Jump to content

அனைத்து இஸ்லாமிய நிலப் பகுதிகளிலும் எமது கொடி பறப்பதைப் பார்க்கும் வரை உறங்கப்போவதில்லை


Recommended Posts

அனைத்து இஸ்லாமிய நிலப் பகுதிகளிலும் எமது கொடி பறப்பதைப் பார்க்கும் வரை உறங்கப்போவதில்லை

 

 

அனைத்து இஸ்­லா­மிய நிலப் பகு­தி­க­ளிலும் தமது கொடி பறப்­பதைப் பார்க்கும் வரை தாம் உறங்கப்போவ­தில்லை என ஐ.எஸ். தீவி­ர­வாத குழுவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன்  புதிய காணொளிக் காட்­சி­யொன்றில் தோன்றி சூளு­ரைத்­துள்ளான்.

சலாதீன் என்ற அந்த சிறுவன்,   நப­ரொ­ரு­வரை தலையில் துப்­பாக்­கியால் சுட்டுக் கொல்­வ­தற்கு முன்னர் தான் எவ்­வாறு மேற்­படி தீவி­ர­வா­தக் குழுவில் இணைந்து கொண்டான் என்­பதை விப­ரிக்கிறான். 

3D79C0E500000578-0-image-a-1_14876674623

 நன்­றாகப் படிக்கும் பட்­சத்தில்  தன்னை  விடு­மு­றையின் போது (ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின்)  இரா­ணுவ முகா­மொன்­றுக்கு   அழைத்துச் செல்­வ­தாக தனது தந்தை தனக்கு வாக்­கு­று­தி­ய­ளித்­தி­ருந்­த­தாக  அந்த சிறுவன் கூறு­கிறான்.

'ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களால் இன்­னொரு குழந்தை பிர­ச­விப்பு' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்தக் காணொளிக் காட்­சியின் ஆரம்­பத்தில் அந்த சிறுவன்  சிறிய தோட்­ட­மொன்றைப் பரா­ம­ரித்து அங்­குள்ள தாவ­ரங்­க­ளுக்கு தண்ணீர் பாய்ச்­சு­வதை வெளிப்­ப­டுத்தும் காட்சி காண்­பிக்­கப் ­ப­டு­கி­றது.

3D79C0EA00000578-0-image-a-2_14876674694

 தனது தந்தை மோதல் ஒன்றில் இறப்­ப­தற்கு இரு மணித்­தி­யா­லங்­க­ளுக்கு முன்னர் குறிப்­பிட்ட இரா­ணுவ முகா­முக்கு தன்னை அழைத்து வந்து, 'நீ இவ்­வாறு தாவ­ரங்­களை நட்டு பரா­ம­ரித்த பின்னர் பொறு­மை­யாக இருக்க வேண்டும். அதே­ச­மயம் மத சட்­டத்தைக் கற்று கட­வு­ளுக்கு பய­பக்­தி­யாக இருக்க வேண்டும்'  எனத் தெரி­வித்­தி­ருந்­ததாக சலாதீன் கூறினான்.

3D79C10100000578-4244610-The_end_of_the_

'நான் நாஸ்­தி­கர்­க­ளுக்கு கூறும் செய்தி என்­ன­வென்றால்,  நான்  கொடுங்­கோ­லர்­க­ளுக்­காக பணி­யாற்றும் ஆட்­களை தடுத்து நிறுத்தி  இறை­வ­னுக்கு பணி செய்­வ­தற்­காக  ஆசீர்­வ­திக்­கப்­பட்ட இஸ்­லா­மிய தேசத்­துக்கு   புலம்­பெ­யர்ந்து வந்­துள்ளேன்"  என  அவன் தெரி­வித்தான்.

“இறை­வ­னுக்கு அப்பால் யாரும் இல்லை. நாம் மதத்­துக்கு மட்­டுமே ஆத­ர­வ­ளிக்கி றோம். நாங்கள் இஸ்­லா­மிய தேசத்தின்  குழந்­ தைகள். நாங்கள் அனைத்து இஸ்­லா­மிய  நிலங்­க­ளிலும் எமது கொடி பறப்பதைப் பார்க்கும் வரை உறங்கப்போவதில்லை" என சலாதீன் சூளு­ரைக்கிறான். 

தொடர்ந்து அவன் சிறிய அறை­யொன்றின் மூலையில் அச்­சத்­துடன் நின்று கொண்டிருந்த  நபரொ ருவரை நோக்கிச் சென்று அவரது தலையில் துப்பாக்கியால் சுடுகிறான்.

அதன் பின் அந்நபர் தரையில் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கும் காட்சி காண்பிக்கப்படுகிறது.

http://www.virakesari.lk/article/16980

http://www.virakesari.lk/article/16980

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
    • குமாரசாமி  அண்ணை…  தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா? 25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂
    • டொனால்ட் ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில்  மிக  கவனமாக இருக்கின்றார்கள். அதற்கு எந்த விலையும் கொடுக்க தயாராக  எதிர் தரப்பினர் இருக்கின்றார்கள்.
    • இந்த‌ முறை மைக் சின்ன‌த்துக்கு அதிக‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள்  வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌ம்  அதிலும் இளைஞ‌ர்க‌ளின் ஓட்டு அதிக‌ம்........................... யூன்4ம் திக‌திக்கு பிற‌க்கு ஊட‌க‌த்தின் பெய‌ரை வ‌த‌ந்தி😡 என்று மாற்றி வைக்க‌லாம்  அண்ண‌ன் சீமான் த‌ந்தி ஊட‌க‌த்துக்கு எதிரா வ‌ழ‌க்கு தொடுக்க‌ போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்..........................36ஆராயிர‌ம் ம‌க்க‌ளிட‌த்தில் க‌ருத்துக் கேட்டு வெளியிடுவ‌து க‌ருத்துக் க‌ணிப்பா அல்ல‌து க‌ருத்து திணிப்பா.....................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.