Jump to content

இறைமைக்கு ஆபத்து


Recommended Posts

இறைமைக்கு ஆபத்து

 

பூகோள அர­சி­யலில் அண்­மைக்­கா­லத்தில் பல்­வேறு மாற்­றங்கள் நிகழ்ந்­தி­ருக்­கின்­றன. நிகழ்ந்த வண்­ண­மு­மி­ருக்­கின்­றன. எதிர்­கா­லத்தில் நிக­ழவும் இருக்­கின்­றன. இவ்­வா­றி­ருக்­கையில் இந்­துமா சமுத்­திரம் முதல் வல்­ல­ர­சு­களின் கடற்­ப­ரப்­புக்­களில் அடுத்­த­டுத்து யுத்­தப்­ப­யிற்­சி­களும் ஒத்­தி­கை­களும் இடம்­பெற்­ற­வண்­ண­மி­ருக்­கின்­றன.

இத்­த­கை­ய­தொரு சூழ­மைவில் உலக அமை­தியை நிலை­பெ­றச்­செய்­வ­த­னையே பிர­தான இலக்­காக கொண்டு செயற்­படும் ஐக்­கிய நாடுகள் அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் அந்­தோ­னியோ குத்­தேரஸ். ஐரோப்­பிய கண்­டத்­தினுள் தீவி­ர­ம­டைந்து வரும் முறு­கல்கள் குறித்து தனது கரி­ச­னையை குறிப்பிட்டு வெளியிட்ட அறிக்­கையில்,

ஜன­ரஞ்­சகம், தேசியவாதம் மற்றும் பிரி­வி­னை­வாதம் என்­ப­ன­வற்றால் புதிய அச்­சு­றுத்­தல்­களும், சவால்­களும் உரு­வாகி வரு­கி­ன்றன. பல சம­யங்­களில் அமைதி உடன்­ப­டிக்­கைகள் அமுல்­ப­டுத்தப் படு­வ­தில்லை. ஜன­நா­யக நிர்­வாகம் மற்றும் சட்­டப்­ப­டி­யான ஆட்சி முறை­க­ளுக்கு எதி­ரான சவால்­களே மோதல்­க­ளுக்கு கார­ண­மா­கின்­றன.

அர­சியல் ஆதா­யத்­துக்­கா­கவும் சுய இலா­பத்­துக்­கா­கவும் இன, பொரு­ளா­தார, மத மற்றும் ஜாதி ரீதி­யி­லான பதற்­றங்கள் உரு­வாக்­கப்­ப­டு­கின்­றன இதனை சரி­யான முறையில் கையாண்டு தடுக்க வேண்டும் என பகி­ரங்­க­மான கோரிக்­கை­யொன்றை முன்­வைத்­துள்ளார்.

இவ்­வாறு உலக நாடு­களில் அர­சியல் பொரு­ள­ாதார ரீதி­யி­லான ஸ்திரத்­தன்மை கேள்­விக்­குள்­ளா­கி­யி­ருக்­கின்ற நிலையில் நீண்­ட­கா­ல­மாக நீடித்­துக்­கொண்­டி­ருக்கும் தமி­ழர்­ பி­ரச்­சி­னைக்கு தீர்வு கிட்­டு­வ­தற்­கான சந்­தர்ப்பம் தற்­போது ஏற்­பட்­டுள்­ள­தாக பல்வேறு தரப்­பி­ன­ராலும் கூறப்­ப­டு­கின்­றது.

மறு­பக்­கத்தில் இறுதி யுத்தம் உட்­பட இந்த நாட்டின் தேசிய இன­மான தமி­ழினம் இரண்­டாம் ­த­ரத்தில் கையா­ளப்­பட்டு அடக்­கு­வ­தற்கு முனைந்­த­மையால் ஏற்­பட்ட மனித உரி­மைகள் மற்றும் மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் தொடர்­பா­ன ­பொ­றுப்­புக்­கூறல் குறித்த தீர்­மா­னத்­தினை அர­சாங்கம் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் இணை அனு­ச­ரணை வழங்கி நிறை­வேற்றி 18 மாதங்கள் கடந்­துள்­ளன.

அந்த தீர்­மா­னத்தின் பரிந்­து­ரை­களை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் நீண்­ட­தொரு கால­தா­ம­தம் உள்ள நிலையில் ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்­டத்­தொடர் இம்­மாதம் 27 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 24 ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்­ளது.

இக்­கூட்­டத்­தொ­டரில் இலங்கை அர­சாங்கம் 18 மாத­கால அவ­கா­சத்தை கோரு­வ­தற்கு ஐ.நா. உறுப்பு நாடுகள், அமைப்­பு­க­ளுடன் இரா­ஜ­தந்­திர ரீதி­யான நகர்­வு­களை மேற்­கொண்­டி­ருக்­கின்ற இக்­கா­லப்­ப­கு­தியில் பல்­வேறு நாடு­களின் இரா­ஜ­தந்­தி­ரிகள் இலங்­கைக்கு உத்­தி­யோகபூர்­வ­மான களப்­ப­ய­ணங்­களை மேற்­கொண்டு கண்­கா­ணிப்­புக்­களை செய்து செல்­கின்­றனர்.

இவ்­வா­றான விஜ­யங்கள் மூலம் உள்­நாட்டில் உள்ள யதார்த்­தங்­கள் வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்­களே அதி­க­முள்­ளதால் பாதிக்­கப்­பட்ட தமி­ழி­னத்­திற்கு சாத­க­மாக அமை­வ­தற்­கான சந்­தர்ப்­பங்கள் அதி­க­முள்­ள­தாக கரு­தப்­பட்­டாலும் கடந்த சனிக்­கி­ழமை முதல் இன்று சனிக்­கி­ழமை வரை­யி­லான ஏழு தினங்­க­ளுக்குள் இலங்­கையின் அர­சியல், பொரு­ள­ாதா­ரத்தில் செல்­வாக்குச் செலுத்­திக்­கொண்­டி­ருக்கும் பிக் திரிஸ் எனச் சொல்­லப்­ப­டு­கின்ற இந்­தியா, அமெ­ரிக்கா, சீனா ஆகிய நாடு­களின் கொள்கை ரீதி­யாக முடி­வெ­டுக்கக் கூடிய தரத்தில் உள்ள குழு­வினர் அடுத்­த­டுத்து வந்து சென்­றி­ருக்­கின்­றார்கள்.

பொரு­ளா­தார, வர்த்­தக மற்றும் இரு­நாட்டு உற­வு­களை மேலும் வலுப்­ப­டுத்தல் என்ற தோர­ணையில் அமைந்­தி­ருக்­கின்ற இந்த மூன்று நாடு­களின் முக்­கி­யஸ்­தர்­களின் உத்­தி­யோகபூர்வ விஜ­யங்கள் நிச்­ச­ய­மாக தமிழர் இனப்­பி­ரச்­சி­னையில் பிர­தி­ப­லிக்கப் போவ­தில்லை. ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையிலும் பிர­தி­ப­லிக்­கப்­போ­வ­தில்லை என்­பது வெளிப்­ப­டை­யா­கின்­றது.

அவ்­வா­றாயின் இந்த நாடு­களின் பிர­தி­நி­திகள் வெறு­மனே பொரு­ளா­தார, வர்த்­தக மற்றும் இரு நாட்டு உற­வு­களை மேலும் வலுப்­ப­டுத்தல் ஆகி­ய­வற்­றுக்­காக அவ­ச­ர­அ­வ­ச­ர­மாக அடுத்­த­டுத்து வர­வேண்­டிய அவ­சியம் என்ன? அதிலும் இந்­திய, அமெ­ரிக்க நாடு­களின் குழு­வினர் அரச நெறி­மு­றையின் அடிப்­ப­டையில் ஜனா­தி­பதி, பிர­தமர், சபா­நா­யகர், எதிர்க்­கட்­சித்­த­லைவர் என சந்­திப்­புக்­களை நடத்­தி­யி­ருந்த போதும் சீன குழு­வினர் அவ்­வா­றில்­லாது ஜனா­தி­பதி, பிர­த­ம­ருக்கு அடுத்து முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவைச் சந்­தித்­தி­ருக்­கின்­றார்கள்.

ஆகவே கொள்கை ரீதி­யாக முடி­வெ­டுக்கும் நிலையில் உள்ள இத்­த­ரப்­பி­னரின் விஜ­யங்­களின் பின்­ன­ணியில் நிச்­ச­ய­மாக தமது நலன் சார்ந்த விட­யங்கள் இல்­லா­ம­லி­ருக்கப் போவ­தில்லை என்­பது நிதர்­ச­ன­மான உண்மை. கடந்த ஆட்சி மாற்­றத்தின் மூல­கா­ர­ணி­யாக பிராந்­திய மற்றும் பூகோள அர­சி­யலின் செல்­வாக்கு இருந்­தி­ருக்­கின்­றது என்­பது பகி­ரங்­க­மா­கி­யுள்ள நிலையில் இந்த விஜ­யங்­க­ளையும் அத­னுடன் தொடர்பு படுத்­தியே பார்க்க வேண்­டி­யுள்­ளது. மேலும் இந்த மூன்று நாட்டுக் குழு­வி­னரின் விஜ­யங்கள் தொடர்பில் உள்­ளார்ந்த விட­யங்­களை தனித்­த­னி­யான நோக்க வேண்­டி­யுள்­ளது.

 

இந்­திய வெளியு­ற­வுச் ­ செ­ய­லா­ளரின் விஜயம் 

இந்­திய வெளியு­ற­வுச் ­செ­ய­லாளர் ஜெய்­சங்கர் கடந்த சனிக்­கி­ழமை இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்தார். இலங்­கைக்­கான புதிய இந்­திய தூதுவர் நிய­மிக்­கப்­பட்­டுள்ள நிலையில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை முழு­வதும் இலங்­கைக்­கான புதிய இந்­திய உயர்ஸ்­தா­னி­க­ரா­ல­யத்தில் வெளியு­றவு விவ­கா­ரங்கள் தொடர்­பான நெறிப்­ப­டுத்­தல்­களை மேற்­கொண்ட பின்னர் கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று அர­சியல் தரப்­பி­ன­ருடன் சந்­திப்­புக்­களை நடத்­தி­யி­ருந்தார்.

தமிழ் முற்­போக்கு கூட்­டணி, முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் ஆகிய தரப்­புக்­க­ளை தனித்­த­னி­யாக சந்­தித்து அவர்­களின் கோரிக்­கை­களை கேட்­ட­றிந்து கொண்­டவர் பிர­தான எதிர்க்­கட்­சி­யா­க­வி­ருக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­ன­ருடன் முக்­கிய சந்­திப்­பொன்றை நடத்­தி­யி­ருந்தார்.ஆட்சி மாற்­றத்தின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினுள் சில முரண்­பா­டுகள் காணப்­ப­டு­கின்ற நிலையில் நான்கு பங்­கா­ளிக்­கட்­சி­களின் நான்கு தலை­வர்கள், ஊட­கப்­பேச்­சாளர் ஆகியோர் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும், எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தலை­மையில் இந்­திய வெளியு­றவுச் செய­லா­ள­ருடன் சந்­திப்பை நடத்­தி­யி­ருந்­தனர்.

இதன்­போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­யான சுரேஷ்­ பி­ரே­மச்­சந்­திரன் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ன­பத்தில் கூறப்­பட்­­டுள்ள நிரந்­தர அர­சியல் தீர்­வுக்­கான விட­யத்தில் காணப்­படும் தமிழர் தாய­க­மான வடக்கு, கிழக்கு இணைப்பு குறித்து கேள்வி எழுப்­பி­யி­ருக்­கின்றார். சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரனின் கேள்­வியில் இந்­திய–இலங்கை ஒப்­பந்­தத்­தினை மேற்­கொள்­வ­தற்கு இந்­தியப் படையினர் இரத்தம் சிந்­தி­யி­ருக்­கின்­றார்கள். ஈ.பி.ஆர்.எல்.எப்.வும் அதற்­கான பங்­க­ளிப்பைச் செய்து இழப்­புக்­களைச் சந்­தித்­தி­ருக்­கின்­றது.

அந்த ஒப்­பந்­தத்தின் மூலம் கொண்­டு­வ­ரப்­பட்ட வடக்கு, கிழக்கு இணைப்பு தற்­போது மறுக்­கப்­ப­டு­கின்­றது. ஆகவே வடக்கு, கிழக்கு இணைப்பை இந்­தியா வலி­யு­றுத்த வேண்டும் எனக் கோரி­யி­ருக்­கின்றார். அதன்­போது இந்­திய வெளியு­ற­வுச்­செ­ய­லாளர், இந்­திய இலங்கை ஒப்­பந்தம் மேற்­கொள்­ளப்­பட்ட பின்னர் எமது பிர­தமர் ராஜீவ் காந்தி கொலை செய்­யப்­பட்டார். அதன் பின்னர் பல விட­யங்கள் கடந்து விட்­டன.

தற்­போ­துள்ள அர­சியல் சூழ­மை­வுக்கு ஏற்­ப உங்­களின் யதார்த்­த­மான கோரிக்­கை­களை முன்­வை­யுங்கள். அதற்­காக வடக்கு, கிழக்கு இணைப்பை கைவி­ட­வேண்­டு­மெனக் கோர­வில்லை. பேச்­சு­வார்த்தை மேசையில் அந்த நிபந்­த­னை­யையும் வையுங்கள். ஆனால் காலத்­திற்கு பொருத்­த­மா­ன­தாகச் சொல்­லுங்கள் என பதி­ல­ளித்­துள்ளார்.

அத­னை­ய­டுத்து தான் ஜனா­தி­பதி, பிர­தமரை அடுத்து சந்­திக்­க­வி­ருப்­பதால் அவர்­க­ளி­டத்தில் வலி­யு­றுத்த வேண்­டிய முக்­கிய விட­யங்களை மட்டும் கூறுங்கள் எனவும் கட்­டுக்­கோப்­பாக கோரி­யுள்ளார் இந்­திய வெளியு­ற­வுச்­செ­யலர். இச்­ச­ம­யத்தில் தான் தடைப்­பட்­டுள்ள புதிய அர­சி­ய­ல­மைப்பு செயற்­பா­டுகள், தமிழ் மக்­களின் உட­ன­டிப்­பி­ரச்­சி­னைகள் ஆகி­யன தொடர்பில் உட­ன­டி­யாக நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும் என்­பதை அர­சாங்­கத்­திடம் வலி­யு­றுத்­து­மாறு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் முக்­கி­யஸ்­தர்கள் கேட்­டுக்­கொண்­டனர்.

அதற்­க­டுத்து சித்­தார்த்தன் எம்.பி வடக்கில் வேலை­வாய்ப்பு வழங்­கு­வதில் காணப்­படும் நிலை­மை­க­ளையும் வேலை­வாய்ப்­புக்­கான தேவை­க­ளையும் கூறி­ய­போது இந்­திய வெளிவி­வ­காரச் செய­லாளர் வடக்கு கிழக்கு உட்­கட்­ட­மைப்பு அபி­வி­ருத்­திகள் தொடர்­பா­கவும் அதன்­போது வேலை­வாய்ப்­புக்கள் உரு­வாக்­கப்­படும் எனவும் கூறி­ய­தோடு நாங்கள் செய்­வ­தற்கு தயா­ரா­கவே இருக்­கின்றோம். ஆனால் நீங்கள் தான் விரும்­பா­தி­ருக்­கின்­றீர்கள் என்ற பொருள்­படும் வகை­யிலும் கருத்து வெளியிட்­டி­ருக்­கின்றார்.

அத­னை­ய­டுத்து அவர் ஜனா­தி­பதி, பிர­தமர் ஆகி­யோரைச் சந்­தித்­தி­ருந்த போதும் அச்­சந்­திப்­புக்கள் தொடர்­பி­லான தக­வல்கள் வெளியில் கசி­யாத வகையில் இறுக்­க­மாக இருந்­தன. எவ்­வா­றா­யினும் 2017இற்குள் நீண்­ட­கா­ல­மாக இருந்து வரும் இப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­ப­ட­வேண்டும். தொடர்ந்தும் நீட்டிச் செல்ல முடி­யாது என்­பதைச் சொல்­லவே தான் இப்­ப­ய­ணத்தை மேற்­கொண்­டி­ருப்­ப­தா­கவும் குறிப்­பிட்ட இந்­திய வெளிவி­வ­கார செய­லாளர் அமெ­ரிக்கா, ஜப்பான் உள்­ளிட்ட சர்­வ­தேச நாடு­க­ளுடன் இணக்­கப்­பாட்டின் அடிப்­ப­டையில் பய­ணிக்க ஆரம்­பித்­தி­ருக்­கின்றோம் எனவும் குறிப்­பிட்­ட­தாக இரா­ஜ­தந்­திர தக­வல்கள் தெரி­விக்­கின்ற நிலையில் அந்த செய்­தியை ஜனா­தி­பதி பிர­தமர் இடத்தில் நிச்­சயம் வலி­யு­றுத்­தி­யி­ருப்பார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அவ­ரு­டைய விஜயம் இவ்­வாறு தான் நிறை­வ­டைந்­தி­ருக்­கின்­றது.

 

அமெ­ரிக்க காங்­கிரஸ் குழுவின் விஜ­யமும் சந்­திப்­புக்­களும்  

அதற்கு அடுத்தபடி­யாக அமெ­ரிக்க காங்­கிரஸ் குழு­வினர் இலங்­கைக்கு கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று வருகை தந்­தி­ருந்­தனர். புதிய ஜனா­தி­ப­தி­யாக டொனால்ட் ட்ரம்ப் பதவி­யேற்ற பின்னர் இலங்­கைக்கு வருகை தரும் கொள்­கை­ய­ளவில் தீர்­மா­ன­மெ­டுக்க வல்ல முக்­கிய முதற்­கு­ழு­வாக இக்­குழு காணப்­ப­டு­கின்­றது.

மூன்று நாள் உத்­தி­யோகபூர்வ விஜயம் மேற்­கொண்டு வருகை தந்­துள்ள அக்­கு­ழுவில் அமெரிக்க சபை ஜன­நா­யக கூட்­டாண்­மையின் தலைவர் பீற்றர் ரொஸ்கம் தலை­மையில் இணைத்­த­லைவர் டேவிட் பிரைஸ், மற்றும் ஜெரி கொனோலி, அட்­ரியன் ஸ்மித் ஆகியோர் இடம்­பெற்­றுள்ளனர்.

அமெ­ரிக்­காவின் பிர­தான கட்­சி­க­ளான குடி­ய­ரசுக் கட்சி மற்றும் ஜன­நாயகக் கட்சி ஆகிய இரண்டு கட்­சி­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தான அமெ­ரிக்க சபை ஜன­நா­யக கூட்­டாண்மை ஆணைக்­கு­ழுவில் இரு­பது உறுப்­பி­னர்கள் உள்­ளனர். அதில் நான்கு உறுப்­பி­னர்­களே இங்கு வரு­கை ­தந்­துள்­ளனர்.

ஏனைய நாடு­க­ளுடன் இரு­த­ரப்பு உற­வு­களை வலுப்­ப­டுத்­து­வ­தோடு சட்­ட­மன்ற நிறு­வ­னங்­களின் பதி­ல­ளிக்கும் தன்மை, சுதந்­திரம், வினைத்­திறன் மிக்க அபி­வி­ருத்தி ஆகிய விட­யங்­களை மேம்­ப­டுத்­து­வ­தையும் இலக்­காக கொண்­டி­ருக்­கின்ற இக் கட்­ட­மைப்பின் உறுப்­பி­னர்­களும் ஜனா­தி­பதி, பிர­தமர், எதிர்­க்கட்­சித்­த­லைவர், சபா­நா­யகர் உட்­பட ஊட­கத்­துறை அமைச்சர், இளம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், பாரா­ளு­மன்ற பெண் பிர­தி­நி­திகள், சிவில் சமூகத்­தினர் என பல தரப்­பட்ட குழு­வி­ன­ரையும் சந்­தித்தி­ருந்­தனர்.

குறிப்­பாக தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் எதிர்­க்கட்­சித்­த­லைவர் மற்றும் துறைசார் மேற்­பார்வைக் குழுவில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலைவர் மாவை.சேனா­தி­ராஜா தலை­மையில் சந்­தித்தி­ருந்­தனர்.

தாங்கள் இலங்­கையில் தற்­போ­தைய அவ­தா­னிப்­புக்கள் தொடர்பில் அறிக்­கை­யொன்றை வாஷிங்­ட­னுக்கு சமர்ப்­பிப்­ப­தாக எதிர்­க்கட்­சித்­த­லைவர் சம்­பந்­த­னி­டத்தில் உறு­தி­ய­ளித்­த­தோடு துறைசார் மேற்­பார்வை குழுவில் அங்கம் வகிக்கும் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­டத்தில் தமிழ் மக்­க­களின் தேவைகள், பாதிப்­புக்கள் தொடர்பில் புள்­ளி­வி­ப­ரங்­களை கோரி­ய­போதும் அவர்­களால் அதனை உடன் சமர்ப்­பிக்க முடி­யாது போயி­ருக்­கின்­றது.

இக்­கு­ழு­வி­னரும் உட­ன­டிப்­பி­ரச்­சி­னைகள் குறித்தே அதி­க­ளவில் கவ­னத்தை செலுத்­து­கின்­றனர் என்­பதை அவர்­களின் வினாக்கள் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­ததாக அதில் கலந்து கொண்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருந்தார். இவ்­வாறு அச்­சந்­திப்பு இருக்­கையில் அதற்­க­டுத்து சீன குழ­ுவினர் வருகை தந்­தி­ருந்­தனர்.

 

தமிழ் தரப்பை கருத்தில்  எடுத்­தி­ராத சீனக்­குழு 

சீன அர­சி­யலில், பொரு­ளா­தா­ரத்தில் கொள்­கை­ய­ளவில் தீர்­மா­னத்தை எடுக்­கும் சக்தி மிக்க சீன கம்­யூனிஸ்ட் கட்­சியின் வெளிவி­வ­கா­ரங்­க­ளுக்­கான திணைக்­கத்தின் தலைவர் சோங்க டாவோ தலை­மை­யி­லான குழு­வினர் ஜூன் மாதம் சீனாவில் நடை­பெ­ற­வுள்ள மாநாடு ஒன்றில் கலந்­து­கொள்­வ­தற்கு அழைப்பு விடு­ப்ப­தையே வெளிப்­ப­டை­யான தோர­ணையாக் கொண்டு வருகை தந்­தி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கின்­றது.

அவ்­வா­றா­ன­தொரு நிகழ்­வுக்­கு­ அ­ழைப்பு விடுப்­ப­தற்கு வருகை தந்­தி­ருந்தால் அர­சியல் நெறி­மு­றையின் பிர­காரம் ஜனா­தி­பதி, பிர­தமர் ஆகி­யோ­ருக்கு அடுத்து இந்த நாட்டின் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரையும் சந்­தித்­தி­ருக்க வேண்டும். ஆனால் முன்னாள் ஜனா­தி­ப­தி­யையே அக்­கு­ழு­வினர் சந்­தித்­தி­ருந்­தனர். அத்துடன் அனைத்து வகை­யிலும் சீனா­வுடன் உற­வு­களை பலப்­ப­டுத்திக் கொள்ள வேண்­டு­மென தற்­போ­தைய ஜனா­தி­பதி குறிப்­பி­டு­வது ஒரு­பு­ற­மி­ருக்­கையில் சீனக்­கு­ழ­ுவினர் இலங்­கையின் உண்­மை­யான நண்­ப­னாக எப்­போதும் சீனா இருக்கும் எனக் குறிப்­பிட்­டுள்­ளனர். அத்­துடன் பிர­த­ம­ரைச் சந்­தித்த போது சீனா தற்­போது மேற்­கொண்­டு­வரும் அபி­வி­ருத்தித் திட்­டங்கள் குறித்து கலந்­து­ரை­யா­டப்­பட்­டி­ருக்­கின்­றது. மேலும் முன்னாள் ஜனா­தி­ப­தியை இக்­கு­ழு­வினர் சந்­தித்த போதும் சீனாவின் திட்­டங்கள் குறித்தே கலந்­து­ரை­யா­டப்­பட்­டி­ருக்­கின்­றது.

 

தமது நலன்­களே  பின்­ன­ணி­யா­கின்­றன  

மேற்­கண்ட விட­யங்­களே மூன்று நாடு­களின் குழு­வி­ன­ரு­டனான சந்­திப்­புக்­களின் உள்­ளார்ந்த விட­யங்கள் அமைந்­தி­ருக்­கின்­றன. தமி­ழர்­களின் பிரச்­சினை தோற்­றம்­பெற்ற காலம் முதல் ஆய­ுதப்­ப­யிற்சி, இந்­திய – இலங்கை ஒப்­பந்தம், தமிழ் மக்­களின் உரி­மைக்­கான குரல் எழுப்­பி­யமை என பல உத­வி­களை செய்த இந்­தியா யுத்தம் நிறை­வுற்­றதன் பின்­னரும் ஆட்சி மாற்றம் இடம்­பெற்­றதன் பின்­னரும் தற்­போது வேறொரு நிலைப்­பாட்டில் செல்­வ­தற்கு என்ன காரணம்?

சம்பூர் விட­யத்தில் ஆணை வழங்கும் மக்­க­ளுக்­காக, சாதா­ரண மக்­க­ளுக்­காக பூர்­வீக நிலத்தைக் கொண்ட மக்­க­ளுக்­காக, நாட்டின் சூழல் பாது­காப்­புக்­காக குரல்­கொ­டுத்­தமை அம்­மா­வட்­டத்தை பிர­தி­நி­தித்­துவப்­படுத்தி தற்­போது எதிர்­க்கட்­சித்­த­லை­வ­ராக இருக்கும் சம்­பந்­தனின் தவறா? சம்பூர் விட­யத்தில் தாம் கொண்­டி­ருந்த பாரிய எதிர்­பார்ப்பு சிதைக்­கப்­பட்­டது என்­ப­தற்­கான பழி­வாங்­கலா தற்­போ­தைய கைவி­ரிப்பு என்ற கேள்வி இயல்­பா­கவே எழு­கின்­றது.

 

மறு­பக்­கத்தில் இந்­தி­யாவும் அமெ­ரிக்­காவும் தமிழர் தரப்பை குறிப்­பாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை சந்­திப்­ப­தற்கும் தமி­ழர்கள் விட­யத்தில் அக்­கறை காட்­டு­வ­தாக கூறிக்­கொண்­டி­ருப்­ப­தற்கும் அடிப்­ப­டைக்காரணம் என்ன? இந்­தி­யாவைப் பொறுத்­த­வ­ரையில் தனது வர்த்­த­கத்­தையும், பொரு­ளா­தா­ரத்­தையும் இலங்­கை ஊடாக விரி­வு­ப­டுத்­து­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்­ளது.

குறிப்­பாக தமி­ழ­கத்­தி­லி­ருந்து தரை­வ­ழிப்­பா­தை­யொன்று இலங்­கையின் வட­பு­லத்­தி­ற்கு அமைப்­பது இல­கு­வா­னது. அந்த திட்டம் நிறை­வேற்­றப்­படும் பட்­சத்தில் அதன் மூலம் ஒரு­கல்லில் இரண்டு மாங்காய் கதை­யாக மன்னார், காங்­கே­சன்­துறை, மற்றும் பலாலி ஆகி­ய­வற்றை பயன்­ப­டுத்தி கடல் ரீதி­யிலும் வான் ரீதி­யிலும் தனது வர்த்­தக செயற்­பா­டு­களை மேற்­கொள்ள முடியும். இதன்­மூலம் குறைந்த செலவில் தனது பொரு­ளா­தா­ரத்தை வலு­வாக கட்­டி­யெ­ழுப்­பிக்­கொள்ள முடியும் என்­பதே பிர­தான இலக்­கா­கின்­றது. 

அதே­நேரம் அமெ­ரிக்­காவைப் பொறுத்­த­வ­ரையில் திரு­கோ­ண­மலை இயற்கைத் துறை­மு­கத்தின் அவ­சி­யத்தை நன்­க­றிந்­து­கொண்­டுள்­ளது. பூகோள ரீதியில் இலங்கை கொண்­டி­ருக்கும் அமை­வி­டத்தின் வரப்­பி­ர­சா­தத்தைப் பயன்­ப­டுத்தி ஒட்­டு­மொத்த தெற்­கா­சி­யா­வையும் தனது கட்­டுக்­கோப்­புக்குள் வைத்­துக்­கொள்­ளவும் சீனா­வு­டனான பொரு­ளா­தார வல்­லா­திக்க போட்­டியை இல­கு­வாக கையாள்­வ­தற்­கா­கவும் திரு­கோ­ண­ம­லையை தன்­ன­கப்­ப­டுத்­து­வ­தற்­காக மதில்மேல் பூனை­யாக பார்த்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது. இந்த கருத்து தொடர்பில் மாறு­பட்ட அர்த்­தப்­ப­டுத்­தல்­களை வாதத்­திற்­காக கூறி­னாலும் இதுதான் அமெ­ரிக்க ஏகா­தி­பத்­தி­யத்தின் நிலைப்­பா­டாக உள்­ளது.

அதே­நேரம் சீனா முத்­து­மாலை திட்­டத்தை முழு­மைப்­படுத்­து­வ­தற்கு இலங்­கையின் தென் பகுதி கடற்­ப­ரப்பு முழுக்க முழுக்க அவ­சி­ய­மாக கரு­து­கின்­றது. ஆகவே தான் கடந்த ஆட்­சி­யா­ளர்­க­ளையும் தற்­போ­துள்ள ஆட்­சி­யா­ளர்­க­ளையும் அந்­நாட்டு ஆளும் தரப்­பினர் சம­ர­ச­மாக வைத்­துக்­கொள்­வ­தற்கு முயல்­வதோடு இலங்­கையின் ஆட்­சி­யா­ளர்­களை தமது கட்­டுப்­பாட்­டுக்குக் ­கொண்டு வந்தால் பூகோள மற்றும் பிராந்­திய சக்­தி­களின் ஆட்டம் அடங்­கிப்­போகும் என்­பதும் அவர்­களின் திட்­ட­மா­கி­வி­ருக்­கின்­றது. இத்­த­கைய பின்­ன­ணியைக் கொண்­டி­ருப்­ப­தால் தான் அந்­நாட்டுத் தரப்­பினர் அதி­க­ளவில் தமிழர் தரப்பு விவ­கா­ரங்­க­ளிலோ அல்­லது வடக்கு, கிழக்கு புலங்­க­ளிலோ பாரிய தலை­யீ­டு­களை செய்­வ­தில்லை.

இவ்வாறு தமக்கான நலன்களை மட்டும் மையமாக வைத்தே பிக் திரிஸ் எனப்படும் அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் இலங்கையின் அரசியல், பொருளாதாரத்தில் செல்வாக்குச் செலுத்திக்கொண்டிருக்கின்றன. தமது நலன்களுக்கான போட்டியில் தான் தமிழர்கள் விவகாரத்திலும் அவை தலையீடு செய்ய ஆரம்பித்தன. தற்போதும் அதனை கையாண்டவண்ணமுள்ளன என்பதை இத்தனை காலத்திற்கு பின்னராவது விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கின்றது.

தற்போதைய நிலையில் பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பும், ஏனைய சிறுபான்மை தேசிய இனங்களும் பிரிக்கப்படாத பிளவுபடுத்தப்படாத ஐக்கிய இலங்கைக்குள்ளேயே தேசிய பிரச்சினைக்கான தீர்வு காணப்படவேண்டும். சமத்துவம் வழங்கப்பட்டு இலங்கையர்கள் என்ற அடையாளம் அனைவருக்கும் உரித்தாகவேண்டும் என்பதிலும் உறுதியாகவிருக்கின்றார்கள்.

அவ்வாறான நிலையில் இலங்கை தனது இறைமையை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. இறைமை பாதுகாக்கப்படவேண்டுமாயின் நாடு ஒரு தேசமாக ஒன்றிணைய வேண்டும். தேசிய இனங்களுக்கான சமத்துவம் அங்கீகரிக்கப்படவேண்டும். இருதரப்பு புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அவ்வாறான புரிந்துணர்வுகள் ஏற்படுத்தப்படுவதற்கு இரு தரப்பிற்குள் காணப்படும் அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் இதய சுத்தியுடன் நடந்துகொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

இறைமை மக்களுக்குச் சொந்தமானது. மக்கள் இறைமையைக் கையில் வைத்திருக்கின்றோம் என்ற நிலைப்பாட்டில் உள்ள பெரும்பான்மையினர் அதிகாரத்தைப் பயன்படுத்தி அடக்குமுறையின் பால் ஏனைய இனங்களுக்கான அங்கீகாரத்தை தொடர்ச்சியாக மறுதலிக்கும் பட்சத்தில் பூகோள போட்டிக்குள் சிக்கியுள்ள இலங்கைக்கு எதிர்காலமே முழுமையான இருள்சூழ்ந்ததாக மாறிவிடும் ஆபத்தே உள்ளது.

இந்த யதார்த்தத்தினை தொடர்ந்தும் நிராகரிக்காது பெரும்பான்மை மற்றும் தமிழ், முஸ்லிம் அரசியல் அதிகாரவர்க்கங்களும் சரியான புரிதல்களை கொண்டு இராஜதந்திர செயற்பாடுகளை அடுத்த கட்டமாக முன்னெடுக்க வேண்டும். சர்வதேசம், பிராந்தியம் என பிறரை நம்பிக்கொண்டு காலத்தை நகர்த்தாது நாட்டிற்காக ஒன்றிணைய வேண்டிய சந்தர்ப்பத்தினை தற்போதும் தவறவிடவிடுவார்களாயின் அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்பால் பேரலையில் காணாமல்போன மண்திட்டாக இலங்கைத் தீவு மாறிவிடும். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-02-25#page-5

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.