Jump to content

""கால அவகாசத்திற்கு ஜெனிவாவில் வாய்ப்பு''


Recommended Posts

""கால அவகாசத்திற்கு ஜெனிவாவில் வாய்ப்பு''

 

(ஆர்.யசி)

இலங்கை விவகாரத்தில் ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழு கால அவகாசம் வழங்கினாலும் குறுகிய காலத்தினுள் அரசாங்க மானது அனைத்து தீர்மானங்களையும் நிறைேவற்றுவதற்கான அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்.மாவட்ட எம்.பி.யுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.  

கால அவகாசத்திலும் காலத்தை கடத்தும் நடவடிக்கைகளை இலங்கை மேற்கொள்ள முயற்சிக்கக் கூடாது எனவும் அவர் சுட்டிக் காட் டினார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை மீதான விவகாரத்தில்  கால அவகாசம் வழங்கப்படும் என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தினை வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,  இலங்கையின் இறுதிக்கட்ட போர் குறித்த பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளில் இந்த அரசாங்கம் ஒருசில முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.குறிப்பாக காணிகளை விடுவித்தல் போன்ற விடயங்களில் நல்ல நகர்வுகளை மேற்கொண்ட போதிலும் மக்களின் பிரதான கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் நகர்வுகள் மோசமானதாகவே அமைந்துள்ளது. 

காணாமல் போனோர் விடயம் மற்றும் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பொதுமக்கள் தொடர்பில் உண்மைகளை கண்டறியும் பொறிமுறைகள் திருப்தியான வகையில் அமையவில்லை. கடந்த ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கை மேற்கொள்ளும் என கொடுத்த வாக்குறுதிகள் எவையும் பூரணப்படுத்தப்பட வில்லை. இந்நிலையில் மேலும் கால அவகாசத்தைப் பெற இலங்கை அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.

கால அவகாசத்திற்கான கோரிக்கை நிராகரிக்கப்படுகின்றது என்றால் இலங்கை விடயங்களை பூரணப்படுத்தியுள்ளது என கருதப்படலாம். ஆகவே இன்னும் சிறிது காலம் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்க வாய்ப்புகள் உள்ளது. எவ்வாறு இருப்பினும் கால அவகாசம் வழங்கப்பட்டாலும் அது குறுகிய கால அவகாசமாக அமைய வேண்டும். அதேபோல் கொடுக்கப்படும் கால அவகாசத்தில் இலங்கை அரசாங்கத்தின் பழைய தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படவேண்டும். வழங்கப்படும் காலஅவகாசத்தில் இலங்கை பொறுப்புக் கூறல் விடயத்தில் முழுமையாக செயற்படும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும். இந்த விடயங்களை நாம் வலியுறுத்தியுள்ளோம்.

அதேபோல் இலங்கை அரசாங்கம் கால அவகாசத்தை கோருவது தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகளை ஏற்படுத்தும் எண்ணத்தில் அமைய வேண்டுமே தவிர அரசாங்கம் பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக்கொள்ளும் வகையிலோ அல்லது காலத்தை கடத்தும் வகையிலோ அமையக்கூடாது. அரச தப்பினருக்கும் அதை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்துவோம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-02-25#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.