Jump to content

பிரபாகரனின் பலம் துப்பாக்கி ரவைகளில் எனது பலம் வாக்குச் சீட்டுக்களில் உள்ளது : மனோ


Recommended Posts

பிர­பா­க­ரனின் பலம் துப்­பாக்கி ரவை­களில் எனது பலம் வாக்குச் சீட்­டுக்­களில் உள்­ளது : மனோ

 

 

விடு­தலைப் புலி கள் இயக்­கத்தின் தலைவர் பிர­பா­கரன் துப்­பாக்கி ரவை­களை தனது பல­மாக கொண்­டி­ருந்தார். ஆனால் நான் வாக்­குச்­சீட்­டுக்­களை மாத்­தி­ரமே பல­மா­கக்கொண்டு அர­சியல் செய்­கின்றேன் என்று தேசிய சக­வாழ்வு கலந்­து­ரை­யாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்தார்.

mano-ganesan.jpg

தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை நிறை­வேற்றும் பொருட்­டான செயற்­பா­டு­களின் போது நான் ஒரு தனித்­து­வ­மான பிர­தி­நி­தி­யா­கவே செயற்­ப­டுவேன். மாறாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அல்­லது எதிர்­கட்சி தலைவர் சம்­பந்­தனின் கீழ் செயற்­ப­டப்­போ­வ­தில்லை எனவும் அவர்  சுட்­டிக்­காட்­டினார்.

கொட்­டஞ்­சேனை இந்து மகா வித்­தி­யா­ல­யத்தில்  இடம்­பெற்ற மாண­வர்­க­ளுக்­காக அப்­பி­யாச புத்­த­கங்கள் வழங்கும் நிகழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்­துக்­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

ஜன­நா­யக மக்கள் முன்­னணி சார்­பிலும் தமிழ் முற்­போக்கு கூட்­டணி சார்­பிலும் கொழும்பில் பல உத­வித்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அதற்கு காரணம் இன்று எமக்கு இங்கு கிடைக்­கப்­பெற்­றுள்ள குறைந்­த­பட்ச பல­மாகும். பல­மில்­லா­விட்டால் எம்மால் ஒன்றும் செய்ய முடி­யாது வாய்­பேச்­சுக்கள் மாத்­தி­ரமே எமக்கு கிடைக்கும்.

அதனால் சக­ல­துக்கும் அடிப்­ப­டை­யாக அர­சி்யல் பலமே அமை­கி­றது. அர­சியல் பலம் எவ்­வாறு வரு­கின்­றது என பார்க்­கின்ற போது தமீ­ழீழ விடு­தலை புலிகள் இருந்த காலத்தில் துப்­பாகி ரவை­களில் பிர­பா­க­ரனின் பலம் இருந்­தது. ஆனால் எனது  பலம் வாக்­கு­சீட்­டாகும்  வாக்­கு­சீட்டை இங்­குள்­ள­வர்கள் முறை­யாக பயன்­டுத்­தினால் எமக்­கான பலம் கிடைக்கும்.

கடந்த காலங்­களில் நீங்கள் வாக்­கு­களை முறை­யாக பயன்­ப­டுத்­த­வில்லை. அறி­வுள்­ள­வர்கள் உணர்­வுள்­ள­வர்கள்இ சமூக அக்­கறை உள்­ள­வர்கள்இ உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தல்­க­ளிலும் பாரா­ளு­மன்ற தேர்­தல்­க­ளிலும் தமது வாக்­கு­களை சரி­யாகப் பயன்­ப­டுத்­தி­ய­மைனால் தான் நாம் இந்த அள­விற்­கேனும் பல­மாக இருக்­கின்றோம்.

தேர்தல் வரு­கின்ற போது கண்­களை மூடிக்­கொண்­டேனும் வாக்­குளை சரி­யாக அளிக்க வேண்டும். காரணம் நமக்கு நாமே வாக்­க­ளிக்க வேண்டும். தற்­போது இவ்­வி­டத்தில் உள்­ள­வர்கள் கூட தேர்தல் காலத்தில் நீங்கள் எமக்­காக என்ன செய்­தீர்கள் என்­றுதான் கேட்­பார்கள். அவர்­க­ளி­டத்தில் வாக்­க­ளிக்­கா­தீர்கள்  என்று கூறி­வந்­தி­ருக்­கிறேன்.

கொலன்­னாவை பகு­தியில் தமிழ் நாடு என்று ஒரு இட­முள்­ளது. அங்கு தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழ்­கின்­றனர். ஒரு காலத்தில் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை­யினர் மக்­களின் வீடு­களை தகர்க்க ரக­சி­ய­மாக நீதி­மன்ற அனு­ம­தி­யினை பெற்­றுக்­கொண்டு வந்­தனர். அங்­குள்ள முஸ்லீம் பள்­ளி­வாசல் ஒன்­றிணை உடைத்தன் பின்­னரே எனக்கு தகவல் கிடைத்­தது. அங்கு நான் சென்று பார்­தத போது பொலிஸார் யுத்தம் செய்­வது போன்று குவிந்து நின்­றார்கள். 

அக்­கா­லத்தில் தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் என்றால் ஆயு­தத்­து­ட­னேயே பொலிஸார் வரு­வார்கள். எவ்­வா­றா­யினும் நான் அவ்­வி­டத்­தினை உடைக்­க­வி­ட­வில்லை. நீதி மன்ற ஆணை­யைக்­காட்டி உடைக்க முற்­பட்­டனர் சகல செயற்­பா­டு­களும் நிறுத்­தப்­பட்­டன.

ஆனாலும் நீதி­மன்­றத்தின் ஆணையைக் காரணம் காண்­பித்து இரண்­டரை வரு­டங்கள் என­மீ­தான வழக்கு இடம்­பெற்­றது. ஆரம்ப காலத்தில் வழக்கு இடம்­பெற்ற போது என்னை கட­வு­ளென்றும் தலை­வ­ரெண்டும் நீதி­மன்றம் வரையில் வந்து பாரட்டி வாழ்க என்ற கோசம் எழுப்­பி­ய­வர்கள் இன்று வரு­வ­தில்லை.

எல்­லோரும் மறந்­து­விட்­டனர். ஆனால் வழக்கில் எனக்கு எதி­ராக தீர்­ப­ளிக்­கப்­பட்­டி­ருந்தால் நான் சிறைக்குச் சென்­றி­ருப்பேன். அதற்கு பின்பு கொலன்­னாவ சென்று வாக்கு கேட்­கையில் கடந்த வாரம் ஹிரு­ணிகா இ சும­தி­பால ஆகியோர் வந்­தி­ருந்­தார்கள்.  அவர்கள் வீட்டு கூரை­க­ளுக்­கான தக­டு­களை தந்­தார்கள் நீங்கள் என்ன தந்­தீர்கள் என கேட்­கின்­றார்கள்.

தக­டு­களை பொருத்­து­வ­தற்­கான வீடு­க­ளையே நான் தான் காப்­பாற்றிக் கொடுத்தேன் என்­பதை மறந்­து­விட்டு பேசு­கின்­றார்கள். அதனால் வாக்கு வேண்டாம் என்றே கூறி­விட்டு திரும்­பி­விட்டேன். கடந்த காலங்­களில் தமிழ் மக்கள் கொழும்பில் நட­மாட முடி­யா­தி­ருந்த போதும் கூட கூட்­டணி மற்றும் கூட்­ட­மைப்பு உட்­பட சக­லரும் ஒடி ஒழிந்­துக்­கொண்­டார்கள்.

ஆனால் அந்த நேரத்­திலும் நாம் எவரும் இல்­லாத நெருக்­க­டி­யான சந்­தர்ப்­ப­திலும் இருந்­துள்ளோம். இன்று முகப்­புத்­த­கத்­திலும் அரசர் குல பரம்­ப­ரைகள் போன்று இன்று வீரம் பேச பலர் இருக்­கின்­றார்கள். பிரச்­சினை என்­கின்ற போது மனோ கணேசன் மாத்­தி­ரமே வரு­கிறேன்.

அதேபோல் நான் தற்­போது ஐக்­கிய தேசிய கட்­சியி்ல் இணைந்­தி­ருப்­பதால் நான் ஐக்­கிய தேசிய கட்­சி­யியை சேர்ந்­தவன் என்று கரு­தி­வி­டக்­கூ­டாது. எங்கு சேர்ந்­தாலும் நாம் தனித்­து­வ­மா­கவே இருக்­கின்றோம். அதனால் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவோ அல்­லது எதிர்­கட்சி தலைவர் இரா.சம்­பந்­தனும் எனக்கு தலைவர் இல்லை எனக்கு நானே தலைவன்.

மலை­ய­கத்­திலும் வடக்கு கிழக்­கிலும் கொழும்­பிலும் வாழ்­கின்ற தமிழ் மக்கள் பற்றி எனக்கும் நன்­றாக தெரியும். மூன்று மாத்­திற்கு முன்­பாக ஐக்­கிய நாடுகள் சபை­யி­லி­ருந்து வந்த சிறு­பான்­மை­யினர் விவ­கா­ரங்­க­ளுக்கு பொறுப்­பான பிர­தி­நி­தி­யி­டத்தில் வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு வெளியில் வாழ்­கின்ற தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் குறித்து அறி­வு­றுத்­தி­யி­ருந்தோம்.

தற்­போது இது குறித்து அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் அதற்­கான பலன் தெரி­கின்­றது. இவ்­வாறு எமது பிரச்­சினை சர்­வ­தேசம் அறிந்­துக்­கொள்­கின்­றது. ஆனால் அதற்கு முன்னர் வடக்கு கிழக்­கிற்கு வெளியில் தமிழ் மக்­களே இல்லை என்ற நிலைப்­பாட்­டி­லேயே அவர் இருந்­துள்ளார்.

இன்று அவர் எமது பிரச்­சி­னையை உலக அரங்கில் அரங்­கேற்­றி­யுள்­ள­மையில் அது தமிழ் மக்­க­ளுக்கு கிடைத்த வெற்­றி­யாக அமை­கின்­றது அது மனோ கணே­சனின் வெற்­றி­யு­மாகும். 

தமிழ் மொழி­யு­ரிமை பிரச்­சி­னைக்கு தீர்வு

எனது அமைச்­சுக்கு தொலை­பேசி அழைப்­பினை மேற்­கொண்ட நண்பர் ஒருவர் முறைப்­பா­டொன்­றினை பதிவு செய்ய முற்­பட்ட போது அங்கு தமிழ் மொழியில் முறைப்­பாட்­டினை ஏற்­ப­தற்­கான எவரும் இருக்­க­வில்லை என்று அந்த பிரச்­சி­னையை பூதா­க­ர­மாக்­கி­யுள்ளார்.

பத்­தி­ரி­கை­களும் அது­கு­றித்து பேசு­கின்­றன. ஆனால் எனக்கு மூன்று மொழி­களும் நன்கு தெரியும். அதனால் இன்று மொழி­யு­ரிமை குறித்த கருத்­த­தா­டல்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்ளேன். ஆனால் அர­சாங்­கத்தில் நிதி நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது எனவே வெளி­நாட்டு உத­வி­களை நாம் கோரி­யுள்ளோம் ஜூன் மாத்­திலே தான் அந்த பணம் எமக்கு கிடைக்கும்.

அதன் பின்னர் சகல புதிய மொழி­யு­ரி­மைக்­கான திட்­டங்­களும் அமு­லுக்கு வரும் எனவே தற்­போது எமக்­குள்ள நிதித்­தே­வையை விமர்­சிக்­கின்­ற­வர்கள் புரிந்­துக்­கொள்ள வேண்டும்இ உங்­களால் முடிந்தால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் எனது அமைச்சுக்கான நிதிகளை ஒதுக்கீடு செய்து தரச்சொல்லி செய்திகளை வெளிப்படுத்துங்கள்.

அதனை விடுத்து தமிழ் அமைச்சர் கிடைத்துவிட்டதை வாய்பாக பயன்படுத்தி கடுமையாக விமர்சிக்காதீர்கள் கோத்தபயவை பார்த்துவிட்ட நான் எவருக்கும் அஞ்சப்போவதில்லை. அதனால் உங்களுக்கும் முதுகெலும்பிருந்தால் ஜனாதிபதிக்கு எனது அமைச்சுக்கு பணம் தர கூறுங்கள்  அரசாங்கத்தில் இடம்பெறும் கொள்ளையடிப்புகளை தவிர்த்தாவது எனது அமைச்சுக்கான நிதியை பெற்றுத்தர கூறுங்கள். எவ்வாறிருப்பினம் வெகு விரைவில் மொழியுரிமை தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பேன் என்றார்.

http://www.virakesari.lk/article/17053

Link to comment
Share on other sites

தன்பலம், தன்னம்பிக்கை அற்ற அரைவேக்காடு தான் என்பதை மனோகணேசன் அவ்வப்போது உணர்த்த தவறுவதில்லை.

தமிழர்களின் இதயத்தில் என்றென்றும் தன்பலம், தன்னம்பிக்கை நிறைந்த மாவீரனாகவும் தெளிவான சிந்தனை, தீர்க்கதரிசனம் கொண்ட தலைவனாகவும் வீற்றிருக்கும் பிரபாகரனைப் பற்றி கதைக்க அருகதையற்றவர் மனோகணேசன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரெம்ப ஓவரண்ணே. கொஞ்சம்... கொச்சிக்கடைப் பக்கம் போய் கேட்டால்.. தெரியும் தங்களின் பலம் என்னென்பது. ஒன்றுமே இல்லை.. சண்டித்தனம் பண்ணித்தானே அரசியலுக்குள்ளேயே வந்தியள். தேசிய தலைவரால்.. அழைக்கப்பட்ட பின்.. செல்வாக்கும் அடைந்தீர்கள். அது வேற விசயம்.

இப்ப தூய சன..நாயக..வாதி ஆகிட்டன் என்றீங்களோண்ணே.  tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை நாங்கள்தான் தலைவர் என்று அழைக்கிறோம். அந்தத் தலைவன் என்றுமே தன்னைத் தலைவன் என்று சொன்னதுமில்லை, ஏற்றுக்கொண்டதுமில்லை. அந்த உன்னத மனிதனுக்கு இணையான ஒருவர் தற்போது உலகில் எவருமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"நான் என்ற அகங்காரம்" லேசாய் வெளிக்கிடுது போலை கிடக்கு......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எண்களின் பொம்மைகளை விட 
இந்தாள் பரவாயில்லை !

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 26 APR, 2024 | 01:25 PM   கிளிநொச்சி கண்டாவளை கல்லாறு பகுதியில் இயங்கிவரும் சட்டவிரோத குழு ஒன்றினால் பெண் தலைமைத்துவக் குடும்பம் உள்ளிட்ட இருவருக்கு வழங்கிய வாழ்வாதார மிளகாய் தோட்டம் ஒன்று நேற்றிரவு (25) அழிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்குப் பின்னர் இருவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட மிளகாய் தோட்டத்திற்குள் நுழைந்த குறித்த சட்டவிரோத குழுவினர் காய்க்கும் நிலையில் காணப்பட்ட மிளகாய்ச் செடிகளைப் பிடுங்கி எறிந்ததோடு, தூவல் முறை நீர் விநியோக குழாய்களை உடைத்து, வெட்டியும் சேதப்படுத்தியுள்ளனர்.   பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கும் பிரிதொரு குடும்பம் ஒன்றுக்கும் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் பல இலட்சங்கள் செலவு செய்து மேற்கொள்ளப்பட்ட மிளகாய் பயிர்ச் செய்கையே குறித்த சட்டவிரோத குழுவினால் அழிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டவிரோத குழுவில் கல்லாறு மற்றும் பிரமந்னாறு  கிராமங்களைச் சேர்ந்த சில இளைஞர்கள் காணப்படுவதாகவும், இந்தப் பிரதேசங்களில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு, திருட்டு,  வாள் வெட்டு, உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் இவர்கள் ஈட்டுப்பட்டு வருவதாகவும் பொது மக்கள் அச்சம் காரணமாக  இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்குக் கூட முன்வருவதில்லை என்றும், இருந்த போதிலும் குறித்த மிளகாய் தோட்ட உரிமையாளர்களில் ஒருவரின் மாடு களவாடப்பட்ட விடயத்தில் அவர் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் காரணமாக பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்திய போது அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்குழுவைச் சேர்ந்த ஏனையவர்கள் ஒன்று சேர்ந்தே அவரின் மிளகாய் தோட்டத்தை அழித்துள்ளனர் எனப் பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஒரு சிலரால் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும் பொலீஸாரினால உரிய நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளவில்லை என்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/182011
    • விவிபேட்: 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கக் கோரிய மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி - தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 05:17 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் - VVPAT (Voter-Verified Paper Audit Trail) இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க வேண்டும் என்று பலதரப்புகளில் இருந்தும் தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மீண்டும் வாக்குச் சீட்டுக்கு மாற வேண்டும் என்று கோரிய மனுவும் இத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. எனினும் விவிபேட் இயந்திரங்களும் சீல் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேட்பாளர்கள் விரும்பும்பட்சத்தில், வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர் புரோகிராம்களை பொறியாளர் குழுவால் பரிசோதிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.   நீதிபதிகள் சொன்னது என்ன? இந்த வழக்கில் மூன்று கோரிக்கைகள் இருந்தன: காகித ஓட்டுமுறைக்கே திரும்புதல் 100% விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்த்தல் ஒப்புகைச் சீட்டுகளை வாக்காளர்களிடம் கொடுத்து அதை மீண்டும் வாக்குப்பெட்டியில் போடச்செய்தல் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்ஜீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த அத்தனை மனுக்களையும் தள்ளுபடி செய்வதாகத் தீர்ப்பளித்திருக்கிறது. நடைமுறையில் இருக்கும் செயல்பாடு, தொழில்நுட்ப விஷயங்கள், தரவுகள் ஆகியவற்றைக் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை எட்டியிருப்பதாக நீதிபதி கன்னா கூறினார். இந்த வழக்கில் இரண்டு தீர்ப்புகள் உள்ளன, ஆனால் இரண்டும் ஒன்றோடொன்று ஒத்துப்போகின்றன என்றார் நீதிபதி கன்னா. தீர்ப்பளித்துப் பேசிய நீதிபதி கன்னா, வாக்கு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னத்தைப் பதிவேற்றியவுடன் அந்தக் கருவியை சீல் செய்து வைத்து, 45 நாட்கள் வரை அவற்றைப் பாதுகாத்து வைத்திருக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் மைக்ரோகன்ட்ரோலர்களில் பதிவான 'மெமரியை' தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபின், 2 மற்றும் 3-ஆம் எண்களில் உள்ள வேட்பாளர்களின் கோரிக்கைக்கிணங்க ஒரு பொறியாளர் குழு சரிபார்க்கலாம் என்றும் கூறினர். இந்தக் கோரிக்கை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 7 நாட்களுக்குள் செயப்படவேண்டும். இந்தச் சரிபார்ப்புக்கான செலவீனத்தை கோரிக்கை விடுக்கும் வேட்பாளர் ஏற்க வேண்டும். ஒருவேளை வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்திருந்தால், அந்தத் தொகை திருப்பித்தரப்படும், என்றார் நீதிபதி கன்னா. மேலும், "ஒரு அமைப்பின்மீது கண்மூடித்தனமாக அவநம்பிக்கை கொள்வது அடிப்படையற்ற சந்தேகங்க்களுக்கு இட்டுச்செல்லும்," என்றார் நீதிபதி தத்தா. பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் இயந்திரம் எப்படி வேலை செய்கிறது? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயருக்கு அருகே உள்ள பட்டனை வாக்காளர் அழுத்துகிறார். அவர் அழுத்தும் அதேநேரத்தில், வேட்பாளரின் பெயர், எண் மற்றும் சின்னம் அடங்கிய ஒப்புகைச் சீட்டு விவிபேட் இயந்திரத்தில் வாக்காளர்களுக்கு 7 வினாடிகள் தெரியும். அதன் பிறகு, சீட்டு தானாகவே துண்டிக்கப்பட்டு, ஒரு ‘பீப்’ ஒலியுடன் சீல் செய்யப்பட்ட பெட்டியில் சேகரிக்கப்படும். வாக்குப்பதிவின் போது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அது குறித்தும் தெரிவிக்கப்படும். நீங்கள் தீர்மானித்தபடி வாக்களித்தீர்களா என்பதைச் சரிபார்க்க வாக்காளருக்கு வாய்ப்பு கிடைக்கும். விவிபேட் இயந்திரம் ஒரு கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். வாக்களித்த வாக்காளர் மட்டுமே சீட்டில் உள்ள விவரங்களைப் பார்க்க முடியும். விவிபேட் இயந்திரங்களைத் திறக்க தேர்தல் அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. வாக்காளர்கள் விவிபேட் இயந்திரங்களை திறக்கவோ. அவற்றைத் தொடவோ முடியாது. ஒரு விவிபேட் இயந்திரத்தில் உள்ள ஒரு காகித ரோலில் 1,500 ஒப்புகைச் சீட்டுகளை அச்சிட முடியும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள விவிபேட் ஒப்புகளைச் சீட்டுகள் சோதனை செய்யப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES EVM-இல் வாக்குகள் எப்படி எண்ணப்படுகின்றன? முதலில், தேர்தல் அதிகாரி மற்றும் அவருடன் பணிபுரியும் அதிகாரிகள் வாக்களிப்பின் ரகசியம் காக்க உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். அதன்பிறகு அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்படுகின்றன. இது நடக்கும்போது, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வாக்கு எண்ணும் முகவர்களுடன் வாக்கு எண்ணும் நிலையங்களில் இருக்க உரிமை உண்டு. இந்த முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்க்கலாம். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன் பிறகுதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் குறிப்பிட்ட வரிசையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்குவதன் மூலம் எண்ணப்படுகின்றன. அதன்பிறகு, பல்வேறு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எண்ணப்படுகின்றன. பின்னர் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான எண்கள் கூட்டப்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்ப்பு கடந்த 2019-ஆம் ஆண்டில், தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை முடிந்ததும், அவற்றின் மொத்த எண்ணிக்கை விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்கப்பட்டது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் கூடத்துக்கும் தனி விவிபேட் சாவடி உள்ளது. எண்ணிக்கையில் ஏதேனும் தவறு இருந்தாலோ, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டாலோ அதுபற்றி உடனடியாக தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டியது தேர்தல் நடத்தும் அதிகாரியின் பொறுப்பு. இந்த அறிவிப்பு கிடைத்ததும், அந்த இடத்தில் வாக்கு எண்ணிக்கையைத் தொடரவோ, வாக்கு எண்ணிக்கையை ரத்து செய்யவோ அல்லது மறு வாக்குப்பதிவு நடத்தவோ தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம். வாக்கு எண்ணிக்கை பிரச்னையின்றி முடிந்து, தேர்தல் ஆணையத்தால் பிற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாவிட்டால், தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவை அறிவிக்கலாம். 2019-ஆம் ஆண்டு தேர்தலில் கூடுதல் இயந்திரங்கள் உட்பட 39.6 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 17.4 லட்சம் விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் ஆணையம் இந்த ஆண்டு சுவிதா என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது, அதில் வாக்குச்சாவடி முடிவுகளைப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,ANI வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சர்ச்சைகள் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பல எதிர்க்கட்சிகள் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பின. விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்குமாறு எதிர்க்கட்சிகள் முதலில் உச்ச நீதிமன்றத்திடமும், பின்னர் தேர்தல் ஆணையத்திடமும் கேட்டிருந்தன. ஆனால் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் இந்தக் கோரிக்கையை நிராகரித்தன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பின்றி கொண்டு செல்லப்படுவதாக சில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்து அதில் உண்மை இல்லை என்று கூறியிருந்தது. படக்குறிப்பு,முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி முன்னாள் தேர்தல் ஆணையர் கூறுவது என்ன? முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி இதுகுறித்து பிபிசி-க்கு அளித்த பேட்டியில், தேர்தலில் பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்த அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் வசதி மற்றும் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுதல் ஆகிய இரண்டு கோரிக்கைகளும் ஏற்கப்பட வேண்டும், என்றார். “ஓரிடத்தில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்கள் வாக்குச் சாவடியில் மறு வாக்கு எண்ணிக்கை கோரினால், அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இது முழுமையான மறு வாக்கு எண்ணிக்கைக்கான விருப்பத்தை வழங்கும்,” என்றார். தொழில்நுட்ப வல்லுநர்களும் குரேஷியின் இதே கருத்தைத் தெரிவிக்கின்றனர். வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க விவிபேட் ஒரு தீர்வு என்று அவர்கள் கூறுகின்றனர். பிபிசி மராத்தியிடம் பேசிய புனேவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் மாதவ் தேஷ்பாண்டே, விவிபேட் இயந்திரத்தால் வாக்கு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட்டுக்கு ஒரு செய்தியை அனுப்ப முடியும் என்றார். அதன்மூலம் அது ஒரு தனி ரசீதை அச்சிட முடிந்தால், அது பாதுகாப்பானதாகக் கருதப்படும், என்றார். “வாக்குப்பதிவுக்குப் பிறகும் விவிபேட் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட் ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cxwvx23k0pxo
    • O/L பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். பாரா ளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இதற்கு முன்னதாக கடந்த பரீட்சைக்கான அனைத்து மீள் திருத்த பெறுபேறுகளும் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/300298
    • 26 APR, 2024 | 03:16 PM   மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை இந்திய ரஸ்ய நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 30வருட காலத்திற்கு ரஸ்யா இந்தியா கூட்டு முயற்சிக்கு ஒப்படைப்பதற்கு  அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இந்தியாவின் சௌர்யா ஏரோநட்டிக்ஸ்  ரஸ்யாவின் எயர்போர்ட் ரீஜன்ஸ் முகாமைத்துவ நிறுவனத்திடமும் மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை  ஒப்படைப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. https://www.virakesari.lk/article/182025
    • புலம்பெயர் தேசத்தில் சில மொக்கு கூட்டம் பிள்ளைகள் உறைப்பு சாப்பிடும் என்பதை ஏதோ பெரிய தகமை போல் கதைத்துகொண்டு திரியும். என்னை கேட்டால் முடிந்தளவு மிளகாய்தூள் பாவனையை பிள்ளைகளுக்கு இல்லாமலே பழக்க வேண்டும். இப்படியான கான்சர் ஊக்கிகள் மட்டும் அல்ல, புலம்பெயர் கடைகளில் ஒரு ஆட்டு கறியை வாங்கி அதை சுடு தண்ணியில் கழுவி பாருங்கள் - சிவப்பாய் கலரிங்கும், எண்ணையும் ஓடும். உறைப்பை கூட்ட, உப்பு கூட்ட சொல்லும், உப்பு கூட உபாதைகள் கூடும். திறமான வழி பண்டைய தமிழர், இன்றைய சிங்களவர் வழி - உறைப்புக்கு மிளகு பாவித்தல். @பெருமாள் # எரியுதடி மாலா
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.