Jump to content

நெருப்பாய் கொதிக்கும் தொகுதி மக்கள் நெருங்க முடியாத எம்.எல்.ஏ.,க்கள்


Recommended Posts

நெருப்பாய் கொதிக்கும் தொகுதி மக்கள்
நெருங்க முடியாத எம்.எல்.ஏ.,க்கள்
 
 
 

தொகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர்.

 

Tamil_News_large_171633520170222230515_318_219.jpg

ஈரோடு மாவட்டம், கோபி தொகுதியில், பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் குறித்து, 'வாட்ஸ் ஆப்'பில் அவரது போட்டோ வுடன் விமர்சனம் வந்துள்ளது.

செங்கோட்டையன் படத்தின் மேல், 'கண்ணீர் அஞ்சலி' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 'செங்கோட்டையன், தொகுதி மக்களின் எதிர்ப்பையும் மீறி, வேலைக்காரியின், வேலைக் காரனுக்கு ஆதரவாக ஓட்டளித்த தால், தொகுதி மக்களின் சார்பாக, அரசியல் வாழ்வில் அகால மரணம் அடைந்து விட்டதை கோபத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.

'இனி, அவர் தொகுதி பக்கம் வந்தால், செருப்பு மற்றும் துடைப்பம் கொண்டு, தக்க பாடம் கற்பிக்கப்படும் என்பதை, தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம். இப்படிக்கு, 'கோபி தொகுதி மானம் உள்ள தமிழ் மக்கள்' என, குறிப்பிட்டுள்ளனர்.
 

'தாளிக்கப்படும்' தனியரசு:


திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தொகுதி, அ.தி.மு.க., கூட்டணி கட்சியான, கொங்கு இளைஞர் பேரவைக்கு ஒதுக்கப்பட்டது. கட்சி நிறுவனர் தனியரசு, இரட்டை இலை சின்னத் தில் நின்று வெற்றி பெற்றார்.நம்பிக்கை ஓட் டெடுப்பில், சசிகலா அணிக்கு ஆதரவு அளித்தார். இதனால், அவர் தொகுதிக்குள் வர, கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தற்போது, வெள்ளக்கோவில் பகுதியில், தனியரசை கண்டித்து, பொதுமக்கள் சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில், 'மக்களின் எண்ணத்திற்கு மாறாக, சட்டசபையில் ஓட்டளித்த காங்கேயம் எம்.எல்.ஏ., தனியரசை, ஊர் பொதுமக்கள் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்' என, அவரது படத்துடன் பேனர் வைத்துள்ளனர்.
இதேபோல், காங்கேயம் தொகுதியில் பல இடங்களில், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால், அதிர்ச்சியடைந்த தனியரசு ஆதரவாளர்கள், பேனர்களை, போலீஸ் துணையுடன் அகற்றி வருகின்றனர்.

 

விரட்டியடிக்க வீராவேசம்

கடலுாரில், தீபா ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப் பாளர் சுகுணன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், 'ஜெ.,யின், 69வது பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது. அ.தி.மு.க., வை, சசிகலா குடும்பத்தாரிடம் அடகு வைத்த, கடலுார் மாவட்ட, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை ஊருக்குள் நுழைய விடாமல், மீண்டும் கூவத்துார் விடுதிக்கு விரட்டி அடிப்பது' என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
 

சின்னதம்பிக்கு சிக்கல்


சேலம் மாவட்டம், ஆத்துார் தொகுதி, அ.தி.மு.க., -எம்.எல்.ஏ., சின்னதம்பி. அவர் மொபைலுக்கு தொடர்பு கொண்ட மக்கள் மற்றும் கட்சியினர், 'எங்களுக்கு விருப்பம் இல்லாத சசிகலாவின் ஆதார வாளருக்கு ஓட்டு போட வேண்டாம்' என வலியுறுத்தினர்.

அதற்கு, 'எங்களுக்கு சின்னம்மா தான் அம்மா. அவரால் தான் எம்.எல்.ஏ., ஆனேன். அவருக்கு தான், என் ஆதரவு. முதல்வர் தேர்வு செய்வதை நாங்கள் பார்த்து கொள்கிறோம். உங்களிடம் விருப்பத்தை கேட்கவில்லை' என, மிரட்டல் விடுக்கும் வகை யில், எம்.எல்.ஏ., சின்னதம்பி பேசினார்.

இந்த ஆடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. தற்போது, 'வாட்ஸ் ஆப்'பில், அவர் படத்தை பதிவிட்டு, 'கண்ணீர் அஞ்சலி, ஆர்.எம். சின்னதம்பி, எம்.எல்.ஏ., அவர்கள், பெரு மகிழ்ச்சி யுடன் குடும்பத்தினர், உறவினர்கள், ஆத்துார் பொதுமக்கள்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

தவிர, கண்ணீர் அஞ்சலி செலுத்தும் வாசகத்துடன் துண்டு பிரசுரங்களை, ஆத்துார் பகுதியில் சிலர் கொடுத்து வருகின்றனர்.
 

எம்.எல்.ஏ., ஓட்டம்


வேலுார் மாவட்டம், கே.வி.குப்பம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, தட்டப்பாறை ஊராட்சி அரசு மேல் நிலைப்பள்ளியில், இலவச சைக்கிள் வழங் கும் விழா, நேற்று காலை, 10:00 மணிக்கு நடக்க இருந்தது.

இதில், கே.வி.குப்பம், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., லோக நாதன் பங்கேற்று, சைக்கிள்கள் வழங்க இருந்தார். அவரை கண்டித்து, கறுப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என, மக்கள் அறிவித்திருந்தனர்.

இதன்படி காலை, 9:30 மணிக்கு, கறுப்பு கொடி போராட்டம் நடத்த, 200க்கும் மேற்பட்ட பொது மக்கள் பள்ளி அருகே காத்திருந்தனர். தகவலறிந்த லோகநாதன், விழாவில் பங்கேற் காமல் பாதி வழியிலேயே திரும்பி விட்டார். விழா ரத்து செய்யப்படுவதாக பள்ளி நிர்வாகம் அறிவித்ததால், மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

 

 

அமைச்சருக்கு கறுப்பு கொடி அரசு விழாவில் பரபரப்பு


அரசு விழாவில், அமைச்சர் வீரமணிக்கு கறுப்பு கொடி காட்டப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

வேலுார் மாவட்டம், புதுப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், இலவச சைக்கிள் வழங்கும் விழா, நேற்று காலை, 10 மணிக்கு நடந்தது. இதில், வணிக வரித்துறை அமைச்சர் வீரமணி பங்கேற்றதால், அவரது ஆதரவாளர்கள், அ.தி.மு.க., கொடிகளை பள்ளி அருகில் கட்டியிருந்தனர்.

அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகை யில், தீபா பேரவையினர் மற்றும் பன்னீர் செல்வம் அணியினர், காலை, 9:00 மணிக்கு பள்ளிக்கு வந்து, அ.தி.மு.க., கொடிகளை அகற்றினர். அமைச்சர் வீரமணியின் ஆதரவாளர்கள் அங்கு திரண்டனர்.

இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. நாட்றம்பள்ளி போலீசார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.

அப்போது, அமைச்சர் வீரமணி வந்தார். தீபா பேரவையினர் மற்றும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், வீரமணிக்கு கறுப்பு கொடி காட்டினர். அதிர்ச்சி அடைந்த வீரமணி, காரில் இருந்து இறங்கி, அவர்களை சமாதானம் செய்ய முயன்றார்.

அப்போது அவர்கள், 'சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது, இடைப்பாடி பழனிசாமிக்கு ஏன் ஓட்டளித்தீர்கள்? நாங்கள் ஜெயலலிதாவுக்கு தான் ஓட்டளித்தோம். ஓட்டளித்த மக்களை கேட்காமல், எப்படி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தீர்கள்? இனி எந்த விழாவிலும், சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது. சின்னம்மா எனப் பேசக் கூடாது' என, ஆக்ரோஷமாக பேசினர்.

பதில் அளிக்க திணறிய வீரமணி, காரில் ஏறி பள்ளிக்கு சென்று, சிலருக்கு மட்டும் சைக்கிள் வழங்கி விட்டு புறப்பட்டு சென்றார். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தீபா பேரவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியாங்குப்பம் ஓம் பிரகாசம் கூறுகையில், ''அமைச்சர்கள் வீரமணி, நிலோபர் கபில் மற்றும் அ.தி.மு.க.,வினர், எந்த அரசு விழா, கட்சி விழாவில் பங்கேற்றாலும், அவர்களுக்கு கறுப்பு கொடி காட்டுவோம்,'' என்றார்.

- நமது நிருபர் குழு -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1716335

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.