Jump to content

தமிழ்நாட்டின் எழுச்சிகளும் கரிசனைகளும்


Recommended Posts

தமிழ்நாட்டின் எழுச்சிகளும் கரிசனைகளும்
 

article_1487831122-jey.jpg- கனகலிங்கம் கோபிகிருஷ்ணா  

இந்தியாவின் தமிழ்நாடு, அண்மைக் காலமாகவே, போராட்டக்களம் போன்று மாறியிருக்கிறது. அனேகமான தருணங்களில், ஓர் இடம் “போராட்டக்களம்” போன்று மாறியிருக்கிறது என்ற வார்த்தைப் பிரயோகம், எதிர்மறையான கருத்தையே வெளிப்படுத்தும். 

தமிழ்நாட்டிலும் எதிர்மறையான சம்பவங்கள் இடம்பெறுகின்ற போதிலும், அங்கு ஏற்பட்டுள்ள எழுச்சி, ஒரு வகையான புத்துணர்ச்சியைத் தருகின்றது என்பதை மறுக்க முடியாது.  

ஜெயலலிதாவின் மரணமும் அது ஏற்படுத்தியிருக்கும் ஒரு வகையான வெற்றிடமும் தலைமையற்ற உணர்வொன்றை, அம்மாநில மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது என்பது யதார்த்தமானது.

ஜெயலலிதா மீதான விமர்சனங்களைத் தாண்டி, அம்மாநிலத்தில் மறக்கடிக்கப்பட முடியாத ஓர் ஆளுமையாக அவர் இருந்தார் என்பது, அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு கருத்துத்தான்.

அதனால்தான், ஜெயலலிதாவின் மரணமென்பது, தமிழக அரசியலிலும் பொது வாழ்விலும், மிகப்பெரிய இழப்பென, ஏராளமான அறிஞர்கள் கூறுவதற்கும் காரணமாக இருந்தது.  

சல்லிக்கட்டுத் தொடர்பாக தமிழகத்தில் ஏற்பட்ட உணர்வெழுச்சி, அண்மைக்காலத்தில் முக்கியமான அரசியல் மாற்றமாக அமைந்தது. அந்தப் போராட்டம் தொடர்பான பாராட்டுகளையும் விமர்சனங்களையும் தாண்டி, இளைஞர்களைப் பிரதானப்படுத்திய முக்கியமான போராட்டமாக, அது அமைந்திருந்தது.

இளைஞர்களின் அந்தப் போராட்டம், மத்திய அரசாங்கம் வரை சென்றிருந்தது. அவர்களுக்கான பதிலும் கிடைத்தது.  
அதேபோன்று, தமிழக முதலமைச்சராக சசிகலா பதவியேற்கப் போகிறார் என்பதும் கிடைத்த எதிர்ப்பு அலையென்பது, சாதாரணமானது கிடையாது.

சமூக வலையமைப்புகளில் கேலி செய்யும் பதிவுகளில் ஆரம்பித்த எதிர்ப்பு, ஊடகங்களை முழுமையாக ஆக்கிரமித்தது. இறுதியில் வெறுமனே 11 சட்டசபை உறுப்பினர்களைக் கொண்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு, மாபெரும் ஆதரவு திரண்டது.

ஊடகங்கள் முழுவதிலுமே, நியாயஸ்தராக அவர் முன்னிறுத்தப்பட்டார். இதற்கான பிரதான காரணமாக, ஓ.பன்னீர்செல்வத்துக்கு, மக்களிடத்தில் காணப்பட்ட பேராதரவு அமைந்தது.  

தமிழக முதலமைச்சராக சசிகலா பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சொத்துக்குவிப்பு வழக்குத் தொடர்பான தீர்ப்பு வரும்வரை காத்திருப்பதற்கு ஆளுநர் முடிவுசெய்தமைக்கு, மக்களிடத்தில் காணப்பட்ட எதிர்ப்பும் முக்கியமானது என்பதை, அச்சமின்றிக் குறிப்பிட முடியும். 

இப்போது வரை, இந்தச் சட்டசபை கலைக்கப்பட்டுத் தேர்தலொன்று உடனடியாக நடத்தப்பட்டால், சசிகலாவுக்கு ஆதரவு வழங்கிய சட்டசபை உறுப்பினர்களில் அனேகமானோர், தங்களது பதவியை இழப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன என்பது யதார்த்தமானது. தமிழக மக்களில் குறிப்பிடத்தக்க அளவானோர், அரசியல்வாதிகளிடமிருந்து பணத்தைப் பெற்ற பின்னர், நேர்மையாக அவர்களுக்கே வாக்கை வழங்கும் தன்மை கொண்டவர்கள் என்ற அடிப்படையில், தேர்தல் வந்தவுடன் மக்கள் மாறிவிடுவார்களா என்ற சந்தேகம் இருந்தாலும், இப்போதைய நிலை இது தான்.  

இந்த இரண்டு சம்பவங்களுமே, அண்மைக்காலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் விழிப்புணர்வைக் காட்டுகின்றன. மக்கள், தமது அரசியல்வாதிகளை நம்பாது, தாங்களே நேரடியாகக் களத்தில் இறங்கி, தமது குரல்களைப் பதிவுசெய்வதைத்தான் இவை காட்டுகின்றன. இது, அரசியல் விழிப்புள்ள சமுதாயமொன்றுக்கான அறிகுறியாகும்.  

ஆனால், இதை மற்றைய பக்கமாகப் பார்த்தால், இந்த இரண்டு போராட்டங்கள் அல்லது எழுச்சிகளிலும் கூட்டுக்கலக மனப்பாங்கு ஒன்று காணப்பட்டதே தவிர, பகுத்தறியும் திறன் மூலமாக, அனைவரும் சிந்தித்து, குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டனவா என்பது சந்தேகமே. “சல்லிக்கட்டு என்பது தமிழர்களின் அடையாளம்/பாரம்பரியம்.

அதை நிறுத்த, சர்வதேச சதி நடக்கிறது” என்பது, பகுத்தறிந்து பெற்ற முடிவு கிடையாது. மாறாக, இனத்தை முன்னிறுத்திய போராட்டமே. சர்வதேச சதி இடம்பெறுகிறது என்பதற்கான எந்தவொரு நம்பத்தகுந்த ஆதாரமும் முன்வைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

ஆனால், “பீட்டா அமைப்பைத் தடை செய்” என்பது, போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. எதற்காகத் தடைசெய்யப்பட வேண்டும் என்ற கேள்விக்கு, பலரிடமும் பதில்கள் இருக்கவில்லை.  

அதேபோல் தான், ஓ.பன்னீர்செல்வம், தான் முதலமைச்சராக வர வேண்டுமென்பதும், “எல்லோரும் அந்தக் கருத்தைத்தான் கொண்டிருக்கிறார்கள். அதனால் நானும் அதே கருத்தைக் கொண்டிருப்பேன்” என்று உருவான நிலைமையாக இருந்ததே தவிர, ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவாகக் காணப்பட்டிருக்கவில்லை. 

சசிகலா - ஓ.பன்னீர்செல்வம் என்ற இருவரில், ஓ.பன்னீர்செல்வம் ஓரளவு சிறந்தவர்; எனவே அவருக்கு ஆதரவளிக்கிறோம் எனக் குறிப்பிட்ட ஒரு தொகுதியினர் கூறியிருந்தனர். அவர்களை, இவ்விமர்சனத்திலிருந்து தவிர்த்து விடலாம்.  

ஆனால், ஓ.பன்னீர்செல்வம், நேர்மையானவராக ஊடகங்களால் முன்னிறுத்தப்பட, அவருக்கான ஆதரவு பெருகியது. நேர்மையின் சிகரமாக, அடுத்த காந்தி அவர்தான் என்ற அளவில், அவருக்காக (இலவச) பிரசாரங்கள் அமைந்தன. 

ஆனால், அவர் கொண்டுவரப் போவதாக அறிவித்திருக்கும் “அம்மா ஆட்சி” என்பது, ஊழல் மிகுந்தது எனச் சுட்டிக்காட்டப்படவில்லை; ஊழல் காலத்தில், அவரும் ஜெயலலிதாவோடு இருந்தார் என்பது சுட்டிக்காட்டப்படவில்லை; ஜெயலலிதா இருக்கும் வரையில் - முக்கியமாக அவர் சிறையில் இருந்தபோது - அவரின் கைப்பொம்மையாகவே ஓ.பன்னீர்செல்வம் செயற்பட்டார் என்பது சுட்டிக்காட்டப்படவில்லை.  

உண்மையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் பின்னரும் கூட, “அம்மா ஆட்சி” என்றும் வேறு வழிகளிலும் ஜெயலலிதாவின் பெயரை, தமிழகத்தில் விற்க முடியுமாக இருப்பது, அவலத்தின் உச்ச நிலை. தற்போது சசிகலாவுக்குச் சிறையைப் பெற்றுக் கொடுத்திருக்கும் வழக்கு, ஜெயலலிதா மீதானதுதான். அவருக்கு உதவியதோடு, அவருடன் இணைந்து கொள்ளையடித்தார் என்றே, சசிகலாவின் பெயரும் குறிப்பிடப்பட்டது.

எனவே, சசிகலா குற்றவாளி என்றால், ஜெயலலிதா மிகப்பெரிய குற்றவாளி. அப்படிப்பட்ட ஒருவரின் பெயரை இன்னமும் பயன்படுத்த முடிவது, கவலைக்குரிய நிலையே தான்.  

ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாகவும் சந்தேகத்தை ஏற்படுத்தி, தனது ஆதரவுத்தளத்தைப் பெருக்கியிருந்தார். இத்தனைக்கும், தான் முதலமைச்சராக இருக்கும் வரைக்கும், தான் விசுவாசியாக இருக்கும், தான் தலைவியாக எண்ணும், தான் வழிபடும் ஜெயலலிதாவின் மரணத்தில், எந்தவிதச் சந்தேகத்தையும் கண்டிருக்காத அல்லது சந்தேகத்தைக் கண்டாலும் அது தொடர்பில் கருத்தெதனையும் முன்வைத்திருக்காத ஓ.பன்னீர்செல்வம், அவருடைய முதலமைச்சர் பதவி பறிபோகிறது என்ற நிலை வந்தவுடன் மாத்திரம், திடீரென ஞானதோயம் பெற்றவர் போன்று காட்டிக்கொள்வது, நகைப்புக்கிடமானது

. “அம்மாவின் ஆவி பேசியது” என்பதெல்லாம், ஏற்கெனவே அரசியல் சாக்கடையை, குளமென்று நம்பி, குதித்து விளையாடி, அதைத் தமது உடலில் பூசிக் கொண்டிருக்கின்ற அப்பாவி மக்களை ஏமாற்றுவதற்கான ஏமாற்று வார்த்தைகளேயன்றி, வேறேதுமில்லை.  

இதில், சசிகலாவை நியாயப்படுத்த முடியாது. ஜெயலலிதாவின் அனேகமான தவறான, ஊழல், மோசடிகள் நிறைந்த முடிவுகளில் அவரோடிருந்தவர்தான் சசிகலா. அவருக்கான தண்டனையென்பது, பொருத்தமானது. இன்னமும் கடுமையாக்கப்பட்டிருந்தாலும் கூட, பொருத்தமானதுதான்.

அத்தோடு, ஜெயலலிதாவின் கட்சியிலிருந்து விலக்கப்பட்ட பின்னர், தனது குடும்பத்தினருடன் தொடர்புகளை அறுத்துக் கொள்வதாக மன்னிப்புக் கடிதத்தை வழங்கி, கட்சியில் மீண்டும் சேர்ந்துகொண்ட சசிகலா, ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின்னர், கட்சிக்குள் தனது குடும்பத்தினரை உள்வாங்கிக் கொண்டார்.  

சசிகலா மீதான சிறைத்தண்டனை குறித்த தீர்ப்பு வெளியான பின்னர், தனது சகோதரனின் மகனான தினகரனை, கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளராக அறிவித்திருந்தார். இவர், ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒருவராவார். எனவே, கட்சியைத் தனது தனிப்பட்ட சொத்துப் போலவே சசிகலா கருதுகிறார் என்ற விமர்சனம் முன்வைக்கப்பட முடியும்.  

ஆகவே, ஓ.பன்னீர்செல்வம் தொடர்பான விமர்சனங்கள், சசிகலாவை நியாயப்படுத்துவனவாகக் கருதப்படக்கூடாது. மாறாக, தமிழகத்தின் அரசியல் நிலைமையை ஒட்டுமொத்தமாக விமர்சனம் செய்பவையாகவே கருதப்பட வேண்டும்.  

எனவே, தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் எழுச்சியென்பது, அரசியலில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற ஆர்வம் என்ற வகையில் வரவேற்கப்பட வேண்டியதொன்றாக இருக்கின்ற போதிலும், அதில் விமர்சனங்கள் காணப்படாமலில்லை. என்றாலும் கூட, இந்த ஆர்வம் என்பது, சரியாகப் பயன்படுத்தப்பட வேண்டியதொன்றாக இருக்கிறது.  

அதேபோல், ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், இத்தனை எழுச்சியும் சாத்தியப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே. இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகக் கருதப்படும் கமலஹாசன், மிகச்சிறப்பான ஆளுமையும் கூட. தமிழகத்தில், ரஜினிகாந்துக்கு அதிக இரசிகர்கள், அதிகமான பக்தர்கள் காணப்பட்டாலும் கூட, கமலஹாசன் என்ற ஆளுமைக்கான மரியாதை, அறிவுசார் சமூகத்திடையே உண்டு. 

அத்தைய கமல், ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில், நேரடியாக அரசியல் கதைத்தது கிடையாது. தன்னுடைய திரைப்படம் தடை செய்யப்பட்ட போதிலும், நாட்டைவிட்டுச் செல்வதாகக் கூறினாரே தவிர, ஜெயலலிதா மீது நேரடியான விமர்சனங்களை முன்வைத்திருக்கவில்லை.

தனது எதிர்ப்புக் குரல்களை நசுக்கும் ஜெயலலிதாவின் பண்பு, அவருக்குத் தெரிந்திருந்தது. ஆனால் இன்று, சசிகலாவுக்கு எதிராக நேரடியாக விமர்சனங்களை, கமல் முன்வைக்கிறார்; ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருப்பதாக அவர் கூறுகிறார்; சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த சட்டசபை உறுப்பினர்களுக்கு, அவர்களது ஊரில் “போதிய மரியாதை” வழங்குங்கள் என்று, தனது இரசிகர்களுக்குக் கூறுகிறார்.

இவையெல்லாம், தற்போது ஏற்பட்டுள்ள ஒரு வகையான ஜனநாயக இடைவெளி என்பதை மறுக்க முடியாது.    

- See more at: http://www.tamilmirror.lk/192086/தம-ழ-ந-ட-ட-ன-எழ-ச-ச-கள-ம-கர-சன-கள-ம-#sthash.H6HTImYm.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.