Jump to content

சசிகலாவை சந்திக்க அனுமதி மறுப்பு! ஏமாற்றத்துடன் திரும்பிய அமைச்சர்கள்


Recommended Posts

சசிகலாவை சந்திக்க அனுமதி மறுப்பு! ஏமாற்றத்துடன் திரும்பிய அமைச்சர்கள்

jail_3_16322.jpg

பெங்களூரு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் அமைச்சர்களும், அதிமுக மகளிர் அணியினரும் சென்னை திரும்பினர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனி நீதிமன்றம் நான்கு ஆண்டு சிறைத்தண்டனையும், தலா பத்துக் கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. இதையடுத்து, சசிகலா உள்பட மூன்று பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, மூன்று பேரையும் விடுதலை செய்தார்.

jail_2_16563.jpg

இந்தத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. இதையடுத்து, மூன்று பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

jail_16167.jpg

ஒரு வாரத்துக்கு மேல் சிறையில் இருக்கும் சசிகலாவை, அதிமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று சந்தித்து பேசினார். இந்தநிலையில், அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் மகளிர் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா மற்றும் நடிகை சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் இன்று பெங்களூரு சென்றனர். சிறைக்குள் செல்ல அனுமதி பெற காலதாமதம் ஏற்பட்டதை அடுத்து பெங்களூரு கிங்சந்திராவில் கீஸ் ஹோட்டலில் அமைச்சர்கள் தங்கியிருந்தனர். ஆனால், மகளிர் அணியினர் சிறை வளாகத்திலேயே இருந்தனர்.

சுமார் இரண்டரை மணி நேரம் காத்திருப்புக்கு பின்னர், சசிகலாவை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், அமைச்சர்களும், மகளிர் அணியினரும் சென்னை திரும்பினர்.

http://www.vikatan.com/news/tamilnadu/81545-admk-ministers-were-not-permitted-to-visit-sasikala-in-bangalore-prison.html

Link to comment
Share on other sites

gallerye_235442636_1715643.jpg

 

 

 

 

 

spaceplay / pause

qunload | stop

ffullscreen

shift + slower / faster

volume

mmute

seek

 . seek to previous

126 seek to 10%, 20% … 60%

 

சசிகலா அடைக்கப்பட்டுள்ள சிறை முன், அவரால் பதவி பெற்ற, அ.தி.மு.க.,வினர்,
தவம் கிடக்க துவங்கி உள்ளனர்.

 

Tamil_News_large_1715643_318_219.jpg

சசிகலாவை சந்திக்க, நேற்று, சிறை நிர்வாகம் அனுமதி மறுத்ததால், காத்திருந்த அமைச்சர் கள் ஏமாற்றமடைந்தனர். சசிகலாவை சந்திப்ப தற்காக, அமைச்சர்கள் உள்ளிட்ட, அ.தி.மு.க., வினர், இப்படி பெங்களூரு சிறை வாசலில் மணிக்கணக்கில் காத்து கிடப்பதால், தமிழகத் தில், அரசு நிர்வாகம் முடங்குவதாக, நடுநிலை யாளர்கள் எரிச்சலடைந்து உள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்ற, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர், பெங்களூரு அடுத்த, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
சசிகலாவை காண்பதற்காக, அவரால் பதவி

பெற்ற அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், வந்தபடி உள்ளனர். அனுமதி கிடைக்காததால், சிறை வாசலில் தவம் கிடக்கின்றனர்.

சசிகலாவை பார்க்காவிட்டால், பதவி பறிபோய் விடுமோ என்ற அச்சத்தினால், காத்து கிடக் கின்ற னர்.அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லுார் ராஜு ஆகியோர், நேற்று பிற்பகல், 2:00 மணிக்கு, பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வந்தனர்; அவர்களை, போலீசார் உள்ளே விட மறுத்தனர்.

திட்டவட்டம்


செங்கோட்டையன் கார் டிரைவர், ''இவர்களை யார் என்று நினைத்தீர்கள்; தமிழகத்தின், 'கேபினட்' அமைச்சர்கள்,'' எனக்கூறி, வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அதை கேட்ட போலீசார், எரிச்சலுடன், 'இங்கு என்ன அமைச்சரவைக் கூட்டமா நடக்கிறது?' எனக் கேட்டதுடன், 'உள்ளே அனுமதிக்க முடியாது' என,திட்டவட்ட மாக தெரிவித்தனர்.

இந்த வாக்குவாதம், 10 நிமிடம் நீடித்தது. இறுதி வரை, போலீசார் அனு மதி அளிக்காததால், அமைச்சர்கள் ஏமாற்றத்து டன், தாங்கள்

 

தங்கி யிருந்த ஓட்டலுக்கு திரும்பினர். பின், கர்நாடக போலீசார், அந்த ஓட்டலுக்கு சென்று, செங்கோட்டையன் கார் டிரைவரிடம் விசாரித் தனர். 'போலீசையே மிரட்டுகிறாயா... எச்சரிக்கையாக இருக்கவும்' என்றனர்.

இதற்கிடையில், சசிகலாவை பார்ப்பதற்காக, கோகுல இந்திரா, வளர்மதி ,சி.ஆர்.சரஸ்வதி ஆகியோரும், நேற்று சிறைக்கு வந்தனர். அவர்கள் வருகை குறித்து, சிறை ஊழியர்கள், சசிகலாவிடம் தெரிவித்தனர். அவர், 'நான் அவர்களை பார்க்க விரும்ப வில்லை' என, கூறியுள்ளார். அந்த தகவலை, மூன்று பேரிட மும் தெரிவித்தனர். அதனால், கவலை அடைந்த மூவரும், அங்கேயே நின்று கொண்டிருந்தனர்.

ஆபாச பேச்சு:


அப்போது, கோகுல இந்திராவுக்கு மொபைல் போனில் அழைப்பு வந்தது. அவர், போனை வளர்மதியிடம் கொடுத்தார்.அவர், போனில் பேசிய நபரை, ஆபாச வார்த்தை களால் திட்டி தீர்த்து விட்டு, போனை, 'கட்' செய் தார். பின், மூன்று பேரும் அங்கிருந்து புறப்பட்ட னர்.

நீண்ட இழுபறிக்கு பின், புதிய அரசு அமைந்துள் ளது. அடுத்து பட்ஜெட் தயாரிப்பு வேலைகளை துவக்க வேண்டும். ஆனால், அரசு பணிகளை கவனிக்காமல், அமைச்சர்கள், சசிகலாவை காண சிறை வாசலில் தவம் கிடப்பது, நடுநிலை யாளர் களிடம் கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.
 

சசிகலாவுக்கு சொகுசு அறை!


சாதாரண தண்டனை கைதிகளாக இருந்தாலும், பாதுகாப்பு கருதி, சசிகலா, இளவரசி இருவரும், தனி அறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். பாதுகாப்புக்கு, மகளிர் போலீசார் நியமிக்க பட்டு உள்ளனர். சுதாகரன், ஆண்கள் பிரிவில் வைக்க பட்டு உள்ளார்.

பாதுகாப்புக்கு, சிறப்பு போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். சாதாரண அறையில் இருந்த சசிகலா, இளவரசிக்கு, நேற்று, 'ஏ கிளாஸ்' எனப்படும், சொகுசு அறை கொடுக்கப்பட்டது.

இந்த அறையில், 'டிவி' இருக்கும்; தலா, ஒரு கட்டில், ஒரு மெத்தை, தலா இரண்டு பெட்ஷீட், ஒரு தலையணை வழங்கப்படும்; படிப்பதற்கு, இரண்டு நாளிதழ்கள் கொடுக்கப்படும்; வெளி யிலிருந்து உணவு வகைகள்,பழங்கள் கொண்டு செல்லவும், அனுமதி வழங்கப்படும்.ஆண்கள் பிரிவில், மற்ற கைதிகளுடன் அடைக்கப் பட்டுள்ள சுதாகரனுக்கு, இது போன்ற எந்த வசதியும் செய்து தரப்படவில்லை.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1715643

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திமுகாவில் ஒரு  it குருப் இருக்கு அதன் முக்கிய வேலையே திமுகாவை பற்றி இல்லாத பொல்லாத  செய்தியை சொல்லி dmk எதிரானவர்களின் நட்பை அனுதாபத்தை பெற்று கொள்வது .
    • தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.