Jump to content

121 முதல்வர்கள்... 1 எம்.எல்.ஏ!


Recommended Posts

மிஸ்டர் கழுகு: 121 முதல்வர்கள்... 1 எம்.எல்.ஏ!

 

‘‘ஆறு மனமே ஆறு... அந்த ஆண்டவன் கட்டளை ஆறு...’’ என்ற பழைய சினிமா பாடலைப் பாடியபடியே அறைக்குள் நுழைந்தார் கழுகார்.

p42a.jpg‘‘புரிகிறது... எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ-க்களில், இடம் மாறத் துடிக்கும் அந்த ஆறு பேர்தானே?’’

‘‘ஆமாம். ஆறு பேர் தாவினால், அ.தி.மு.க-வின் மெஜாரிட்டி போய்விடும். எடப்பாடியின் முதல்வர் நாற்காலி தடதடக்கும். அதனால், எடப்பாடியை ஆதரிக்கும் 121 எம்.எல்.ஏ-க்களின் காட்டில் அதிர்ஷ்ட மழை கொட்டுகிறது. இந்த சீசன், அவர்களைப் பொறுத்தவரையில் ஒரு பொற்காலம் என்றே சொல்லித் திரிகிறார்கள். எடப்பாடியின் மெஜாரிட்டி ‘வீக்னஸை’ நன்றாகவே புரிந்துவைத்திருக்கும் இந்த எம்.எல்.ஏ-க்கள், காலரைத் தூக்கிவிட்டபடி உலா வர ஆரம்பித்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட இந்த 121 பேரும் முதல்வராகவே எங்கும் பவனி வருகிறார்கள். ‘முதல்வர்’ என்ற அதிகார நாற்காலியில் இருந்தாலும், ஒரு ‘எம்.எல்.ஏ’ போல தன்னை நினைத்துக்கொண்டு திருப்தி அடைய வேண்டிய நிலை எடப்பாடிக்கு! அவரை யாரும் முதல்வராக நினைக்கவில்லை. அரசின் மீதான நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றபிறகு, இந்த வாரம்தான் சில அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களும் சொந்தத் தொகுதிக்குப் போனார்கள். ஜெயலலிதா பிறந்த நாளுக்கு அவர்கள் தங்கள் தொகுதிகளில், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்கள். இதற்கான போஸ்டர்களில் ஜெயலலிதா, சசிகலா, தினகரன் படங்கள் மட்டுமே இருந்தன. மறந்தும்கூட யாரும் முதல்வர் எடப்பாடியின் படத்தைப் போடவில்லை. அவரை ஒரு பொருட்டாகவே யாரும் மதிக்கவில்லை!’’ 

‘‘ `கூவத்தூர்’ தட்சணை போக, மேலும் பல சலுகைகளை எதிர்பார்க்கிறார்களா?’’

‘‘சசிகலா தரப்பில் ஒரு கவனிப்பு, எடப்பாடி தரப்பில் ஒரு கவனிப்பு, ஓட்டெடுப்பு முடிந்ததும் கடைசியாக ஒரு கவனிப்பு... என்று ஏகத்துக்கும் எம்.எல்.ஏ-க்களைக் கவனித்தார்கள். வருடத்துக்கு ஒரு கவனிப்பு என்றும் சொல்லியிருக்கிறார்கள். இவை போக, தொகுதிகளில் வரும் அனைத்து கான்ட்ராக்ட் மற்றும் டெண்டர் விஷயங்களில் உங்களுக்கு உரிய பங்கு வந்துசேரும் என்றும் சொன்னார்களாம்.’’

‘‘எம்.எல்.ஏ-க்களுக்கு சந்தோஷமா?’’

p42.jpg

‘‘சந்தோஷம்தான். தலைமை, இறங்கிவரும் இந்தத் தருணத்தில், மேலும் சில கோரிக்கைகளையும் எம்.எல்.ஏ-க்கள் அடுக்குகிறார்கள். தென் மாவட்ட எம்.எல்.ஏ ஒருவர், ‘தலைமைச்செயலகத்தில் இனி நாங்கள் வந்தால், எந்த உயர் அதிகாரியும் மணிக்கணக்கில் காக்கவைக்கக்கூடாது. மாறுதல் ஆர்டர்களை அமைச்சரிடம் போய் வாங்கிக்கொள்ளும்படி எங்களிடம் யாரும் சொல்லக்கூடாது. எங்கள் கையில் தரவேண்டும்’ என்று கேட்டாராம். இன்னொரு எம்.எல்.ஏ, ‘சுழற்சி முறையில் எங்களுக்கும் அமைச்சர் பதவி தரப்படவேண்டும்’ என்று குரலை உயர்த்திக் கேட்டுக்கொண்டாராம். வட மாவட்ட எம்.எல்.ஏ ஒருவர், ‘பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை முன்னணி கான்ட்ராக்டர்கள் இதுவரை எங்களை மதிக்கவே இல்லை. எதைக்கேட்டாலும், கார்டனில் பேசட்டுமா என்று மிரட்டினார்கள். இனிமேல் தொகுதியில் ஏதாவது டெண்டர் விடுவது என்றால், அவர்களை, முதலில் எங்களைச் சந்தித்துவிட்டுப் போகச் சொல்லுங்கள்’ என்றாராம். பெரும்பாலான எம்.எல்.ஏ-க்கள், ‘இதுவரை எங்களை டம்மியாக கருதிவந்தவர்கள் யார் யார் என்று லிஸ்ட் வைத்திருக்கிறோம். கார்டனைச் சொல்லி பூச்சாண்டி காட்டிய அதிகாரிகள், கான்ட்ராக்டர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் ஓரங்கட்டப்பட வேண்டும். காலியாகும் பதவிகளில் நாங்கள் சொல்கிறவர்களைத்தான் நியமிக்கவேண்டும். இனி, எம்.எல்.ஏ ஹாஸ்டல்தான் முடிவுசெய்யும் என்பதைச் சொல்லிவிடுங்கள்’ என்று சசிகலா தரப்பினரிடமும், எடப்பாடி தரப்பினரிடமும் கோரிக்கை வைத்தார்களாம். மேற்கு மாவட்ட எம்.எல்.ஏ ஒருவர் சொன்னதுதான் டாப். ‘அரசுப் பணிகளில் ரெகுலராகப் பலருக்குக் கமிஷன் தரப்படுகிறதல்லவா? அதில், இனி எங்களுக்கு ஒரு பங்கு வீடு தேடி வரவேண்டும்’ என்று ஒரே போடாகப் போட்டாராம்.’’

‘‘அட...’’

‘‘ஓட்டெடுப்புக்கு முன்பு கூவத்தூரில் நடந்த விஷயங்கள் அவை. சசிகலாவும் இதற்கெல்லாம் ஓகே சொன்னாராம். பிறகு எம்.எல்.ஏ-க்களிடம் எடப்பாடி பேசியபோது, ‘இனி நீங்கள் தலைமைச் செயலகம் என்றில்லை... மாவட்ட அளவில் எங்கு போனாலும் அறிவிக்கப்படாத அமைச்சர்களாகவே நடத்தப்படுவீர்கள். அமைச்சர் பதவிக்கான அனைத்து மரியாதைகளும் உங்களுக்குத் தவறாமல் கிடைக்கும்’ என்று உத்தரவாதம் தந்தாராம். தலைமைச்செயலகத்தில் முதல்வர் இருக்கையில் எடப்பாடி அமர்ந்ததுமே, முக்கிய அதிகாரிகளிடம் ‘எங்கள் எம்.எல்.ஏ-க்களுடன் ரொம்பவும் அனுசரணையாக நடத்துகொள்ளவேண்டும். மாவட்ட கலெக்டர்களுக்கு இதை உடனே தெரியப்படுத்துங்கள்’ என்று சொன்னாராம். முதல்வர் பதவியில் ஜெயலலிதா இருந்தது வரையில், அதிகாரிகள் ஆட்சிதான் நடந்துவந்தது. எம்.எல்.ஏ-க்களை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். இப்போது நிலைமை தலைகீழ். எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆட்சி ஆரம்பித்துவிட்டது.’’

‘‘அதிகாரிகள் பயபக்தியுடன் நடந்துகொள்கிறார்களா?’’

‘‘அதுமட்டுமா? ‘ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் மாவட்ட அரசு நிர்வாகத்தில் டெண்டர், கான்ட்ராக்ட்டுகள், தற்காலிக அரசுப் பணி நியமனங்கள் உள்ளிட்ட விவகாரங்களில் ராஜ மரியாதை தரப்படவேண்டும். அவர்கள் சொல்கிற காரியங்களை மின்னல் வேகத்தில் செய்துதரவேண்டும். அரசு விழாக்களை நடத்துவதாக இருந்தால், எம்.எல்.ஏ-க்களுக்கு வசதிப்பட்ட நாளை, சீனியர் அதிகாரிகள் நேரில் போய்க் கேட்டுத் தெரிந்துகொண்டு வரவேண்டும்’ என்றெல்லாம் அரசு மேலிடத்திலிருந்து உத்தரவு போயிருக்கிறதாம்.’’

‘‘ `எல்லோரும் முதல்வர்’ திட்டமாக இருக்கிறதே?’’

‘‘ஆமாம்! பெருவாரியான எம்.எல்.ஏ-க்கள் சென்னையில்தான் முகாம் போட்டிருக்கிறார்களாம். லாயிட்ஸ் ரோட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திலும் சரி... தலைமைச் செயலகத்திலும் சரி! ஒவ்வொருவருக்கும் எப்படி மரியாதை தரப்படுகிறது என்பதைப் பலரும் நேரில் போய் பரிசோதனை செய்துகொள்கிறார்கள். அதுவும், எடப்பாடியை சந்திக்கப்போகும்போது, சாதி வாரியாகக் குறைந்தபட்சம் ஆறு எம்.எல்.ஏ-க்கள் ஒரு அணியாகத் திரண்டு, அனைவரும் ஒரே காரில் போய் இறங்குகிறார்களாம். ஆறு எம்.எல்.ஏ-க்களை ஒருசேரப் பார்த்ததும் எடப்பாடி ஒருமாதிரி ஆகிவிடுகிறாராம். அவர்கள் கேட்டதெல்லாம் கிடைக்கிறதாம்.’’

‘‘இப்படி ஆறு பேராக அணி திரண்டு போகும் டெக்னிக்கை பல எம்.எல்.ஏ-க்களும் பின்பற்றுகிறார்களா?’’

‘‘அப்படித்தான் தலைமைச்செயலக அதிகாரிகள் சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் இப்படி எம்.எல்.ஏ-க்களின் உறவினர், நண்பர், பி.ஏ என்றெல்லாம் சொல்லிக்கொண்டு நிறைய பேர் கிளம்பிவிட்டார்களாம். உளவுத்துறை அதிகாரி ஒருவர், ‘தலைமைச்செயலகத்தில், பல மீடியேட்டர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். முக்கிய துறைகளில் வேலையை முடித்துத் தருவதாகச் சொல்லி பேரம் பேசுகிறார்கள்’ என்கிறார். இவர்கள் போடும் ஆட்டத்தில், எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மீது அதிகாரிகள் வெறுப்பு அடையப்போவது உறுதி. இந்து அறநிலையத்துறை உயர் அதிகாரி ஒருவரை, கார்டன் செல்வாக்கு படைத்தவர் போனில் மிரட்டி இருக்கிறார்.’’

‘‘ம்!”

‘‘ஏண்டா இந்தப் பதவிக்கு வந்தோம் என்று எடப்பாடி கலங்கும் அளவுக்கு நிலைமை போய்க்கொண்டு இருக்கிறது. சசிகலா குடும்பம் கொடுக்கும் குடைச்சலைவிட இது அதிகம் என்று எடப்பாடி ஆட்கள் நொந்துகொள்கிறார்கள். அனைத்து எம்.எல்.ஏ-க்களையும் சமாதானம் செய்வது அவ்வளவு ஈஸியான விஷயம் அல்ல என்பதும் இவர்களுக்குத் தெரியும். இன்னொரு பக்கம், எடப்பாடி பழனிசாமி முதல்வராக முதல் கையெழுத்துப் போட்ட அடுத்த நாளே, ‘தினகரன் விரைவில் தமிழக முதல்வராகப் பதவி ஏற்றுக்கொள்வார்’ எனப் பேட்டி கொடுத்திருக்கிறார், அ.தி.மு.க-வின் நிலக்கோட்டை எம்.எல்.ஏ தங்கதுரை. இவர், சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து ஓட்டு போட்ட 122 பேரில் ஒருவர். இப்படித்தான் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது, ‘சசிகலா முதல்வராக வேண்டும்’ எனப் பேச்சை ஆரம்பித்தனர். கட்சி நிர்வாகிகளில் ஆரம்பித்து, அடுத்து எம்.எல்.ஏ-க்கள் பேசி, கடைசியில் உதயகுமார், செல்லூர் ராஜு போன்ற அமைச்சர்களே இப்படிப் பேசினர். இதன் க்ளைமாக்ஸாக பன்னீர்செல்வம் பதவி போனது. அந்த சந்தர்ப்பத்தில், ‘சசிகலா முதல்வராக வேண்டும்’ என முதலில் பேசிய எம்.எல்.ஏ-க்களில் ஒருவர், இந்த நிலக்கோட்டை தங்கதுரை. எனவே, ‘நாமும் இதைச் சொல்லாவிட்டால் தினகரன் கோபித்துக்கொள்வார்’ என பல எம்.எல்.ஏ-க்கள் இப்படிப் பேசலாம். எடப்பாடி இனி நிம்மதியாகத் தூங்குவது சந்தேகம்தான்.’’

p42e1.jpg

‘‘ஸ்டாலினின் டெல்லி பயணத்தில் என்ன நடந்ததாம்?’’

‘‘பிப்ரவரி 23-ம் தேதியன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்தார் ஸ்டாலின். ‘தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கை தீர்மானத்தை ரத்து செய்துவிட்டு, ரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும்’ என்ற கோரிக்கை மனுவை அப்போது கொடுத்தார். சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகளை அவரிடம் விவரித்தார் ஸ்டாலின். ‘தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை வெளியேற்ற இவர்கள் எல்லோரும் சபைக்குள் வர வேண்டும்’ என ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு சட்டமன்ற செயலாளர் ஜமாலுதீன் எழுதிய கடிதத்தின் நகலை வாங்கி அதிர்ச்சியுடன் படித்துப் பார்த்தாராம். அன்றிரவு ஸ்டாலின் அங்கேயே தங்கிவிட்டார். அடுத்தநாள் சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் சந்தித்தார்.

சில நாட்களுக்கு முன்பு, தமிழகத்துக்கு நீட் தேர்வில் விதிவிலக்கு அளிக்கக் கோரி, ஸ்டாலின் எழுதிய கடிதத்தை ராஜ்ய சபா எம்.பி-யான திருச்சி சிவா, பிரதமர் மோடியை நேரில் சந்தித்துக் கொடுத்தார். அப்போது, ஸ்டாலின் சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கேட்டிருக்கிறார் சிவா. ‘தாராளமாக எப்போது வேண்டுமானாலும் வரச் சொல்லுங்கள்’ என்று சிரித்தபடி சொன்னாராம் மோடி. இருவரும் தமிழக அரசியல் நிலவரம் பற்றி கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தார்களாம். ஆக, விரைவில் பிரதமரையும் ஸ்டாலின் சந்திக்கப்போகிறார். பிரதமரை சந்திக்க இதற்கு முன்பு அ.தி.மு.க சார்பிலும், தி.மு.க சார்பிலும் அப்பாயின்ட்மென்ட் கேட்டும் கிடைக்கவில்லை. திருச்சி சிவா கேட்டதும் உடனே கிடைத்திருக்கிறது. ஜனாதிபதியை ஸ்டாலின் சந்திக்க நேரம் வாங்கியதும் சிவா.

ஸ்டாலினின் டெல்லி பயணத்தில் கனிமொழி இல்லை. அவர், துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியுடன் ஆப்ரிக்க நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார். ‘முக்கியமான இந்த நேரத்தில், தான் டெல்லியில் இருக்க முடியவில்லையே’ என ஃபீல் பண்ணினாராம் கனிமொழி’’ என்றவாறே பறந்தார் கழுகார்.

படங்கள்: பா.காளிமுத்து, கே.குணசீலன், ஜெரோம்


கட்சிக்குள் சமூகக் கசப்புகள்!

‘‘அ.தி.மு.க-வின் முதல் வரிசை லீடர்களில் அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை’’ என்கிற குற்றச்சாட்டு பலமாகக் கிளம்பியுள்ளது. தற்போது கட்சி மற்றும் ஆட்சி விவகாரங்களைக் கவனிக்கும் பொறுப்பில் எடப்பாடி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, தங்கமணி, தினகரன் என ஆறு பேர் இருக்கிறார்கள். இவர்களில் தினகரனும் திண்டுக்கல் சீனிவாசனும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற நால்வரும் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதையெல்லாம் பார்க்கும் பிற சமூக எம்.எல்.ஏ-க்கள் அடிக்கடி கூடி விவாதித்து வருகிறார்கள். எடப்பாடி முதல்வர் ஆனதால், ஓ.பி.எஸ் அணிக்குத் தாவினார், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் செம்மலை. நாமக்கல் மாவட்டத்தில் தங்கமணிக்கு முக்கியத்துவம் தரப்படுவதால், எம்.பி-யான சுந்தரம், பன்னீர் அணிக்குப் போய்விட்டார். ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையனுக்கு திடீரென அடுத்தடுத்து பதவிகள் தரப்பட்டுள்ளதால், அதே சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் அதிருப்தியில் இருக்கிறார். கோவை மாவட்டத்தில் வேலுமணியின் எதிர்கோஷ்டியினரில் ஒரு தரப்பினர் பன்னீருடன் ஐக்கியமாகிவிட்டனர். அமைச்சர் பதவி கிடைக்காததால் நாடார் இன எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். இதையெல்லாம் எப்படி சரி செய்வது எனப் புரியாமல் குழம்புகிறார் எடப்பாடி.


ஜெயலலிதா இல்லை!

p42d.jpg

ஜெ. பிறந்த நாளுக்கு ஒருநாள் முன்னதாக பிப்ரவரி 23-ம் தேதி அ.தி.மு.க தலைமைக் கழகத்துக்கு வந்து டி.டி.வி.தினகரன், துணைப் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பதவியேற்றக் காட்சி, கட்சியின் சார்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தினகரன் கையெழுத்து போடும்போது டேபிளில் சசிகலா புகைப்படம் பிரதானமாக இருக்கிறது. ஆனால், ஜெயலலிதா புகைப்படம் கவனமாக மறைக்கப்பட்டுள்ளது.


p42c.jpgஅடுத்த மாற்றத்துக்கு ரெடி!

லைமைச் செயலாளர் ராம மோகன ராவ் ரெய்டில் சிக்கியபோது, புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் கிரிஜா வைத்தியநாதன். ‘எந்த சர்ச்சையும் வேண்டாம்’ என சீனியாரிட்டி அடிப்படையில் அவரை நியமித்தார் ஓ.பன்னீர்செல்வம். ஆனால், பன்னீரின் நியமனம் என்ற ஒரு காரணத்தாலேயே அவர் விரைவில் மாற்றப்படலாம் என்கிறார்கள். தலைமைச் செயலாளர் பதவிக்கான ரேஸில் இப்போது முந்துபவர், நிதித்துறை செயலாளர் சண்முகம்.

இதேபோன்ற இன்னொரு பவர்ஃபுல் பதவியான, முதல்வர் அலுவலக முதன்மைச் செயலாளர் சீட்டைப் பிடிக்கும் ஆர்வத்தில் இருக்கிறார், நிரஞ்சன் மார்டி. எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தபோது, அந்தத் துறையின் செயலாளராக அவருக்கு நெருக்கமாக இருந்தவர் நிரஞ்சன் மார்டி. புள்ளிவிவரத் துறையில் இருந்தாலும், எடப்பாடி முதல்வர் ஆன நாளிலிருந்தே, முதல்வர் அலுவலகம் பக்கம் தென்படுகிறார் நிரஞ்சன் மார்டி.

கடந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலிருந்தே பல துறைகளின் செயலாளர்கள் மாற்றப்படாமல் இருக்கிறார்கள். சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகவே ஒரே பதவியில் இருக்கிறார்கள். இவர்களில் பலரும், நடராசனுக்கு நெருக்கமானவரான, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பன்னீர்செல்வத்தின் உதவியோடு முக்கியமான பதவிகளைப் பிடிக்க போட்டிபோடுகிறார்கள்.


p42b.jpgடேவிட்சனும் 11 நாட்களும்!

ளும்கட்சியின் கோஷ்டி அரசியலுக்கு ஈடு கொடுக்கமுடியாமல், உளவுத்துறை ஐ.ஜி-யாக இருந்த சத்தியமூர்த்தி நீண்ட விடுப்பில் சென்றுவிட்டார். இந்த நிலையில், கடந்த 11 நாட்களுக்கு முன்பு, உளவுப்பிரிவின் புதிய ஐ.ஜி-யாக டேவிட்சனை நியமித்தார் அப்போதைய முதல்வர் பன்னீர்செல்வம். பொதுவாகவே, எந்த அரசியல் நிகழ்வானாலும், நியாயமில்லை என்று மனசுக்குப்பட்டால், ஆட்சி மேலிடத்திடம் நேரடியாகச் சொல்லிவிடுகிற டைப் இவர். இதனாலேயே ஐ.ஜி. பதவியை இவர் மறுத்தார். உயர் அதிகாரிகள் வற்புறுத்தியதால், வேறு வழியில்லாமல், பதவியேற்றார். 11 நாட்களே ஆன நிலையில், ‘முந்தைய முதல்வர் பன்னீர்செல்வம் நியமித்த யாரும் வேண்டாம். அவர்களை மாற்றிவிடுங்கள்’ என்கிற முடிவை எடுத்தாராம் முதல்வர் எடப்பாடி. எனவே, டேவிட்சன் மாற்றப்பட்டு, பழைய இடமான போலீஸ் வெல்ஃபர் பிரிவுக்குப் போயிருக்கிறார். புதிய உளவுத்துறை ஐ.ஜி. லிஸ்ட்டில் சத்தியமூர்த்தி, பொன்.மாணிக்கவேல், ஸ்ரீதர், தாமரைக்கண்ணன், செந்தாமரைக்கண்ணன் ஆகியோர் பெயர்கள் இருக்கின்றன. இவர்களில் யாருக்கு சான்ஸ் கிடைக்கும் என்று தெரியவில்லை.


p42f.jpg

ஜெ... ஜேஜே!

ஜெயலலிதா இருந்தபோது அவர் பிறந்தநாள் பிரமாண்டமாக, ஆடம்பரமாக நடத்தப்படும். அவர் இறந்தபிறகு வந்த முதல் பிறந்தநாள் என்பதால், அ.தி.மு.க-வினர் அமைதியாக, சோகமாகக் கொண்டாடினார்கள். அ.தி.மு.க-வில் பல்வேறு அணிகள் தலைதூக்கிவிட்டதால், ஜெ. பிறந்த நாளை அனைவரும் போட்டிபோட்டு கொண்டாடினார்கள். துணைப் பொதுச்செயலாளர் ஆன சந்தோஷத்தில் இருந்தார் தினகரன். நாடு முழுவதும் நீதி கேட்டு நெடும்பயணம் போகும் உற்சாகத்துடன் இருந்தார் பன்னீர்செல்வம். புதுக்கட்சி தொடங்கும் வேகத்தில் இருந்தார் தீபா. தனது வாழ்க்கையில் முதன்முதலாக ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து கலங்கிய மனதுடன், கையெடுத்துக் கும்பிட்டார் நடராசன். இது நான்கும் தனித்தனி இடங்களில் நடந்தவை.

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.