Jump to content

தமிழக ஆளுநரின் முடிவு சரியா?


Recommended Posts

தமிழக ஆளுநரின் முடிவு சரியா?

 

 
palanisamy_3136292f.jpg
 
 
 

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது, கட்சித் தாவல் தடைச் சட்டத்தையே மீறுவதாகத்தான் அமையும். எனவே, ஆளுநர் இந்த முறைகளைக் கடைப்பிடிக்காதது வரவேற்புக்குரியது!

தமிழகத்தில், அதிமுகவில் உருவான பிளவின் விளைவாக பன்னீர்செல்வம், பழனிசாமி இருவரும் ஆட்சி அமைக்கும் உரிமை கோரியபோது பலரும் பல்வேறு யோசனைகளை முன்வைத்தனர். ‘முன்னதாக முதல்வர் பதவியை ராஜிநாமா செய்துவிட்ட பன்னீர்செல்வத்துக்கு முதல் வாய்ப்பு அளிக்க வேண்டும். இரண்டு பேருக்குமே பெரும்பான்மையை நிரூபிக்க ஒரே நேரத்தில் வாய்ப்பளிக்க வேண்டும்’ என்கிற யோசனைகள் அவற்றில் முக்கியமானவை. ஆனால், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இந்த முடிவுகளைத் தேர்ந்தெடுக்கவில்லை. மாறாக, பெரும்பான்மை பலத்தைக் கையில் வைத்திருந்த பழனிசாமிக்கே அழைப்பு விடுத்தார். இந்த முடிவு சரியானதா?

நம்முடையது நாடாளுமன்ற ஜனநாயகம். இங்கே நாடாளுமன்றம் என்பது நீதிமன்றத்தின் பரிசீலனைக்கே எப்போதாவதுதான் வரும். அந்த அளவுக்கு சுயேச்சைத் தன்மையுள்ளது. பிராட்லாஃப் - எதிர் - கோசெட் வழக்குப்படி, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் உள்விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவதே கிடையாது. இந்திய நீதிமன்றங்களும் இந்த மரபைக் கடைப்பிடிக்கின்றன. நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர்களை அவைத் தலைவர் தகுதிநீக்கம் செய்யும் சந்தர்ப்பங்களில் மட்டுமே, பாதிக்கப்பட்டவர் வழக்கு தொடர்ந்தால் நீதிமன்றங்கள் அதைப் பரிசீலிக்கின்றன. அரசியல் சட்டத்தின் பத்தாவது அட்டவணையின்படி மக்களவைத் தலைவர் அல்லது சட்டசபைத் தலைவர் பதவி, நடுவர் மன்றத்துக்கு இணையாகக் கருதப்பட்டு, அவர் எடுக்கும் முடிவுகள் சரியா என்று நீதித் துறை பரிசீலிக்கிறது. இப்படி அபூர்வமான சந்தர்ப்பங்களில் மட்டுமே நீதிமன்றம் குறுக்கிடுகிறது, பிற சந்தர்ப்பங்களில் விலகியே நிற்கிறது.

நாடாளுமன்றக் கொள்கைகள்

நாடாளுமன்ற நடைமுறைகளும் விதிமுறை களும் நம்பிக்கை வாக்கெடுப்பு அல்லது நம்பிக்கையில்லாத் தீர்மான வாக்கெடுப்பு தொடர்பிலேயே பேசுகின்றன. முதலமைச்சர் அல்லது பிரதமர் தலைமையிலான அமைச்சரவை மீது அவை நம்பிக்கை வைத்துச் செயல்படுகிறது. அமைச்சரவை மீது நம்பிக்கையில்லை என்று மக்களவையோ, சட்டப்பேரவையோ தீர்மானம் இயற்றினால் அமைச்சரவை பதவி விலக நேர்கிறது. இரண்டு முதலமைச்சர்களில் யாரை முதலமைச்சராக ஏற்பது என்று அவை எப்போதுமே பரிசீலித்ததில்லை. ஒரே சமயத்தில் இருவர் முதலமைச்சராகப் பதவி வகித்ததுகூட உச்ச நீதிமன்றம் தந்த அனுமதியால் ஒரேயொரு முறை ஏற்பட்டது.

உத்தர பிரதேசத்தில் 1998 பிப்ரவரி 21 அன்று முதல்வர் கல்யாண் சிங் தலைமையிலான அரசை ஆளுநர் ரமேஷ் பண்டாரி பதவி நீக்கம் செய்தார். பிறகு, ஜகதம்பிகா பால் முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார். பதவி நீக்கப்பட்ட கல்யாண் சிங், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அவருடைய அரசைக் கலைத்தது சட்ட விரோதம் என்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், கல்யாண் சிங் தலைமையிலான அரசை மீண்டும் பதவியில் அமர்த்த உத்தரவிட்டது. உடனே, இன்னொரு முதலமைச்சர் ஜகதம்பிகா பால், உச்ச நீதிமன்றத்திடம் மனு அளித்தார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எம்.எம்.புஞ்சி பிப்ரவரி 26-ல் பிறப்பித்த உத்தரவில், இரு முதல்வர்களும் பேரவையில் இருக்கும்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

பஞ்சாயத்து ராஜ் கேலி

இந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு, கல்யாண் சிங் வென்றார். அரசியல் சட்டத்தின் 142-வது பிரிவு அளித்த அதிகாரத்தின் கீழ் அந்த உத்தரவைத் தலைமை நீதிபதி புஞ்சி பிறப்பித்தார். அதற்கு முன்னர் இப்படியொரு முன்னுதாரணம் ஏற்பட்டதில்லை. ஆனால், அந்த உத்தரவு அரசியல் சட்ட விளக்கத்துக்குக் கொடுத்த புதிய பரிமாணம் குறித்து, சட்ட மாணவர்களும் வழக்கறிஞர்களும் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. சில குறும்பர்கள் அதை ‘பஞ்சாயத்து ராஜ்’ என்ற வார்த்தைக்கு இணையாக நீதிபதியின் பெயரைச் சேர்த்து ‘புஞ்சாயத்து ராஜ்’ என்று கேலியாகக் குறிப்பிட்டார்கள்.

தமிழகத்தில் முதலமைச்சராகப் பதவி வகித்த பன்னீர்செல்வம், தன்னைக் கட்டாயப்படுத்தி ராஜிநாமா செய்ய வைத்தார்கள் என்று கூறியதால், அவரையும் எடப்பாடி பழனிசாமியையும் ஒரே சமயத்தில் பேரவையில் அமர்த்தி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சிலர் யோசனை தெரிவித்தார்கள். உத்தர பிரதேச சம்பவத்தை முன்னுதாரணமாகக் கொள்ளலாம் என்றார்கள்.

சட்ட முன்னுதாரணங்களைச் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்கு நாடகாசிரியர் ஷேக்ஸ்பியர் எழுதிய ‘மெர்ச்சென்ட் ஆஃப் வெனிஸ்’ உரையாடலிலிருந்தே மேற்கோள் காட்டியிருக்கிறார்கள் இங்கிலாந்தில். ஒரு சட்டத்தை வடிவமைப்பது தொடர்பாக டென்னிங் பிரபுவுக்கும் ரஸ்ஸல் பிரபுவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சிடால் - எதிர் - கேஸ்டிங்ஸ் லிமிடெட் வழக்கு அது. மேல் முறையீட்டு நீதிமன்றத்தில், டென்னிங் பிரபு வழங்கிய தீர்ப்பை ரஸ்ஸல் பிரபு நிராகரித்தார். அவர்தான் ‘மெர்ச்சென்ட் ஆஃப் வெனிஸ்’ நாடக வசனத்தை மேற்கோள் காட்டினார். தவறான ஒரு தீர்ப்பு கூறப்பட்டுவிட்டால் அது பிற்காலத்தில் முன்னுதாரணமாக சுட்டிக்காட்டப்படும் வாய்ப்பு இருப்பதாக, போர்ஷியா என்கிற கதா பாத்திரம் எச்சரிக்கும். இரண்டு முதல்வர்கள் அதே அவையில் நம்பிக்கை கோரலாம் என்ற தீர்ப்பு அப்படிப்பட்ட தவறான முன்னுதாரணமாகிவிட்டது.

‘தமிழ்நாட்டில் உள்கட்சிப் பூசலைத் தீர்க்க இருவரையுமே முதல்வர்களாகப் பதவியேற்க வைத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியிருக்கலாம்; இடைக்கால முதலமைச் சராகப் பதவி வகிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட வரையே முதலமைச்சராக மீண்டும் பதவியேற்க வைத்துப் பிறகு வாக்கெடுப்பு நடத்தியிருக்கலாம்’ என்ற யோசனைகள் சரியானதல்ல. இவ்விரண்டுமே அரசியல் சட்டரீதியாக முறையற்ற செயலாகவே கண்டிக்கப்பட்டிருக்கும். முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அந்தப் பதவியை ராஜிநாமா செய்தார், அடுத்த முதல்வர் பதவியேற்கும் வரையில் பதவியில் நீடிக்குமாறு அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார். ஒருவருடைய ராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு அதை மறுபரிசீலனை செய்ய சட்டத்தில் வழியே இல்லை.

ரகசிய வாக்கெடுப்பு

கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த சதீஷ் சந்திரா ராஜிநாமா தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “ஒருமுறை ஏற்றுக்கொள்ளப்பட்ட ராஜிநாமா திரும்பப் பெற முடியாது’’ என்று அதை விசாரித்த ‘அரசியல் சட்ட அமர்வு’ கூறிவிட்டது. இடைக்கால முதல்வராகிவிட்டவரை மீண்டும் அழைத்து, முதல்வராகப் பதவியேற்க வைத்தால்தான் அவர் நீடிக்க முடியும். அதுகூட பேரவை உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் தனக்கு ஆதரவாக இருக்கின்றனர் என்பதை அவரால் காட்ட முடியாவிட்டால் அவருடன் இருப்பவர்கள் பதவியிழந்துவிடுவார்கள். எனவே, போதிய ஆதரவு இல்லாதவரை மீண்டும் முதல்வராகப் பதவியேற்கவைப்பது விழலுக்கு இறைத்த நீராகத்தான் முடியும்.

அதேபோல, சட்டப்பேரவையில் பெரும் பான்மையை நிரூபிக்க ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதும் பலரும் முன்வைத்த இன்னொரு யோசனை.

இது கட்சித் தாவல் தடைச் சட்டத்தையே மீறுவதாகத்தான் அமையும். பேரவையில் வாக்கெடுப்பு என்பது ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலானது மட்டுமல்ல; பேரவை உறுப்பினர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டியது. இப்படியான ரகசிய வாக்கெடுப்பு கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் உணர்வுக்கு எதிரானதாகவே அமையும். எனவே, ஆளுநர் இந்த முறைகளைக் கடைப்பிடிக்காதது வரவேற்புக்குரியது.

சுருக்கமாகத் தமிழில்: சாரி

சஞ்சய் ஹெக்டே உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் © ‘தி இந்து’ ஆங்கிலம்

http://tamil.thehindu.com/opinion/columns/தமிழக-ஆளுநரின்-முடிவு-சரியா/article9554585.ece?homepage=true&theme=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.