Jump to content

பிரபாகரனின் பலம் துப்பாக்கி ரவைகளில் எனது பலம் வாக்குச் சீட்டுக்களில் உள்ளது : மனோ


Recommended Posts

பிர­பா­க­ரனின் பலம் துப்­பாக்கி ரவை­களில் எனது பலம் வாக்குச் சீட்­டுக்­களில் உள்­ளது : மனோ

 

 

விடு­தலைப் புலி கள் இயக்­கத்தின் தலைவர் பிர­பா­கரன் துப்­பாக்கி ரவை­களை தனது பல­மாக கொண்­டி­ருந்தார். ஆனால் நான் வாக்­குச்­சீட்­டுக்­களை மாத்­தி­ரமே பல­மா­கக்கொண்டு அர­சியல் செய்­கின்றேன் என்று தேசிய சக­வாழ்வு கலந்­து­ரை­யாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்தார்.

mano-ganesan.jpg

தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை நிறை­வேற்றும் பொருட்­டான செயற்­பா­டு­களின் போது நான் ஒரு தனித்­து­வ­மான பிர­தி­நி­தி­யா­கவே செயற்­ப­டுவேன். மாறாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அல்­லது எதிர்­கட்சி தலைவர் சம்­பந்­தனின் கீழ் செயற்­ப­டப்­போ­வ­தில்லை எனவும் அவர்  சுட்­டிக்­காட்­டினார்.

கொட்­டஞ்­சேனை இந்து மகா வித்­தி­யா­ல­யத்தில்  இடம்­பெற்ற மாண­வர்­க­ளுக்­காக அப்­பி­யாச புத்­த­கங்கள் வழங்கும் நிகழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்­துக்­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

ஜன­நா­யக மக்கள் முன்­னணி சார்­பிலும் தமிழ் முற்­போக்கு கூட்­டணி சார்­பிலும் கொழும்பில் பல உத­வித்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அதற்கு காரணம் இன்று எமக்கு இங்கு கிடைக்­கப்­பெற்­றுள்ள குறைந்­த­பட்ச பல­மாகும். பல­மில்­லா­விட்டால் எம்மால் ஒன்றும் செய்ய முடி­யாது வாய்­பேச்­சுக்கள் மாத்­தி­ரமே எமக்கு கிடைக்கும்.

அதனால் சக­ல­துக்கும் அடிப்­ப­டை­யாக அர­சி்யல் பலமே அமை­கி­றது. அர­சியல் பலம் எவ்­வாறு வரு­கின்­றது என பார்க்­கின்ற போது தமீ­ழீழ விடு­தலை புலிகள் இருந்த காலத்தில் துப்­பாகி ரவை­களில் பிர­பா­க­ரனின் பலம் இருந்­தது. ஆனால் எனது  பலம் வாக்­கு­சீட்­டாகும்  வாக்­கு­சீட்டை இங்­குள்­ள­வர்கள் முறை­யாக பயன்­டுத்­தினால் எமக்­கான பலம் கிடைக்கும்.

கடந்த காலங்­களில் நீங்கள் வாக்­கு­களை முறை­யாக பயன்­ப­டுத்­த­வில்லை. அறி­வுள்­ள­வர்கள் உணர்­வுள்­ள­வர்கள்இ சமூக அக்­கறை உள்­ள­வர்கள்இ உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தல்­க­ளிலும் பாரா­ளு­மன்ற தேர்­தல்­க­ளிலும் தமது வாக்­கு­களை சரி­யாகப் பயன்­ப­டுத்­தி­ய­மைனால் தான் நாம் இந்த அள­விற்­கேனும் பல­மாக இருக்­கின்றோம்.

தேர்தல் வரு­கின்ற போது கண்­களை மூடிக்­கொண்­டேனும் வாக்­குளை சரி­யாக அளிக்க வேண்டும். காரணம் நமக்கு நாமே வாக்­க­ளிக்க வேண்டும். தற்­போது இவ்­வி­டத்தில் உள்­ள­வர்கள் கூட தேர்தல் காலத்தில் நீங்கள் எமக்­காக என்ன செய்­தீர்கள் என்­றுதான் கேட்­பார்கள். அவர்­க­ளி­டத்தில் வாக்­க­ளிக்­கா­தீர்கள்  என்று கூறி­வந்­தி­ருக்­கிறேன்.

கொலன்­னாவை பகு­தியில் தமிழ் நாடு என்று ஒரு இட­முள்­ளது. அங்கு தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழ்­கின்­றனர். ஒரு காலத்தில் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை­யினர் மக்­களின் வீடு­களை தகர்க்க ரக­சி­ய­மாக நீதி­மன்ற அனு­ம­தி­யினை பெற்­றுக்­கொண்டு வந்­தனர். அங்­குள்ள முஸ்லீம் பள்­ளி­வாசல் ஒன்­றிணை உடைத்தன் பின்­னரே எனக்கு தகவல் கிடைத்­தது. அங்கு நான் சென்று பார்­தத போது பொலிஸார் யுத்தம் செய்­வது போன்று குவிந்து நின்­றார்கள். 

அக்­கா­லத்தில் தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் என்றால் ஆயு­தத்­து­ட­னேயே பொலிஸார் வரு­வார்கள். எவ்­வா­றா­யினும் நான் அவ்­வி­டத்­தினை உடைக்­க­வி­ட­வில்லை. நீதி மன்ற ஆணை­யைக்­காட்டி உடைக்க முற்­பட்­டனர் சகல செயற்­பா­டு­களும் நிறுத்­தப்­பட்­டன.

ஆனாலும் நீதி­மன்­றத்தின் ஆணையைக் காரணம் காண்­பித்து இரண்­டரை வரு­டங்கள் என­மீ­தான வழக்கு இடம்­பெற்­றது. ஆரம்ப காலத்தில் வழக்கு இடம்­பெற்ற போது என்னை கட­வு­ளென்றும் தலை­வ­ரெண்டும் நீதி­மன்றம் வரையில் வந்து பாரட்டி வாழ்க என்ற கோசம் எழுப்­பி­ய­வர்கள் இன்று வரு­வ­தில்லை.

எல்­லோரும் மறந்­து­விட்­டனர். ஆனால் வழக்கில் எனக்கு எதி­ராக தீர்­ப­ளிக்­கப்­பட்­டி­ருந்தால் நான் சிறைக்குச் சென்­றி­ருப்பேன். அதற்கு பின்பு கொலன்­னாவ சென்று வாக்கு கேட்­கையில் கடந்த வாரம் ஹிரு­ணிகா இ சும­தி­பால ஆகியோர் வந்­தி­ருந்­தார்கள்.  அவர்கள் வீட்டு கூரை­க­ளுக்­கான தக­டு­களை தந்­தார்கள் நீங்கள் என்ன தந்­தீர்கள் என கேட்­கின்­றார்கள்.

தக­டு­களை பொருத்­து­வ­தற்­கான வீடு­க­ளையே நான் தான் காப்­பாற்றிக் கொடுத்தேன் என்­பதை மறந்­து­விட்டு பேசு­கின்­றார்கள். அதனால் வாக்கு வேண்டாம் என்றே கூறி­விட்டு திரும்­பி­விட்டேன். கடந்த காலங்­களில் தமிழ் மக்கள் கொழும்பில் நட­மாட முடி­யா­தி­ருந்த போதும் கூட கூட்­டணி மற்றும் கூட்­ட­மைப்பு உட்­பட சக­லரும் ஒடி ஒழிந்­துக்­கொண்­டார்கள்.

ஆனால் அந்த நேரத்­திலும் நாம் எவரும் இல்­லாத நெருக்­க­டி­யான சந்­தர்ப்­ப­திலும் இருந்­துள்ளோம். இன்று முகப்­புத்­த­கத்­திலும் அரசர் குல பரம்­ப­ரைகள் போன்று இன்று வீரம் பேச பலர் இருக்­கின்­றார்கள். பிரச்­சினை என்­கின்ற போது மனோ கணேசன் மாத்­தி­ரமே வரு­கிறேன்.

அதேபோல் நான் தற்­போது ஐக்­கிய தேசிய கட்­சியி்ல் இணைந்­தி­ருப்­பதால் நான் ஐக்­கிய தேசிய கட்­சி­யியை சேர்ந்­தவன் என்று கரு­தி­வி­டக்­கூ­டாது. எங்கு சேர்ந்­தாலும் நாம் தனித்­து­வ­மா­கவே இருக்­கின்றோம். அதனால் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவோ அல்­லது எதிர்­கட்சி தலைவர் இரா.சம்­பந்­தனும் எனக்கு தலைவர் இல்லை எனக்கு நானே தலைவன்.

மலை­ய­கத்­திலும் வடக்கு கிழக்­கிலும் கொழும்­பிலும் வாழ்­கின்ற தமிழ் மக்கள் பற்றி எனக்கும் நன்­றாக தெரியும். மூன்று மாத்­திற்கு முன்­பாக ஐக்­கிய நாடுகள் சபை­யி­லி­ருந்து வந்த சிறு­பான்­மை­யினர் விவ­கா­ரங்­க­ளுக்கு பொறுப்­பான பிர­தி­நி­தி­யி­டத்தில் வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு வெளியில் வாழ்­கின்ற தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் குறித்து அறி­வு­றுத்­தி­யி­ருந்தோம்.

தற்­போது இது குறித்து அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் அதற்­கான பலன் தெரி­கின்­றது. இவ்­வாறு எமது பிரச்­சினை சர்­வ­தேசம் அறிந்­துக்­கொள்­கின்­றது. ஆனால் அதற்கு முன்னர் வடக்கு கிழக்­கிற்கு வெளியில் தமிழ் மக்­களே இல்லை என்ற நிலைப்­பாட்­டி­லேயே அவர் இருந்­துள்ளார்.

இன்று அவர் எமது பிரச்­சி­னையை உலக அரங்கில் அரங்­கேற்­றி­யுள்­ள­மையில் அது தமிழ் மக்­க­ளுக்கு கிடைத்த வெற்­றி­யாக அமை­கின்­றது அது மனோ கணே­சனின் வெற்­றி­யு­மாகும். 

தமிழ் மொழி­யு­ரிமை பிரச்­சி­னைக்கு தீர்வு

எனது அமைச்­சுக்கு தொலை­பேசி அழைப்­பினை மேற்­கொண்ட நண்பர் ஒருவர் முறைப்­பா­டொன்­றினை பதிவு செய்ய முற்­பட்ட போது அங்கு தமிழ் மொழியில் முறைப்­பாட்­டினை ஏற்­ப­தற்­கான எவரும் இருக்­க­வில்லை என்று அந்த பிரச்­சி­னையை பூதா­க­ர­மாக்­கி­யுள்ளார்.

பத்­தி­ரி­கை­களும் அது­கு­றித்து பேசு­கின்­றன. ஆனால் எனக்கு மூன்று மொழி­களும் நன்கு தெரியும். அதனால் இன்று மொழி­யு­ரிமை குறித்த கருத்­த­தா­டல்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்ளேன். ஆனால் அர­சாங்­கத்தில் நிதி நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது எனவே வெளி­நாட்டு உத­வி­களை நாம் கோரி­யுள்ளோம் ஜூன் மாத்­திலே தான் அந்த பணம் எமக்கு கிடைக்கும்.

அதன் பின்னர் சகல புதிய மொழி­யு­ரி­மைக்­கான திட்­டங்­களும் அமு­லுக்கு வரும் எனவே தற்­போது எமக்­குள்ள நிதித்­தே­வையை விமர்­சிக்­கின்­ற­வர்கள் புரிந்­துக்­கொள்ள வேண்டும்இ உங்­களால் முடிந்தால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் எனது அமைச்சுக்கான நிதிகளை ஒதுக்கீடு செய்து தரச்சொல்லி செய்திகளை வெளிப்படுத்துங்கள்.

அதனை விடுத்து தமிழ் அமைச்சர் கிடைத்துவிட்டதை வாய்பாக பயன்படுத்தி கடுமையாக விமர்சிக்காதீர்கள் கோத்தபயவை பார்த்துவிட்ட நான் எவருக்கும் அஞ்சப்போவதில்லை. அதனால் உங்களுக்கும் முதுகெலும்பிருந்தால் ஜனாதிபதிக்கு எனது அமைச்சுக்கு பணம் தர கூறுங்கள்  அரசாங்கத்தில் இடம்பெறும் கொள்ளையடிப்புகளை தவிர்த்தாவது எனது அமைச்சுக்கான நிதியை பெற்றுத்தர கூறுங்கள். எவ்வாறிருப்பினம் வெகு விரைவில் மொழியுரிமை தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பேன் என்றார்.

http://www.virakesari.lk/article/17053

Link to comment
Share on other sites

தன்பலம், தன்னம்பிக்கை அற்ற அரைவேக்காடு தான் என்பதை மனோகணேசன் அவ்வப்போது உணர்த்த தவறுவதில்லை.

தமிழர்களின் இதயத்தில் என்றென்றும் தன்பலம், தன்னம்பிக்கை நிறைந்த மாவீரனாகவும் தெளிவான சிந்தனை, தீர்க்கதரிசனம் கொண்ட தலைவனாகவும் வீற்றிருக்கும் பிரபாகரனைப் பற்றி கதைக்க அருகதையற்றவர் மனோகணேசன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரெம்ப ஓவரண்ணே. கொஞ்சம்... கொச்சிக்கடைப் பக்கம் போய் கேட்டால்.. தெரியும் தங்களின் பலம் என்னென்பது. ஒன்றுமே இல்லை.. சண்டித்தனம் பண்ணித்தானே அரசியலுக்குள்ளேயே வந்தியள். தேசிய தலைவரால்.. அழைக்கப்பட்ட பின்.. செல்வாக்கும் அடைந்தீர்கள். அது வேற விசயம்.

இப்ப தூய சன..நாயக..வாதி ஆகிட்டன் என்றீங்களோண்ணே.  tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை நாங்கள்தான் தலைவர் என்று அழைக்கிறோம். அந்தத் தலைவன் என்றுமே தன்னைத் தலைவன் என்று சொன்னதுமில்லை, ஏற்றுக்கொண்டதுமில்லை. அந்த உன்னத மனிதனுக்கு இணையான ஒருவர் தற்போது உலகில் எவருமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"நான் என்ற அகங்காரம்" லேசாய் வெளிக்கிடுது போலை கிடக்கு......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எண்களின் பொம்மைகளை விட 
இந்தாள் பரவாயில்லை !

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.