Jump to content

தென்னாபிரிக்காவின் தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்ட நியுஸிலாந்து : திரில் வெற்றி


Recommended Posts

தென்னாபிரிக்காவின் தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்ட நியுஸிலாந்து : திரில் வெற்றி

 

 

தென்னாபிரிக்கா மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியுஸிலாந்து அணி 6 ஓட்டங்களால் திரில் வெற்றிபெற்றது.

259297.jpg

தொடர் வெற்றிகளை குவித்துவந்த தென்னாபிரிக்க அணி, இந்த போட்டியில் போராடி தோற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியுஸிலாந்து அணி 4 விக்கட்டுகளை இழந்து 289 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

C5P2W-XUkAE5oTB.jpg

நியுஸிலாந்து அணி சார்பில் டெய்லர் ஆட்டமிழக்கால் 102 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

290 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து 283 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

தென்னாபிரிக்க அணி சார்பில் டி கொக் 57 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் ட்ரென்ட் போல்ட் 3 விக்கட்டுகளை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

C5P10w8WYAAlfC-.jpg

http://www.virakesari.lk/article/16939

Link to comment
Share on other sites

டெய்லர் சதம்; போல்ட் அபாரம்: தென் ஆப்பிரிக்காவின் தொடர் வெற்றியை நிறுத்திய நியூஸி.

நோபாலன்

Comment   ·   print   ·   T+  
 
 
 
 
 
 
 
 
  • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதம் எடுத்த ராஸ் டெய்லர். | படம்: ஏ.பி.
    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதம் எடுத்த ராஸ் டெய்லர். | படம்: ஏ.பி.
  • போல்ட்டிடம் ஆட்டமிழந்த வெறுப்பில் செல்லும் டிவில்லியர்ஸ். | படம்.| ஏ.பி.
    போல்ட்டிடம் ஆட்டமிழந்த வெறுப்பில் செல்லும் டிவில்லியர்ஸ். | படம்.| ஏ.பி.
 

கிறைஸ்ட்சர்ச்சில் இன்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை நியூஸிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்று சமன் செய்துள்ளது.

இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் 12 வெற்றிகளை தொடர்ச்சியாகப் பெற்ற தென் ஆப்பிரிக்காவின் வெற்றிப்பயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

டாஸ் வென்ற டிவில்லியர்ஸ் முதலில் நியூஸிலாந்தை பேட் செய்ய அழைக்க அந்த அணியில் கேன் வில்லியம்சன், நீஷம் அரைசதம் எடுக்க ராஸ் டெய்லர் 102 ரன்கள் எடுத்தார், இதனால் நியூஸிலாந்து 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 42-வது ஓவரில் 214/8 என்ற நிலையிலிருந்து நியூஸிலாந்துக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக 283 ரன்கள் வரை வந்து அச்சுறுத்தியது. ஆனால் தோல்வியடையக் காரணம், கடைசியில் ட்ரெண்ட் போல்ட், சவுதி ஆகியோர் தொடர்ச்சியாக 10 யார்க்கர்களை வீசினர். இதில் ரன் எடுக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க வீரர் பிரிடோரியஸ், பெலுக்வயோ திணறினர்.

உண்மையில் 3 ஓவர்களில் 33 ரன்கள் தேவை என்ற நிலையில் சவுதி 48வது ஓவரில் 13 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதனையடுத்து 2 ஓவர்களில் 20 ரன்கள் என்று தெனாப்பிரிக்காவுக்குச் சாதகமாக இருந்தது, அப்போது டிரெண்ட் போல்ட் 49-வது ஓவரில் யார்க்கராக வீசி 5 ரன்களை மட்டுமே கொடுத்ததோடு, 27 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 50 அதிரடி ரன்கள் எடுத்த பிரிடோரியஸ் விக்கெட்டை பவுல்டு முறையில் வீழ்த்தினார்.

இதனையடுத்து கடைசி ஓவரில் 15 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நிலையில் சவுதி, பெலுக்வயோவுக்கு தொடர்ச்சியாக 4 யார்க்கர்களை வீசி ரன் எடுக்க முடியாமல் செய்தார், கடைசி 2 பந்துகளில் பெலுக்வயோ பவுண்டரிகள் அடித்தும் பயனற்று போக தென் ஆப்பிரிக்கா 283/9 என்று தோல்வியுற்றது, நியூஸிலாந்து அணி தென் ஆப்பிரிக்க அணியின் தொடர் ஒருநாள் வெற்றிகளை நிறுத்தியது.

ராஸ் டெய்லர் இந்தச் சதத்தின் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களெடுத்த (17) நியூஸிலாந்து வீர்ரரானார், மேலும் 6,000 ரன்களை விரைவில் எடுத்த நியூஸிலாந்து வீரராகவும் ஆனார். நேதன் ஆஸ்ட்ல் 16 சதங்களை எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

இவரும் நீஷமும் இணைந்து 5-வது விக்கெட்டுக்காக 123 ரன்களை ஆட்டமிழக்காமல் சேர்த்தனர். நீஷம் 57 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுக்க, ராஸ் டெய்லர் 110 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 102 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். தென் ஆப்பிரிக்க அணியில் ரபாடா இல்லை.

டெய்லர், கேன் வில்லியம்சன் (69) ஜோடி 104 ரன்களைச் சேர்த்தனர், இது இவர்களது 11-வது சதக்கூட்டணியாகும். இந்தப் பிட்ச் சற்றே மந்தமடைந்ததால் இதற்கு முன்பு நடைபெற்ற போட்டிகளைப் போல் அல்லாமல் 300 ரன்களுக்கும் குறைவாக முடிந்தது.

ஹஷிம் ஆம்லாவை விளையாட முடியாத பந்தில் எல்.பி.செய்தார் சவுதி, டுபிளிசிசுக்கு ஒரு பந்தை கிராண்ட் ஹோம் உள்ளே ஸ்விங் செய்ய 11 ரன்களில் பவுல்டு ஆனார்.

டிவில்லியர்ஸுக்கு முன்பாகவே டுமினி 4-ம் நிலையில் இறக்கப்பட்டார். 34 ரன்கள் எடுத்த டுமினி, சாண்ட்னரின் பிளைட்டில் ஏமாந்தார். குவிண்டன் டி காக் 59 பந்துகளில் அரைசதம் கண்டு 57 ரன்களில் போல்ட் பந்தை நீஷமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மில்லர் 28 ரன்களில் சோதி பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுக்க டிவில்லியர்ஸ் 49 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் பந்தை புல் ஆட முயன்று மட்டையின் அடியில் பட்டு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது.

கிறிஸ் மோரிஸ் அருமையாக டீன் பிரவுன்லீயால் ரன் அவுட் செய்யப்பட்டார். பார்னெல், ஸாண்ட்னரிடம் எல்.பி.ஆனார். ஆனால் அதன் பிறகு பிரிடோரியஸ் (50), பெலுக்வயோ (29) ஆகியோர் 6 ஓவர்களில் 61 ரன்களைச் சேர்த்து ஸ்கோரை நியூசிலாந்து இலக்குக்கு அருகில் கொண்டு வந்தனர். பிரிடோரியஸ் அதிரடி அரைசதத்தை 27 பந்துகளில் எடுத்து போல்ட்டிடம் பவுல்டு ஆக தென் ஆப்பிரிக்கா 283 ரன்களில் முடிந்து போனது.

டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளையும் சாண்ட்னர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர், ஆட்ட நாயகனாக சதம் அடித்த டெய்லர் தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/டெய்லர்-சதம்-போல்ட்-அபாரம்-தென்-ஆப்பிரிக்காவின்-தொடர்-வெற்றியை-நிறுத்திய-நியூஸி/article9554907.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.