Jump to content

மட்டக்களப்பு மாவட்டக் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் மீது துப்பாக்கிப்பிரயோகம் – வைத்தியசாலையில் அனுமதி


Recommended Posts

மட்டக்களப்பு மாவட்டக் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் மீது துப்பாக்கிப்பிரயோகம் – வைத்தியசாலையில் அனுமதி

gun.jpg
மட்டக்களப்பு களுதாவளைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று  இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த  மட்டக்களப்பு மாவட்டக் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளரான 31 வயதான  நேசகுமார் விமல்ராஜ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

உடனடியாக  களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்  மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக  தெரிவிக்கப்படுகின்றது.

களுதாவளை கடற்கரை  வீதியிலுள்ள அவரது வீட்டுக்கு வந்த இனந்தெரியாத நபர்கள்  அவரை வெளியே அழைத்து அவர்மீது  துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக்குடிப்  பொலிஸார் விசாணைகளில் ஈடுபட்டுள்ளனர்

http://globaltamilnews.net/archives/18718

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாலை வேளையில் நண்பர் கூறினார் ஆனால் யார் காரணம் எதற்க்காக என்று என்று இன்னும் தெரியவரவில்லை  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று மட்டு களுதாவளையில் நடைபெற்ற, கொலை முயற்சியின் பின்னணியில் திடுக்கிடும் காரணங்கள்………

மட்டக்களப்பு மாவட்டத்தில் களுதாவளையில் கொலை முயற்சி அல்லது அச்சுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பு மிக்க பதவியான காணி சீர்திருத்த பணிப்பாளர் போன்ற தமிழர் இனி இப்படி பதவியில் வருவதற்கு அஞ்ச வேண்டும் எனும் தொனியில் துப்பாக்கியால் உயிரை எடுப்பதற்கு முயற்சி நடைபெற்றது.

சில வேளை இவர் உயிரிழந்திருந்தால் இவ்விடத்திற்கு சகோதர இனத்தை சார்ந்தவர் வரக்கூடியநிலை காணப்பட்டது.

மட்டக்களப்பில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் காணி அபகரிப்புகளுக்கு எதிராக துணிந்து செயற்பட்ட மாவட்டக் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் தமிழரான நேசகுமார் விமல்ராஜ் அவர்கள் நேற்று சுடப்பட்டுள்ளார்.

குறிப்பாக ஏறாவூர் புண்ணைக்குடா வீதி, தளவாய், சவுக்கடி போன்ற பிதேசங்களில் இடம்பெற்ற அத்துமீறிய குடியேற்றங்கள் , பனைவளங்களின் அழிப்பு, அரசகாணிகளை அபகரித்தல் போன்ற செயற்பாடுகளுக்கு எதிராக துணிந்து விரைவாக நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கும் ஒரு அதிகாரி.
பல தடவை ஏறாவூரை சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினரான சுபைர் ஆதரவாளர்களால் அச்சுருத்தப்பட்டார்.

எத்தனையோ அரசியல்வாதிகள் அச்சத்தில் மௌனங்காத்த போதும் கூட பாதிக்கப்பட்ட மக்களோடு நியாயத்துக்காக கூடவே நின்றவர். தொடர்ந்தும் நிற்பவர்.
நிச்சயமாக இவரைப் போன்ற நேர்மையான அதிகாரிகளைப் பாதுகாக்க வேண்டும். அத்துடன் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான அசம்பாவிதங்கள் இடம்பெறாவண்ணம் குற்றவாளிகளுக்கு தண்டனைகள் வழங்கப்படவும் வேண்டும்.

யுத்தம் கிழக்கை விட்டு 2008ம் ஆண்டு மௌனித்த பின் இதுவரை முஸ்லிம் நகரங்களின் அருகிலுள்ள தமிழ் கிராம ஆலயங்கள், பண்பாட்டு தலங்கள் தாக்கப்பட்டு அச்சுறுத்தியும், பெண்களை பாலியல் சேட்டைகளை செய்து பாதுகாப்பாற்ற நிலையை உருவாக்கி முஸ்லிம் இன மக்களுக்கு காணியை விற்பனை செய்ய வேண்டும், ஆக்கிரமிக்க இலகுபடுத்த நுணுக்கமாக ஒவ்வொரு காரியமும் நடைபெறுகின்றது.

யுத்தத்தின் பின் கிழக்கில் வாகனேரி பிள்ளையார் ஆலயம் மூன்று தடவை சேதம், ரிதிதென்ன பிள்ளையார் ஆலயம் மீதான தாக்குதல், மீறாவோடை ஆலயம் மீதான தாக்குதல், ஆரையம்பதி நரசிம்மர் ஆலயம் தாக்குதல், காத்தான்குடி ஆரையம்பதி எல்லை சிலை சேதம், கல்முனை நகர் தரவைச்சித்தி பிள்ளையார் ஆலயம், கடற்கரை கண்ணகி ஆலயம் உண்டியல் கதவு உடைப்பு, சம்மாந்துறை அகோரி மாரியம்மன் கோயில் சிலை உடைப்பு, திராய்க்கேணி மீனாட்சியம்மன் ஆலயம் தாக்குதல், காரைதீவு கண்ணகியம்மன் ஆலயம் கதவு உடைப்பு,பெரியநீலாவணை சவுக்காலை கல்லறை உடைப்பு ,திருகோணமலை கல்லடி நீலியம்மன் ஆலயம் எரிப்பு இப்படி தொடர்ந்து தமிழர்களின் பண்பாட்டு தலங்களை குறித்த 9வருடத்தில் சேதமாக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதல்கள் பலவற்றில் சகோதர இனத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதும் மனநோயாளிகள் என குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் பல உண்டு.
கடந்தமாதம் 31ம்திகதி ஏறாவூரில் துப்பாக்கியுடன் ரவூப் என்பவர் கைதுசெய்யப்பட்டார்.அதற்கு முந்திய கிழமை இன்னொருவரிடம் இருந்து துப்பாக்கி ரவை கைப்பற்றப்பட்டமை போன்ற இவ் கொலை முயற்சியிற்கு ஏதும் தொடர்புள்ளதா என சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.

இனி வரும் காலங்களில் கிழக்கு தமிழ் மக்கள் தமிழ் அரசியல்வாதிகளை நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை கருதாமல் வடக்கில் கோப்பா புலவு மக்களை போன்று நமது காணி ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும் மாற்று இனத்தவர் அச்சுறுத்தலுக்கு எதிராக போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

 

http://itntamil.com/?kala-2.jpg?resize=600%2C313

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நடந்த சம்பவம் தொடர்பாக மேலே கூறப்பட்ட சம்பவம் நல்ல உதாரணம் எப்போது கிழக்கு மாகாணம் ,முதலமைச்சர் பதவி அவர்களிடம்கொடுக்கப்பட்டதோ அன்றிலிருந்து இன்று வரை தமிழ் மக்களின் நிலங்கள் சிங்கள் மக்களாலும் , முஸ்லீம் மக்களாலும் கபளீகரம் செய்யப்பட்டு வருகிறது உடமைகள் கூட அழிக்கப்பட்டு வருகிறது 

முன்னர் இருந்த பிள்ளையான் பரவாயில்லை போல் இருக்கிறது அவர் துரோகி என்றாலும் கிழக்கில் பெரிதாக நிலம் கையப்படுத்தப்படவில்லை. என்ன துரோகி என்போம்  எதிரிக்கு எதிரிக்கு நண்பன் போல் நமக்கு தூரோகிகள் பரவாயில்லை போல் இருக்கிறது ( கிழக்குமக்களுக்கு ) ஏற்பட்ட நிலமை அப்படி இந்த  பிரச்சினையின் ஆரம்பம் ஏறாவூரில் ஏற்பட்ட தகரால் இருக்கும்  அத்துமீறிய காணிக்கு  தடை போட்டார் அந்த உத்தியோகத்தர் அதனால் சுடப்பட்டு இருக்கிறார் என்பது மறைவாக தெரியும் உன்மை 

Link to comment
Share on other sites

காணி சீர்திருத்த ஆணைக்குழு பணிப்பாளர் மீது துப்பாக்கிச்சூடு: விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணை

 


காணி சீர்திருத்த ஆணைக்குழு பணிப்பாளர் மீது துப்பாக்கிச்சூடு: விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணை
 

காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் இரண்டு விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இதேவேளை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நேசகுமார் விமல்ராஜ் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பொலிஸ் பாதுகாப்புடன் அவர் அனுப்பி வைக்கப்பட்டதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டப் பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் மீது நேற்றிரவு 7.00 மணியளவில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

களுவாஞ்சிக்குடி – களுதாவளை பகுதியிலுள்ள அவரின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

காயமடைந்த விமல்ராஜ் உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக இரண்டு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் அத்துமீறி காணிகள் கையகப்படுத்தப்படும் முயற்சியைத் தடுப்பதற்கு காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் அண்மைக்காலமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் திகதி ஏறாவூர் – புன்னக்குடா பகுதியில் அத்துமீறி காணிகளைக் கையகப்படுத்தும் நடவடிக்கையை பொலிஸாரின் ஒத்துழைப்புடன் அவர் தடுத்து நிறுத்தியிருந்தார்.

இந்த காணி அபகரிப்பு முயற்சி தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்று (22) ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்த வழக்கு விசாரணைகளுக்காகவும் நேசகுமார் விமல்ராஜ் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேசகுமார் விமல்ராஜ் மீதான துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்து இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக, மௌன கண்டன கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

மாவட்ட செயலகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

அரச அதிகாரிகளுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

 

http://newsfirst.lk/tamil/2017/02/மட்டக்களப்பு-காணி-சீர்தி/

Link to comment
Share on other sites


‘தவழ்ந்து, தவழ்ந்தே மருமகன் வீட்டுக்குள் சென்றுள்ளார்’
 

article_1487914552-s.jpgவடிவேல் சக்திவேல்

“ஒரு பிள்ளையின் தந்தையான என்னுடைய மருமகன், வீட்டு வாசலில் அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தபோதே, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அவர் மீது துப்பாகிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். காயமடைந்த அவர், வாசலிலிருந்து தவழ்ந்து, தவழ்ந்தே வீட்டுக்குள் சென்றுள்ளார்” என்று காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாண  பிரதிப் பணிப்பாளர் நேசகுமாரன் விமல்ராஜின் (வயது 31) மாமியார் வாக்குமூலம் அளித்துள்ளார்.  புதன்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு சம்பவம் தொடர்பில், விமல்ராஜின் மாமியாரான ஓய்வு பெற்ற ஆசிரியை ஞானம்மா குழந்தை வடிவேல், நேற்று (23) தொடர்ந்து வாக்குமூலமளிக்கையில்,   

“எங்களுடைய வீட்டு வாசலில், இந்தச் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றபோது, வீட்டில் நான் இருக்கவில்லை. களுதாவளையில் உள்ள என் தங்கையின் வீட்டிலேயே நான், அப்போது நின்றேன்.   

மருமகன் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவருடைய வலது கையிலும், விலா பகுதியிலும் துப்பாக்கிச்சூட்டு காயங்கள் உள்ளதாகவும் அன்றிரவு 7:30க்கே எனக்குக் தெரிவித்தனர்.   

களுதாவளையிலுள்ள, எங்களுடைய வீட்டில் திருத்த வேலைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற காணத்தினால், கிரான்குளத்தில் உள்ள மருமகனின் தயார் வீட்டுக்குச் செல்வதற்கு ஆயத்தம் செய்துகொண்டிருந்துள்ளனர்.  

மகளும், பேரப்பிளையும் வீட்டுக்குள் இருந்துள்ளனர். மருமகன், தன்னுடைய தாயாரின் வீட்டாருடன் அலைபேசியில், வீட்டின் வாசலில் நின்று கதைத்துகொண்டிருந்துள்ளார்.   

அப்போது, மோட்டார் சைக்கிளில் இருவர் வந்துள்ளனர். அவர்களில் ஒருவர், இறங்கி படலையை (கேட்) திறந்து கொண்டு உள்ளே சென்று ‘நீங்களா? விமல்?’ என்று கேட்டதாகவும், அதற்குப் பின்னரே தன்மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும், மருமகன் தெரிவித்துள்ளார்” என்றும் வாக்குமூலமளித்துள்ளார்.   

“திடீரென இரண்டு தடவைகள், ஏதோ வெடிச்சத்தம் கேட்டுள்ளது. அதுவும் வீட்டின் முன்வாசல் பக்கமாகவே அந்தச் சத்தம் கேட்டுள்ளது. என்னவென்று தெரியாமல், ஓடோடி வந்துபார்த்தபோது, அவருடைய கணவன் (எனது மருமகன்) வாசலில் விழுந்து கிடந்துள்ளார்.  

விபரீதத்தை அறிந்து, வீட்டுக்கு வெளியே, தான் வரவில்லை என்றும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது, மோட்டார் சைக்கிளில் இருவர், மிகவேகமாக பயணித்துள்ளதை தான் அவதானித்ததாக, பின்னர் என்னிடம் தெரிவித்தார்.   

காயமடைந்து, மயக்கமடைந்த நிலையில் வாசலிலேயே விழுந்து கிடந்த என் மருமகன், தவழ்ந்து தவழந்து ஒருமாதிரியாக வீட்டுக்குள் சென்றுவிட்டார்.   

துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திய இருவரும், தலைகவசம் அணிந்திருந்ததுடன், ஜெக்கட் அணிந்திருந்ததாகவும் அயலவர்கள் தெரிவித்தனர் என்றும் தன்னுடைய வாக்குமூலத்தில், ஞானம்மா குழந்தை வடிவேல் தெரிவித்துள்ளார்.   

காயமடைந்த என் மருமகன் நேசகுமார் விமல்ராஜ், களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், உடனடியாக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகின்றார். மட்டக்களப்பு, ஏறாவூர், புன்னன்குடா பிரதேசத்தில், காணி அபகரிப்பு தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகளில், மேற்படி பணிப்பாளரே ஈடுபட்டு வந்துள்ளார். இது விடயமாக, கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர், புன்னன்குடா பிரதேசத்தில் வைத்து, அவர் மீது தாக்குதல் நடத்த முயலப்பட்டுள்ளது.   

இந்நிலையில், காணிகளை பலவந்தமாகப் பிடித்து வைத்திருக்கும் மக்களை, அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நீதிமன்ற ஆணையைப் பெற்றுக்கொள்வதற்காக, புதன்கிழமை (22) அவர், ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்துக்கும் சென்றிருந்தார். நீதிமன்றத்திலிருந்து வீடு திரும்பிய ஓரிரு மணித்தியாலங்களிலேயே, இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. 

- See more at: http://www.tamilmirror.lk/192131/-தவழ-ந-த-தவழ-ந-த-மர-மகன-வ-ட-ட-க-க-ள-ச-ன-ற-ள-ள-ர-#sthash.4O4iqJBi.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.