Jump to content

சாம்சங் கேலக்ஸி S8, கேலக்ஸி S8 ப்ளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகவுள்ளன


Recommended Posts

சாம்சங் கேலக்ஸி S8, கேலக்ஸி S8 ப்ளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகவுள்ளன

 

 

சாம்சங் கேலக்ஸி S8, கேலக்ஸி S8 ப்ளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகவுள்ளன
 

சாம்சங் நிறுவனம் அதன் புதிய கேலக்ஸி S8, கேலக்ஸி S8 ப்ளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தவுள்ளது.

இவற்றின் விலை மற்றும் நிற வகைகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த இரண்டு வகை ஸ்மார்ட்போன்களும் கறுப்பு, ஆர்க்கிட் சாம்பல் மற்றும் பொன்னிறத்தில் கிடைக்கவுள்ளன.

சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போன் $950 விலையிலும் கேலக்ஸி S8 ப்ளஸ் ஸ்மார்ட்போன் $1050 விலையிலும் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒற்றை சிம் கொண்ட சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போன் அண்ட்ரோய்ட் 7.0 நெளகாட் மூலம் இயங்கும் எனவும் இதில் 2160×3840 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.50 அங்குல முழு HD ட்ரிலுமினோஸ் டிஸ்ப்ளே உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் உடன் இணைந்து குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 ப்ரொஸசர் மூலம் இயக்கப்படுகிறது. இதில் மைக்ரோ SD அட்டை வழியாக 128 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. LDE ஃபிளாஷ் கொண்ட 16 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் (குறிப்பிடப்படாத) மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமராவைக் கொண்டுள்ளது.

இந்த செல்பேசி 3000mAh பேட்டரி திறன் மூலம் இயங்கும் எனவும் ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, Wi-Fi, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத், ஜிஎஸ்எம், 3ஜி, 4ஜி எல்டிஇ மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒற்றை சிம் ஆதரவு கொண்ட சாம்சங் கேலக்ஸி S8 பிளஸ் ஸ்மார்ட்போன் அண்ட்ரோய்ட் 7.0 நெளகாட் மூலம் இயங்கும் எனவும் இதில் 2160×3840 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.20 அங்குல முழு HD ட்ரிலுமினோஸ் டிஸ்ப்ளே இடம்பெறும் எனவும் இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் உடன் இணைந்து குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 ப்ரொஸசர் மூலம் இயக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது மைக்ரோ SD அட்டை வழியாக 128 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. சாம்சங் கேலக்ஸி S8 ப்ளஸ் ஸ்மார்ட்போன், LDE ஃபிளாஷ் கொண்ட 16 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் (குறிப்பிடப்படாத) மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமராவைக் கொண்டிருக்கும்.

இது 3000mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, Wi-Fi, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத், ஜிஎஸ்எம், 3ஜி, 4ஜி எல்டிஇ மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை உள்ளடக்கப்படவுள்ளன.

http://newsfirst.lk/tamil/2017/02/சாம்சங்-கேலக்ஸி-s8-கேலக்ஸி-s8/

Link to comment
Share on other sites

  • 1 month later...

சாம்சங் கேலக்ஸி S8, S8 பிளஸ்: ஏப்ரல் 19-ல் இந்திய வெளியீடு

 

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S8 மற்றும் S8 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் ஏப்ரல் மாதம் 19-ந்தேதி இந்தியாவில் வெளியாக இருக்கிறது. இதில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் மற்றும் இந்திய விலையை இங்கு பார்ப்போம்.

 
 
 
 
சாம்சங் கேலக்ஸி S8, S8 பிளஸ்: ஏப்ரல் 19-ல் இந்திய வெளியீடு
 
புதுடெல்லி:
 
சர்வதேச சந்தைகளில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து சாம்சங் நிறுவனத்தின் புதுவரவு சாதனங்களான S8 மற்றும் S8 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியா வர இருக்கிறது. அதன்படி புதிய சாம்சங் சாதனங்கள் ஏப்ரல் 19-ந்தேதி இந்தியாவில் வெளியிடப்படவுள்ளது. 
 
ஏற்கனவே இதற்கான அறிவிப்புகள் வெளியான போதிலும் தேதி நெருங்குவதை தொடர்ந்து சாம்சங் மொபைல் இந்திய ட்விட்டரில் புதிய ஸ்மார்ட்போன்களின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக அமெரிக்கா மற்றும் தென் கொரியாவில் முன்பதிவுகள் துவங்கிய நிலையில் இவை சாம்சங் S7-ஐ விட நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக சாம்சங் தெரிவித்துள்ளது. 
 
சிறப்பம்சங்களை பொருத்த வரை கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் QHD+1440x2960 ரெசல்யூஷன் கொண்ட சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவும், S8+ ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் QHD+1440x2960 ரெசல்யூஷன் கொண்ட சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவும் வழங்கப்பட்டுள்ளது. இவை கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டு பாதுகாக்கப்படுகிறது.
 
201704151617335625_samsung%20s8%20plus._
 
இத்துடன் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 12 எம்பி டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க சந்தையில் கேலக்ஸி S8 மற்றும் S8+ ஸ்மார்ட்போன்கள் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் வழங்கப்படும் என்றும் இதர சர்வதேச சந்தைகளில் (இந்தியா உட்பட) எக்சைனோஸ் 8895 சிப்செட் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மெமரியை பொருத்த வரை இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4ஜி எல்டிஇ, வை-பை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி, என்எஃப்சி மற்றும் ஜிபிஎஸ் ஆப்ஷன்களுடன் பல்வேறு இதர சென்சார்களும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவற்றில் சாம்சங் பே வசதியும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
சாம்சங் கேலக்ஸி S8 மற்றும் S8+ ஸ்மார்ட்போன்களில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனில் 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியும், S8+ ஸ்மார்ட்போனில் 3500 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது. 
 
சாம்சங் கேலக்ஸி S8 விலை 750 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.48,700 மற்றும் S8+ ஸ்மார்ட்போன் விலை 850 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.55,200 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/15161731/1080119/Samsung-Galaxy-S8-Galaxy-S8-to-launch-in-India-on.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திமுகாவில் ஒரு  it குருப் இருக்கு அதன் முக்கிய வேலையே திமுகாவை பற்றி இல்லாத பொல்லாத  செய்தியை சொல்லி dmk எதிரானவர்களின் நட்பை அனுதாபத்தை பெற்று கொள்வது .
    • தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.