Jump to content

“மஹிந்தவின் பொறியில் சிக்கியுள்ள சம்பந்தன்“


Recommended Posts

“மஹிந்­தவின் பொறியில் சிக்­கி­யுள்ள சம்பந்தன்“

 

 

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­காக  சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பைக் கோரும் எதிர்க்­கட்சித் தலைவர் சம்பந்தன்  சர்­வ­ஜன வாக்­கெடுப்பின் பின்னர்  பிர­தமர் பத­வியில் மஹிந்­தவா ரணிலா அம­ர­வேண்டும் என்­ப­த­னையும் தீர்­மா­னிக்­க­வேண்டும் என்று  சுதந்­திரக் கட்­சியின் பேச்­சா­ளரும்  இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார்.

Mahinda-Sudath-Silva-2014-budget.jpg

காரணம்   புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­காக சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை நடத்­தினால் நிச்­சயம்  அர­சாங்கம் ஆட்­டம்­காணும்.   மஹிந்­தவின் அர­சாங்க கவிழ்ப்பு  முயற்­சியும் சாத்­தி­ய­மாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

அர­சாங்­கத்தை 2017 ஆம் ஆண்டில் கவிழ்க்­க­வேண்டும் என்ற  மஹிந்த ராஜ­ப­க்ஷவின் பொறியில் எதிர்க்­கட்சி தலைவர்  சம்­மந்தன்  மற்றும் மங்­கள  சம­ர­வீர , சந்­தி­ரிகா குமா­ர­துங்க, ரவூப் ஹக்கீம், மனோ கணேசன்,   ரணில் விக்­ர­ம­சிங்க ஆகியோர் சிக்­கி­விட்­டனர்.  

சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு குறித்த இவர்­களின் நோக்கம்  நல்­ல­தாக இருக்­கலாம். ஆனால்  அதன் விப­ரீ­தத்­தன்மை புரி­யாமல்   சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பைக் கோரு­கின்­றனர்.

மேலும் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு செல்­லாமல் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன்  13 ஆவது திருத்­தத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்தும் வகை­யி­லான  அர­சி­ய­ல­மைப்பில்  திருத்­தத்தை  செய்­வதே  தற்­போ­தைய நிலை­மையில் பொருத்­த­மா­ன­தாக இருக்கும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். 

புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­காரம் மற்றும்  சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நிலைமை  என்­பன குறித்து   விப­ரிக்­கை­யி­லேயே  அவர்  மேற்­கண்­ட­வாறு கூறினார்.

சுதந்­திரக் கட்­சியின் பேச்­சா­ளரும்  இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரெரா  இந்த விடயம் குறித்து குறிப்­பி­டு­கையில்,

நீண்­ட­கா­லத்­துக்குப் பின்னர் தமிழ் பேசும் மக்­களின் அர­சியல் பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்­கான சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது.  எனவே  அந்த சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்தி  விரைந்து இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வைக்­கா­ண­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

இந்­நி­லையில்  புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கி அதனை   சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு உட்­ப­டுத்தி  தீர்­வைக்­கா­ணலாம் என  ஐக்­கிய தேசிய கட்சி கூறி­வ­ரு­கின்­றது.  ஐக்­கிய தேசிய கட்சி மட்­டு­மன்றி எதிர்க்­கட்சித் தலைவர் சம்­மந்தன்  அமைச்­சர்­க­ளான  ரவூப் ஹக்கீம்   மங்­கள சம­ர­வீர மனோ கணேசன் மற்றும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க ஆகி­யோரும் சர்­வ­வ­ஜன வாக்­கெ­டுப்பு அவ­சியம் என்று   கூறி­வ­ரு­கின்­றனர்.

ஆனால் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சி­யா­னது   புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வ­ராமல்  அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தை முன்­னெ­டுத்து மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன்  நிறை­வேற்­றிக்­கொள்­ளலாம் என்ற நிலைப்­பாட்டில் உள்­ளது.

காரணம்  புதிய அர­சி­ய­ல­மைப்பை தயா­ரித்து  சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு   சென்றால் அது அர­சியல் கார­ணங்­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு   தோல்­வி­ய­டையும்  நிலைமை ஏற்­ப­டலாம். இதன்­மூலம் 2017 ஆம் ஆண்டு ஆட்­சியை கவிழ்ப்பேன் என்று கூறி­யுள்ள  முன்னாள் ஜனா­தி­பதி  மஹிந்த ராஜ­ப­க்ஷவின்  கூற்று  சாத்­தி­ய­மாகும் நிலை ஏற்­படும். 

அர­சாங்கம்  சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை நடத்தும் என்று உறு­தி­பட கூறு­கின்­ற­மையின் கார­ண­மா­கவே   அர­சாங்­கத்தை கவிழ்ப்பேன்  என்று   முன்னாள் ஜனா­தி­பதி  மஹிந்த கூறு­கிறார்.  இதனை புரிந்­து­கொள்­ளாத  சம்­மந்தன்  மங்­கள  சந்­தி­ரிகா  ரவூப் ஹக்கீம் ரணில் விக்­ர­ம­சிங்க ஆகியோர்    மஹிந்த ராஜ­ப­க்ஷவின் பொறியில் சிக்­கி­விட்­டனர் என்றே கூற­வேண்டும்.

இவ்­வாரம்  பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய  எதிர்க்­கட்சித் தலைவர்   புதிய அர­சி­ய­ல­மைப்பு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு உட்­ப­டுத்­த­ப­ட­வேண்டும் என்று  கோரினார்.  அது அவர்  உய­ரிய நோக்­கத்­துடன் கூறிய விட­ய­மாக இருக்­கலாம்.  ஆனால்   அவர் ஒரு விட­யத்தை புரிந்­து­கொள்­ள­வேண்டும். 

அதா­வது  புதிய அர­சி­ய­ல­மைப்பு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பைக் கோரும்  எதிர்க்­கட்சித் தலைவர் சம்­மந்தன்  சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பின் பின்னர்  பிர­தமர் பத­வியில்  மஹிந்­தவா ரணிலா அம­ர­வேண்டும் என்­ப­த­னையும் தீர்­மா­னிக்­க­வேண்டும்.   காரணம்   புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­காக சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை நடத்­தினால் நிச்­சயம்  அர­சாங்கம் ஆட்­டம்­காணும்.   மஹிந்­தவின் அர­சாங்க கவிழ்ப்பு  முயற்­சியும் சாத்­தி­ய­மாகும்   அபாயம் உள்­ளது.  இதனை  சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை  கோரும்  தரப்­புக்கள் புரிந்­து­கொள்­ள­வேண்டும்.

 

சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி தற்­போது மிகவும் முக்­கி­ய­மான கட்­டத்­துக்கு வந்­துள்­ளது. அதா­வது  பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்­க­ளுடன்    13 ஆவது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­த­வேண்டும் என்ற  கட்­டத்­துக்கு   சுதந்­திரக் கட்சி வந்­துள்­ளது. எனவே  புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு செல்­லாமல் தற்­போ­தைய அரசியலமைப்பை திருத்துவதே பொருத்தமாக அமையும்.

 

மாறாக  சர்வஜன வாக்கெடுப்புக்கு சென்றால் நிலைமை மோசமாகிவிடும்.  சிறிலங்கா சுதந்திரக் கட்சி இந்த விடயத்தில் மிகவும் உறுதியாக இருக்கின்றது.  எம்மிடம் இது  தொடர்பில்            தெளிவான நிலைப்பாடு உள்ளது.   சர்வஜன வாக்கெடுப்பை   கோருகின்றவர்களின் நோக்கம்  நல்லதாக இருக்கலாம். ஆனால்  அதன் விபரீதத்தன்மை புரியாமல்   சர்வஜன வாக்கெடுப்பைக் கோருகின்றனர்.   இந்த விடயத்தில் அரசியல்  கள நிலையை  புரிந்துகொண்டு செயற்படவேண்டியது அவசியமாகும் என்றார்.

http://www.virakesari.lk/article/17051

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் பொறியில் அல்ல.. சம்பந்தன் ஏலவே சிங்கக் கொடியால் சுத்தப்பட்டிட்டார். எனி அவரால்.. வெளில வரேலாது. வந்தாலும் வாழ்க்கை இல்லை. அவருக்கு தெரியும் எப்படி தமிழ் மக்களை விலைபேசி தான் வாழ்ந்து கொள்வதென்று. tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.