Jump to content

புகைப்படம், வீடியோ, Emoji போன்றவற்றை இனி வட்ஸ்அப் ஸ்டேட்டஸாக அப்டேட் செய்யலாம்


Recommended Posts

புகைப்படம், வீடியோ, Emoji போன்றவற்றை இனி வட்ஸ்அப் ஸ்டேட்டஸாக அப்டேட் செய்யலாம்

 

 

புகைப்படம், வீடியோ, Emoji போன்றவற்றை இனி வட்ஸ்அப் ஸ்டேட்டஸாக அப்டேட் செய்யலாம்
 

வட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டுள்ள புதிய ஸ்டேட்டஸ் அப்டேட் மூலம் வாடிக்கையாளர்கள் புகைப்படம், வீடியோ மற்றும் எமோஜி உள்ளிட்டவற்றை செட் செய்து கொள்ள முடியும்.

வட்ஸ்அப் உலகின் பிரபலமான மெசேஜிங் அப் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதில் வழங்கப்பட்டுள்ள புதிய அப்டேட் பற்றி உங்களுக்கு தெரியுமா?

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பரிசோதனை செய்யப்பட்டு, சில தினங்களுக்கு முன் வட்ஸ்அப் பீட்டா பதிப்புகளுக்கு மட்டும் வழங்கப்பட்ட புதிய ஸ்டேட்டஸ் அப்டேட் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய அப்டேட் வட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-இல் புதிய வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

அதன்படி வட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-இல் வாடிக்கையாளர்கள் இனி புகைப்படம், வீடியோ அல்லது எமோஜி உள்ளிட்டவற்றை செட் செய்து கொள்ள முடியும்.

இதே போன்ற வசதி ஏற்கனவே இன்ஸ்டகிராம் செயலியிலும் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. வட்ஸ்அப்பில் இந்த வசதியை பெற வாடிக்கையாளர்கள் தங்களின் செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.

பெப்ரவரி 24 ஆம் திகதி வட்ஸ்அப் செயலியின் 8 ஆவது பிறந்த தினம் என்பதால் புதிய ஸ்டேட்டஸ் அப்டேட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய வட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட் மூலம் ஸ்டேட்ஸ் பகுதியில் புகைப்படம், வீடியோ அல்லது எமோஜிக்களை வைத்து கொள்ள முடியும். வட்ஸ்அப் குறுந்தகவல்களை போன்றே ஸ்டேட்ஸ் அப்டேட்களும் முழுமையான என்க்ரிப்ஷன் வசதி பெற்றுள்ளது.

இதே போன்ற வசதி ஸ்நாப்சாட் மற்றும் இன்ஸ்டகிராம் செயலியிலும் வழங்கப்பட்டு வருகிறது. வட்ஸ்அப் ஸ்டேட்டஸ் 24 மணி நேரம் கழித்து தானாக மறைந்து விடும்.

இதுவரை வட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பகுதியில் எழுத்துக்களை மட்டுமே பதிவு செய்ய முடியும் என்ற ரீதியில் புதிய அப்டேட் மிகப்பெரிய வசதியாகவே பார்க்கப்படுகிறது.

அன்ரொய்ட் மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் வழங்கப்பட்டு வரும் புதிய அப்டேட் முதற்கட்டமாக சில நாடுகளை தொடர்ந்து சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

 

 

 

http://newsfirst.lk/tamil/2017/02/புகைப்படம்-வீடியோ-emoji-போன்ற/

Link to comment
Share on other sites

வீடியோ, போட்டோஸ், Gif...வாட்ஸ்அப்பின் ஸ்டேட்டஸ் அப்டேட்! #WhatsappUpdate

ஜேன் கோம் மற்றும் பிரையன் ஆக்டன்

ரியாக 8 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் வாட்ஸ்அப் துவங்கப்பட்டது. ஜேன் கோமும், பிரையன் ஆக்டனும் இதனைத் துவங்கிய போது, உலகமே தங்கள் மொபைல்களில் தூக்கி வைத்துக் கொண்டாடும் என அவர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் இன்று இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்பாக டெக் உலகில் கொடிகட்டிப் பறக்கிறது வாட்ஸ்அப். எப்போதும் பயனாளர்களின் பல்ஸ் பார்த்து, அப்டேட் கொடுப்பதுதான் வாட்ஸ்அப்பின் ஸ்டைல். 8-வது பிறந்தநாளான இன்றும், புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளது வாட்ஸ்அப். வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் போட்டோ, Gif, வீடியோ ஆகியவற்றை வைக்கும் வசதி வரவுள்ளதாக கடந்த 10-ம் தேதியே, வாட்ஸ்அப் பிளாக்கில் அறிவித்தார் அதன் நிறுவனர் ஜேன் கோம். அந்த அப்டேட்ஸ் அனைத்தும் இன்று வந்துவிட்டன.

1. உங்களுடைய ஸ்டேட்டஸ் மூலமாகவே வீடியோ, போட்டோஸ், Gif ஆகியவற்றை, மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும் என்பதுதான் இந்த புது அப்டேட்டின் ஸ்பெஷல்.

2. இந்த புதிய வசதிகளால் வாட்ஸ்அப்பின் ஹோம் பேஜ் முழுவதுமே மாறிவிட்டது. சாட்ஸ், ஸ்டேட்டஸ், வாட்ஸ்அப் கால் ஆகிய மூன்று டேப்களோடு, இன்ஸ்டன்ட் ஸ்டேட்டஸ் வைக்க உதவும் கேமரா ஐகானும் இடம் பெற்றுள்ளது. அந்த கேமரா ஐகானை க்ளிக் செய்வதன் மூலம் உடனடியாக போட்டோ, வீடியோ மற்றும் gif ஆகியவற்றை உங்கள் ஸ்டேட்டஸாக செட் செய்ய முடியும்.

வாட்ஸ்அப் அப்டேட்

3. நீங்கள் வைக்கும் ஸ்டேட்டஸ் அனைத்துமே, அடுத்த 24 மணி நேரத்திற்கு மட்டுமே! அதன் பிறகு உங்களுடைய ஸ்டேட்டஸ் மறைந்துவிடும்.

4. புதிதாக இணைந்திருக்கும் ஸ்டேட்டஸ் டேப் மூலம், உங்களுடைய கான்டேக்ட் லிஸ்ட்டில் இருக்கும் நண்பர்களின் ஸ்டேட்டஸ்களை உடனே நீங்கள் பார்க்க முடியும். இதற்கு முன்பு நீங்கள் நண்பர்களின் ஸ்டேட்டஸ் பார்க்க வேண்டுமென்றால், அவர்களின் ப்ரோபைல் அல்லது கான்டாக்ட் லிஸ்ட்டில்தான் பார்க்க முடியும். ஆனால் இப்போது தனியாக ஸ்டேட்டஸ் பாரில் சென்று பார்க்க முடியும்.

5. இந்த வசதி மூலம் உங்கள் நண்பர்கள் புதிதாக ஸ்டேட்டஸ் பதிவு செய்தால், உடனே ஸ்டேட்டஸ் பாரில் காட்டிவிடும். எனவே சமீபத்தில் பதிவு செய்த ஸ்டேட்டஸ் விவரங்களையும் தனியாகக் காணமுடியும். இதனால் ஃபேஸ்புக் போல இதிலும், அனைவரின் ஸ்டேட்டசும் உங்களுக்குத் தெரிந்துவிடும்.

6. வீடியோ ஸ்டேட்டஸ்களுக்காக, வீடியோவை ரெக்கார்ட் செய்யும் போது 45 நொடிகள் மட்டுமே ரெக்கார்டு செய்ய முடியும். அதேபோல ஏற்கெனவே இருக்கும் வீடியோக்களை அப்லோட் செய்தாலும், அவற்றை வாட்ஸ்அப் 45 நொடிகளுக்கு ட்ரிம் செய்துவிடும். உங்கள் போன் கேலரியில் இருந்தும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்க்கு போட்டோக்களை ஒன்றாக அப்லோட் செய்ய முடியும்.

7. நீங்கள் ஸ்டேட்டஸில் அப்டேட் செய்யும் வீடியோக்கள், போட்டோக்கள் அனைத்துமே வழக்கம்போல உங்கள் போனில் ஸ்டோர் ஆகிவிடும். இவை அனைத்துமே எண்ட் டு எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்டதுதான். 

8. நீங்கள் அனுப்பும் புகைப்படங்களின் மீது எழுதும், வரையும் (Draw) வசதி ஏற்கெனவே வாட்ஸ்அப்பில் இருந்ததுதான். அதைத் தற்போதும் இந்த ஸ்டேட்டஸ் அப்டேட்டிலும் செய்ய முடியும். உங்களுடைய போட்டோஸ், வீடியோக்கள் மீது எழுதவும், எமோஜிக்களை வைக்கவும் முடியும்.

வாட்ஸ்அப் அப்டேட்

9. உங்களுடைய ஸ்டேட்டஸ்களை யாரெல்லாம் பார்க்கலாம் என்பதையும் நீங்கள் முடிவு செய்யலாம். இதற்காக ஸ்டேட்டஸ் பகுதியில் இருக்கும், Status Privacy பகுதிக்கு சென்று செட்டிங்க்ஸ்-ஐ மாற்றிக்கொள்ளலாம். அதில் My Contacts, My contacts except..., Only share with... என மூன்று ஆப்ஷன்கள் இருக்கின்றன. இதன்மூலம் குறிப்பிட்ட நபருடன் மட்டுமே உங்களுடைய ஸ்டேட்டஸை பகிர்ந்துகொள்ளவும், சிலருக்கு உங்கள் ஸ்டேட்டஸை காட்டாமலும் வைக்க முடியும். 

10. கடைசி வெர்ஷன் வரை வாட்ஸ்அப்பை அப்டேட் செய்தவர்களுக்கு இன்று காலை முதல் அப்டேட்ஸ் வரத்துவங்கிவிட்டன. இன்னும் உங்களுக்கு இந்த வசதிகள் வரவில்லை எனில் உடனே வாட்ஸ்அப்பை அப்டேட் செய்யுங்கள்.

இன்று காலை வாட்ஸ்அப்பை பார்த்த பலருக்கும் சர்ப்ரைஸாக இருந்திருக்கின்றன இந்த வசதிகள். ஸ்னாப்சாட்டை பார்த்து காப்பி அடித்தது, 24 மணி நேரம் மட்டுமே இருக்கும் ஸ்டேட்டஸ், இதுவரைக்கும் வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்யாதவர்கள் கூட இன்று காலை புது ஸ்டேட்டஸ் பார்த்துவிட்டு மெசேஜ் செய்தது என இதுகுறித்த தங்கள் அனுபவங்களை, சமூக வலைதளங்களில் பதிந்து வருகின்றனர்.

 

http://www.vikatan.com/news/information-technology/81890-now-you-can-share-photos-gifs-and-videos-via-whatsapp-status-whatsappupdate.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.