Jump to content

கூகுள் குரோமில்.... பலருக்கு தெரியாத, இலகுவான வசதிகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கூகுள் குரோமில் பலருக்கு தெரியாத ஷார்ட் கட் வசதிகள்

கூகுள் குரோமில்.... பலருக்கு தெரியாத, ஷார்ட் கட் வசதிகள்.
உலகின் பெரும்பாலான இண்டர்நெட் பயனாளிகள் உபயோகிக்கும் பிரெளசர் கூகுள் குரோம் என்பது அனைவரும் அறிந்ததே. பயன்படுத்துவதற்கு எளிதாக உள்ள இந்த பிரெளசரை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

மிக எளிமையானது என்பதும், இண்டர்நெட்டிற்கு புதியவர்களுக்கும் புரியும் வகையில் இருப்பதாலும் கூகுள் குரோம் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்த பிரெளசரில் பலர் அறிந்திராத வசதிகள் இருப்பதை தற்போது பார்ப்போம். மிக எளிமையாக உபயோகிக்க கூடிய இந்த பிரெளசரில் உள்ள ஒருசில டிரிக்ஸ்களையும் பயன்படுத்தினால் இன்னும் சிறப்பானதாக இருக்கும்.

குரோமை ஓப்பன் செய்யும்போது எந்த பக்கம் நமக்கு வேண்டும்

குரோமை ஓப்பன் செய்யும்போது எந்த பக்கம் நமக்கு வேண்டும் கூகுள் குரோமை ஒவ்வொரு முறையும் ஓப்பன் செய்யும் நமக்கு வரும் முதல் பக்கம் எதுவாக இருக்க வேண்டும் என்பதை செட்டிங் செய்து வைத்து கொள்ளும் வசதி இந்த குரோமில் உள்ளது. இதற்காக நீங்கள் குரோம் செட்டிங் சென்று startup section என்பதன் டிராப்டவுனில் உள்ள ஏதாவது ஒரு ஆப்சனை உங்கள் விருப்பம் போல் தேர்வு செய்யலாம்

அடிக்கடி பார்க்கும் இணையதளங்களை ஷார்ட்கட் ஆக்கி கொள்ளலாம்

அடிக்கடி பார்க்கும் இணையதளங்களை ஷார்ட்கட் ஆக்கி கொள்ளலாம் உங்களுக்கு விருப்பமான அல்லது அடிக்கடி பார்க்கும் இணையதளங்களை ஷார்ட்கட் வசதி மூலம் டெக்ஸ்டாப்பில் வைத்து கொள்ளும் வசதி உள்ளது. இதர்கு நீங்கள் செய்ய வேண்டியது. உங்கள் விருப்பமான இணையதளத்தை ஓப்பன் செய்து வலது மேல்புறத்தில் உள்ள ஐகான் ஒன்றை அழுத்தி பின்னர் அதில் உள்ள ஆப்சன் பட்டியலில் உள்ள டூல்ஸ் சென்று பின்னர் அதில் உள்ள Add to Desktop என்பதை க்ளிக் செய்துவிட்டால் உங்கள் விருப்பமான இணையதளம் நீங்கள் குரோமை ஓப்பன் செய்தவுடன் தெரியும்.

குரோமில் உள்ள டேப்களை பின் செய்யலாம் தெரியுமா?

குரோமில் உள்ள டேப்களை பின் செய்யலாம் தெரியுமா? சில சமயம் நீங்கள் ஒரே நேரத்தில் பல டேப்களை ஓபன் செய்து வைத்திருப்பீர்கள். அந்த நேரத்தில் எந்த டேப்பில் எந்த தளம் இருக்கின்றது என்பதை அறிவது கஷ்டமாக இருக்கும். இந்நிலையில் டேப்பை பின் செய்து வைத்துவிட்டா, அந்த டேப் ஐகானாக மட்டுமே தோன்றும். இதனால் ஒரு குறிப்பிட்ட டேப்பை கண்டு கொள்வதில் எந்தவித சிரமமும் இருக்காது. இந்த வசதியை பெற வலது புறம் க்ளிக் செய்து பின்னர் pin tab என்பதை தேர்வு செய்தால் போதுமானது.

கடைசியாக மூடிய டேப்-ஐ எப்படி மீண்டும் பெறுவது:

கடைசியாக மூடிய டேப்-ஐ எப்படி மீண்டும் பெறுவது: சில சமயம் ஏதோ ஒரு ஞாபகத்தில் நமக்கு தேவையான டேப்-ஐ தெரியாமல் குளோஸ் செய்துவிடுவோம். அல்லது மவுஸ் சிறிது தவறாக அசைந்தும் நமக்கு தேவையான டேப் குளோஸ் ஆகிவிடும். இந்த மாதிரியான சமயத்தில் Ctrl + Shift + T என்ற ஷார்ட்கட்டை பயன்படுத்தினால் போதும். நீங்கள் கடைசியாக டேப் ஓப்பன் ஆகும். மீண்டும் மீண்டும் இதே ஷார்ட்கட்டை அழுத்தினால் நீங்கள் குளோஸ் செய்த டேப்புகள் ஓப்பன் ஆகிக்கொண்டே இருக்கும். இதை நீங்கள் இன்னொரு முறையிலும் செய்யலாம். வலது புறம் க்ளிக் செய்து ஆப்சன் என்பதில் உள்ள Reopen closed tab என்பதை அழுத்தினால் போதுமானது

யாருக்கும் தெரியாமல் பிரெளஸ் செய்ய வேண்டுமா?

சான்றிதழ் தளத்தில் சிக்கிய 4000எம்ஏஎச் பேட்டரி, 5-இன்ச் சியோமி ரெட்மீ 5.!? யாருக்கும் தெரியாமல் பிரெளஸ் செய்ய வேண்டுமா? நீங்கள் ஓபன் செய்யும் டேப் மிகவும் ரகசியமானதா? அது யாருக்கும் தெரியக்கூடாது என்று விரும்புகிறீர்களா? அதற்கும் குரோமில் வசதி உண்டு. இதை நீங்கள் செய்ய வலது மேல்புறத்தில் உள்ள விரஞ்ச் ஐகானை க்ளிக் செய்து அதில் உள்ள ஆப்சனில் 'New incognito window' என்பதை தேர்வு செய்துவிட்டால் நீங்கள் ஓபன் செய்த பக்கங்கள் ஹிஸ்ட்ரியில் சேவ் ஆகாது. இதை நீங்கள்Ctrl + Shift + N என்ற ஷார்ட் கட் மூலமும் பெறலாம். 

ஆட்டோ ஃபில் வசதி வேண்டுமா?

 

ஆட்டோ ஃபில் வசதி வேண்டுமா? ஒருசில இணையதளங்களை நாம் அடிக்கடி உபயோகப்படுத்தும் நிலை ஏற்படும். அந்த சமயங்களில் ஒவ்வொரு முறையும் அந்த இணையதளத்தின் முழு யூஆர்.எல் முகவரியையும் டைப் அடிப்பதில் எரிச்சலாக இருக்கும். இந்த நேரங்களில் நீங்கள் ஆட்டோ ஃபில் வசதியை பயன்படுத்தலாம்.

இவ்வாறு பயன்படுத்தினால் குறிப்பிட்ட இணையதளத்தின் முகவரியின் முதல் ஒன்று அல்லது இரண்டு எழுத்துக்களை டைப் செய்தால் அந்த இணையதளத்தின் முழு முகவரியும் வந்துவிடும். இந்த வசதியை நீங்கள் பெற Settings → Passwords and Forms சென்று அதில் உள்ள ஆப்சனில் Autofill என்பதை எனேபிள் செய்தால் போதும்  

இணையதள பக்கத்தை பிரிண்ட் எடுக்க வேண்டுமா?

இணையதள பக்கத்தை பிரிண்ட் எடுக்க வேண்டுமா? நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் ஒரு பக்கத்தை பிரிண்ட் எடுக்க வேண்டும் என்றால் குரோம் செட்டிங்ஸ் சென்று அதில் உள்ள Cloud Printஐ கிளிக் செய்தால் உங்கள் இணையதள பக்கம் பிரிண்ட் எடுக்க தயாராகிவிடும்

உங்களை தவிர வேறு யாரேனும் உங்கள் கம்ப்யூட்டரை பயன்படுத்துகிறார்களா?

உங்களை தவிர வேறு யாரேனும் உங்கள் கம்ப்யூட்டரை பயன்படுத்துகிறார்களா?

சில சமயம் உங்கள் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பை உங்களுடைய நண்பர் பயன்படுத்த கேட்கலாம். அந்த சமயத்தில் உங்களுடைய டேட்டாக்களை அவர் பார்க்காதவாறு செய்யத்தான் கெஸ்ட் பிரெளசிங் வசதி குரோமில் உள்ளது. செட்டிங்ஸ் சென்று இதை எனேபிள் செய்துவிட்டால் அவர் பயன்படுத்தும் குரோம் பிரெளசரில் உங்கள் டேட்டா எதுவுமே தெரியாது.

தற்ஸ்  தமிழ்.
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.