், புதிய பதிவை வெளியிட்டுள் ளனர்.அதில், 'இனி லட்சியங்களை அடைய, லட்சங்கள் தேவையில்லை' என்ற வாசகத்
துடன், 'மார்ச் 1 வரை காத்திருங்கள்' என, குறிப் பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், மார்ச் 1ல், பன்னீர்செல்வம் புதிய அறிவிப்பை வெளியிடு வார் என, அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1718644

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.