Jump to content

எதிர்ப்பைச் சமாளிக்க அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வின் பிரியாணி பிளான்! -கலகலத்த நிர்வாகிகள்


Recommended Posts

எதிர்ப்பைச் சமாளிக்க அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வின் பிரியாணி பிளான்! -கலகலத்த நிர்வாகிகள்

Priyani_long_17140.jpg

திருவள்ளூர் மாவட்டத்தில்  அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர், எதிர்ப்பு தெரிவித்த நிர்வாகிகளுக்கு பிரியாணி விருந்து கொடுத்து அசத்தி உள்ளார். அப்போது தீபாவின் ஆதரவாளருக்கு எப்படி பிரியாணி கொடுக்கலாம் என்று நிர்வாகிகளுக்கு இடையே குடுமிப்பிடி சண்டை நடந்துள்ளது. 

சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபித்து முதல்வர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி. கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கி இருந்த சசிகலா அணி எம்.எல்.ஏ.க்களுக்கு தொகுதியில் கடும் சவால்கள் காத்திருக்கின்றன. தொகுதிக்குச் சென்ற சசிகலா அணி எம்.எல்.ஏ.களுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ.க்களுக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர். 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அந்த எம்.எல்.ஏ.க்கு இந்தத் தகவல் தெரிந்ததும் எம்.எல்.ஏ. அலுவலகம் செல்லவில்லை. தொகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகளிடம் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ. மீது அதிருப்தி நிலவியது. இதனால் கட்சியினரை சமரசப்படுத்த அந்த எம்.எல்.ஏ. அதிரடியாக ஒரு முடிவை எடுத்தார். எதிர்ப்பு தெரிவித்த நிர்வாகிகளுக்கு பிரியாணி விருந்து வைத்து அசத்தியுள்ளார்.

இதுகுறித்து பிரியாணி விருந்தில் பங்கேற்ற அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறுகையில், "தொகுதியில் எம்.எல்.ஏ.வுக்கு கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பிய தகவல் தெரியவந்ததும் எங்களுடன் ஆலோசனை நடத்தினார். கூவத்தூரில் எம்.எல்.ஏ. தங்கியதும் அவரைக் காணவில்லை என்று போஸ்டர் அடித்து ஒட்டினர். இதனால் தொகுதிக்குள் சென்றால் நிச்சயம் பிரச்னை ஏற்படும் என்று கருதினார். கட்சியில் உள்ள எதிர்ப்பை முதலில் சமாளித்துவிட்டு அடுத்து பொதுமக்களிடம் உண்மையைச் சொல்லலாம் என்று முடிவு செய்தார். 
இதற்காக தொகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து கட்சி நிர்வாகிகளுக்கு பிரியாணி விருந்து கொடுக்க முடிவு செய்தார். இந்தத் தகவலை பி.ஏ. மூலம் எஸ்.எம்.எஸ், வாட்ஸ்அப் மூலம் தெரிவித்தார். அதிருப்தியில் இருந்த நிர்வாகிகள் இன்று காலை திருமண மண்டபத்துக்கு வந்தனர். அங்கு எம்.எல்.ஏ. தன்னுடைய பரிவாரங்களுடன் கம்பீரமாக வாசலில் நின்று அனைவரையும் வரவேற்றார்.

ஜெயலலிதா பிறந்தநாள் ஆலோசனைக் கூட்டம் என்ற பெயரில் சிறிது நேரம் கட்சி நிலவரம் விவாதிக்கப்பட்டது. அடுத்து, அனைவருக்கும் 'சரக்கு' சைடு டிஷ்வுடன் விநியோகிக்கப்பட்டது. சரக்குப் பார்த்த பல நிர்வாகிகளும், தொண்டர்களும் வாயடைத்துப் போய்விட்டனர். எம்.எல்.ஏ.விடம் வாக்குவாதம் செய்ய வந்த நிர்வாகிகள் கூட சரக்கைப் பார்த்ததும் அமைதியாகிவிட்டனர். அடுத்து சுடச்சுட, பிரியாணி விருந்தும் நடந்தது. அதில் பங்கேற்ற நிர்வாகிகளும், தொண்டர்களும் குஷியாகி விட்டனர். ரகசியமாக இந்த விருந்து முடியும் நிலையில் பிரியாணிக்காக இரண்டு நிர்வாகிகள் போட்ட தகராறு அனைத்தையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துவிட்டது" என்றார்.

நடந்த சம்பவத்தை அப்படியே விவரித்தார் இன்னொரு நிர்வாகி ஒருவர். "எம்.எல்.ஏ.வை தப்பா நினைச்சிட்டோம். நமக்கு இப்படியொரு விருந்து கொடுப்பாருன்னு கனவுல கூட நினைச்சிப் பார்க்கல என்று ஒன்றிய நிர்வாகி சொல்ல... அதை ஆமோதித்தார் வட்டக் கழகச் செயலாளர்.  பக்கத்தில் சிக்கன் லெக்பீஸை சாப்பிட்டுக்கொண்டே சொன்னார் வார்டு கழக நிர்வாகி, 'நம்மளேயே இப்படி கவனித்தா... தலைவர (எம்.எல்.ஏ.) எப்படி ரிசாட்டில கவனிச்சிருப்பாங்க. சில 'சி' க்கள் தலைமையிலிருந்து கொடுத்திருக்காங்கய்யா' என்றார் வட்டக் கழக நிர்வாகி. 'அதுஎல்லாம் சும்மா கதை விடுறாங்க. பதவிய காப்பத்த எல்லோரும் ஓட்டு போட்டாங்கன்னு சொல்றாங்க'  என்றார் கட்சியின் அணி நிர்வாகி  'அப்படின்னா இல்ல,  வாங்கின ஆளே சொல்லிட்டாங்க' என்றார் ஒன்றிய நிர்வாகி.

இப்படி விவாதம் நடந்து கொண்டு இருக்க... திடீரென திருமண மண்டப கிச்சனில் இரண்டு நிர்வாகிகள் கட்டிப்புரண்டு சண்டை போட்ட சப்தம் கேட்டு மற்ற நிர்வாகிகள் அங்கு விரைந்தனர். 'என்னய்யா பிரச்னை' என்று ஒன்றிய நிர்வாகி இரண்டு பேரிடம் விசாரித்தார். அப்போது, கட்சியின் எம்.ஜி.ஆர். இளைஞரணி நிர்வாகி, 'ஒன்றியம் இவரு தீபா ஆளு.... இங்கு நோட்டம் பார்க்க வந்திருக்காரு. இவருக்கு எப்படி பிரியாணி கொடுக்கலாம்' என்று கத்தினார். 'நான்னா..... தீபா ஆளு, நீதான் தி.நகர்ல அந்தம்மா வீட்டு முன்னால காத்துக்கிடந்த... இப்ப வந்து இப்படி சொல்ற, ஏன் எம்.எல்.ஏ. கூட அசிங்கமா திட்டின' என்று சொன்னார் ஜெ. பேரவை நிர்வாகி.  

எம்.ஜி.ஆர்., ஜெ. பேரவை நிர்வாகிகளை சமரசப்படுத்திப் பிரச்னையை முடித்து வைத்தார் ஒன்றியக் கழக நிர்வாகி. இந்த விவகாரத்தால் விருந்து விவகாரமும் வெளியில் தெரிந்துவிட்டது. இந்த தகவல் எம்.எல்.ஏ. காதுக்கு எட்டியதும் மண்டபத்திலிருந்து காரில் எஸ்கேப் ஆகி விட்டாராம். இந்த கூட்டத்தில் பெண்கள் யாரும் பங்கேற்கவில்லையாம். மேலும், கூட்டத்தின் முடிவில் பங்கேற்றவர்களுக்கு கவர் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த கவருக்குள் காந்தி தாத்தா சிரித்தாராம். 

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.