Jump to content

இறுதி ஓவரில் மலிங்க கூறியது என்ன? : “எனது மகன் திறமையானவர் என நினைக்கவில்லை” அசேலவின் தாய், தந்தை உருக்கம்


Recommended Posts

இறுதி ஓவரில் மலிங்க கூறியது என்ன? : “எனது மகன் திறமையானவர் என நினைக்கவில்லை” அசேலவின் தாய், தந்தை உருக்கம்

 

 

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியின் போது இலங்கை அணியின் அசேல குணவர்தன துடுப்பெடுத்தாடிய விதம் தொடர்பில் பலரும் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். 

இந்நிலையில் அசேல தொடர்பில் அவரின் தாய், தந்தை உருக்கமான கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

asfasfasf1.jpg

அதுமாத்திரமின்றி இறுதி தருணத்தில் மலிங்க தனக்கு எவ்வாறான ஆலோசனைகளையும், உற்சாகத்தையும் வழங்கினார் என அசேலவும் மனந்திறந்துள்ளார்.

 

அசேல குணவர்தன தொடர்பில் அவரது தாய், தந்தை தெரிவிக்கையில்,

 

தாய்,

“நேற்றுமுன்தினம் போட்டியில் வெற்றிபெற்றமையானது சொல்ல முடியாதளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனது மகனை நினைத்து நான் மிகவும் சந்தோஷப்படுகின்றேன். யுத்தக்காலத்தில் நாம் போகவேண்டாம் என்று கூறியும் அவர் யுத்தத்துக்கு சென்றார். இன்று போட்டியை வெற்றிக்கொண்டு நாட்டுக்கு ராஜாவை போல் ஆகியுள்ளார்.”

 

தந்தை,

எனது மகன் இவ்வளவு பெரிய திறமைக்கொண்டவர் என நான் நினைக்கவில்லை.. சந்தோஷத்தை எப்படி விவரிப்பது என எனக்கு தெரியவில்லை... வீதிக்கு செல்லும் போது மக்கள் “ நாட்டுக்கு ஒரு பிள்ளையை பெற்றுள்ளீர்கள், நேற்று துடுப்பெடுத்தாய விதத்தை பாருங்கள்” என்று கூறும்போது எனது மகிழ்ச்சிக்கே அளவில்லை என்றார்.

 

அசேல குணவர்தன கருத்து தெரிவிக்கையில்,

போட்டியின் போது எமது அணி விக்கட்டுகளை அடுத்தடுத்து இழந்துக்கொண்டிருந்தது. 

இதன்போது நானும் சாமர கபுகெதரவும் களத்தில் நின்றோம். நாம் இன்னும் 10 ஓவர்களுக்கு ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாட வேண்டும் என்று திட்டமிட்டோம். எனினும் சாமர துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் 5 பந்துகளுக்கு 14 ஓட்டங்களை பெறவேண்டிய நிலை ஏற்பட்டது. இதன்போது களத்துக்கு வந்த மலிங்க என்னை உற்சாகப்படுத்தினார். எனக்கு முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினார்.

ஓட்டங்களை ஓடி பெற வேண்டாம் என்றும் தனியாளாக உன்னால் ஓட்டங்களை பெறமுடியும் என்றார்.

அதுமாத்திரமின்றி ஒவ்வொரு பந்தின்போதும் என்னை உற்சாகப்படுத்தினார். இறுதியில் 3 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில், உன்னால் அடிக்க முடியும், ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாட வேண்டும், நீ ஆட்டமிழந்தால் உன்னால் முடியாது என்று ரசிகர்கள் நினைப்பார்கள் என உற்சாகப்படுத்தியதாக” அசேல தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/16916

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அசேல ஆமியில் இருந்தாரா?

Link to comment
Share on other sites

4 minutes ago, ரதி said:

அசேல ஆமியில் இருந்தாரா?

Full name Downdegedara Asela Sampath Gunaratne

Born January 8, 1986, Kandy

Current age 31 years 44 days

Major teams Sri Lanka, Mohammedan Sporting Club, Sri Lanka Army Sports Club

Playing role Batsman

Batting style Right-hand bat

Bowling style Right-arm medium-fast

Height 5 ft 10 in

Education Rahula College

http://www.espncricinfo.com/srilanka/content/player/360456.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

//“நேற்றுமுன்தினம் போட்டியில் வெற்றிபெற்றமையானது சொல்ல முடியாதளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனது மகனை நினைத்து நான் மிகவும் சந்தோஷப்படுகின்றேன். யுத்தக்காலத்தில் நாம் போகவேண்டாம் என்று கூறியும் அவர் யுத்தத்துக்கு சென்றார். இன்று போட்டியை வெற்றிக்கொண்டு நாட்டுக்கு ராஜாவை போல் ஆகியுள்ளார்.”

இதற்கு என்ன அர்த்தம் நவீனன்

Link to comment
Share on other sites

1 minute ago, ரதி said:

//“நேற்றுமுன்தினம் போட்டியில் வெற்றிபெற்றமையானது சொல்ல முடியாதளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனது மகனை நினைத்து நான் மிகவும் சந்தோஷப்படுகின்றேன். யுத்தக்காலத்தில் நாம் போகவேண்டாம் என்று கூறியும் அவர் யுத்தத்துக்கு சென்றார். இன்று போட்டியை வெற்றிக்கொண்டு நாட்டுக்கு ராஜாவை போல் ஆகியுள்ளார்.”

இதற்கு என்ன அர்த்தம் நவீனன்

Sri Lanka Army Sports Club

இந்த கிளப்பில் விளையாடி உள்ளபடியால் அவர் இருந்திருக்கத்தான் வேணும்.

இப்ப விளையாடும் புதிய வீரர்கள் பற்றிய விபரங்கள் எனக்கு தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுவாக இருந்தாலும் நன்றாக விளையாடுகிறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

அசேல ஆமியில் இருந்தாரா?

ஓம்  அக்கோய் ....அவர் ஆர்மியில் இருந்தவர் தான்
அதுசரி முகப்புத்தகம் ,யூ டியூப் என்று சகட்டுமேனிக்கு புழுகித்தள்ளுமளவுக்கு அப்படி என்ன செய்துவிட்டார்
ஒரு சிறந்த  Finishing ,ஒரே ஒருமுறை நடந்திருக்கிறது .அதிலும் அவர் ஆமியில் இருந்ததை சொருகி போர் வெற்றியை அதனுள் நுழைத்து ..அதுக்குள்ளே இந்த நாட்டுக்கே ராஜாவாகி விட்டார் என்பதெல்லாம் ஓவர் அலப்பறை. இவரை விட ஒருகாலத்தில் ரசல் அர்னோல்ட் செய்த பினிசிங் எல்லாம் என்ன  ரகம், .
இவரே  இப்படியென்றால் அப்போ தோணி/கோலி லெவல் என்ன...?  
உலககோப்பை வென்ற போதே இந்திய அணி இந்த அளவுக்கு களேபரம் செய்யவில்லை...
அதுசரி நிறை குடம் தளும்பாது  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஓம்  அக்கோய் ....அவர் ஆர்மியில் இருந்தவர் தான்
அதுசரி முகப்புத்தகம் ,யூ டியூப் என்று சகட்டுமேனிக்கு புழுகித்தள்ளுமளவுக்கு அப்படி என்ன செய்துவிட்டார்
ஒரு சிறந்த  Finishing ,ஒரே ஒருமுறை நடந்திருக்கிறது .அதிலும் அவர் ஆமியில் இருந்ததை சொருகி போர் வெற்றியை அதனுள் நுழைத்து ..அதுக்குள்ளே இந்த நாட்டுக்கே ராஜாவாகி விட்டார் என்பதெல்லாம் ஓவர் அலப்பறை. இவரை விட ஒருகாலத்தில் ரசல் அர்னோல்ட் செய்த பினிசிங் எல்லாம் என்ன  ரகம், .
இவரே  இப்படியென்றால் அப்போ தோணி/கோலி லெவல் என்ன...?  
உலககோப்பை வென்ற போதே இந்திய அணி இந்த அளவுக்கு களேபரம் செய்யவில்லை...
அதுசரி நிறை குடம் தளும்பாது  

அசேல ஆமியில் இருந்தால் என்ன,புலியில் இருந்தால் என்ன<_< உந்த மட்ச்யில் விளையாடினது பிடிச்சிருக்கு...அவ்வளவு தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

அசேல ஆமியில் இருந்தால் என்ன,புலியில் இருந்தால் என்ன<_< உந்த மட்ச்யில் விளையாடினது பிடிச்சிருக்கு...அவ்வளவு தான்

அக்கோய் மேலே கேட்ட கேள்விகள்  எல்லாம் உங்களிடம் கேட்ட கேள்விகள் இல்லை 
அப்படியொரு விம்பம் உருவாகியிருந்தால் மன்னித்துகொள்ளுங்கோ 
இது எனக்கு தானாக தோன்றிய கேள்விகள் ......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரதி said:

அசேல ஆமியில் இருந்தால் என்ன,புலியில் இருந்தால் என்ன<_< உந்த மட்ச்யில் விளையாடினது பிடிச்சிருக்கு...அவ்வளவு தான்

பார்ரா ரதியை

ம் சரி விளையாட்டை விளையாட்டைப்பார்க்க வேணும் என்ன ரதி அப்படித்தானே

7 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அக்கோய் மேலே கேட்ட கேள்விகள்  எல்லாம் உங்களிடம் கேட்ட கேள்விகள் இல்லை 
அப்படியொரு விம்பம் உருவாகியிருந்தால் மன்னித்துகொள்ளுங்கோ 
இது எனக்கு தானாக தோன்றிய கேள்விகள் ......

நீங்கள் எதிர்த்து களமாடுவியள் என்று பார்த்தால்  பந்து வர முதலிலேயே ஓடுறியளே சீ ச் சீ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, முனிவர் ஜீ said:

பார்ரா ரதியை

ம் சரி விளையாட்டை விளையாட்டைப்பார்க்க வேணும் என்ன ரதி அப்படித்தானே

நீங்கள் எதிர்த்து களமாடுவியள் என்று பார்த்தால்  பந்து வர முதலிலேயே ஓடுறியளே சீ ச் சீ 

எதிர்த்து களமாட இங்கே என்ன இருக்கு ஜீ ....எனது கேள்விகள் பொதுவானவை அது ரதி அக்காவுக்கல்ல ...கேள்விகளுக்கு தகுந்த பதில்களோடு யாரும் வரட்டும் எதிர்த்து களமாடலாம் ....

Link to comment
Share on other sites

On 21.2.2017 at 9:37 PM, ரதி said:

அசேல ஆமியில் இருந்தாரா?

இராணு உடையில் பிரகாசிக்கும் அசேல குணரத்ன, சீகுகே பிரசன்ன (படங்கள்)

 

 

இலங்கை கிரிக்கெட் அணி விரர்களான அசேல குணரத்ன மற்றும் சீக்குகே பிரசன்ன ஆகியோர் இராணுவ உடையில் இருக்கும் புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

sekkasela_01.jpg

கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற தென்னாபிரிக்க மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கெதிரான கிரிக்கெட் தொடர்களில்  அசேல குணரத்ன மற்றும் சீக்குகே பிரசன்ன சிறப்பாக செயற்பட்டிருந்தனர்.

sekkasela_02.jpg

இதனடிப்படையில் குறித்த இருவருக்கும் இராணுவத்தால் பதவி உயர்வுகள் இன்று வழங்கப்பட்டன.

இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றன.

sekkasela_03.jpg

sekkasela_04.jpg

sekkasela_05.jpg

http://www.virakesari.lk/

அசேல குணவர்தன, சீக்குகே பிரசன்ன ஆகியோருக்கு பதவி உயர்வு

 

 

இலங்கை கிரிக்கெட் அணி விரர்களான அசேல குணவர்தன மற்றும் சீக்குகே பிரசன்ன ஆகியோருக்கு இராணுவத்தில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

Asela-Gunaratne.jpg

அதன்படி சீக்குகே பிரசன்னவுக்கு ஆணைப்பத்திரம் வழங்கும் அதிகாரி தரம் I , அசேல குணவர்தனவுக்கு ஆணைப்பத்திரம் வழங்கும் அதிகாரி தரம் II , ஆகிய பதவி உயர்வுகள் இராணுவத்தில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/17208

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரிகேடியராய் வர வாழ்த்துக்கள் loltw_dissapointed:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்கா கிரிக்கெட் அணி உலக அரங்கில் கிரிக்கெட் விளையாடத் தகுதியற்ற அணி என்பதையே சொறீலங்கா இராணுவத்தின்.. இந்த இழிசெயல் இனங்காட்டுகிறது. உலகில் எந்த நாட்டிலும்.. இராணுவம் விளையாட்டில் தலையீடு செய்வதில்லை. சொறீலங்கா.. என்பது 2009 க்குப் பின் சொறீலங்கா சிங்கள இராணுவக் காடைகளின் கையில் தான் சிக்கிக் கிடக்கிறது. 

உலக அரங்கில்.. மோசமான மனித இனப்படுகொலைக் குற்றச்சாட்டை சுமக்கும் சொறீலங்கா இராணுவத்தைச் சேர்ந்தோரைக் கொண்ட சொறீலங்கா கிரிக்கெட் அணி உலக கிரிக்கெட்டில் விளையாட தடைவிதிக்க வேண்டும். 

இந்த புகைப்படங்களே அதற்கு போதிய சான்றாகும். 

ஈழத்தில் மட்டுமன்றி கெயிட்டி உட்பட பல நாடுகளிலும் சொறீலங்கா இராணுவம் பாலியல் துஷ்பிரயோகம் உட்பட மனித இனத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.