Jump to content

அரசியலமைப்பு திருத்தம் மட்டுமே கொண்டுவரப்படும்


Recommended Posts

அரசியலமைப்பு திருத்தம் மட்டுமே கொண்டுவரப்படும்

SBD-e1d311cb3b8538d78b5a220d147bba8d966d053f.jpg

 

சமஷ்டி, சர்வதேச நீதிபதிகள் இல்லை என்கிறார் எஸ்.பி.
 (க.கம­ல­நாதன்)

சமஷ்­டி முறைமையை மையப்­ப­டுத்­திய அர­சி­ய­ல­மைப்போ அல்­லது சர்­வ­தேச நீதி­ப­திகள் அடங்­கிய நீதி­மன்ற கட்­ட­மைப்போ ஒரு­போதும் வராது என சமூக வலு­வூட்டல் மற்றும் நலன்­புரி அமைச்சர் எஸ்.பி.திஸா­நா­யக்க தெரி­வித்தார்.

 சமூக வலு­வூட்டல் மற்றும் நலன்­புரி அமைச்சில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு  உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில், 

 புதிய அர­சி­ய­லமைப்பு குறித்து பேசு­கின்ற பலர் அது தொடர்பில் உண்­மைக்கு புறம்­பான கருத்­துக்­களை வெளி­யி­டு­கின்­றார்கள். ஆனால் ஜனா­தி­ப­தியின் நிலைப்­பாட்டின் பிர­காரம் நாட்டின் ஒற்­றை­யாட்­சியில் கடு­க­ளவும் மாற்றம் செய்­யப்­ப­டாது.

அதேபோல் ஜனா­தி­பதி முறை­மையும் முழு­மை­யாக ஒழிக்­கப்­ப­ட­மாட்­டாது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது தேர்தல் பிர­க­ட­னத்தில் இந்த விட­யத்தை தெளி­வாக குறிப்­பிட்­டுள்ளார். தனது ஆட்சி காலத்தில் மேற்­கொள்­ளப்­படும் அர­சி­ய­லை­மப்பு திருத்த செயற்­பா­டு­களின் போது சர்­வ­ஜன வாக்­கெடுப்புக்கு செல்லும் வகை­யி­லான எந்த ஒரு திருத்­த­னையும் செய்­யப்­போ­வ­தில்லை என உறு­தி­யாக கூறி­யுள்ளார்.

அர­சி­ய­லை­மப்பு திருத்தச் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­க­ப­டு­வதால் நாட்டின் தேசிய பாது­காப்­பிற்கும் எந்­த­வித அச்­சு­றுத்­துலும் ஏற்­ப­டாது என்றும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதனால் நாம் பாது­காப்பு கட்­ட­மைப்­பினை உரு­க்கு­லைக்கும் வகை­யி­லான அர­சி­ய­லை­மப்பு திருத்­தங்­க­ளுக்கும் செல்­ல­போ­வ­தில்லை.

அதனால் சமஷ்டி ஆட்சி ஒன்­றிணை ஒரு­வாக்கும் அர­சி­ய­லை­மப்பு திருத்­தமோ அல்­லது புதிய அர­சி்­ய­லை­மப்போ வரப்­போ­கின்­றது என்­பது உண்­மைக்கு புறம்­பான விட­ய­மாகும். ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சி­யாக நாம் புதிய அர­சி­ய­லை­மப்பு குறித்து ஆழ­மாக பேச­வில்லை.

ஆனால் ஐக்­கிய தேசிய கட்­சிய புதிய அர­சி­ய­லை­மப்பு குறித்து தொடர்ந்தும் பேசி வந்­தது. அவ்­வா­றி­ருந்த நிலையில் தான் நாட்டு மக்கள் எந்த ஒரு கட்­சிக்கும் பெரும்­பான்மை பலத்­தினை வழங்­காமல் இருந்தனர்.அதனால் இரு கட்சிகளும் சேர்ந்து முன்­னெ­டுக்­கின்ற அர­சாங்கம் என்று பார்­கின்ற போது அதன் கீழ் அர­சி­ய­ல­மைப்பில் மாற்­றங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய அவ­சியம் உள்­ளது.

சர்­வ­தேச நீதி­ப­திகள்

சர்­வ­தேச நீதி­ப­திகள் குறித்த விட­யங்கள் தொடர்பாகவும் போலி­யான விட­யங்கள் வெளி­வ­ரு­கின்­றன. சர்­வ­தேச நீதி­ப­தி­களை அழைத்து வந்து உள்­நாட்டில் இடம்­பெற்ற யுத்தம் தொடர்­பிலும் யுத்த குற்­றங்கள் தொடர்­பிலும் நாங்கள் ஒரு­போதும் விசா­ர­ணை­களை மேற்­கொள்­ள­போ­வ­தில்லை.

தேசிய நீதி­கட்­ட­மைப்பு மீது அர­சாங்கம் முழு­மை­யான நம்­பிக்கை கொண்­டுள்ள கார­ணத்­தினால் சர்­வ­தேச நீதி­ப­தி­களை அழைத்து வந்து நீதி­மன்ற செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க நாம் ஒரு­போதும் தீர்­மா­னிக்­க­வில்லை என்றார்.

கேள்வி - தற்­போது ஒரு அர­சிலை­மப்பு தேவை­தானா என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆவே­சப்­பட்டு பேசு­கின்றார் என முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குற்றம் சுமத்­தி­யுள்­ளாரே?

பதில்- ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது தேர்தல் பிரச்­சா­ரத்தில் குறிப்­பிட்­டுள்­ளது போன்று அர­சி­ய­லை­மப்பு விவ­கா­ரத்தில் உரிய நட­வ­டிக்­கை­களை எடுப்பார்.

கேள்வி- வெளி­வி­வ­கார அமைச்சர் புதிய அர­சி­ய­லை­மப்பு ஒன்­றையே கொண்­டு­வ­ரப்­போ­வ­தாக கூறி­யுள்ளார் அதன் உண்­மை­தன்மை பற்றி கூறுங்கள்?

பதில்- அர­சி­ய­லை­மப்பு திருத்தம் குறித்­துதான் நாம் அறிவோம் மற்­றைய விட­யங்கள் தொடர்பில் அறி­வித்­தி­ருந்தால் அவரே கூற வேண்டும்.

கேள்வி- அவ்­வா­றாயின் அர­சாங்­கத்­தி­லி­ருந்து அர­சி­ய­லை­மப்பு குறித்து நீங்கள் அறி­யா­துள்­ளீர்­களா?

பதில்- நான் அறிந்­துள்ளேன். அர­சி­ய­லை­மப்பில் திருத்தம் செய்­வது குறித்து அறிவேன்.

கேள்வி- பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஸ்ரீ தரன் தமது பரிந்­து­ரை­களை ஏற்­கா­மையை காரணம் காட்டி அர­சி­ய­லை­மப்பு உரு­வாக்க உப குழுக்­க­ளி­லி­ருந்து கூட்டு எதி­ர­ணி­யினர் விலகிச் சென்­றுள்­ள­னரே?

பதில்- அவர்கள் விலகிச் செல்வதைவிடவும் அவர்களின் பரிந்துரைகளை உரிய விதத்தில் முன்வைப்பதே சிறந்ததாகும். குழுவின் தலைவரினால் பரிந்துரைகள் ஏற்கப்படாத பட்சத்தில் அவர்கள் அதனை பாராளுமன்றில் அறிவிக்க முடியும்.

கேள்வி- ஆளுநரின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என ஸ்ரீ தரன் தலைமையிலான குழு பரிந்துரைத்துள்ளதா?

பதில்- இல்லை அவ்வாறான பரிந்துரைகள் எவையும் அறிவிக்கப்படவில்லை அறிவித்த பின்னர் அதற்கான அவசியம் இருக்கும் பட்சத்தில் அதுகுறித்து ஆராய்வோம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-02-22#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.