Jump to content

மட்டு. காணி ஆணையாளர் மீது துப்பாக்கிப் பிரயோகம் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் 5 குழுக்கள் விசாரணை 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு


Recommended Posts

மட்டு. காணி ஆணையாளர் மீது துப்பாக்கிப் பிரயோகம் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் 5 குழுக்கள் விசாரணை

p20-b0646b5036ceb74c4a342210d2623e85632a1c1c.jpg

 

20 பேரிடம் வாக்குமூலம் பதிவு
(எம்.எப்.எம்.பஸீர்)

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேச குமார் விமல்ராஜ் மீது நடத்தப்பட்ட துப்  பாக்கிப் பிரயோகம் தொடர்பிலான விசார  ணைகளுக்கு 5 பொலிஸ் குழுக்கள் கடமை  யில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.  கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜாகொட ஆரச்சியின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த ஐந்து பொலிஸ் குழுக்களும் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.  

அதன்படி நேற்று மாலை வரை இந்த சிறப்பு விசாரணைக் குழுக்கள் நேசகுமார் விமல்ராஜ் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் 20 பேரிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளதாகவும் அதில் வெளிப்படுத்தப்பட்ட பல்வேறு தகவல்கள் ஊடாக துப்பாக்கிதாரிகளைக் கண்டறிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கேசரியிடம் தெரிவித்தார்.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் மீது நேற்று முன் தினம் இரவு 7.15 மணியளவில் துப்பககிச் சூடு நடத்தப்பட்டிருந்தது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பககிச் சூட்டினை நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.

இதனையடுத்து உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் அங்கு தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றார். அவரது உடல் நிலைமை பாரதூரமானதாக இல்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. அவரது கை பகுதியிலேயே துப்பாக்கிச் சன்னங்களால் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது அவர் தேரி வருவதாகவும் மட்டக்களப்பு போதன அவைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

களுதாவளை 4 ஆம் பிரிவில் அமைந்துள்ள சோமசுந்தரம் வீதியிலுள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் வீட்டுக்கு வந்த இனம் தெரியாத நபர்கள் அவரை வெளியே அழைத்து அவருடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

 எவ்வாறாயினும் நேற்று மாலை வரை சந்தேக நபர்களோ அல்லது துப்பக்கிச் சூட்டுக்கான காரணமோ துல்லியமாக அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை.

 எனினும் இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில் சந்தேக நபர்களை அடையாளம் காணும் அளவுக்கு பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளுக்கு பொருப்பான் ஔயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.

பலாத்காரமான காணி அபகரிப்புக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டில் இருந்துள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் அண்மையில் ஏறாவூர் - புன்னக்குடா பகுதியில் கடமையில் இருந்த போது சிலர் அவரை தகக முர்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இதனைவிட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் துப்பாககிப் பிரயோகத்துக்கு உட்பட்ட நாளான நேற்று முன் தினமும் பலாத்காரமக அரச இடங்களை அபகரிப்போருக்கு எதிராக நீதிமன்ர உத்தரவு ஒன்ரினைப் பெற்றுக்கொள்ள ஏறாவூர் நீதிமன்றுக்கு சென்றிருந்ததாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளன.

 இந் நிலையில் அந்த தகவல்கள் மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜுக்கு வந்த தொலைபேசி அழைப்பு உள்ளிட்ட பல்வேறு தடயங்கள் ஊடாக தற்போதைய விசாரணைகள் இடம்பெறுகின்றன.

9 மில்லி மீற்றர் ரக துப்பககியொன்றே துப்பாக்கிப் பிரயோகத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. இந் நிலையில் மேலதிக விசாரணைகளை கிழக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிச் மா அதிபர் சுமித் எதிரிசிங்கவின் மேற்பார்வையில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜாகொட ஆரச்சியின் நேரடி கட்டுப்பாட்டில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கீர்த்திரத்னவின் வழி நடத்தலில் உதவி பொலிஸ் அத்தியட்சர் சிசிர பெட்ரிதந்திரி, களுவாஞ்சிக் குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நந்தலால் ஆகியோரின் கீழான ஐந்து பொலிஸ் குழுக்கள் முன்னெடுத்துள்ளன.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-02-24#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.