Jump to content

சம்பந்தன் வலியுறுத்தியதில் தவறில்லை அவற்றை நடைமுறைப்படுத்தினால் நாட்டின் எதிர்காலம் சூன்யமாகி விடும் என்கிறார் கெஹெலிய


Recommended Posts

சம்­பந்தன் வலி­யு­றுத்­தி­யதில் தவ­றில்லை

keheliya1-0524fe9d3ef273571dfa7ef3784dc0a8f2f82d98.jpg

 

அவற்றை நடை­மு­றைப்ப­டுத்­தினால் நாட்டின் எதிர்­காலம் சூன்­ய­மாகி விடும் என்­கிறார் கெஹெ­லிய  
 (லியோ நிரோஷ தர்ஷன்)

ஜெனிவா தீர்­மா­னத்­திற்கு அமை­வான உறு­தி­மொ­ழி­களை நிறை­வேற்­று­மாறு தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­து­வதில் தவ­றில்லை. ஆனால் அந்த உறு­தி­மொ­ழிகள் நிறை­வேற்­றப்­பட்டால் தேசிய பாது­காப்பு கேள்­விக்­கு­றி­யாகி நாட்டின் எதிர்­காலம் சூன்­ய­மாகி விடும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹெலிய ரம்­புக்­வெல்ல எச்­ச­ரித்­துள்ளார்.

 முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்­கவின்

இரா­ணு­வத்­திற்கு எதி­ரான பாலியல் குற்­றச்­சாட்­டுக்கள் மற்றும் புல­னாய்வு அதி­கா­ரி­களின் கைதுகள் என்­பன திட்­ட­மி­டப்­பட்டே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. ஆகவே நாட்டின் நிலைமை மிகவும் மோச­மா­ன­தா­கவே காணப்­ப­டு­கின்­றது எனவும் அவர் குறிப்­பிட்டார்.

பத்­த­ர­முல்லை , நெலும் மாவத்­தையில் அமைந்­துள்ள மஹிந்த ராஜ­ப­க்ஷவின் இணைப்பு அலு­வ­ல­கத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற ஊடக சந்­திப்பில் கலந்துக் கொண்டு உரை­யாற்­று­கை­ய­லேயே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹே­லிய ரம்­புக்­வெல்ல மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்­நதும் கூறு­கையில் ,

சர்­வ­தே­சத்­திற்­கான இலங்­கையின் உறு­தி­மொ­ழிகள் குறித்து கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க் கட்­சியின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் நீண்ட விளக்­கத்தை கொடுத்தார். அதா­வது இலங்கை ஜெனி­வாவில் வழங்­கிய உறு­தி­மொ­ழி­களை நிறை­வேற்ற வேண்டும் என வலி­யு­றுத்­தினார். இதனை தவ­றாக கருத முடி­யாது . ஏனென்றால் அர­சாங்கம் இணை அனு­ச­ரனை வழங்­கிய தீர்­மா­னமே ஜெனி­வாவில் நிறை­வேற்­றப்­பட்­டது.

தற்­போ­தைய அர­சாங்கம் தேசிய பாது­காப்பு தொடர்பில் கருத்தில் கொள்­வ­தில்லை. 2015 ஆம் ஆண்­டிற்கு முன்னர் நாட்டில் காணப்­பட்ட நிலை­மையும் ஆட்சி மாற்­றத்தின் பின்­ன­ரான தற்­போ­தைய நிலை­மையும் முற்­றிலும் வேறுப்­பட்­ட­தாகும். ஆனால் அமெ­ரிக்­காவில் டொனல் ட்ரம்ப் தொடர்­பான புதிய நிர்­வா­கத்­திடம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன குறித்த தீர்­மா­னத்தை திருத்­து­மாறு கோரு­கின்றார்.

நாட்­டிற்கு எதி­ரான அமெ­ரிக்­காவின் தீர்­மா­னத்­திற்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­யது மாத்­தி­ர­மன்றி தற்­போது அதனை எதிர்ப்­பதும் மாற்­றி­ய­மைக்­கு­மாறு கோரு­வதும் வேடிக்­கை­யான விட­ய­மாகும். ஆனால் ஒரு நாட்டின் சுயா­தீன தன்­மைக்கு களங்கம் ஏற்­ப­டுத்த அந்த தீர்­மானம் காரணம் என்­பதால் அதனை முன் வைத்த அனைத்து தரப்­பி­ன­ரையும் அமெ­ரிக்­காவின் புதிய நிர்­வாகம் மாற்­றி­யுள்­ளது.

அதே போன்ற ஐக்­கிய நாடுகள் சபையின் சித்­தி­ர­வ­தைகள் தொடர்­பான விஷேட நிபுணர் ஜுவான் மென்டோஸ் ரோம் பிர­க­ட­னத்தில் இலங்கை கைச்­சாத்­திட வேண்டும் என கூறு­கின்றார். அத்­துடன் இரா­ணு­வத்­திற்கு எதி­ராக முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­ண­துங்க பாலியல் குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­து­கின்றார். மறு புறம் ஊட­க­வி­யா­ளர்கள் தாக்­கப்­பட்­டமை மற்றும் கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வங்­களை மையப்­ப­டுத்தி கைதுகள் இடம்­பெ­று­கின்­றன.

 ஆனால் 27 ஆம் திகதி ஜெனிவா கூட்­டத்­தொடர் ஆரம்­ப­மாக உள்ள நிலையில் அவ­ச­ர­மாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற விட­யங்­களும் அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களும் சந்­தே­கங்­களை தோற்­று­விக்­கின்­றன. புதிய அர­சி­ய­ல­மைப்பு நிறை­வேற்­றப்­பட வேண்டும். அதனை சர்­வ­ஜ­ன­வாக்­கெ­டுப்பின் ஊடாக அங்­கி­க­ரிக்க வேண்டும் என சம்­பந்தன் கூறுவதில் கபட நோக்கம் உள்ளது.

நிச்சயமாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தினால் புதிய அரசியலமைப்பு 95 வீதத்தில் தோல்வியடையும் . இதனையே காரணமாக உலகிற்கு காண்பித்து தனியாட்சிக்கான கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபை ஊடாக நியாயப்படுத்த முடியும் . இதன் பின்னணி எமக்கு விளங்கியுள்ளது. ஆனால் நல்லாட்சயனர் தெரிந்தும் தெரியாது போல் இருக்கின்றனர் என தெரிவித்தார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-02-24#page-1

Link to comment
Share on other sites

சிங்கள-பௌத்தர்களை இலங்கை தீவைவிட்டு முழுமையாக வெளியேற்றுவதே ஒரேவழி என்கிறார் கெக்கெலிய.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.