Jump to content

வடக்கு கடற்பரப்பில் கேரள கஞ்சாவுடன் 5 பேர் கைது : 2016 இல் இருந்து இன்று வரை 700 கிலோ கேரள கஞ்சா மீட்பு


Recommended Posts

வடக்கு கடற்பரப்பில் கேரள கஞ்சாவுடன் 5 பேர் கைது : 2016 இல் இருந்து இன்று வரை 700 கிலோ கேரள கஞ்சா மீட்பு

 

 

வடக்கு கடற்பரப்பில் வைத்து கேரள கஞ்சா கடத்தலிலீடுபட்ட  5 சந்தேகநபர்களை தாம் இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

unnamed-_1_.jpg

இதேவேளை, கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து இன்று 24 ஆம் திகதி பெப்ரவரி மாதம்  2017 ஆம் ஆண்டு வரை 700 கிலோ கிராம் கேரள கஞ்சாவை வடக்கு கடற்பரப்பில் கைப்பற்றியுள்ளதாக இலங்கை கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

unnamed-_3_.jpg

வடக்கு கடற்பரப்பிலுள்ள காங்கேசன்துறைப் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது 154.6 கிலோ கிராம் கேரள கஞ்சா போதைப்பொருளை படகு மூலம் கடத்தவிருந்த நிலையில் கஞ்சாவுடன் 3 பேரை கைதுசெய்தனர்.

unnamed.jpg

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட மூவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது இக் கடத்தலுடன் தொடர்புடைய மேலும் இருவரை உடுத்துறை கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கைதுசெய்தனர்.

 

குறித்த ரோந்து நடவடிக்கையில் கைதுசெய்யப்பட்ட  ஐவரையும் கைப்பற்றப்பட்ட  கஞ்சா போதைப்பொருட்களையும் படகையும் மேலதிக விசாரணைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/17021

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.