Jump to content

ஜெயலலிதா என்னை ஒதுங்கியிருக்கச் சொன்னார்! டி.டி.வி.தினகரன் பேட்டி


Recommended Posts

ஜெயலலிதா என்னை ஒதுங்கியிருக்கச் சொன்னார்! டி.டி.வி.தினகரன் பேட்டி

TTV Dinakaran

'நான், திடீரென்று வந்திருக்கிறேன் என்று சிலர் சொல்கிறார்கள். ஜெயலலிதா என்னை சில காலம் ஒதுங்கியிருக்கும்படி கூறினார். அவரது கட்டளையை ஏற்று, ஒரு போர்வீரனாக இன்றைக்கும் நான் எனது பணியைச் செய்துகொண்டிருக்கிறேன்' என அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில், கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், 'எம்ஜிஆர் மறைந்த காலத்திலேயே ஜெயலலிதாவால் அரசியலுக்குக் கொண்டுவரப்பட்டவன் நான். பிறகு, ஜெயலலிதாவால் 1999-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு, ஜெயலலிதாவாலும் தொண்டர்களாலும் நான் வெற்றிபெற்றேன். நாடாளுமன்ற உறுப்பினராக 11 ஆண்டுகள் பணியாற்றியிருக்கின்றேன். அதுபோல ஜெயலலிதாவால், புரட்சித் தலைவி பேரவைச் செயலாளராகவும் பிறகு அமைப்புச் செயலாளராகவும் பொருளாளராகவும் பணியாற்றியிருக்கிறேன். அனால், நான் திடீரென்று வந்திருக்கிறேன் என்று சிலர் சொல்கிறார்கள். ஜெயலலிதா என்னை சில காலம் ஒதுங்கியிருக்கும்படி கூறினார். அவரது கட்டளையை ஏற்று ஒரு போர்வீரனாக இன்றைக்கும் நான் எனது பணியைச் செய்துகொண்டிருக்கிறேன்.

மீண்டும் சசிகலா தலைமையேற்ற பிறகு, எனது தேவை நிச்சயம் இருக்க வேண்டும் என்று கழகத்தினர் கூறினர். இக்கட்டான நிலையில் என்னை கட்சியில் சேர்த்து, துணைப் பொதுச்செயலாளராக நியமித்திருக்கிறார் சசிகலா. வழிதவறிச் சென்றவர்கள், மீண்டும் அ.தி.மு.க.வில் இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பேரவையின் விதிகளுக்கு உட்பட்டுதான் சபாநாயகர் வாக்கெடுப்பை நடத்தினார். பேரவையில் கலவரம்செய்து ஆட்சியைக் கலைக்க மு.க.ஸ்டாலின் முயற்சிசெய்தார். டெல்லி சென்று குடியரசுத் தலைவரை சந்திக்கும் மு.க.ஸ்டாலினின் திட்டம் தோல்வியடையும். பன்னீர்செல்வத்தின் செயல்பாடு, அ.தி.மு.க என்ற எஃகு கோட்டையைப் பாதிக்காது. எஃகு கோட்டையான அ.தி.மு.க.வை யாராலும், ஒன்றும் செய்துவிட முடியாது. கட்சி, ஆட்சியில் தனி நபர், குடும்ப ஆதிக்கம் இருக்காது. அ.தி.மு.க அரசு மீது மக்கள் கோபமாக உள்ளார்கள் என்பது பொய்யான பிரசாரம். 2021-ல் மீண்டும் அ.தி.மு.க ஆட்சி அமையும்.

ஆர்.கே.நகர் தேர்தலில் கட்சி யாரை தேர்வுசெய்கிறதோ, அவர்தான் வேட்பாளர். அ.தி.மு.க சட்ட விதிப்படிதான் சசிகலா பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியின் வங்கிக் கணக்குகளை அமைச்சரான பொருளாளர் சீனிவாசன் கவனித்துவருகிறார். எங்களுக்கு கருணாநிதி, தி.மு.க.தான் எதிரி' என்று கூறினார்.

http://www.vikatan.com/news/tamilnadu/81774-jayalaithaa-has-said-me-to-stay-away-says-ttv-dinakaran.html

Link to comment
Share on other sites

gallerye_231204667_1717131.jpg

அ.தி.மு.க.,வில், சசிகலா எதிர்ப் பாளர்களை அணி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ள, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திடம், திடீரென, 'சரண்டர்' அடைந்துள்ளார் தினகரன்.

 

Tamil_News_large_1717131_318_219.jpg

ஆட்சியை அழிக்க, தி.மு.க., திட்ட மிடுவதாக, புகார் கூறிய அவர், 'கட்சியில் இருந்து பிரிந்து
சென்றவர்கள், மீண்டும் வர வேண்டும்' என்றும் அழைப்பு விடுத்தார். 'கட்சியிலும், ஆட்சியிலும் தங்கள் குடும்பத்தின் ஆதிக்கம் இருக்காது' என்றும், அவர்களுக்கு உறுதி அளித்தார்.

சிறை செல்லும் முன், கட்சியை வழிநடத்தும் பொறுப்பை, தன் அக்கா மகன் தினகரனிடம் ஒப்படைத்தார் சசிகலா. அவரால், துணை பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட தினகரன், நேற்று, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், பொறுப்பு ஏற்றார்.

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள, தலைமை அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், அவை தலைவரும்,அமைச்சருமான
செங்கோட்டையன், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை உட்பட, பலர் பங்கேற்றனர்.

பின், தினகரன் அளித்த பேட்டி:

* சட்டசபையில் முறைகேடு நடந்ததாக, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், ஜனாதிபதி யிடம் புகார் கொடுக்க சென்றுள்ளாரே?

ஸ்டாலின், எப்படியாவது கலவரத்தை ஏற்படுத்தி, ஆட்சியை கலைத்து விட வேண்டும் என, முயற்சி செய்தார். அவரது முயற்சியை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், ராணுவ கட்டுக் கோப்புடன் செயல்பட்டு முறியடித்து, ஜெ., ஆட்சி தொடர வழி செய்தனர். தோல்வியின் விரக்தியில், ஸ்டாலின், எதை எதையோ செய்து கொண்டிருக்கிறார்.

* பன்னீர்செல்வம், தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்யப் போவதாக கூறப்படுகிறது. அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?

எம்.ஜி.ஆர்., காலத்திலும், ஜெ., காலத்திலும், எத்தனையோ துரோக செயல்களை எதிர்த்து, அ.தி.மு.க., போராடி வெற்றி பெற்றது. சில புல்லுருவிகளின் செயல், எக்கு கோட்டையான, அ.தி.மு.க.,வை பாதிக்காது.

* பன்னீர்செல்வத்தையும், அவரது ஆதரவாளர்களையும், மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்வீர்களா?

அ.தி.முக., என்பது தாய் கட்சி. சிலர் வழிதவறி

சென்றுள்ளனர்; நிச்சயம் தேடி வருவர் என்பது தெரியும்.

* கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலா குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்துவர் என, ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறாரே?

அ.தி.மு.க., ஆட்சி என்பது, 1.50 கோடி தொண்டர் களால் நடத்தப்படுகிறது. இதில், எந்த ஒரு தனி நபரோ, ஒரு குடும்பமோ, ஆதிக்கம் செலுத்திய தில்லை. வருங்காலத்தில் செலுத்தவும் விடமாட்டோம்.

* உங்களை, ஒரே நாளில் கட்சியில் சேர்த்து, துணை பொதுச்செயலர் பதவி கொடுத்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதே?

எம்.ஜி.ஆர்., மறைந்த காலத்திலேயே, ஜெய லலிதாவால் அரசியலுக்கு கொண்டு வரப் பட்டேன். 11 ஆண்டுகள், எம்.பி.,யாக பணி யாற்றி உள்ளேன். ஜெ., பேரவை செயலராக, அமைப்பு செயலராக, பொருளாளராக பணியாற்றி உள்ளேன்; திடீரென்று வந்தவன் அல்ல.

என்னை சில காலம் ஒதுங்கி இருக்கும்படி, ஜெ., சொன்னார். சசிகலா தலைமையேற்ற பின், என் சேவை தேவை என, கட்சியினர் கோரிக்கை வைத்ததால், என்னை கட்சியில் சேர்த்து, துணை பொதுச்செயலராக்கினார்.

* உங்கள் மீது பொது மக்கள் கோபம் தொடர்கிறதே?

அப்படி திட்டமிட்டு பரப்புகின்றனர். தி.மு.க., வினர் செய்கிற சதி இது. பொது மக்கள் போர்வையில், பல பிரச்னைகளை கிளப்பு கின்றனர். இதுபோன்ற பிரச்னைகளை கிளப்பி, சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது என்ற நிலையை ஏற்படுத்த நினைக்கின்றனர்.

* சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவீர்களா?

கட்சி யாரை முடிவு செய்கிறதோ, அவர் தான் வேட்பாளர்.

* சசிகலாவை, தமிழக சிறைக்கு மாற்ற, நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?

எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

* அ.தி.மு.க., சட்ட விதிகளின்படி, தற்காலிக பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப் பட்டது செல்லாது. எனவே, அவரால் நியமனம் செய்யப்பட்ட, உங்களது பதவியும் செல்லாது என கூறப்படுகிறதே?

சசிகலா தேர்வும், அறிவிப்புகளும் செல்லுபடி யாகும். இது, மதுசூதனனுக்கும் தெரியும்.

* தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டுள்ளதே?

அதற்கு, கட்சியின் சட்ட வல்லுனர்கள் பதில்

 

அளிப்பர்.

* கட்சியின் வங்கி கணக்கை இயக்கக் கூடாது என, பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளாரே?

அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின், எந்த கடிதம் கொடுத்தாலும் செல்லாது. கட்சி கணக்கு, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மூலம், தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது.

* ஜெ., அண்ணன் மகள் தீபா பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கருத்து கூற விரும்பவில்லை.

* ஜெ., முழு உருவ சிலை, கட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட உள்ளதா?

ஏற்பாடு நடந்து வருகிறது.

* இன்றைய அரசியல் சூழ்நிலையில், உங்கள் கட்சியின் பிரதான எதிரி பன்னீர்செல்வமா அல்லது தி.மு.க.,வா?

என்றைக்குமே, தி.மு.க., தான் பிரதான எதிரி.

* பன்னீர்செல்வம் மீண்டும் வந்தால் சேர்த்து கொள்வீர்களா?

பிரிந்து சென்ற யாராக இருந்தாலும், மீண்டும் வந்து சேருவர் என்ற நம்பிக்கை உள்ளது. யாராக இருந்தாலும், இந்த இயக்கம் ஏற்றுக் கொள்ளும்.இவ்வாறு தினகரன் தெரிவித்தார்.

ஜெ., படம் 'மிஸ்சிங்'

தினகரன் பொறுப்பேற்ற நிகழ்ச்சி தொடர்பாக, கட்சி அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட புகைப்படத்தில், ஜெ., போட்டோ இல்லை.

தினகரன், நேற்று பகல், 12:00 மணிக்கு, கட்சி அலுவலகம் வந்தார். அவரை, அமைச்சர்கள் வரவேற்றனர். அமைச்சர்கள் கார் அலுவலகத் திற்கு வெளியே நிற்க, அவர் கார் மட்டும் உள்ளே நிறுத்தப்பட்டது.

அவர் துணை பொதுச் செயலராக பொறுப்பேற்ற பின், முதல் தளத் தின் மாடத்தில் வந்து நின்று, ஜெயலலி தாவை போல், வணக்கம் தெரிவித்தார்.

பகல், 1:00 மணிக்கு, முதல்வர் இடைப்பாடி பழனிசாமி வந்தார். அவரது காரும், கட்சி அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டது. அவர், தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்ததும், சென்று விட்டார்.தினகரன் பொறுப்பேற்ற போது, அவரது மேஜையில், சசிகலா மற்றும் ஜெ., படங்கள் வைக்கப்பட்டிருந்தன.

பத்திரிகை களுக்கு அனுப்பிய புகைப்படத்தில், ஜெ., படம் இடம் பெறவில்லை. சசிகலா படம் மட்டும் இடம்பெற்றிருந்தது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1717131

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நவீனன் said:

ஜெயலலிதா என்னை ஒதுங்கியிருக்கச் சொன்னார்!

கூவத்தில ... கூவாத்தூர்ல..?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.