Jump to content

ரூ.10 கோடி செலுத்தாவிட்டால் சசிகலாவுக்கு மேலும் 13 மாத சிறை


Recommended Posts

ரூ.10 கோடி செலுத்தாவிட்டால்
சசிகலாவுக்கு மேலும் 13 மாத சிறை
 
 
 

பெங்களூரு:பெங்களூரு சிறையில், நான்கு ஆண்டு சிறைவாசம் அனுபவித்து வரும்,
அ.தி.மு.க., பொதுச்செயலர், சசிகலா, அவருக்கு விதிக்கப்பட்ட, 10 கோடி ரூபாய் அபராத தொகையை செலுத்தா விட்டால், மேலும், 13 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என, தகவல் கிடைத்துள்ளது.

 

Tamil_News_large_171555620170221231135_318_219.jpg

வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்த வழக் கில், சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, நான்கு ஆண்டு சிறைத் தண்டனை மற்றும், 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து, சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்தது.

 

ரூ.10 கோடி அபராதம்:

இதையடுத்து, இந்த மூவரும், கர்நாடக மாநில தலைநகர்பெங்களூரு வில், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில், சிறைச்சாலை கண் காணிப்பாளர் கிருஷ்ணகுமார், நேற்று வெளியிட்ட அறிக்கை விபரம்:

சுப்ரீம் கோர்ட் விதித்த, 10 கோடி ரூபாய் அபராத தொகையை,சசிகலா செலுத்த வேண்டும். இல்லா விட்டால், நான்கு ஆண்டு சிறையுடன், மேலும், 13 மாத சிறைத் தண்டனையை அவர் அனுபவிக்க நேரிடும்.
 

சொகுசு அறைக்கு மாற்றம்


தற்போது சசிகலா, இளவரசி ஆகியோர் சொகுசு அறைக்கு மாற்றப்பட்டனர். சிறையில் அவர்களுக்கு 2 பெட்ஷீட், ஒரு தலையணை, ஒரு மெத்தை,ஒரு கட்டில் மற்றும் இருவருக்கும் பொதுவானதாக ஒரு டிவி, 2 நாளிதழ்கள் மற்றும் வெளியில் இருந்து பழங்கள் மற்றும் சாப்பாடு போன்றவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

 

மருத்துவர்கள் கண்காணிப்பு


சுதாகரன் ஆண்களுக்கான சிறைப் பிரிவில் உள்ளார். சிறையில் தயாரிக்கப்படும் உணவு, அவர்களுக்கு வழங்கப்படுகிறது. மருத்துவர்கள் அவ்வப்போது அவர்களின் உடல் நிலையை கண்காணித்து மருந்துகள் வழங்கி வருகின்றனர்.

சசிகலா, 2014ல், ஏற்கனவே, 21 நாட்கள், சிறை யில் இருந்துள்ளார். நான்கு ஆண்டு சிறைத் தண்டனை யில், இந்த நாட்களை கழித்து, மீதமுள்ள நாட்கள், சசிகலா சிறைவாசம் அனுபவிக்க வேண்டும்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1715556

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.